Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வலிவடக்கு இராணுவ நிலஅபகரிப்புக்கு எதிராக நாளை தெல்லிப்பளையில் பட்டினிப் போராட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

HSZ.jpg

பொதுமக்களுக்குச் சொந்தமான 10,000 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலத்தை சிறிலங்கா இராணுவத்தினர் கையகப்படுத்தியுள்ளதை எதிர்த்து நாளை தெல்லிப்பளையில் 20,000 இற்கும் மேற்பட்ட மக்கள் பட்டினிப் போராட்டம் ஒன்றை நடாத்தவுள்ளனர். 

சிறிலங்கா இராணுவத்தினர் இந்த மக்களுக்குச் சொந்தமான நிலங்களை உயர் பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் கையகப்படுத்தி வைத்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் குற்றம்சுமத்தியுள்ளார். 

'இப்பட்டினிப் போராட்டமானது 13 இடம்பெயர்ந்த முகாங்களில் வாழும் மக்களால் மேற்கொள்ளப்படவுள்ளதுடன், இதற்கு நாங்கள் எமது ஆதரவை வழங்கவுள்ளோம். சிறிலங்கா இராணுவத்தால் தமது நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளதை எதிர்த்து இந்த மக்கள் இப்போராட்டத்தை நடாத்தவுள்ளனர். 

27 கிராம அலுவலர் பிரிவுகளுக்குச் சொந்தமான 10,000 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்கள் சிறிலங்கா இராணுவத்தால் உயர் பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் அபகரிக்கப்பட்டுள்ளன. 

இந்நிலங்கள் தற்போதும் சிறிலங்கா இராணுவத்தின் கட்டுப்பாட்டிலேயே உள்ளன. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட இந்நிலங்களைச் சென்று பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்படவில்லை. 

சிறிலங்கா இராணுவத்தினர் இந்தப் பகுதிகளில் விடுதிகளை அமைத்துள்ளதுடன், விவசாயத்திலும் ஈடுபட்டு அதன் உற்பத்திப் பொருட்களை உள்ளுர்ச் சந்தைகளில் விற்கின்றனர்' எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் மேலும் குற்றம் சுமத்தியுள்ளார். 

தம்மால் அபகரிக்கப்பட்டுள்ள நிலங்களை பொதுமக்களின் நிலங்களிலிருந்து வேறுபடுத்துவதற்காக, தொண்டைமானாறிலிருந்து கீரிமலை வரை சிறிலங்கா இராணுவத்தினர் முட்கம்பி வேலிகளை அமைத்துள்ளதாகவும் சுரேஸ் பிறேமச்சந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார். 

'இவ்வாறான சூழல் பாகிஸ்தான் மற்றும் இந்தியாவின் சில பகுதிகளில் நிலவுகின்றது. யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள உயர் பாதுகாப்பு வலயங்களில் 100 அல்லது 200 மீற்றர்களுக்கு இடையில் முட்கம்பி வேலிகளுக்குச் சமாந்தரமாக இராணுவ அரண்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

உயர் பாதுகாப்பு வலயங்களில் சொந்த நிலங்களைக் கொண்ட மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இவர்கள் தொடர்ந்தும் முகாங்களில் வாழவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். 

உயர் பாதுகாப்பு வலயங்கள் தொடர்பில் சிங்களவர்களும் அனைத்துலக சமூகமும் பிழையான கருத்துக்களைக் கொண்டுள்ளனர். இவர்கள் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்து உண்மையான நிலைப்பாட்டை நேரில் கண்டறிய வேண்டும்' எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார். 

இதேவேளை வடக்கிலுள்ள சிறிலங்கா இராணுவத்தினரின் உயர் பாதுகாப்பு வலயங்கள் தொடர்பில் மனிதஉரிமைச் செயற்பாட்டாளர்களும் அரசியற் கட்சிகளும் தொடர்ந்தும் தமது அதிருப்திகளை வெளியிட்டு வருகின்றனர். 

'மனிதஉரிமைச் செயற்பாட்டாளர்களால் உயர் பாதுகாப்பு வலயம் தொடர்பில் வெளியிடப்படும் கருத்துக்கள் முற்றிலும் பொய்யானவை. நாட்டில் யுத்தம் ஏற்பட்ட போது உயர் பாதுகாப்பு வலயம் என்பது தேவைப்பட்டது. 

ஆனால் போர் முடிவடைந்த பின்னர் தற்போது இது தேவையற்ற ஒன்றாகும். வடக்கில் நாங்கள் இராணுவ முகாங்களை மட்டுமே அமைத்துள்ளோம். 

முப்படைகளுக்கும் சொந்தமான முகாம்கள் மட்டுமே வடக்கில் அமைக்கப்பட்டுள்ளன. இவை தேசிய பாதுகாப்புக்கு இன்றியமையாததாகும்' என பிரிகேடியர் வணிகசூரிய சுட்டிக்காட்டியுள்ளார். 

வடக்கில் தொடர்ந்தும் முகாங்கள் அமைக்கப்பட்டுள்ளதானது தேசிய பாதுகாப்புக்கான நிகழ்ச்சி நிரலில் காணப்படுவதாகவும் பிரிகேடியர் குறிப்பிட்டுள்ளார். 

'வடக்கில் சிறிலங்கா இராணுவத்தினர் தொடர்ந்தும் பிரசன்னமாகியிருக்க வேண்டும் என்பது வடக்கு மக்களின் விருப்பமாகும். ஆனால் யாழ்ப்பாணத்திலுள்ள இராணுவ முகாம் ஒன்றை அகற்றி வேறிடத்தில் அமைத்த போது அதனை எதிர்த்து பொதுமக்கள் அமைப்பு ஒன்று ஆர்ப்பாட்டம் செய்தது. 

இராணுவத்தின் பிரசன்னம் அகற்றப்பட வேண்டும் எனக் கோரும் 'செயற்பாட்டாளர்கள்' வடக்கு மக்களிடம் அவர்கள் உண்மையில் எதை விரும்புகிறார்கள் என்பதை கேட்டறிய வேண்டும். 

யாழ்ப்பாணத்திலிருந்து இராணுவத்தினரை எடுத்து அவர்களை எங்கே நிலைநிறுத்த முடியும்? இவர்கள் அனைவரையும் கொழும்பில் நிலைநிறுத்த முடியுமா?' எனவும் பிரிகேடியர் வணிகசூரிய கேள்வி எழுப்பியுள்ளார்.

 

http://www.puthinappalakai.com/view.php?20130213107777

யாழ்ப்பாணத்திலிருந்து இராணுவத்தினரை எடுத்து அவர்களை எங்கே நிலைநிறுத்த முடியும்? இவர்கள் அனைவரையும் கொழும்பில் நிலைநிறுத்த முடியுமா?' எனவும் பிரிகேடியர் வணிகசூரிய கேள்வி எழுப்பியுள்ளார்.

 

கொழும்பில் உள்ள தமிழர்களை வடக்கு கிழக்கிற்கு அனுப்பி அங்கே இராணுவத்தை இருத்தலாம் :D

  • கருத்துக்கள உறவுகள்
எமது நிலங்களை விட்டு வெளியேறுங்கள்; உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பம்
சொந்த நிலங்களில் மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலய முன்றலில் உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பமாகியுள்ளது.
 
வலி.வடக்கு இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றக் குழு இந்தப் போராட்டத்தினை ஏற்பாடு செய்திருந்தது.
 
வலி.வடக்கில் இருந்து 1990 ஆம் ஆண்டு இராணுவத்தினால் வெளியேறிய மக்கள்  23 வருடங்கள் கடந்த நிலையிலும் மீள்குடியேற்றப்படாமல் முகாம்களிலும் தனியார் காணிகளிலும் ,உறவினர்களுடைய வீடுகள் என வசித்து வருகின்றனர். 
 
யுத்தம் முடிவடைந்து 4 வருடங்கள் ஆகியும் உயர்பாதுகாப்பு வலையம் என்ற போர்வையில் நிலங்களை இராணுவத்தினர் ஆக்கிரமித்துள்ளனர்.
 
எனவே சொந்த நிலங்களில் குடியமர்த்தி எமது தொழில்களையும் சுதந்திரமாக மேற்கொள்வதற்கு அனுமதிக்க வேண்டும். என வலியுறுத்தியே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகின்றது.
 
இதற்கு ஆதரவு தெரிவித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தென்னிலங்கையைச் சேர்ந்த கட்சிகள் மற்றும் மக்கள் எனப்பெருமளவானோர் கலந்து கொண்டுள்ளளனர்.
 
ஆரம்பமாகியுள்ள போராட்டமானது மாலை 4 மணிக்கு நிறைவுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
2013-02-15%2009_13_01.jpg
 
2013-02-15%2009_30_37.jpg
 
2013-02-15%2009_30_28.jpg
15 பெப்ரவரி 2013, வெள்ளி 9:40 மு.ப

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.