Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புகலிட கோரிக்கையாளர்களை திருப்பி அனுப்ப வேண்டாம் என ஜெனீவாவில் ஆர்ப்பாட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
புகலிட கோரிக்கையாளர்களை திருப்பி அனுப்ப வேண்டாம் என ஜெனீவாவில் ஆர்ப்பாட்டம்
சனிக்கிழமை, 09 மார்ச் 2013 18:26    
-தேவ அச்சுதன்
 
சுவிற்சர்லாந்து நாட்டில் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட தமிழர்களை இலங்கைக்குத் திருப்பி அனுப்புவதற்கு எதிராக ஜெனீவா நகரில் ஐக்கிய நாடுகள் சபைக்கு முன்னால் ஆர்ப்பாட்ட நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
எதிர்வரும் 11ஆம் திகதி திங்கட்கிழமை காலை முதல் மாலை வரை இந்தக் கண்டன ஆர்ப்பாட்ட நிகழ்வு இடம்பெறவுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. 
 
புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட இளைஞர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்வில் தற்போது ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 22ஆவது கூட்டத் தொடரில் கலந்து கொள்வதற்காக வருகை தந்துள்ள பிரதிநிதிகளும் பங்கேற்பார்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது. 
 
ஆர்ப்பாட்ட நிகழ்வையொட்டி ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் கலாநிதி நவநீதம் பிள்ளையிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட உள்ளது. குறித்த மகஜரை மனித உரிமைகள் பேரவையின் சிவில் பாதுகாப்புப் பிரிவுத் தலைவி யூன் ரே அம்மையாரிடம் கையளிப்பதற்கான ஏற்பாடுகளை சுவிஸ் தமிழர் பேரவையின் செயலாளர் தம்பிப்பிள்ளை நமசிவாயம் மேற்கொண்டுள்ளார்.
 
2009 மே மாதத்தில் அரச படைகளுக்கும் விடுதலைப் புபிகளுக்கும் இடையிலான யுத்தம் முடிவிற்கு வந்ததை அடுத்து, நாட்டில் மோதல் முடிவடைந்து விட்டதாகக் கருதும் சுவிஸ் அரசாங்கம் புகலிடக் கோரிக்கையாளர்களின் விண்ணப்பங்களை நிராகரித்து வருவதுடன், அவர்களை திருப்பி அனுப்பும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றது. 
 
ஆதாரங்களாக வழங்கும் தகவல்களை ஏறெடுத்தும் பாராமல் கருத்திற்கொள்ளாது தங்களது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு வருவதாக புகலிடக் கோரிக்கையாளர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். 
 
தமது கோரிக்கைகளும், மேன் முறையீடுகளும் உதாசீனம் செய்யப்படும் நிலையில் விடயத்தை சர்வதேச மட்டத்தில் எடுத்துச் செல்ல அவர்கள் முடிவு செய்துள்ளதாக ஆர்ப்பாட்ட ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அகதிகளை நாடுகடத்தாவேண்டாம் என்பதை வலியுறுத்தி ஜெனீவாவில் ஒன்றுகூடல்!

மார் 12, 2013
       புலம்பெயர் தளத்தில் உள்ள ஈழத்தமிழ் அகதிகளை நாடுகடத்த வேண்டம் என்பதை வலியுறுத்தி இன்று 
ஜெனீவா முற்றலில் திரண்ட ஈழத்தமிழ் அகதிகள் ஜ.நா பிரதிநிதிகளிடம் மனுகையளித்துள்ளார்கள்.
 

கடந்த 25 ஆம் நாள் தொடக்கம் சிங்கள அரசின் பயங்கரவாதம் மற்றும் இனஅழிப்பிற்கு நீதிகேட்டு தமிழின அழிப்பின் இனஅழிப்பு ஒளிப்படங்களை கண்காட்சிக்காக ஜ.நா முன்றலில் வைத்து நீதிகேட்டு போராடிய கஜன் அவர்கள் 15 ஆவாது நாளான இன்று தனது கண்காட்சியினையும் அடையாள உண்ணாவிரதத்தினையும் நிறைவுசெய்துள்ளதுடன், புலம்பெயர் நாடுகளில் உள்ள ஈழத்தமிழ் அகதிகளை நாடுகடத்த வேண்டாம் என்பதை வலியுறுத்தி மனுஒன்றினையும் கையளித்துள்ளார்கள்.

இன்று காலை ஜெனிவாவில் ஜ.நா முன்றலில் 10.00 மணியளவில் நடைபெற்ற கவன ஈர்ப்பு போராட்டம் மாலை 6.00 மணிவரை நடைபெற்றது இதில் பெருமளவான மக்கள் கலந்துகொண்டு அகதிகள் உரிமை கோரிய ஈழத்தமிழ் அகதிகளை நாடுகடத்த வேண்டம் என்பதை வலியுறுத்தி ஜ.நா அதிகாரிகளிடம் மனு ஒன்றினை கையளித்துள்ளார்கள்.உலகத்தின் மனச்சாட்சியை தட்டும் வகையில் ஜ.நா முன்றலில் நடைபெற்ற இனஅழிப்பு கண்காட்சியினை இன்றுடன் நிறைவிற்கு கொண்டுவந்துள்ளார்.
சிறீலங்கா அரசின் இனஅழிப்பின் கொடூரத்தினை உலகிற்கு வெளிக்காட்டும் முகமாக நடைபெற்ற இந்த கண்காட்சியை வேற்றின மக்களும் தமிழின அழிப்பினை நன்று அறிந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Geneva%20kajan%2001.jpg

Geneva%20kajan%2002.jpg
Geneva%20kajan%2003.jpg
Geneva%20kajan%2004.jpg
Geneva%20kajan%2005.jpg

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.