Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மத்திய பட்ஜெட் 2013- முக்கிய அறிவிப்புகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாதுகாப்புத்துறைக்கு ரூ. 43,000 கோடி கூடுதலாக ஒதுக்கீடு

ஆண்டுக்கு ரூ. 2 லட்சம் வருமானம் உள்ளவர்களுக்கு- வரி ஏதும் இல்லை

ரூ. 2 முதல் ரூ. 5 லட்சம் வரை- 10% வரி

5 லட்சம் முதல் 10 லட்சம் வரை- 20% வரி

20 லட்சத்துக்கு மேல் ஊதியம் உள்ளவர்களுக்கு -30% வருமான வரி

1 கோடிக்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு- 30 சதவீதம் பிளஸ் 10 சதவீதம் வரி

கூடுதல் நேரடி வரிகள் மூலம் ரூ. 30,000 கோடி கூடுதலாகக் கிடைக்கும்

கூடுதல் மறைமுக வரிகள் மூலம் ரூ. 4,700 கோடி கூடுதலாகக் கிடைக்கும்

ஏசி ஹோட்டல்கள் அனைத்துக்கும் சேவை வரி விதிப்பு

மார்பிள் மீதான வரி சதுர மீட்டருக்கு 30 ரூபாயிலிருந்து 60 ரூபாயாக அதிகரிப்பு

ரூ. 2000க்கு மேல் அதிக மதிப்புள்ள செல்போன்கள் மீதான வரி 6 சதவீதம் அதிகரிப்பு

சிகரெட் மீதான வரி 18% அதிகரிப்பு

எஸ்யூவி கார்கள் மீதான வரி 20 சதவீதத்திலுருந்து 30 சதவீதமாக உயர்வு

வெளிநாட்டு கார்கள், பைக்குகள் மீதான இறக்குமதி வரி 75 சதவீதத்திலிருந்து 100 சதவீதமாக உயர்வு

வெளிநாடுகளில் இருந்து ஆண்கள் ரூ. 50,000 மதிப்பு வரை தங்கம் கொண்டு வரலாம்

பெண்கள் 1 லட்சம் மதிப்பு வரை தங்கம் கொண்டு வரலாம்

வருடத்துக்கு ரூ. 10 கோடிக்கு மேல் ஈட்டும் நிறுவனங்களுக்கு 5 முதல் 10% கூடுதல் வரி

வருமான வரிகளில் மாற்றம் இல்லை

கல்வித் திட்டங்களுக்காக கூடுதல் வரி

ஆண்டுக்கு ரூ. 1 கோடிக்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு 10% கூடுதல் வரி

இது 42,800 பேருக்கு மட்டுமே பொறுந்தும்

ரூ. 5 லட்சம் வரை ஊதியம் பெறுவோருக்கு ரூ.2000 வரிச் சலுகை

1.8 கோடி பேர் பலனடைவர்

பெண்கள், பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்

'நிர்பயா பெண்கள் நிதி' உருவாக்கப்படும். இதற்கு ரூ. 1,000 கோடி ஒதுக்கப்படும்

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது நம் அனைவரின் கடமை-ப.சி

294 புதிய எப்எம் ரேடியோ நிலையங்களுக்கு அனுமதி

1 லட்சம் பேர் கொண்ட எல்லா ஊர்களிலும் தனியார் எப்எம் ரேடியோ ஸ்டேசன் அமையும்

பாதுகாப்புத்துறைக்கு ரூ. 2,03,000 கோடி ஒதுக்கீடு

10,000 பேர் கொண்ட எல்லா ஊர்களிலும் எல்ஐசி அலுவலகம் அமைக்கப்படும்

வங்கிகளிலும் இன்சூரன்ஸ் பிரீமியம் கட்டும் வசதி ஏற்படுத்தப்படும்

பெண்களுக்கு மட்டுமே கடன் வழங்கும் சிறப்பு வங்கி துவக்கப்படும்

இந்த பெண்கள் வங்கி நாடு முழுவதும் கிளைகளை துவக்கும்

இது இந்தியாவின் முதல் பொதுத்துறை பெண் வங்கியாக இருக்கும்

இதற்காக முதல் கட்டமாக ரூ. 1,000 கோடி ஒதுக்கப்படும்

13 பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ. 14,000 கோடி கூடுதலாக ஒதுக்கீடு

டெல்லி எஐஐஎம்எஸ் மருத்துவ ஆய்வுக் கழகம் போல மேலும் 6 ஆய்வு மையங்கள் அமைக்கப்படும்

ஜவுளிப் பூங்காங்களுக்கு ரூ. 50,000 கோடி

கைத்தறி தொழில்துறை நசிந்து போயுள்ளது. இதில் ஈடுபட்டுள்ள பெரும்பாலானோர் பிற்படுத்தப்பட்ட பெண்கள்

கைத்தறித்துறை கடன்களுக்கான வட்டியை ரத்து செய்ய ரூ. 96,000 கோடி ஒதுக்கீடு

பட்ஜெட்டை ப.சிதம்பரம் படித்துக் கொண்டிருந்தபோது ஆரம்பத்தில் பங்குச் சந்தைகள் வீழ்ச்சி

பின்னர் வீழ்ச்சி நின்றது

வீட்டுக் கடனை ஊக்குவிக்க நடவடிக்கை

இதன்மூலம் வீடுகள் கட்டுவது அதிகமாகும், இரும்பு-சிமெண்ட் உள்ளிட்ட துறைகள் வளரும்

வீட்டுக் கடனுக்கான வரி விலக்கு ரூ. 1.5 லட்சத்தில் இருந்து ரூ. 2.5 லட்சமாக அதிகரிப்பு

வீட்டுக் கடன் வாங்கியோருக்கு வருமான வரி மேலும் குறையும்

தூத்துக்குடியில் ரூ. 7,500 கோடியில் புதிய துறைமுகம் அமைக்கப்படும்

சென்னை-பெங்களூர் தொழில்துறை காரிடார் அமைக்கத் திட்டம்

இதை தமிழகம், ஆந்திரா, கர்நாடக அரசுகள் இணைந்து அமைக்கும்

வீட்டுக் கடன் பெறுவோருக்கு ரூ. 1 லட்சம் கூடுதல் வரி விலக்கு

முதல் வீடு வாங்குவோருக்கு, ரூ. 25 லட்சம் வரை வங்கிக் கடன் வாங்குவோருக்கு இந்த வரி விலக்கு

அடிப்படைக் கட்டமைப்பில் முதலீட்டை அதிகரிக்க வரியில்லா பத்திரங்கள் வெளியிடப்படும்

தேசிய நெடுஞ்சாலைகள் சாலைகள் அமைக்கும் பணியில் உள்ள பிரச்சனைகளைத் தீர்க்க தனி வாரியம்

அடிப்படைக் கட்டமைப்பில் தனியார் முதலீட்டை அதிகரிக்க நடவடிக்கை

வட கிழக்கு மாநிலங்களில் சாலைகள் அமைத்து மியான்மாருடன் இணைக்க நடவடிக்கை

இந்தத் திட்டத்தில் உலக வங்கி முதலீடு ஊக்குவிக்கப்படும்

முதலீடுகள் தான் நாட்டின் பொருளாதாரத்தின் முக்கிய முதுகெலும்பு

அடிப்படைக் கட்டமைப்புக்கு ரூ. 55 லட்சம் கோடி தேவை

உணவுப் பாதுகாப்பு திட்டத்துக்கு ரூ. 10,000 கோடி கூடுதலாக ஒதுக்கீடு

அனைவருக்கும் வேலை திட்டத்துக்கு ரூ. 33,000 கோடி

விவசாயிகளுக்கு கடன் வழங்க ரூ. 7 லட்சம் கோடி

ஊரக வளர்ச்சித் திட்டத்துக்கு ரூ. 80,000 கோடி

விவசாயத்துறைக்கு ரூ. 27,300 கோடி

நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின் கீழ் மாநிலங்களுக்கு 10000 புதிய பஸ்கள் வாங்க 14,873 கோடி

இதில் மலைப் பகுதி மாநிலங்களுக்கு முக்கியத்துவம்

அனைவருக்கும் கல்வி திட்டத்துக்கு ரூ. 27,000 கோடி

குளோரைடு, புளூரைடு அதிகமுள்ள பகுதிகளில் குடிநீரை சுத்திகரிக்க ரூ. 1400 கோடி

மதிய உணவுத் திட்டத்துக்கு ரூ. 13,000 கோடி

குழந்தைகள், நலத் திட்டங்களுக்கு ரூ. 17,000 கோடி

மனித வளத்துறைக்கான ஒதுக்கீடு 17 சதவீதம் அதிகரிப்பு

குடிநீர் திட்டப் பணிகளுக்கு ரூ. 15620 கோடி

மனிதவளத்துறைக்கு ரூ. 65,000 கோடி

நாலந்தா பல்கலைக்கழகத்தை மேம்படுத்த நடவடிக்கை

அரசின் செலவுகள் ரூ. 16.65 லட்சம் கோடியாக இருக்கும்

திட்டச் செலவுகள் ரூ. 5.35 லட்சம் கோடியாக இருக்கும்

சிறுபான்மையினர் நலனுக்கு ரூ. 3,000 கோடி ஒதுக்கீடு

பெண்கள், குழந்தைகள், சிறுபான்மையினர், தலித்கள் மேம்பாட்டுக்கு முக்கியத்துவம்

தலித்கள் மேம்பாட்டுக்கு ரூ. 42561 கோடி ஒதுக்கீடு

பழங்குடியினருக்கு ரூ. 24598 கோடி ஒதுக்கீடு

இது கடந்த ஆண்டை விட 12.5 சதவீதம் அதிகம்

2013-14ம் ஆண்டில் திட்டச் செலவுகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும்

பண வீக்கத்தை 4% குறைத்துள்ளோம்

இளைஞர்களுக்கு உதவும் பட்ஜெட்டாக இது இருக்கும்

வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் பட்ஜெட் இருக்கும்

அன்னிய முதலீடுகளை நிராகரிக்கும் நிலையில் இந்தியா இல்லை

2010ம் ஆண்டுக்குப் பின் நாட்டின் வளர்ச்சி தேங்கிவிட்டது

நிதிப் பற்றாக்குறையை மனதில் வைத்து செலவுகளைக் குறைத்தோம்

அதன் பலன்கள் கிடைக்க ஆரம்பித்துள்ளன

உணவு பணவீக்கம் கவலை தருகிறது

பருப்பு-எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி குறைவே பணவீக்கத்துக்கு முக்கிய காரணம்

அரசின் செலவீனங்களை கட்டுப்படுத்த வேண்டியது அவசியம்

அன்னிய முதலீடுகள் அவசியம் தான். ஆனால், நிலையான முதலீடுகளே வரவேற்கத்தக்கவை

நடப்புக் கணக்கு பற்றாக்குறை தான் எனது பெரிய கவலை

தங்கம் மீதான நமது மோகம், பெட்ரோலிய-நிலக்கரி இறக்குமதியால் அன்னிய செலாவணி கரைகிறது

2013-14ல் உலக நாடுகளில் சீனா மட்டுமே இந்தியாவை விட அதிக வளர்ச்சி அடையும்

இந்திய பொருளாதார வளர்ச்சி குறித்து கவலைகள் தேவையில்லை

அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியே எனது மந்திரம்

2013-14ல் உலக நாடுகளில் சீனா, இந்தேனேஷியா மட்டுமே இந்தியாவை விட அதிக வளர்ச்சி அடையும்

Thatstamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.