Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நல்லிணக்க நடவடிக்கை போதவில்லை' : ஐநா மனித உரிமைகள் ஆணையம்

Featured Replies

நல்லிணக்க நடவடிக்கை போதவில்லை' : ஐநா மனித உரிமைகள் ஆணையம்
120601102932_unhrc_112_304x171_unhrc_noc

 

 

இலங்கை சிவில் சமூகத்தினை கலந்தாலோசித்து, அதனை முழுமையாக உள்வாங்கி மேற்கொள்ளப்படக் கூடிய ஒரு நல்லிணக்கத்தை உருவாக்க இலங்கை அரசாங்கம் போதிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையத்தின் அறிக்கை ஒன்று கூறியுள்ளது.
 
நல்லிணக்க நடவடிக்கைகளில் இலங்கை அரசாங்கத்துக்கு ஆலோசனையும், தொழில்நுட்ப உதவியும் வழங்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கை, எதிர்வரும் மார்ச் மாதத்தில் ஐநா மனித உரிமைப் பேரவையில் இலங்கை மனித உரிமைகள் நிலவரம் குறித்த ஆய்வு நடக்கவிருக்கும் நிலையில் வந்துள்ளது.
 
இலங்கையின் நல்லிணக்க ஆணைக்குழு தன்னளவில் சில மட்டுப்பாடுகளைக் கொண்டிருந்த போதிலும் இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும், சட்டத்தின் ஆட்சியை பலப்படுத்துவதற்கும் கணிசமான, கனதியான பரிந்துரைகளை முன்வைத்திருந்தது என்று அந்த அறிக்கை கூறுகின்றது.
 
ஆனால், இவை குறித்து இதுவரை இலங்கை அரசாங்கம் சில பரிந்துரைகளில் மாத்திரமே நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்று ஐநா மனித உரிமைகள் ஆணையத்தின் அறிக்கை கூறுகிறது.
 
உட்கட்டமைப்பு விடயத்தில் அரசாங்கம் அக்கறை
 
உட்கட்டமைப்பை மீளுருவாக்குவதில் அரசாங்கம் மிகுந்த அக்கறை காட்டியுள்ளதாக அந்த அறிக்கை குறிப்பிடுள்ளது. பெருமளவிலான உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ள போதிலும், நீதி, நல்லிணக்கம், வாழ்க்கையை மீண்டும் ஆரம்பிப்பதற்கான விடயங்களில் கணிசமான நடவடிக்கைகள் இன்னமும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
 
கடுமையான மனித உரிமை மீறல்கள் குறித்து தொடர்ச்சியான புலனாய்வுகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளும் முற்றுப்பெறவில்லை என்றும் ஐநா சுட்டிக்காட்டியுள்ளது. இதன் காரணமாக நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கான சுதந்திரமும் பக்கசார்பின்மையும் போதுமானதாக இல்லாத நிலை உருவாகியுள்ளது என்றும் அது கூறுகிறது.
 
கொலைகள் கடத்தல்கள் தொடருகின்றன
 
அதேவேளை, கடந்த ஆண்டில் சட்டத்துக்கு விரோதமான கொலைகள், கடத்தல்கள், கட்டாயமாக காணாமல் போகச் செய்தல் ஆகியன தொடர்வது, அங்கு நீடிக்கின்ற ''குற்றச்செயல்களுக்காக தண்டிக்கப்படாத நிலைமை'' குறித்து உடனடி நடவடிக்கையின் அவசியத்தை வலியுறுத்துகின்றன.
 
இதுவரை தீர்வுகாணப்படாத விடயங்கள் தொடர்பில் சர்வதேச உதவிகளை பெறவும், அவற்றை சரிபார்க்கவும், தேவையான ஆதாரங்களை தேடுவதற்கு ஏஹுவாக 2006 இல் விசாரணை மேற்கொள்ளப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையை வெளியிட வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் ஐநா குறிப்பிடுள்ளது.
 
இராணுவ மயமாக்கலை இல்லாது செய்தலிலும், முடிவுகளை எடுத்தலில் சிறுபான்மை சமூகங்களை பங்கேற்கச் செய்வதற்கான அதிகாரப் பகிர்வு தொடர்பிலும் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஐநா இலங்கை அரசாங்கத்தை கேட்டிருக்கிறது.
 
பொதுமக்களுக்கு உறவுகளை நினைவுகூர வழி இல்லை
 
இலங்கையில் போரில் இறந்தவர்களை நினைவு கூர்வதற்கான விடயத்தில் இலங்கை இராணுவத்துக்காக அருங்காட்சியகங்களும், நினைவிடங்களும் வடக்கில் அமைக்கப்பட்டுள போதிலும், பொதுமக்கள் தமது உறவுகளை நினைவு கூர்வதற்கு தேவையான ஏற்பாடுகள் எதுவும் அங்கு இல்லை என்றும் ஐநா இலங்கை அரசாங்கத்துக்கு சுட்டிக்காட்டியுள்ளது.
 
விடுதலைப்புலிகளின் மயானங்கள் அழிக்கப்பட்டதுடன், பொதுமக்கள் சில சமயங்களில் தமது உறவுகளை நினைவுகூர்வதில் இருந்து தடுக்கப்பட்டதாகவும் ஐநா அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
 
இறுதிப் போரில் பல ஆயிரக்கணக்கான மக்கள் இறந்ததாகக் கூறப்படும் இடத்தில் ஒரு விடுமுறை பங்களாவை இராணுவம் நிர்மாணித்தமை குறித்தும் அது கவலை வெளியிட்டுள்ளது.
 
ஆனால், ஐநா மனித உரிமைகள் ஆணையத்தின் இந்தக் குற்றச்சாடுக்களை இலங்கை அரசாங்கம் மறுத்துள்ளது.
 
ஐநா அமைப்பினால் குறை கூறப்பட்டுள்ள அனைத்துவிடயங்களிலும் தான் பல முன்னேற்றங்களை கண்டிருப்பதாக அது கூறியுள்ளது.
 

 

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2013/02/130213_unhrcreportonlanka.shtml

 

Edited by மல்லையூரான்

ஆங்கிலத்தில் உள்ள அறிக்கை, தெரிந்தவர்களுக்கு / உரியவர்களுக்கு அனுப்பி வைக்கலாம்.


http://www.ohchr.org/Documents/HRBodies/HRCouncil/RegularSession/Session22/A-HRC-22-38_en.pdf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.