Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழருக்குத் தமிழ்த்தேர்ச்சி வேண்டுமா?

Featured Replies

ttv01_thumb.jpg?w=452&h=317


தமிழில்
ஏறக்குறைய இரண்டு லட்சத்து எண்ணாயிரத்துப் பத்துக்கு மேற்பட்ட சொற்கள்
உள்ளன. சென்னைப் பல்கலைக்கழக அகராதியில் 2,08,810 தமிழ்ச்சொற்கள் இருக்கக்
காணலாம். அரி என்னும் ஒரு சொல்லுக்கு மட்டும் அகராதியில்
109 பொருள்களைக் காண்கிறோம். அந்த 109 பொருள்களுள் 50 பொருள்கள் வடமொழிச்
சொற்களைத் தழுவியவை; மற்ற 59 பொருள்கள் அரி என்னும்
தமிழ்ச்சொல்லுக்கே உண்டு. இப்படிப் பொருள்வளம் பெற்றுள்ள சிறப்பும்
தமிழுக்குண்டு. 59 பொருள் தமிழ்மொழிக்கு வரவேண்டுமென்றால் அது நீண்ட
காலமாய் மக்கள் புழக்கத்தில் இருந்திருத்தல் வேண்டும். இது தமிழ்மொழியின்
தொன்மையையும் காட்டும்.


ஒன்றன் வெவ்வேறு நிலையை நன்கு
காட்டுதற்கும், ஒன்றற்கும் மற்றொன்றற்கும் உள்ள வேறுபாட்டை
உணர்த்துவதற்கும் தமிழ்மொழியில் சொற்கள் உண்டு. அரும்பு, போது, மலர், அலர்,
வீ என்பவை ஒரு பூவின் வெவ்வேறு நிலையைக் காட்டும். அரும்பு என்பது மொட்டு. போது என்பது மலரும் நிலையில் இருப்பது. மலர் என்பது விரிந்த பூ. அலர் என்பது நன்றாக மலர்ந்த பூ. நன்றாக மலர்ந்து விழுந்தது வீ. இவை ஒரு பூவின் வெவ்வேறு நிலையைக் காட்டுகின்றன.


ஈ, தா, கொடு – இவற்றின் வேற்றுமையைப் பாருங்கள். யாசிப்பவன் `ஈ’ எனக் கேட்கவேண்டும். சமநிலையில் உள்ளவன் `தா’ எனக் கூறவேண்டும். உயர்நிலையில் உள்ளவன் தன்னைவிடத் தாழ்நிலையில் இருப்பவனைக் கேட்கும்போது `கொடு’
எனச் சொல்லவேண்டும். இப்படியே உண்ணலுக்கும் தின்னலுக்கும் சொற்களைப்
பயன்படுத்தும் முறையில் வேறுபாடு உண்டு. பசியடங்க வயிற்றை நிரப்புதலை உண்ணல் என்றும் சிறிய அளவு உட்கொள்ளுதலைத் தின்னல் என்றும் கூறவேண்டும். சோறு உண்டான் என்க. முறுக்குத் தின்றான் என்க.


இவ்வளவு தனிச்சிறப்பும்
சொல்வளமும் உள்ள தமிழ்மொழியில் அறிவியல் நூல்களை எழுத இயலாதா? ஏன் இயலாது?
முயன்றால் இயலும். அறிவியல் தேர்ச்சியும் மொழித்திறனும் பெற்றுவிட்டால்
எவரும் அறிவியல் நூலைத் தவறின்றி எழுத இயலும் என்று அஞ்சாமல் கூறலாம்.


தமிழகத்தில் இன்றைய நிலை என்ன?
பலர் தங்கள் பெயர்களைக்கூடத் தமிழில் பிழையின்றி எழுத இயலாதவர்களாய்
இருக்கிறார்கள். ரங்கநாதன் அல்லது அரங்கநாதன் என்று எழுத வேண்டுவதை
ரெங்கநாதன் என்றும் இரங்கநாதன் என்றும் பலர் எழுதுகின்றனர். வேங்கடசாமி
என்று எழுதவேண்டிய பெயரை வெங்கடசாமி என்றும் வெங்கிடசாமி என்றும்,
வேங்கடராமன் என்று எழுதவேண்டிய பெயரை வெங்கடராமன் என்றும் வெங்கட்ராமன்
என்றும், வேங்கடாசலம் என்று எழுதவேண்டியதை வெங்கடாசலம் என்றும்
வெங்கிடாசலம் என்றும், சீனிவாசன் என்று எழுதவேண்டுவதைச் சீனிவாசகன் என்றும்
தவறாக எழுதுவதைப் பார்க்கிறோம்.


இந்த நிலையில் தமிழனுக்குத் தமிழ்த்தேர்ச்சி வேண்டுமா என்று ஒரு சிலர் வீண்வாதம் புரிகின்றனர். தமிழர்களாய் இருந்தாலும் தமிழில் ஓரளவு தேர்ச்சி பெற்றால்தான் இவர்கள் பிழையின்றித் தமிழ் எழுத முடியும். பலர்
அரசியல் அறிவும் ஆங்கில அறிவும் பொது அறிவும் பெற்றிருந்தாலும் தமிழ்த்
தேர்ச்சியின்மையால் நாளிதழ்களிலும் வார மாத ஏடுகளிலும் நல்ல தமிழ் எழுத
இயலாதவர்களாய் இருப்பதைக் காண்கிறோம்.
மொழித்தேர்ச்சி இல்லாத எழுத்தாளர்கள் சிறுகதையும் நெடுங்கதையும் நாடகமும் தவறான தமிழில் எழுதுகிறார்கள்.
இவர்கள் சிறிது மொழித்தேர்ச்சி பெற்றுவிட்டால் இவற்றை நல்ல தமிழில்
எழுதலாம். இவர்கள் எழுதுபவையும் இலக்கியங்களாக இலங்கும். இப்பொழுதுள்ள
எழுத்தாளர் பலர் நல்ல தமிழில் எழுதுகின்றனர். இனி நல்ல தமிழ் வளரும்.

 

http://nanavuhal.wordpress.com/2010/01/31/ntev/

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் தமிழில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமாயினும், பல காரணிகளால் தமிழை முறையாக எழுத பலருக்கு முடிவதில்லை. ஆனாலும் எழுத முனைபவர்கள் தமிழ் தெரிந்திருப்பது மிக அவசியம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் புதிதாக படிப்பவர்களுக்கு கடினமான மொழி 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.