Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“விஸ்வரூபத்திற்கு ரூ. 100 கோடி செலவு : கமல் எவ்வளவு சிரமப்பட்டிருப்பார் ” - ரஜினி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை : பிரமாண்டமாக உருவாக்கியுள்ள விஸ்வரூபம் திரைப்படத்திற்கு கமல் 100 கோடி ரூபாய் செலவழித்துள்ளார். இதற்கு அவர் எவ்வளவு சிரமப்பட்டிருப்பார் என எண்ணிப்பார்க்க வேண்டும். இதனை நினைக்கும்போது மனம் கலங்குகிறது.

கமலை தமக்கு 40 ஆண்டுக காலமாக தெரியும் என்றும் தமிழ் சினிமாவை உலகத்தரத்திற்கு கொண்டு சென்றவர் கமல் என்றும், அவர் யாரு‌டைய மனதையும் புண்படுத்தும்படி நடந்து கொள்ள மாட்டார் என்றும், அவரது திரைப்படத்தை வெளியிட அமர்ந்து பேசி தீர்க்க வேண்டும் என்றும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

விஸ்வரூபம் திரைப்படம் இன்று நாடு முழுவதும் வெளியாவதாக இருந்தது. ஆனால் தமிழகத்தில் முஸ்லிம் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் இந்த திரைப்படத்திற்கு மாநில அரசு தடை விதித்தது. கேரளாவில் வெளியான படத்தை பார்க்க கூட்டம் அலைமோதியது. ஆனால் எவ்வித சச்சரவும் இல்லை. ஐதராபாத் மற்றும் இலங்கையில் தடை செய்யப்பட்டது. படத்தை பார்த்தவர்கள் ஹாலிவுட் தரத்திற்கு இணையாக இருப்பதாக விமர்சனம் செய்துள்ளனர். பயங்கரவாதம், காதல் கலந்து சொல்லப்பட்டிருக்கிறது.

விரைவில் வெளிவர துணை:

தமிழகத்தில் படம் திரையிடப்படவில்லை. கமல் தற்போது வெளிநாட்டில் இருக்கிறார். தடை குறித்து நடிகர் ரஜினிகாந்த் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: என்னை வாழ வைக்கும் தமிழக தெய்வங்களான தமிழ் மக்களுக்கு வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன். விஸ்வரூபம் திரைப்படம் பிரச்னை குறித்து நான் வேதனை அடைகிறேன். 40 ஆண்டு கால நண்பர் கமல். இவர் யாரு‌டைய மக்களின் மனதை புண்படுத்தும் படியாக நடந்து கொள்ளாதவர் என நன்கு அறிவேன்.

இந்தப்படம் தணிக்கையான பின்னர் வெளியிடுவதற்கு முன்பாகவே இஸ்லாமிய சகோதரர்களின் வேண்டுகோளை ஏற்று அவர்களுக்கு திரைப்படம் காண்பித்துள்ளார். இதிலிருந்தே இஸ்லாமிய மக்களின் மீது கமல் அவர்கள் கொண்டுள்ள மதிப்பையும், மரியாதையையும் தெள்ளத்தெளிவாக காட்டுகிறது.

மகா கலைஞன் கமல்

: திரு கமலஹாசன் அவர்கள் இந்த திரைப்படம் தயாரிக்க சுமார் 100 கோடி ரூபாய் முதலீடு செய்வதற்கு என்னென்ன சிரமங்கள் அநுபவித்திருக்கிறார் என்பதை அறியும் போது என் மனம் கலங்குகிறது. கமல் ஒரு சாதாரண கலைஞன் அல்ல. தமிழ் சினிமாவை உலக அளவில் கொண்டு செல்வதற்கு காரணமாக உள்ள மகா கலைஞன். இதையெல்லாம் மனதில் வைத்து இந்த படத்தை முழுமையாக தடை செய்ய வேண்டும் என்ற கருத்தில் இருந்து மாறி கமல் வந்த பின்னர் கலந்து பேசி கதைக்கு பாதிப்பு வராத வகையில் படத்தை வெளியிட உறுதுணையாக இருக்குமாறு மிலாது நபி வாழ்த்துக்களுடன் இஸ்லாமிய சகோதரர்களை கேட்டு கொள்கிறேன். ஜெய் ஹிந்த்.,

இவ்வாறு அவர் கைப்பட எழுதி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Dinamalar

  • கருத்துக்கள உறவுகள்
நல்ல கலைஞனை காயப்படுத்தாதீர்கள்: பாரதிராஜா

By Venkatesan Sr

First Published : 26 January 2013 02:09 PM IST

தமிழ் திரையுலகிற்காக தன்னையே அர்ப்பணித்துக் கொண்ட ஒரு தமிழ் கலைஞனை ஏதோ ஒருசில காரணங்களுக்காக அவனை காயப்படுத்தி அதில் வழியும் ரத்தத்தை ருசி பார்க்க எண்ணாதீர்கள் என்று இயக்குநர் பாரதிராஜா கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தொலைக்காட்சியில் நொண்டிச்சாக்காக சிலர் சொல்கிறார்கள். படத்தில் பாட்டு இல்லை. காதல் காட்சிகள் இல்லை. காமெடி இல்லை. இது ஒரு ஆவணப்படமென்று சொல்கிறார்கள் படம் பார்த்தவர்கள். தொழில் நுட்பத்திலும் கதை சொல்லும் விதத்திலும் உலக தரத்திற்கு எடுக்கப்பட்ட ஒரு படத்தால் உயர்ந்து நிற்கிறான் இந்த தமிழன் என்று சக கலைஞனாக பெருமைபட்டு வந்தவன் நான்.

ஒரு ஆவணப் படத்திற்கு 100 கோடி ரூபாய் செலவழித்து படமெடுக்க யாராவது முனைவார்களா என்ன? இந்திய அரசியல் சட்டம் எங்கே நின்று என்னைப் போன்ற சாதாரண குடிமகனை, கலைஞனை பாதுகாக்கும் என்று புரியவில்லை.

உலகில் நடந்த நிகழ்வுகளை பார்த்ததை, கேட்டதை, உணர்ந்ததை வாழ்க்கையில் அனுபவித்ததை ஒரு சமூக வலியோடு பூதகமாக திரையில் சொல்லுவது ஒரு படைப்பாளியின் தார்மீகமான படைப்பு சுதந்திரம்.

தயவு செய்து சகோதரர்களே தங்களை பணிவோடு, பண்போடும் பாசத்தோடும் கேட்டுக் கொள்கிறேன். யார் எந்த அடையாளங்களை கொண்டிருந்தாலும் இந்த மண்ணில் உள்ளவரை அவன் இந்தியனே.

ஒரு நல்ல கலைஞனை, ஒரு தமிழ் கலைஞனை தமிழ் திரையுலகிற்காக தன்னையே அர்ப்பணித்துக் கொண்ட ஒரு கலைஞனை ஏதோ ஒருசில காரணங்களுக்காக அவனை காயப்படுத்தி அதில் வழியும் ரத்தத்தை ருசி பார்க்க எண்ணாதீர்கள்.

என் இனிய தமிழ் மக்களே நீங்கள் யோசிக்கத் தெரிந்தவர்கள். சிந்தித்து பாருங்கள். நியாயத்திற்கு போராடி ஒரு நடுநிலை கலைஞனுக்கு கைகொடுக்க வேண்டியது உங்களின் தார்மீக கடமை. தவறுகள் இல்லா தமிழன் என்று சொல்லுவோம். தலைநிமிர்ந்து நிற்போம் என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

http://dinamani.com/latest_news/article1436802.ece

விஸ்வரூபம் படப்பிரச்சனையில் இப்பொழுதுதான் திரையுலகினரை எழுச்சி பெற செய்துள்ளது. பாரதிராஜா தனது அறிக்கை ஒன்றில் ஒரு தமிழ்க்கலைஞனுக்காக ஏன் தமிழ்த்திரையுலகம் ஒன்று கூடி ஆதரவு தெரிவிக்காமல் வாய்மூடி மெளனியாக இருக்கின்றது என சாடியுள்ளார்.  இன்று கமலுக்கு வந்திருக்கும் பிரச்சனை நாளை நம்மில் யாருக்கும் வர வாய்ப்பு உண்டு என்றும் எனவே ஒற்றுமையாக இருந்து அனைத்து சங்கங்களும் கமலுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 

 

பாரதிராஜாவின் முழு அறிக்கையின் புகைப்படம் பார்க்க......

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.