Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விட்டுவிடப் போகுது உயிர் சுற்றி நின்று பாக்கிறது சனம்

Featured Replies

நேற்று முன்தினம் இரவு நண்பர் ஒருவர் தொலை பேசியில் தொடர்பு கொண்டார்.  எங்கள் மக்களுக்கு என்னதான் ஆயிற்று. ஏன்தான் இப்படி என்ற கேள்வியோடு அவரின் உரையாடல் தொடங்கியது. என்ன நடந்தாயிற்று என்று கேட்டோம். சிறுப் பிட்டியில் ஒரு விபத்து. அந்த இளைஞன் விழுந்து கிடக்கின்றான். சனங்கள் சுற்றி நின்று பார்க் கிறார்கள். யாரும் தூக்கவோ அவனை வைத்தி யசாலைக்கு அனுப்பவோ நினைக்கவில்லை. அந்த வீதியில் வந்த நான் ஓடிச்சென்று அந்த இளைஞனின் தலையை மெல்லத் தூக்கினேன் மூச்சு இருக்கிறது.

 

 

அச்சமயம் அந்த வீதியால் அம்புலன்ஸ் வண்டி ஒன்று வந்தது. அதனை இடைமறித்து நிலைமை யைச் சொன்னேன். அம்புலன்ஸ் வண்டியில் இருந்தவர்கள் காய மடைந்தவரை வண்டியில் ஏற்றப் பயந்தனர். அவர் இறந்துவிட்டார் என்றும் கூறினார்கள். ஆனால் அந்த இளைஞனிடம் மெல்லிய மூச்சு இருந்ததை அவதானித்தேன். அம்புலன்ஸ் வண்டியில் இருந்தவர்களிடம் இவரை வைத்திய சாலைக்கு எப்படியும் கொண்டு போங்கள் என்று கேட்டேன். பிரயோசனம் இல்லை. உடனடியாக 119 இலக்கத்தில் தொடர்பு கொண்டு பொலிஸாருக்குத் தகவல் கொடுத்து அதன் பின்னரே அந்த இளைஞன் வைத்திய சாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டான். அப்போது அவனின் உயிர் பிரிந்திருந்தது. இப்படி அந்த நண்பர் வேதனையோடு கூறியதைக் கேட்டதும் தலை சுற்றியது.


விபத்து நடந்த கையோடு அந்த இளைஞனை யாரேனும் வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றிருந்தால் அவன் உயிர் பிழைத்திருக்கக் கூடும் என்ற அவரின் ஆதங்கத்தைக் கேட்ட போதெல்லாம் நமக்குத் தூக்கமே வரவில்லை. ஏன்தான் இப்படி? ஓர் உயிர் ஊசலாடுகிறது. அதனைக் காப்பாற்ற நினைக்காமல் சுற்றி நின்று பார்க்கின்ற அளவில் எங்கள் மனங்கள் மரணித்து விட்டனவா என்ற கேள்விக்கு விடை காணமுடியாத ஏக்கம் இன்னமும் தொடர்கிறது. முன்பெல்லாம் ஒரு விபத்து நடந்துவிட்டால் ஆளைத்தூக்கு, வாகனத்தில் ஏற்று, வைத்திய சாலைக்கு கொண்டு போ! என்ற குரல்களுக்கு குறைவே இருக்காது. ஆளைத்தூக்கவும் வாகனத்தில் ஏற்றவும் என ஒரு கூட்டம் குவிந்துவிடும். ஆனால் இன்று அதே மக்கள் - அதே விபத்து - அதே இடம் எனி னும் உதவுவதற்கு யாரும் வருவதாக இல்லை.

 

 

இந்த மனித நேயமற்ற நிலைமை தாமாக உருவாகியதா? அல்லது உருவாக்கப்பட்டதா?

 

விபத்தினால் காயப்பட்டவரை காப்பாற்றும் பொருட்டு யார் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்கின்றாரோ அவரைத் துருவித்துருவி விசாரித்தால் - நீ நாளையும் பொலிஸ் நிலையத் திற்கு வா! என்றால் - நீதிமன்றில் வழக்கு. வருடக்கணக் கில் உன் வரவு அவசியம் என்று கூறினால் யார் தான் உதவ முன்வருவார்? எனவே விபத்தின் போது உதவுகின்றவர் களுக்கு உபத்திரம் இருக்காது என்று அறிவித் தால் அன்றி மக்கள் சுற்றி நின்று பார்ப்பதைத் தவிர வேறெதுவும் நடக்காது.

 

http://www.valampurii.lk/index.php?option=com_content&view=article&id=568:2013-02-16-05-40-06&catid=79:2012-09-26-08-59-23&Itemid=491

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.