Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

13ஆவது திருத்தச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரம் தேவையில்லை: முதலமைச்சர்கள் மாநாட்டில் தீர்மானம்

Featured Replies

13ஆவது திருத்தச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து அதிகாரங்களையும் மாகாண சபைகளுக்கு வழங்க வேண்டும் என அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதற்கு 31ஆவது முதலமைச்சர்கள் மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 

 

ஊவா மாகாண முதலமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ தலைமையில் 31ஆவது முதலமைச்சர்கள் மாநாடு கடந்த சனிக்கிழமை பதுளையில் இடம்பெற்றது.


இதன்போதே, 13ஆவது திருத்தச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து அதிகாரங்களையும் மாகாண சபைகளுக்கு வழங்க வேண்டும் என்ற தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது என கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ. மஜீத் தெரிவித்தார்.

 

இது தொடர்பாக அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பது எனவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.


எனினும் தற்போதைய நிலையில் மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரம் வேண்டும் என அரசாங்கத்தை வற்புறுத்துவதில்லை எனவும் முடிவு செய்யப்பட்டது என கிழக்கு மாகாண முதலமைச்சர் தெரிவித்தார்.

 

இதேவேளை, மாகாண சபைகளுக்கு தற்போது வழங்கப்பட்டுள்ள காணி அதிகாரத்தினை அதிகரிக்க வேண்டும் எனவும் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுவது என இந்த மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டது எனவும் அவர் குறிப்பிட்டார்.


இதற்கு மேலதிகமாக மாகாண கல்வி, சுகாதாரம், உள்ளூராட்சி மன்றங்கள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாகவும் மாகாண முதலமைச்சர்கள் மாநாட்டில் கலந்துரையாடப்பட்டது என அவர் மேலும் தெரிவித்தார்.

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/59089-2013-02-17-12-16-26.html

  • தொடங்கியவர்

தென் மாகாணத்தில் 32ஆவது முதலமைச்சர்கள் மாநாடு

 

32ஆவது முதலமைச்சர்கள் மாநாடு தென் மாகாணத்தில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர்களின் 31 ஆவது மாநாடு கடந்த சனிக்கிழமை பதுளை –பசறை யூரி முகாமைத்துவ பயிற்சி நிலைய பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.

 

 

ஊவா மாகாண முதலமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ தலைமையில் இந்த மாநாடு இடம்பெற்றது. இந்த மாநாட்டில் வட மாகாணம் தவிர்ந்த ஏனைய எட்டு மாகாணங்களின் முதலமைச்சர்கள் மற்றும் மாகாண செயலாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


இதன் இறுதியிலேயே 32ஆவது முதலமைச்சர்கள் மாநாட்டை தென் மாகாணத்தில் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/59086---32--.html

  • தொடங்கியவர்

இந்த தீர்மானம் இந்தியாவிற்கு மகிந்தா கூட்டம் 'முதலமைச்சர்கள் தீர்மானம்' என்ற பெயரில் ஒரு செய்தியை கூறியுள்ளது: "காவல்துறை அதிகாரம் தரப்படமாட்டாது" என்பதே.

 

எனவே 13ஆவது திருத்த சட்டம் என்பதில் உள்ள ஒரு முக்கிய அதிகார பகிர்வு நிராகரிக்கப்படுகின்றது.

 

இந்தியா எவ்வாறு காய்களை நகர்த்த போகின்றது?

திவி நெகும்மா மீளப்பெறப்படப்போவத்தில்லை. வடக்கு - கிழக்கு இணைக்கப்படப் போவதில்லை. இராணுவம் விலக்கப்படப்போவத்தில்லை. காணிகள் பொதுமக்களிடம் திருப்பி கொடுக்கப்படப்போவதில்லை. காணி அதிகாரம், பொலிஸ் அதிகாரம் கிடக்கப்போவதில்லை.

 

வடக்கு கிழக்கில் கோடுகள் சுயமாக இயங்க முடியாது. இயங்கினால் அரசில் பல பெரிய புள்ளிகள் தூக்கு கயிற்றை முத்தமிடுவார்கள்.

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்

தமிழர் பிரச்சனை தீரவேண்டும் என்றால் சர்வதேசத்தின் கண்களில் மகிந்த ஒரு பெரிய பிரச்சனையாக மேலும் வளர வேண்டும்.

 

அப்பொழுதுதான் அவர்கள் சில காத்திரமான நடவடிக்கைகளை எடுக்க தள்ளப்படுவார்கள். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.