Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தரகு அரசியல் செய்யும் சுப்பிரமணிய சுவாமியின் பேச்சை கணக்கில் எடுக்காது அமெரிக்கா! - மனோ கணேசன்

Featured Replies

தரகு அரசியல் செய்யும் சுப்பிரமணிய சுவாமியின் பேச்சை கணக்கில் எடுக்காது அமெரிக்கா! - மனோ கணேசன்



                                             dfe7a2c3-5148-41f4-a226-5cb19588efe61.jp
                                        

'ஈழத்தமிழர் பிரச்சினையில் தலையிடுவதற்கு இந்திய ஜனதாக் கட்சியின் தலைவர் டாக்டர் சுப்பிரமணிய சுவாமிக்கு மக்கள் வழங்கிய ஆணை என்ன? தரகு அரசியல் செய்யும் இவரது பேச்சை அமெரிக்கா ஒரு பொருட்டாகக் கருதாது. அத்துடன், இலங்கை தொடர்பில் அமெரிக்கா தமது கொள்கைகளையும் மாற்றிக் கொள்ளாது' என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத் தொடரில் சிறிலங்கா மீது கொண்டு வரப்படவுள்ள பிரேரணை தொடர்பில் சிறிலங்கா அரசாங்கத்துடன் அமெரிக்கா பேச்சு நடத்தி ஒரு இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும் என்று இந்திய ஜனதாக் கட்சியின் தலைவர் சுப்பிரமணிய சுவாமி அமெரிக்காவிடம் வலியுறுத்தியிருந்தார்.

அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய பிராந்திய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்க அமைச்சர் ரொபேர்ட் ஓ பிளேக்கைச் சந்தித்து பேச்சு நடத்தியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

இதன் போது இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனிதவுரிமை மீறல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட சிறிலங்கா அரசாங்கமே விசாரணைகளை நடத்த வேண்டும் என்றும், சர்வதேசத்தால் நியமிக்கப்படும் குழுவினால் விசாரணை நடத்தப்பட முடியாது என்றும் சுப்பிரமணிய சுவாமி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், சுப்பிரமணிய சுவாமியின் இலங்கை மற்றும் அமெரிக்க விஜயம் குறித்து கருத்து வெளியிட்ட போதே மனோ கணேசன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:

'இந்திய ஜனதாக் கட்சித் தலைவர் டாக்டர் சுப்பிரமணிய சுவாமியின் இலங்கை விஜயமே எமக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. சிலவேளைகளில் இந்திய அரசின் ஏவலையேற்று அவர் இலங்கை வந்திருக்கலாம். ஆனால் இங்கு வந்து சிறிலங்கா அரசாங்கத்தின் ஏவலையேற்று அமெரிக்கா சென்றுள்ளார். இவ்வாறு ஏவல் அரசியல் செய்பவரே இந்த சுப்பிரமணிய சுவாமி.

ஈழத்தமிழர் பிரச்சினையில் தலையிடுவதற்கு இவருக்கு மக்கள் வழங்கிய ஆணை என்ன? 50 வாக்குகளைக்கூட பெற்றுக் கொள்ள முடியாத ஒரு அரசியல்வாதிதான் இவர்.

கடந்த பல மாதங்களுக்கு முன்னர் சுப்பிரமணிய சுவாமி இலங்கை வந்திருந்த போது விடுதலைப் புலிகளின் மீதுள்ள எதிர்ப்பை அடிப்படையாகக் கொண்டு ஈழத்தமிழர் பிரச்சினையை அணுக வேண்டாம் என்று நான் அவரிடம் கூறினேன்.

இதை ஏற்றுக் கொண்ட அவர், தமிழர் பிரச்சினைக்குத் தீர்வுகாண தாம் ஒத்துழைப்பு வழங்குவார் என்று கூறினார். ஆனால் இப்போது அதை மறந்து தரகு அரசியல் செய்து கொண்டிருக்கிறார்' என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் மேலும் தெரிவித்துள்ளார்.

http://ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=1&contentid=dfe7a2c3-5148-41f4-a226-5cb19588efe6

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.