Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பா.ஜ., ஒரு மிஷன் ( அமைப்பு ) , காங் ஒரு கமிஷன் ! - மோடி; மோடியின் பேச்சு ஒரு பொய் மூட்டை: மத்திய அமைச்சர்

Featured Replies

பிரதமர் வேட்பாளர் என்ற முக்கிய அந்தஸ்து நோக்கி சென்று கொண்டிருக்கும் குஜராத் முதல்வர் மோடி மீது அனைத்து அரசியல் கட்சியினரும் மீடியாக்களும் பின் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் நேற்று நடந்த பா.ஜ., தேசிய செயற்குழு கூட்டத்தில் அனைத்து தலைவர்களும் மோடியின் பெருமையை புகழ்ந்தனர்.

 

இன்றயை 3 ம் நாள் கூட்டத்தில் மோடி பேசினார். இவர் பேசுகையில் ; என்னை மிக பெருமைபடுத்திய ராஜ்நாத்சிங்கிற்கு நன்றி கூற வார்த்தைகள் இல்லை. குஜராத்தில் பா.ஜ., பெற்ற வெற்றி மக்கள் வெற்றி. இந்த வெற்றியை நான் பா.ஜ., மூத்த தலைவர்களுக்கு அர்ப்பணிக்கிறேன். இந்த தேசம் மத்தியில் ஒரு நிலையான அரசை எதிர்பார்க்கிறது. மத்தியில் ஆளும் காங்., அரசு சோனியா குடும்ப நலத்தை மையமாக வைத்து செயல்பட்டு வருகிறது. ஒரு குடும்பத்திற்கென தேசத்தை பலியாக்க முடியாது. இதனை நாம் பொறுத்து கொள்ள முடியாது. கடந்த 30 ஆண்டுகளில் காங்., அரசு இந்த நாட்டிற்காக எதுவும் செய்யவில்லை. பொது மக்களின் அனைத்து தொடர்பையும் காங்., அரசு இழந்து விட்டது. மக்களின் நலனை காத்திட தவறி விட்டது.

 

தற்போதைய பிரதமர் எந்தவொரு சக்தியும் இல்லாதவர். மன்மோகனை விட பிரணாப் சிறந்தவராக இருப்பார். இவர் மக்களின் தொடர்பில் இருந்து இது குறித்து அறிந்தவர். சோனியா குடும்பத்தை சேர்ந்தவர்கள் யாரும் வர முடியாமல் போய்விடும் என்பதற்காக இது செய்யப்படவில்லை. இந்திய நாட்டின் மதிப்பை காங்., அரசு பாழடித்து விட்டது. குஜராத் குறித்து செய்திகள் கிரிக்கெட் கமென்ட்ரிபோல பரவி வருகிறது. காங்., அரசுக்கு மாற்று பா.ஜ., மட்டுமே. பா.ஜ., ஆளும் மாநில முதல்வர்கள் ஆட்சி சிறப்பாக உள்ளது. இந்த நாட்டிற்கு பா.ஜ., முதல்வர்கள் அதிகம் செய்திருக்கின்றனர். காங்., பா.ஜ.,விடம் இருந்து அதிகம் கற்று கொள்ள வேண்டும். இங்கு ஊழல் இல்லை. இந்த நாட்டை முன்னேற்ற பாதைக்கு அழைத்து செல்ல மக்கள் ஆதரவு தேவைப்படுகிறது.

 

கடந்த காலத்தில் வாஜ்பாய் அரசு இந்த நாட்டிற்கு பெரும் முன்னேற்றங்களை தந்தது. அணு சோதனையில் வெற்றி பெற்று நாட்டை உலக அரங்கில் பேசவைத்தார் வாஜ்பாய். இவர் தான் உண்மையான பிரதமர். பா.ஜ., ஒரு மிஷன் ( அமைப்பு ) , காங் ஒரு கமிஷன் ! வளர்ச்சி பணிகளே மக்களின் வாழ்வுக்கு உதவும். தற்போது மாற்றத்திற்கான நேரம வந்து விட்டது. இனி காங்., அரசு மீண்டும் ஆட்சிக்கு வரமுடியாது. பா.ஜ.,வில் பிரதமர் வேட்பாளர் ஒரு பிரச்னை இல்லை. அதற்கு தகுதி உள்ளவர்கள் அதிகம் இருக்கின்றனர். இவ்வாறு மோடி பேசினார். இவரது பேச்சின் போது தொண்டர்கள் பாரத் மாதாக்கி என கோஷங்கள் எழுப்பினர்.

 

இன்றைய தேசிய செயற்குழு கூட்டத்தில் குஜராத் முதல்வர் மோடி பேச்சு மிக அருமையாக இருந்தது. இது உண்மையிலேயே எனது மனதை மிகவும் பதிந்து கவர்ந்தது. இது தான் மிக சிறப்பான நிறைவு பேச்சு. அவர் அனைத்து பிரச்னைகளையும் முன் வைத்து பேசினார், இவ்வாறு அத்வானி இந்த கூட்டத்தில் மோடியை குறிப்பிட்டு மனதார பாராட்டி பேசினார். அவர் மேலும் பேசுகையில்; கடந்த காலத்தில் ஆட்சி செய்தவர்களில் அட்டல்பிகாரி வாஜ்பாய் மிக சிறந்த பிரதமர் ஆவார். அவர் தான் தனது ஆட்சியை திறம்பட செய்து வெற்றி பெற்றார். இவ்வாறு அத்வானி பேசினார்.

 

http://www.dinamalar.com/news_detail.asp?id=659275



மோடியின் பேச்சு ஒரு பொய் மூட்டை: மத்திய அமைச்சர்  ராஜீவ் சுக்லா



தேசிய தலைவராகும் தகுதி நரேந்திர மோடிக்கு கிடையாது. அதை அவர் இன்னும் வளர்த்துக் கொள்ளவில்லை என்று மத்திய மந்திரி ராஜீவ் சுக்லா கடுமையாக விமர்சித்துள்ளார்.

 

 

பாஜக தேசியக் கவுன்சில் கூட்டத்தில் பேசிய குஜராத் முதல்வர் நரேந்திர மோடி காங்கிரஸ் கட்சி தலைவர்களை கடுமையாக விமர்சித்தார். இதற்கு பதில் அளித்து,ராஜீவ் சுக்லா சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டு இருப்பதாவது:


நரேந்திர மோடி தனது பேச்சில் பயன்படுத்தி இருக்கும் வார்த்தைகள், எந்தவொரு தேசியத் தலைவரும் பயன்படுத்தக் கூடாத வார்த்தைகளாகும். இதன்மூலம் தேசிய தலைவராகும் தகுதியை அவர் இன்னும் அடையவில்லை என்றே நான் கருதுகிறேன்.மாநில அரசின் கோடிக்கணக்கான பணத்தை சுய விளம்பரத்துக்காக செலவிடுவதன் மூலம், ஒருவர் தேசியத் தலைவராக முடியும் என்று கருதுவாரேயானால், அது அவரின் தவறாகும். மோடியின் பேச்சு ஒரு பொய் மூட்டை என்று கூறினார்.

 

http://dinamani.com/latest_news/article1486616.ece

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.