Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாணவர்களது போராட்டம் தீவிரமடைகின்றது. 92 மாணவர்கள் தமிழகம் பதுவையில் காலவரையறையற்ற உண்ணாவிரதத்தை தொடர்கின்றார்கள்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

v-unnaviratha81.jpg

photo.gifதமிழீழம் கோரியும் இலங்கைக்கு எதிராக நடவடிக்கை கோரியும் சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் 8 பேர் பற்ற வைத்த போராட்டத் தீ தமிழகமெங்கும் கொழுந்துவிட்டு எரிகிறது.

லயோலா கல்லூரி மாணவர்களின் போராட்டம் திட்டமிட்டு முடக்கப்பட்டாலும் தமிழகம் மற்றும் புதுவையில் சுமார் 92 மாணவர்கள் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர். 

 

சென்னை சட்டக் கல்லூரி மாணவர்கள் 8 பேர் திருநெல்வேலி சட்டக் கல்லூரி மாணவர்கள் 13 பேர் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் உளவியல் தொடர்பியல் பொருளாதாரம் வரலாறு ஆகிய துறைகளைச் சேர்ந்த மாணவர்கள் நிர்மல்ராஜன் ராமன் முகமதுகான் சிவா வள்ளிகண்ணு பிரசாத் பிரபாகரன் செந்தமிழ்ராஜ் என்ற மதன்ராஜ் நவீன் முத்துக்குமார் மாரியப்பன் ஆகிய 12 பேரும் பாளையங்கோட்டை புனித சவேரியார் கல்லூரி மாணவர்கள் 11 பேர் கோவை சட்டக்கல்லூரி மாணவர்கள் 15 பேரும் கோவை அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் 4 பேரும் புதுச்சேரி சட்டக்கல்லூரி மாணவர்கள் 15 பேரும் கடலூரில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாணவர் பாசறையின் 14 மாணவர்கள் என மொத்தம் 92 பேர் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். 

செங்கல்பட்டு சட்டக்கல்லூரி மாணவர்கள் தனஞ்செழியன் சுதன் கிங்ஸ்லி பால்ராஜ் கோபி சதீஷ்குமார் ராஜா மகேஸ்வரகுமார் ஜான்சன் உள்பட 18 பேர் நேற்று மதியம் 1 மணி முதல் உண்ணாவிரதம் தொடங்கினர்.

கல்லூரி முன்பு அமைக்கப்பட்டுள்ள சாமியான பந்தலில் அனைவரும் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று அவர்களது போராட்டம் 2-வது நாளாக நீடிக்கிறது.

இவர்களில் பலர் 2-வது நாளாக சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டிருக்கின்றனர். 

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக கலை அறிவியல் மற்றும் பொறியியல் மாணவர்கள் இரண்டாவது நாளாக பல்கலைக்கழக வளாகத்தில் பூமா கோயில் முன்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த மாணவர்களின் போராட்டத்தை ஒடுக்க பெரும் எண்ணிக்கையில் காவல்துறை - அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

மின்சாரம் துண்டிக்கப்பட்ட போதிலும் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் முழக்கங்கள் எழுப்பியவாறு தொடர்ந்து அமர்ந்துள்ளனர். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழக பொறியியல் மாணவர்கள் அண்ணாமலைநகர் ராஜேந்திரன்சிலை அருகே இலங்கை அதிபர் ராஜபக்சே உருவபொம்மையை எரித்து போராட்டம் நடத்தினர். கோவை பாரதியார் பல்கலைகழக மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர்.

புதுக்கோட்டை மன்னர் அரசு கல்லூரியில் உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களிற்கு ஆதரவாக நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் உண்ணாவிரதம் இருக்கின்றனர்.

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை சேவியர் கல்லூரி மாணவர்கள் 22 பேர் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கைக்கு எதிராக ஐ.நா மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்க கொண்டு வந்துள்ள தீர்மானம் மோசடியானது போலியானது. எனவே அதை இந்தியா ஆதரிக்க கூடாது. அதற்கு பதிலாக ஐ.நா.சபையில் பொது வாக்கெடுப்பு நடத்த இந்தியா குரல் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பாளையங்கோட்டை புனித சேவியர் கல்லூரி மாணவர்கள் 22 பேர் இன்று சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை கல்லூரி முன்பு நடத்த கல்லூரி நிர்வாகம் அனுமதி மறுத்ததால் மாநகர் மாவட்ட ம.தி.மு.க செயலாளார் நிஜாம் வீட்டின் அருகே மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஈழதேசம் இணையத்தள தமிழக செய்திப் பிரிவு.

ஈழதேசம் இணையம்.

 

http://www.eeladhesam.com/index.php?option=com_content&view=article&id=19502:-92-&catid=1:aktuelle-nachrichten&Itemid=50

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

]

[

Edited by தமிழரசு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.