Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறுவர் காப்பக விவகாரம் நோர்வே அரசை ஐ.நா. கேள்விக்குட்படுத்த வேண்டும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறுவர் காப்பக விவகாரம் நோர்வே அரசை ஐ.நா. கேள்விக்குட்படுத்த வேண்டும்    

 

நோர்வேயில் வதிவுரிமை கொண்டுள்ள வெளிநாடுகளைச் சேர்ந்த பெற்றோரிடமிருந்து அவர்களது பிள்ளைகளைப் பிரித்து தடுத்துவைத்துள்ள நோர்வே அரசாங்கம் இவ்விடயத்தில் என்ன நிலைப்பாட்டினைக் கொண்டிருக்கின்றது என்றும் தமது பிள்ளைகள் தம்மிடத்தில் வழங்கப்படுவார்களா? மாட்டார்களா? என்றும் பாதிக்கப்பட்ட பெற்றோர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

குழந்தைகளை பெற்றோரிடத்திலிருந்து தடுத்து வைத்திருப்பதன்மூலம் தமது குழந்தைகளை மொழி கலசார கலாசார ரீதியில் நோர்வே பிரஜையாக்குவதுதான் திட்டமா என்றும் பாதிக்கப்பட்டதரப்பினர் கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

நோர்வேயில் புகலிட வதிவுரிமைபெற்றுள்ள தாம் நோர்வே அரசாங்கத்தினாலும் அதன்கீழ் இயங்குகின்ற சிறுவர் காப்பரங்கள் நீதிமன்றங்கள் மற்றும் பாதிப்புத் தரப்புகள் ஆகிய அரச நிறுவனங்களினூடாக வஞ்சிக்கப்பட்டு வாழ்க்கை நிலை சீரழிக்கப்படுவதாக நாகரிகமற்ற செயற்பாடுகள் இடம்பெறுவதாகவும் கூறுகின்றனர்.

குழந்தை பராமரிப்பில் பெற்றோர் தவறிழைப்பதாக கூறியே சிறுவர் காப்பரங்கள் குழந்தைகளை பெற்றோரிடத்திலிருந்து பலவந்தமாக பிரித்து எடுத்துச் செல்கின்றன. ஆனால், சிறுவர் காப்பகங்களால் அவ்வாறு எடுத்துச் செல்லப்படுகின்ற சிறுவர்கள் கலாசார ரீதியிலும் மொழிரீதியிலும் மூளை சலவைக்குள்ளாக்கப்படுகின்றனர்.

இது நியாயமானதா எனக்கேட்கின்ற வெளிநாட்டுப் பெற்றோர் புகலிட வதிவாளர்களை பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடையச் செய்து பெற்றோரையும் பிள்ளைகளையும் யாருமற்ற அநாதைகளாக மாற்றியமைக்கும் வகையில் செயற்பட்டு வருவதாகவும் குற்றம் சாட்டுகின்ற அவர்கள் இது தமது பிள்ளைகளை நோர்வே பிரஜைகளாக்குகின்ற நோர்வே அரசின் நீண்டகால திட்டமாக அமைந்திருப்பதாகவும் கூறுகின்றன.

மேலும் ஒஸ்லோ தலைநகரில் அமைந்துள்ள டொம் தேவாலயத்தில் நடத்தப்பட்ட சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடுமாறும் இது தொடர்பில் அரசாங்கத்திற்கு எடுத்துரைப்பதாகவும் தேவாலய நிர்வாகம் உறுதியளித்திருந்தது.

அதுமாத்திரமின்றி ஒஸ்லோவின் Hallvards Place 3, Egedes Stree எனும் விலாசத்தில் அமைந்துள்ள மிஸொப் ஹவுசில் இடம்பெற்ற சந்திப்பின் போதும் மேற்கண்டவாறு உத்தரவாதம் வழங்கப்பட்டது.

எனினும் டொம் தேவாலய உத்தரவாதமும் மௌனித்துவிட்ட நிலையே காணப்படுகிறது. இந்நிலையில் சிறுவர் விடயங்களில் தவறுகள் இடம்பெற்றிருப்பதாக அரச மட்டங்கள் ஊடங்களில் தகவல்களை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றனவே தவிர பிள்ளைகளை அவர்களது பெற்றோரிடத்தில் கையளிக்க வேண்டும் என்ற எந்த சிந்தனையும் நோர்வே அரசிடம் இல்லையென்பதால் ஐக்கிய நாடுகளின் சர்வதேச மனித உரிமைப் பேரவை சர்வதேச மன்னிப்புச்சபை மற்றும் சர்வதேச சிறுவர் பராமரிப்பு அமையங்கள் இதில் தலையீடு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கின்றனர்.

அத்துடன், வெளிநாட்டு சிறுவர்கள் தொடர்பில் நோர்வேயின் நோக்கம் என்னவென ஐ.நா. கேள்வி எழுப்ப வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட பெற்றோர் கேட்கின்றனர்.

 

http://www.virakesari.lk/article/local.php?vid=2583

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.