Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சென்னை டெஸ்ட்: டோணி அபாரம்- இரட்டை சதமடித்தார்! இந்தியா- 515/8

Featured Replies

சென்னையில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி கேப்டன் டோணி இரட்டை சதமடித்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 206 ரன்களுடன் கேப்டன் டோணி ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார். இதேபோல் கோஹ்லி மற்றும் டெண்டுல்கரின் அற்புதமான ஆட்டங்களால் இந்திய அணி இன்றைய ஆட்ட நேர முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 515 ரன்களை எடுத்திருக்கிறது.சென்னையில் ஆஸ்திரேலியாவுடனான முதலாவது டெஸ்ட் கடந்த 22-ந் தேதி தொடங்கியது. முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 380 ரன்களைக் குவித்தது. பின்னர் இந்திய அணி நேற்று தமது முதல் இன்னிங்ஸை தொடங்கியது.இந்திய அணியின் தொடக்க வீரர்களாக களம் இறங்கிய சேவாக்கும் முரளி விஜய்யும் 12 ரன்களுக்குள் ஆட்டமிழந்தனர். ஆனால் களத்தில் இருந்த புஜாராவுடன் கை கோர்த்த டெண்டுல்கர் நிதானமாக விளையாடி ரன்களைக் குவித்தார். புஜாரா 44 ரன்களில் அவுட் ஆனார். அவருக்குப் பின்னர் வந்த கோஹ்லியும் டெண்டுல்கருடன் இணைந்து நிதானமாக விளையாடினர்.நேற்றைய ஆட்ட நேர முடிவில் டெண்டுல்கர் 71 ரன்களுடன் கோஹ்லி 50 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இன்று 3-ம் நாள் ஆட்டத்தை டெண்டுல்கரும் கோஹ்லியும் விளையாடத் தொடங்கினர். ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த பிறகு சச்சின் டெண்டுல்கர் பங்கேற்கும் முதல் டெஸ்ட் இது. இன்னமும் தாம் பார்மில் இருப்பதாகவே சச்சின் நிரூபித்திருக்கிறார். தம் மீதான விமர்சனங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் சதத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தார் சச்சின் டெண்டுல்கர்.. ஆனால் 81-வது ரன்களை எடுத்திருந்த சச்சின் ஆஸ்திரேலியாவின் நாதன் லியான் வீசிய பந்தில் அவுட் ஆனார். இந்தப் போட்டியில் அவுட் ஆனதால் சச்சின் தமது 52-வது சதத்தை இழந்தார்.பின்னர் களத்தில் இருந்த கோஹ்லியுடன் கேப்டன் டோணி இணைந்து அபாரமாக விளையாடினர். கோஹ்லி அபாரமாக விளையாடி முதலில் சதமடித்தார். அவர் 107 ரன்களைக் குவித்தார். கோஹ்லி அவுட் ஆகும் போது இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 324 ரன்களை எடுத்திருந்தது. களத்தில் ரன்களைக் குவித்துக் கொண்டிருந்த டோணியுடன் ஜடேஜா இணைந்தார். ஆனால் ஜடேஜா நீண்ட நேரம் நிற்கவில்லை. ஜடேஜா 16 ரன்களைத்தான் எடுத்திருந்தார். அதன் பிறகு களத்துக்கு வந்த அஸ்வின் பேட்டிங்கில் சொதப்பிவிட்டார். பந்து வீசி 7 விக்கெட் எடுத்து அபாரத்தை வெளிப்படுத்திய அஸ்வின் 6 பந்துகளை எதிர்கொண்டு 3 ரன்களைத்தான் எடுத்தார். பின்னர் டோணியுடன் ஹர்பஜன்சிங் கை கோர்த்தார். கோஹ்லியைப் போலவே டோணியும் சதமடித்து அசத்தினார். இது டெஸ்ட் போட்டியில் அவர் அடிக்கும் 4வது சதம். அப்போது டெஸ்ட் போட்டிகளில் டோணி 4 ஆயிரம் ரன்களை எடுத்தும் சாதனையும் படைத்தார்.டோணியுடன் இணைந்த ஹர்பஜன்சிங் 11 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆக புவனேஷ்குமார் சேர்ந்து கொண்டார். டோணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானம் இன்று மிகவுமே கை கொடுத்தது. 22 பவுண்டரி 5 சிக்சர்கள் என விளாசி அடுத்த சதத்தையும் எட்டினார். 230 பந்துகளை எதிர்கொண்டு 200 ரன்களை அதிரடியாக குவித்தார் டோணி. இந்திய அணியும் 500 ரன்களைக் கடந்தது.இன்றைய போட்டியில் அபாரமாக விளையாடியதன் மூலம் தம் மீதான அனைத்து விமர்சனங்களுக்கு செம முற்றுப் புள்ளி வைத்திருக்கிறார் டோணி.இன்றைய ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 515 ரன்களை எடுத்திருக்கிறது. டோணி 206 ரன்களுடனும் புவனேஷ்குமார் 16 ரன்களுடனும் அவுட் ஆகாமல் களத்தில் இருக்கின்றனர்.

 

http://tamil.thatscricket.com/news/2013/02/24/chennai-test-sachin-just-miss-hundred-001724.html

  • தொடங்கியவர்

சென்னை டெஸ்ட்: சச்சினின் சாதனையை முறியடித்தார் டோணி! சென்னை: சென்னையில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் 4-வது நாளான இன்று இந்திய அணியின் கேப்டன் டோணி, சச்சின் எடுத்திருந்த 217 ரன்கள் என்ற சாதனையை முறியடித்தார்.மும்பையில் 1978ம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கவாஸ்கர் 2005 ரன்களை எடுத்திருந்தார். இதுவே சாதனையாக இருந்தது. 1999-ம் ஆண்டு அகமதாபாத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் 217 ரன்களை எடுத்து இந்த சாதனையை முறியடித்தார்சச்சினின் சாதனையை சென்னையில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் 4-ம் நாளான இன்று கேப்டன் டோணி முறியடித்திருக்கிறார். இன்றைய ஆட்டத்தின் போது 218 ரன்களைக் கடந்து சச்சினின் சாதனையை கடந்தார். பின்னர் 224 ரன்கள் எடுத்த நிலையில் பேடின்சன் பந்தில் அவுட் ஆனார். அப்போது இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 546 ரன்களை எடுத்திருந்தது.

Read more at: http://tamil.oneindia.in/news/2013/02/25/sports-ms-dhoni-breaks-tendulkar-record-170391.html

  • தொடங்கியவர்

 முதல் டெஸ்ட்டில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி சென்னை: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.இரு அணிகளும் மோதும் முதல் டெஸ்ட் போட்டி சென்னையில் நடந்தது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 380 ரன்கள் எடுத்தது. இந்திய பந்து வீச்சாளர் அஸ்வின் அபாரமாக பந்து வீசி 7 விக்கெட்களைச் சாய்த்தார். பின்னர் ஆடிய இந்தியா புயல் வேக ஆட்டத்தால் 572 ரன்கள் குவித்தது. கேப்டன் டோணி இரட்டை சதம் அடித்தார். விராத் கோஹ்லி சதம் போட்டார்.அடுத்து 2வது இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலியா மீண்டும் இந்தியாவின் சுழற்பந்து வீச்சில் சிக்கி சிதைந்தது. அஸ்வின் 5 விக்கெட்களை அள்ளினார். ரவீந்திர ஜடேஜாவுக்கு 3 விக்கெட்களும், ஹர்பஜன் சிங்குக்கு 2 விக்கெட்களும் கிடைத்தன.இதனால் மிரண்டு போன ஆஸ்திரேலியா, எப்படியாவது இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்க்க வேண்டும் என்று போராடியது. அதன்படி அந்த அணி இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்த்து விட்டது. இருப்பினும் அதன் தோல்வி உறுதியாகி விட்டது. இன்று கடைசி நாளாகும்.நேற்று ஆஸ்திரேலியா தனது 2வது இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்புக்கு 236 ரன்களை எடுத்திருந்தது. இன்று காலை ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே ஆஸ்திரேலியாவின் இன்னிங்ஸை முடிவுக்குக் கொண்டு வந்தார் ஜடேஜா. 241 ரன்களுக்கு ஆஸ்திரேலியாவின் 2வது இன்னிங்ஸ் முடிவடைந்தது. இதையடுத்து இந்திய அணி 50 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை உருவானது.6 ரன்களில் முரளி விஜய் வேகமாக அவுட்டானார். பின்னர் ஷேவாக்கும், புஜாராவும் இணைந்தனர். ஷேவாக் 19 ரன்களில் ஆட்டமிழக்க, புஜாராவும், சச்சினும் இணைந்தனர். சச்சின் துரிதமாக ஆடி 13 ரன்களைச் சேர்த்தார். இறுதியில் 2 விக்கெட்களை மட்டும் இழந்து இந்தியா 50 ரன்களை எடுத்து முதல் டெஸ்ட் போட்டியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.இதன் மூலம் 4 டெஸ்ட்கள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது.ஆட்ட நாயகனாக இரட்டை சதம் போட்ட கேப்டன் டோணி தேர்வானார்.

Read more at: http://tamil.thatscricket.com/news/2013/02/26/india-set-win-first-test-001726.html

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.