Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலம்பெயர் இலக்கிய வளர்ச்சி

Featured Replies

புலம்பெயர் இலக்கிய வளர்ச்சி

தமிழ் இலக்கியத்தின் தாய் நாடு, தமிழ் சினிமாவைப் பிரசவித்தவள், தமிழ் இசையின் வேர் இப்படியாகத்தான் ஈழத்தமிழர் இந்தியத் தமிழ்நாட்டை அடையாளம் காணுகின்றார்கள். ஈழத்தமிழ் மக்களின் தாய் நாடும் இந்தியா எனும் போது அவர்களை ஈழத்தமிழர்கள் துதிப்பதில் தவறில்லை. இருப்பினும், இலங்கை எனும் சிறீலங்காவில் தமிழ்மொழி பேசும் மக்களின் உணவு, உடை, மொழி வழக்கு, கலாச்சாரப் பண்பாடுகள் இந்தியத் தமிழ் நாட்டு மக்களின் கலாச்சாரம் பண்பாட்டில் இருந்து (முற்றுமுழுதான இல்லாத போதும்) வேறுபட்டே இருக்கின்றன. ஈழத்தமிழருக்கென்றொரு தனித்தன்மை இருக்கின்றது. தமிழ்நாடு ஆதிக்க, பொருளாதார பலம் கூடடியதாக இருப்பதால் ஈழத்தமிழ்கள் அனேகமாக அடையாளம் காணப்படாமலேயே இருக்கின்றார்கள்.

80களின் பின்னர் உள்நாட்டுப் போராட்டத்தால் புலம்பெயர்ந்து பல நாடுகளில் குடியேறி விட்ட ஈழத்தமிழருக்கு போராட்டப் பின்புலம், பன்முகக் கலாச்சார அறிமுகம் போன்றவை தமிழ்நாட்டு எழுத்தாளர்களுக்குக் கிடைக்காத ஒரு புதிய இலக்கியத் தளமாக இருக்கின்றன. புதிய தளத்தில் இருந்து பல தரமான இலக்கியப் படைப்புக்கள் வரவும் தொடங்கி விட்டன. இருந்தும் கனேடிய ஆங்கிலச் சமுதாயம் எப்படி அமெரிக்கர்களின் அங்கீகாரத்திற்காக வாய் பிளந்து நிற்கின்றார்களோ? இல்லையேல் அடையாளம் காணப்படும் போது அமெரிக்கா நோக்கி ஓடிவிடும் தன்மை (பணம் புகழ் காரணமாக) கொண்டு வாழுகின்றார்களோ அதே வகையில்தான் பல தரமாக ஈழத்துப் படைப்பாளிகளும் தமது படைப்பிற்கான தமிழ்நாட்டு அங்கீகாரத்தை எதிர்பார்த்துக் காத்துக்கிடக்கின்றார்கள். அட ஈழத்து இலக்கியவாதிகளான சேரனையும், ஜெயபாலனையும், சோபாசக்தியையும், அ.முத்துலிங்கத்தையும் இனம் கண்டு பேசுகின்றார்கள் எங்களை இன்னும் காணவில்லையே என்ற ஆதங்கம் சிலருக்கு. தமிழ் இலக்கியத்தின் உச்சமாக தமிழ்நாடு இயங்குவதால் ஈழத்தமிழர்களின் இந்த ஆதங்கம் எதிர்பார்ப்பு மனித உணர்வுகளின் அடிப்படையில் நியாயமானதே. (என் படைப்புக்கள் இந்திய சஞ்சிகையில் வெளிவந்த போதும், சல்மா போன்ற பெண்ணிய எழுத்தாளர்கள் என்னுடன் எனது படைப்பு பற்றிக் கலந்துரையாடியபோதும் எனக்குள்ளும் இந்த ஆதங்கள் இருந்ததை நான் உணர்ந்திருக்கின்றேன்) இருந்தும் தமிழ்நாட்டு இலக்கியவாதிகள் அவர்களுக்குள்ளான அரசியல் உளைச்சல்களால் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களின் இலக்கியத்தை அதிகம் அடையாளம் காணாமல் உதாசீனம் செய்கின்றார்கள்.

போராட்டத்தை பின்புலமாகக் கொண்டு எழுதப்படும் (சோபாசக்தி போன்றோரின்) படைப்புக்களை அடையாளம் காணும் அளவிற்கு புலம்பெயர்ந்த இலக்கியம் அடையாளம் காணப்படுவதில்லை. சேரனும், ஜெயபாலனும், அ.முத்துலிங்கமும் புலம்பெயர்ந்த இலக்கியவாதிகளாக அடையாளம் காணப்பட்டவர்கள் அல்ல அவர்கள் ஈழத்து இலக்கியவாதிகளாக அடையாளம் காணப்பட்டுப் பின்னர் புலம்பெயர்ந்த பின்னர் அந்த அடையாளம் தொடருகின்றது. புலம்பெயர் இலக்கியம் இந்திய இலக்கியத் தரத்திற்கு இல்லாமல் போயினும் தமிழ்நாட்டு இலக்கியவாதிகள் தவிர்க்கும் அளவிற்கு இவை தரமற்றவை அல்ல. ஈழத்து நாடகக் கலைஞராக பாலேந்திரா அவர்கள் இந்திராபார்த்தசாரதியின் பல நாடகங்களை மேடையேற்றியுள்ளார். இருந்தும் இந்திராபார்த்தசாரதி தான் எழுதிய (பெயர் மறந்து விட்டேன்) தனது நாடக மேடை ஏற்றம் பற்றிய தொகுப்பில் பாலேந்திரா அவர்களைக் குறிப்பிடவில்லை. இது வேண்டுமென்றான தவிர்ப்பாகவே படுகின்றது.

இந்நிலையில் புலம்பெயர்ந்த ஈழத்தமிழ் இலக்கியவாதிகள் எதற்காக தமிழ்நாட்டு இலக்கியவாதிகளின் அங்கீகாரத்திற்காக ஏங்க வேண்டும்? (ஒட்டு மொத்தமாக ஏங்குகின்றார்கள் என்று கூறவில்லை) இதே வேளையில் புலம்பெயர்ந்த இலக்கியவாதிகளால் வெளியிடப்படும் சஞ்சிகைகள் தற்போது தமிழ்நாட்டு இலக்கியச் சஞ்சிகைகள் போல் மாறிவருகின்றன. உதாரணத்திற்கு "காலம்" எனும் கனடாவில் வெளிவரும் புலம்பெயர் இலக்கியச் சஞ்சிகை பல வருடங்களாக ஈழத்து இலக்கியவாதிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஒரு சிறந்த புலம்பெயர் சஞ்சிகையாக வெளிவந்து கொண்டிருந்தது. ஆனால் தற்போது ஜெயமோகனும், சுந்தரராமசாமியும் என்று ஒரு "காலச்சுவடு" போலோ "உயிர்மை" போலோ மாறிவிட்டிருக்கின்றது. "காலச்சுவடு", "உயிர்மை" போன்ற சஞ்சிகைகள் தமக்கான குறிப்பிட்ட எழுத்தாளர்களின் எழுத்தைத் தாங்கி திரும்பத்திரும்ப வெளி வந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் அதே எழுத்தாளர்களைக் கொண்டு "காலம்" சஞ்சிகையும் கனடாவில் இருந்து வெளிவருவது வருந்தத்தக்கதே. இதற்கு முக்கிய காரணம் பொருளாதாரப் பின்னணியே. யாரோ பெயர் தெரியாத ஒரு புலம்பெயர்ந்த எழுத்தாளரின் படைப்பிலும் பார்க்க சு.ராவின் பத்தியோ, சிறுகதையோ வந்திருக்கின்றது என்றால் அவை இலகுவில் விலை போய்விடும்.

எனவே புலம்பெயர் இலக்கியச் சஞ்சிகைகளைக் கூட தமிழ்நாட்டு இலக்கியத்தில் தங்கி இருக்கும் நிலையில்தான் இருக்கின்றன. புலம்பெயர் இலக்கியவாதிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளிவந்து கொண்டிருந்த "உயிர்நிழல்", "எக்சில்" போன்ற சஞ்சிகைகள் பொருளாதாரப் பிரச்சனையால் நிறுத்தப்பட்டுவிட்ட நிலையில் "காலம்" சஞ்சிகையின் ஆசிரியர் மேல் கோபம் கொள்வதில் நியாயம் இல்லை. நிறுத்தப்படுவதிலும் பார்க்க இந்திய எழுத்தாளர்களைத் தாங்கி ஒரு சஞ்சிகை வருகின்றது என்று எண்ணிவிட்டுப் போய் விடுவோம்.

புலம்பெயர் இலக்கியத்தைத் தாங்கி ஒரு சஞ்சிகை வெளிவராத பட்சத்தில் புலம்பெயர் இலக்கியம் வளர்ச்சியடையாமல் போய் விடும் அபாயம் உள்ளது. இருந்தும் இணைத்தளங்களின் செயல்பாடு சிறிது நம்பிக்கையைக் கொடுப்பதாகவே உள்ளது. சஞ்சிகைகளில் வெளிவரும் படைப்புக்களுக்கான கருத்துக்கள் அனேகம் வாசகர்களைச் சென்றடைவதில்லை. ஆனால் இணையத்தளங்களில் ஆசிரியரின் மின்அஞ்சல் இணைக்கப்படும் பட்சத்தில் உலகெங்குமிருந்து படைப்புகள் பற்றி விமர்சனங்கள் உடனுக்குடன் எழுத்தாளருக்கு மின்அஞ்சல் மூலம் வந்து சேருகின்றன. இது புதிய இலக்கியவாதிகளுக்கு ஊக்கம் அளிப்பதாகவே உள்ளது.

புலம்பெயர் ஈழத்து இலக்கியவாதிகள் இனிமேல் செய்யவேண்டியது தமிழ் நாட்டு இலக்கியவாதிகளைக் கணக்கில் எடுக்காமல் தரமான தமிழ் இலக்கியங்கள், மொழிபெயர்ப்பு இலக்கியங்கள் போன்றவற்றைப் படித்து இலக்கியத்திறனை பெருக்கும் அதே வேளை தமது படைப்புக்களை இணையத்தளங்கள் மூலமேனும் தந்துகொண்டிருத்தல் வேண்டும். ஈழத்தில் இருக்கும் போது தமிழ்நாட்டு அங்கீகாரத்தை எம்மவர்கள் எதிர்பார்த்திருக்கலாம் ஆனால் தற்போது இந்தியாவை விட எல்லாவற்றிலும் உயர்ந்த நிலையில் இருக்கும் நாட்டில் நாம் வசிக்கின்றோம். இங்கே கிடைக்கும் சேவைகளை துர்பிரயோகம் செய்யாது உபயோகப்படுத்தின் நல்ல ஒரு இலக்கியத்தளத்தை ஈழத்தமிழரால் உருவாக்க முடியும். ஈழத்தமிழரான சியாம் செல்லத்துரை போன்று பல நல்ல படைப்பாளிளை நாம் உலகிற்கு அறிமுகப்படுத்தலாம்.

நன்றி

http://karupu.blogspot.com/2005/05/blog-post_30.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.