Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

15 நாட்களாக தொடரும் நீதி கோரிய 'தமிழ் வான்' போராட்டம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

TamilVan-Frankfurtgermany-seithy-7-20130

கடந்த 12.02 அன்று பிரித்தானியாவில் ஆரம்பிக்கப்பட்ட தமிழ் வான் நடமாடும் கண்காட்சி போராட்டம் இன்று யேர்மனி Landau நகரை சென்றடைந்துள்ளதுகடந்த நாட்களாக யேர்மனியில் பல்வேறு நகரங்களில் தமிழ் வான் போராட்டத்தை முன்னெடுக்கும் சிவந்தன் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் , உள்ளூர்ராச்சி சபை உறுப்பினர்கள் மற்றும் மனிதவுரிமை செயற்பாட்டாளர்கள் அனைவரையும் சந்தித்து ஈழத்தமிழர்கள் மீது சிங்கள இனவெறி அரசு நடாத்தும் இன அழிப்பை எடுத்துரைத்து தமிழ் மக்களுக்கு நீதி கோரி வலியுறுத்தி வருகின்றார்.

  

அந்தவகையில் கடந்த முன்று நாட்களாக Hannover ,Bremen ,Mettingen ,Osnabr�ck,D�sseldorf ,K�ln,Frankfurt ,Saarbr�cken ஆகிய நகரங்களை கடந்து இன்று Landau நகரத்தில் தனது கவனயீர்ப்பு நிகழ்வை ஆரம்பிக்க இருக்கின்றதுநேற்று Saarbr�cken நகர மத்தியில் தமிழ் மக்கள் சிவந்தன் அவர்களை வரவேற்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் . அத்தோடு மனிதநேய வேற்றின செயற்பாட்டாளர்களோடும் சந்திப்பை மேற்கொண்டனர் . அனைத்து Landau வாழ் தமிழ் மக்களையும் இப் போராட்டத்தில் கலந்துகொண்டு அர்ப்பணிப்போடு ஜெனீவா நோக்கி பயணிக்கும் சிவந்தன் அவர்களுக்கு வலுச்சேர்க்கும் முகமாக செயற்பட வேண்டிக்கொள்கின்றோம் .

 

 

Saarbrucken-Germany-seithy-1-20130217-45

 

 

Saarbrucken-Germany-seithy-2-20130227-45

 

 

Saarbrucken-Germany-seithy-3-20130217-45

 

 

Saarbrucken-Germany-seithy-4-20130217-45

 

 

Saarbrucken-Germany-seithy-5-20130217-45

 

 

Saarbrucken-Germany-seithy-6-20130217-45

 

 

TamilVan-Frankfurtgermany-seithy-7-20130

 

 

TamilVan-Frankfurtgermany-seithy-8-20130

 

http://www.seithy.com/breifNews.php?newsID=76914&category=TamilNews&language=tamil

Edited by தமிழரசு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யேர்மனியில் நிறைவு செய்யும் "தமிழ்வான்" பரப்புரைப் பயணவூர்தி

 

"தமிழ்வான்" பரப்புரைப் பயணவூர்தி  16வது நாளாக  யேர்மனி லண்டவ் நகரை கடந்து ஸ்டுட்கார்ட் மற்றும் முன்ஸன் (யேர்மனி) நகரங்களை வந்தடைந்தது.

28.02.2013 அன்று தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டுத் "தமிழ்வான்" பரப்புரைப் பயணவூர்தி ஸ்டுட்கார்ட் மற்றும் முன்ஸன் நகரை வந்தடைந்தபோது, ஸ்ட்டுட்கார்ட் மற்றும் முன்ஸன் வாழ் தமிழ் மக்கள்  உணர்வுபூர்வமாக வரவேற்றார்கள்.

 

யேர்மனி தமிழ் இளையோர்களால் யேர்மன் மொழியிலான துண்டுப்பிரசுரமும் காணொளி இறுவட்டும் (DVD) வளங்கப்பட்டது. வேற்றின மக்களுக்கு வழங்கித் தமிழினவழிப்பை விளங்கப்படுத்தினார்கள். தமிழினவழிப்பை காணொளியில் கண்ட வேற்றின மக்கள் வேதனை அடைந்தார்கள். மேலும் ஆர்வத்துடன் தமிழினவழிப்பை கேட்டறிந்துக் கொண்டார்கள்.  

 

பிற்பகல் இடம்பெற்ற மக்கள் சந்திப்புகளை தமிழ் இளையோர் அமைப்பு செயற்பாட்டாளர்கள் ஆரம்பித்து வைக்க கோபி சிவந்தன் அவர்கள் திட்டமிட்ட சிங்கள பேரினவாதத்தின் தமிழின அழிப்பையும், தாயக விடுதலைப் போராட்டத்தில்  தமிழ் இளையோரின் பங்கு குறித்தும், தமிழீழ தனியரசானது ஏன் எமது எதிர்காலச் சந்ததிக்கு அவசியம் என்பதையும் ஆழமாக எடுத்துரைத்து, 04.03.2013 அன்று தமிழ் மக்கள் ஐ. நா. சபையின் முன்றலில் ஒன்றுகூட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார்.

 

தமிழ் இளையோர்களுடன் நடைபெற்ற சந்திப்பில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தமிழ் இளையோர்களின் பங்கு மற்றும் ஒன்றுமை குறித்தும் அவர்கள் தமிழீழ மண்ணை நேசிக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார். உரையாடல் முடிவடைந்ததும் தமிழ் இளையோர்கள் தாம் தமிழீழ கொள்கைக்காய் உறுதியுடன் செயற்படுவோமென உறுதியளித்தார்கள்.

 

நீதிகோரிய நெடும்பயணச் செயற்பாட்டை உற்சாகப்படுத்தும் வகையில் தமிழ் மக்களால் நிதியுதவியை வழங்கி வாழ்த்தி அனுப்பினார்கள். யேர்மனியில் "தமிழ்வான்" பரப்புரைப் பயணவூர்தி இன்றுடன் யேர்மனியில் தன் பணியை நிறைவு செய்து வேறு நாடுகளை நோக்கிப் பயணிக்கின்றது. கோபி சிவந்தன் அவர்கள் யேர்மன் இளையோர் அமைப்பின் செயற்பாட்டுக்கு தனது வாழ்த்தை தெரிவித்தார். 

இலங்கையில் உள்ள வெள்ளை வண்டி தமிழினத்தை கடத்திச் சென்று

தமிழினத்தையழிக்கின்றது ஆனால், தமிழ்வான் தமிழினவழிப்பை தடுப்பதற்காக பயணிக்கின்றது.

M%C3%BCnchen%201.JPG

M%C3%BCnchen%202.JPG

M%C3%BCnchen%203.JPG

M%C3%BCnchen%204.JPG

M%C3%BCnchen%205.JPG

M%C3%BCnchen%206.JPG

M%C3%BCnchen%207.JPG

M%C3%BCnchen%208.JPG

M%C3%BCnchen%209.JPG

M%C3%BCnchen%2010.JPG

M%C3%BCnchen%2012.JPG

 

http://www.sankathi24.com/news/27520/64//d,fullart.aspx

Edited by தமிழரசு

  • கருத்துக்கள உறவுகள்

பங்கேற்பாளர்களின் பரப்புரைகளுக்கு நன்றி..!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

'தமிழ்வான்' பரப்புரைப் பயணவூர்தி 18வது நாளாக யேர்மனி நாட்டை கடந்து ஒஸ்ரியா நாட்டை சென்றடைந்துள்ளது!

 

01.03.2013 அன்று தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டுத் 'தமிழ்வான்' பரப்புரைப் பயணவூர்தி யேர்மனி நாட்டை கடந்து ஒஸ்ரியா நாட்டை சென்றடைந்துள்ளது ஒஸ்ரிய நாட்டில் தமிழ் மக்கள் குறைந்த தொகையில் வாழ்ந்த பொழுதும் தமிழ் இளையோர்கள் உற்சாகத்துடன் தமிழ்வானை வரவேற்றார்கள்.

தமிழ் இளையோர்கள் யேர்மன் மொழியிலான துண்டுப்பிரசுரங்களை ஒஸ்ரியா வாழ் மக்களுக்கும் வேற்றின மக்களுக்கும் வழங்கி தமிழினவழிப்பை தெளிவுப்படுத்தினார்கள். தமிழ் இளையோர் தாமுடன் பணியாற்றும் நண்பர்களுக்கும் தமிழினவழிப்பை உள்ளடக்கிய துண்டுப்பிரசுரத்தை கொண்டு சென்று தமிழினவழிப்பை விளங்கப்படுத்துவதாக உறுதியளித்தார்கள். 'தமிழ்வான்' பரப்புரைப் பயணவூர்தி நாளை இத்தாலிய நாட்டை சென்றடைகின்றது.

TamilVan%20Austria%20%20400%20260.jpg

TamilVan%20Austria%20(7).jpg

TamilVan%20Austria%20(2).jpg

TamilVan%20Austria%20(1).jpg

 

http://www.sankathi24.com/news/27553/64/18/d,fullart.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.