Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகத்தில் தீவிரமடையும் மாணவர்கள் போராட்டம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை: இலங்கைக்கு எதிராக தமிழகத்தில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் மாணவர்களின் உண்ணாவிரதப் போராட்டம் விரிவடைந்து வருகிறது.

ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கையின் போர்க்குற்றம் குறித்து இந்தியா தனித் தீர்மானம் கொண்டுவர வேண்டும், ராஜபக்சவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை சட்டக்கல்லூரி மாணவர்கள் 15 பேர் மேற்கொண்டுள்ள உண்ணாவிரதப் போராட்டம் 3வது நாளை எட்டியுள்ளது.

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி, திருச்சி சட்டக் கல்லூரி மாணவர்கள், செங்கல்பட்டு சட்டக் கல்லூரி மாணவர்களின் உண்ணாவிரதப் போராட்டம் 3வது நாளாக தொடர்கிறது.

மதுரை மதுரா கலைக்கல்லூரி மாணவர்கள் இன்று வகுப்புகளை புறக்கணித்து விட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை சட்ட கல்லூரி மாணவர்கள் 13 பேர் 3வது நாளாக மதிமுக அலுவலகத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதே போன்று கோவை அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட 4 மாணவர்களை கல்லூரி வளாகத்தில் இருந்து கல்லூரி நிர்வாகம் வெளியேற்றியது. இதனையடுத்து அவர்கள் 4 பேரும் சட்ட கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தும் மதிமுக அலுவலகத்துக்கு வந்து அவர்களுடன் கலந்து கொண்டனர். இதனையடுத்து சட்ட க் கல்லூரி மற்றும் மதிமுக அலுவலகத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில், கோவை பாரதியார் பல்கலைகழக மாணவர்கள் சுமார் 40 பேர் இன்று முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி உள்ளனர். இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கு வரை இந்த போராட்டம் கைவிடப்பட மாட்டாது என பாரதியார் பல்கலைகழக மாணவர்கள் தெரிவித்தனர்.

இதுபோல், புதுச்சேரி கட்டக் கல்லூரி மாணவர்களின் போராட்டமும் 3வது நாளாக தொடர்கிறது.

ராமநாதபுரம் சேதுபதி அரசு கலைக் கல்லூரி மாணவர்களும் 3வது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நெல்லை சேவியர் கல்லூரி மாணவர்கள் 22 பேரும், புதுக்கோட்டை அரசு மன்னர் கல்லூரி மாணவர்கள் 13 பேரும், நேற்று முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

மாணவர்களின் போராட்டம் தொடர்ந்து தீவிரம் அடைந்து வரும் நிலையில், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு காலவரையின்றி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக வளாகத்தில் 3வது நாளாக 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்த நிலையில், பல்கலைக்கழகம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது தங்கள் போராட்டத்தை பல்கலைக்கழகம் நசுக்க பார்ப்பதாக மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

http://news.vikatan.com/?nid=12854#cmt241

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.