Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அன்று ஒரு காலம் எங்கள் தமிழீழ தைப்பொங்கல்... மீண்டும் அந்த காலம் வரவேண்டும் !

Featured Replies

  • தொடங்கியவர்

சூரியப் பொங்கலின் தத்துவம்

 

தமிழர்களின் தைத்திருநாளாகிய இன்று, கண்கண்ட கடவுளாக விளங்கும் சூரிய பகவா னைப் போற்றித் துதிக்கின்ற நாளாகும். உழுது விளைவிக்கின்ற விவசாயப் பெரு மக்கள் தங்கள் வேளாண்மைக்கு உறுதுணை யாக இருக்கின்ற சூரிய பகவானுக்கு நன்றி செலுத்துகின்ற நாளாக தைப்பிறப்பை பிரகடனப் படுத்தினர். தமிழர் பண்பாட்டில் தைப்பொங்கல், உயர்வு பெற்று நிற்பதற்குக் காரணம் அது தமிழர்களின் சுய பொருளாதாரத்துடன் தொடர்புபட்டிருந்தமையாலாகும்.

 

சொந்த வயலில் விளைந்த பச்சை அரிசி, வீட்டில் வளர்க்கும் பசு பொழிந்த பால், கிணற் றோரமாக நிற்கின்ற கரும்பு, வீட்டுத்தோட்டத்தில் ஈன்றளித்த வாழைக்குலை, முற்றிப்பழுத்த மா, பலா கனிகளென மனித வாழ்விற்குத் தேவையான அனைத்தையும் விளைவித்து தன்னிறை வோடு வாழ்கின்ற களிப்பில் அவை அனைத்தையும் சூரியப் பெருமானுக்கு படைத்து மகிழ் கின்ற வாழ்வின் இனிமை எத்துணை மகத்தான தென்பதை உணர்வது அரிதானதல்ல.

 

ஒரு காலத்தில் தமிழர்களின் ஒவ்வொரு வீட் டிலும் தானியக்களஞ்சியம் இருந்ததென்ற உண்மையை ஒரு கணம் எங்கள் சமகால இளம் சந்ததி நினைத்துப்பார்க்க வேண்டும். அரிசி, உழுந்து, பயறு என்ற உணவுத்தானி யங்களும் முக்கனிகளும் பசும்பாலும் தேனும் நெய்யுமென அனைத்தும் வீட்டில் விளைந்திருந் தது என்பதும் அதுவே விருந்தோம்பல் சிறப் பிற்கு வழிவகுத்ததென்பதும் உணர்தற்குரியது. இதன் காரணமாகவே தமிழர்களின் பண் பாடு உயர்வானதென்ற பெருமையை பெற்றுக் கொண்டது. மற்றவர்களின் வாழ்விற்காக தான் உழைக்கின்ற உயர்ந்த பண்புடமை தமிழர்களிடம் இருந்ததென்ற பெருமை மட்டுமே இப்போது எஞ்சியுள்ளது.

 

சமகாலத்தில் உள்ள தமிழர்களின் நிலைமை, விவசாயத்திற்கு விடை கொடுப்பதாக அமைந்து விட்டது. முன்னைய காலங்களில் வேளாண்மை செய்வதென்பது உயர் தகைமையாகவும் சமூகத் தில் உயர் அந்தஸ்துடையதாகவும் கருதப்பட்டது. ஆனால் அதே வேளாண்மை, இன்று மதிப் பற்ற தொழில் என்றாகிவிட்டதென்பதற்குள் தமிழர்களின் பண்பாட்டு இழப்பும் ஒரு வகை யான மோகத்திற்குள் நாங்கள் நுழைந்து விட் டோம் என்ற உண்மையும் தெரியவருகிறது. எதுவாயினும் தைப்பொங்கலின் உண்மை யான தத்துவத்தை எடுத்தியம்பும் ஏற்பாடுகளை தமிழர் பண்பாட்டு அமைப்புகள் செய்தாக வேண்டும்.

 

http://www.valampurii.lk/index.php?option=com_content&view=article&id=411:2013-01-14-05-57-52&catid=79:2012-09-26-08-59-23&Itemid=491

  • தொடங்கியவர்

வீழமாட்டோம் எனும் நம்பிக்கை மட்டுமல்ல

ஆழமான அடித்தளமும் வேண்டும்.

 

விடுதலைக்கு இப்போது பெறும் பலத்தில்தான்

எதிர்காலமே இருக்கின்றது

 

உலகம் ஓடிவரும் உனக்கு

ஒத்தாசை செய்யும் என நம்பாதே

 

அவர்கள் பலத்தோடு இருந்தால் மதிப்பார்கள்

நிலத்தோடு கிடந்தால் மிதிப்பார்கள்


இதுதான் உலகத்தின்

புதிய ஒழுங்காற்றுகை

 

 

ஒன்றை மட்டும் நெஞ்கில்

எழுதி வைப்போம்


வென்றால் நாங்கள்

அரியணையில் இருப்போம்


தோற்றால்

தொல்பொருள் அகத்தில் கிடப்போம்

 

 

- புதுவை இரத்தினதுரை-

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.