Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகிந்தவின் இணக்கப்பாட்டுத் திட்டம்

Featured Replies

மகிந்தவின் இணக்கப்பாட்டுத் திட்டம்: விடுதலைப் புலிகளின் பதில் கையளிப்பு

- பண்டார வன்னியன் குசனையலஇ 30 துரநெ 2006 10:56

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் நேரடியாகப் பேசி இணக்கப்பாடு ஒன்றுக்கு வருவதற்கு உதயன், சுடர்ஒளி நாளேடுகளின் ஆசிரியர் வித்தியாதரன் ஊடாக சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச மேற்கொண்ட முயற்சிக்கு விடுதலைப் புலிகள் தமது பதிலை நேற்று வியாழக்கிழமை அனுப்பியுள்ளனர்.

நோர்வே ஊடாக அல்லாமல் விடுதலைப் புலிகளுடன் நேரடியாக தொடர்புகளை பேணி மேற்படி இணக்கப்பாட்டை எட்டுவதற்கு தான் இசைவாக இருப்பதாக கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக விடுதலைப் புலிகளுக்கு மகிந்த தெரியப்படுத்தியிருந்தார். அதற்கு தமது தரப்பு பதிலை விடுதலைப் புலிகள் உதயன், சுடர்ஒளி ஆசிரியர் வித்தியாதரன் ஊடாக நேற்று அனுப்பியுள்ளனர்.

மகிந்தவுக்கு அவ்வாறான விருப்பம், நிலைப்பாடு ஏதாவது இருந்தால் அதை வெளிப்படையாக அறிவித்துவிட்டு பேச்சுக்களை திறந்த மனத்தோடு மேற்கொள்ள அவர் முன்வரலாம் என்று சாரப்பட விடுதலைப் புலிகள் தமது பதிலை அனுப்பி வைத்திருப்பதாக தெரியவருகிறது.

போர் என்பது நூறுவீதம் உறுதியாகிவிட்ட நிலையில் அதை எப்படி தவிர்ப்பது என்ற நிலையில் விடுதலைப் புலிகளுடன் இரகசிய இணக்கப்பாடு ஒன்றுக்கு முனைந்த மகிந்த ராஜபக்சவின் திட்டம் கடந்த வாரம் கொழும்பு ஊடகமொன்றில் கசிந்திருந்தது.

உண்மையில் நடந்தது என்ன என்ற விவரம் வருமாறு:

கொழும்பிலிருந்து வெளியாகும் சுடர்ஒளி நாளேட்டின் காரியாலயத்துக்கு அரச தலைவர் மாளிகையிலிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு. ஆசிரியர் ந.வித்தியாதரனுடன் பேசவேண்டும் என்று மறுமுனையில் கேட்கப்பட, ஆசிரியர் வித்தியாதரன் தொடர்புக்கு வருகின்றார். அரச தலைவர் மாளிகையிலிருந்து பேசியவர் வேறு யாருமல்லர். சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவே ஆவார்.

பொதுப்பட ஊடகவியலாளர்கள் சந்திப்புக்களில் நாளேட்டின் ஆசிரியர் என்ற வகையில் சந்தித்த அனுபவம் மற்றும் பிரத்தியேக செவ்வி வழங்கிய பழக்கம் ஆகியவற்றால் உதயன், சுடர் ஒளி ஆசிரியர் ந.வித்தியாதரனை முன்னரே தெரிந்திருந்ததால் ஆலாபனை இல்லாமலேயே பேச ஆரம்பித்த மகிந்த சட்டென விடயத்துக்கு வந்தார்.

அதாவது, சிறிலங்கா இராணுவமும் விடுதலைப் புலிகளும் போருக்கு தயாராகி வருகின்றனர். இவர்கள் இருவருக்கும் இடையில் நான் சிக்குப்பட்டுள்ளேன். நோர்வேயூடாக பிரச்சினயை தீர்க்கலாம் என்று நம்பிக்கொண்டிராமல் விடுதலைப் புலிகளுடன் ஏன் நாம் நேரடியாக ஒரு ஒப்பந்தத்துக்கு வரக்கூடாது? ஏன்று மகிந்த மறுமுனையில் மன்றாட்டமான கேள்வி ஒன்றை போட்டார்.

விடயத்தை கேட்டு அதிர்ந்துபோன வித்தியாதரன் இந்த விடயங்களையெல்லாம் தொலைபேசியில் பேச முடியாது நேரில் பேசலாமே என்று கூற, இது பற்றிப்பேச அன்று மாலை 4 மணிக்கே தன்னை சந்திக்க வருமாறு அழைப்பு விடுத்தார் மகிந்த.

அழைப்பின் பிரகாரம் அரச தலைவர் மாளிகைக்கு வித்தியாதரனும் நாளேட்டின் நிர்வாக இயக்குநர் சரவணபவனும் சென்றனர். சந்திப்புக்குத் தயாராக இருந்த மகிந்தவுடன் ஊடக பணிப்பாளர் லூசின் ராஜ கருணாநாயக்க மற்றும் இரு பெண் உதவியாளர்கள் ஆகியோர் பிரசன்னமாயிருந்தனர்.

ஆசிரியர் வித்தியாதரனை சந்தித்த மாத்திரத்திலேயே மகிந்த தனது ஆதங்கங்களை கொட்டித்தீர்த்தார். நாட்டின் பாதுகாப்பு நிலைவரம் படுமோசமாகிக்கொண்டு செல்கிறது என்றும் எப்போது போர் வெடிக்கும் என்று சொல்லமுடியாத அளவுக்கு வன்முறைகள் உச்சக்கட்டத்தை நெருங்கிவருகின்றன என்றும் விடுதலைப் புலிகளும் இராணுவமும் மேற்கொள்ளும் போர் ஆயத்தங்களினால் இடையில் சிக்கியுள்ள பொதுமக்கள் அல்லல்பட்டு வருகிறார்கள் என்றும் போர் வெடித்தால் நாட்டின் பொருளாதாரம் படுபயங்கரமாக பாதிக்கப்படும். அது எல்லோருக்கும் தான் பாதிப்பு என்றும் மகிந்த ஒப்பாரி வைத்தார்.

அத்துடன் நிற்காமல், இரண்டு வாரங்களுக்கு விடுதலைப் புலிகளும் அரசும் வன்முறைகளை நிறுத்திவிட்டு பின்னர் புதிதாக அமைதி முயற்சிகளை ஆரம்பித்தால் நல்லது என்று நினைக்கிறேன். அதற்கு நோர்வேயை முற்றுமுழுதாக நம்பியிராமல் நாம் நேரடியாக விடுதலைப் புலிகளுடன் பேசலாம் என்பது எனது திட்டம்.

பலமான நிலையில் உள்ள நான், இரத்த ஆறு ஒடும் இந்த படுபயங்கர சூழ்நிலையிலிருந்து நாட்டை மீட்டெடுக்கும் இந்த முயற்சியில் என்முன்னே எதிர்ப்படும் எந்த சவாலையும் சந்திக்க நான் தயார். விடுதலைப் புலிகளுக்கு எதைக்கொடுக்கவும் கூட என்று மூச்சுவிடாமல் சொல்லி முடித்தார் மகிந்த.

இதற்கு பதிலளித்த வித்தியாதரன், நீங்கள் தொலைபேசியில் கூறிய விடயங்களை இந்த சந்திப்புக்கு வரமுன்னர் விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கத்துடன் பேசினேன். அரச படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நீங்கள் அகப்பட்டிருப்பதாக சொன்னதை நான் கூறியபோது மகிந்த ராஜபக்சதானே இராணுவம். அவர்தானே முப்படைகளின் தளபதி.அவரது தம்பியார்தானே பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகர். யார் அகப்பட்டது என்று மகிந்த சொல்கிறார் என்று பாலா கூறி சிரித்தார் என்றார்.

இதை அடுத்து, விடுதலைப் புலிகளுடனான நேரடி இணக்கப்பாட்டு முயற்சிக்கு விருப்பம் தெரிவித்த மகிந்த அது தொடர்பான பதிலை உடன அறிய தான் ஆர்வமாக இருப்பதாக ஆசிரியர் வித்தியாதரனிடம் தெரிவித்திருந்தார்.

நன்றி: புதினம்.

பேசாமல் இதுக்கு - மகிந்தவின் - புண்ணாக்கு திட்டம் -

என்று .......தலையங்கம் போட்டிருக்கலாம் - நீங்க - தூயா! :wink: 8)

  • தொடங்கியவர்

மாத்திடுவமா?? ;) புண்ணாக்கு என்பது தடைசெய்யப்பட்ட சொல்லாக இருக்குமோ என நினைத்து போடவில்லை ;)

அடடே.. கொஞ்சம் முன்னேற்றம் தெரியிது..

:P

நன்றிகள் தூயா...

இது சும்மா தமிழரை போக்குக் காட்டுறதுக்கு....

அவர்களிடம் தமிழர் பிரச்சனையைத் தீர்க்க எந்த விதமான ஆக்கபூர்வமான அரசியல் திட்டம் எதுவும் இல்லை...இனி வரப்போவதும் இல்லை... அழித்தொழிப்பதில்தான் இன்னும் ஈடுபாடு கொண்டிருக்கிறார்கள்..

தழிழருக்கு வேறுவழியில்லை....படைகளை ஈழமண்ணைவிட்டு துரத்துவதைத் தவிர....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.