Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‎1988ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதத்தில் கொழும்பு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சிலர் சக மாணவன் ஒருவனது உடலைச் சுற்றி நின்று கொண்டிருந்தனர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

‎1988ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதத்தில் கொழும்பு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சிலர் சக மாணவன் ஒருவனது உடலைச் சுற்றி நின்று கொண்டிருந்தனர். பின்னிரவு. சற்றுச் சில்லென்ற காற்று. "பத்மசிறி த்ரிமாவிதனாவின்" உயிரற்ற உடல் ஒரு பெஞ்சின் மிது கிடத்தப்பட்டிருந்தது. இருபது வயதான அவ்விளைஞன் கடுமையாக அடித்துக் கொல்லப்பட்டிருக்கிறான் என்று நன்றாகவே தெரிந்தது. ஏகப்பட்ட காயங்கள். பார்க்கப் பார்க்க வேதனைதான் கூடியது. மிகக் கவனமாக மென்மையாக அவனது வயிற்றைத் தடவிப் பார்த்தனர். வேதனைதான் கூடியது. மிகக் கவனமாக மென்மையாக அவனது வயிற்றைத் தடவிப் பார்த்தனர்.

விலாவெலும்பெல்லாம் நொறுங்கிப் போயிருந்தன. உடலின் பல இணைப்புக்கள் முறிக்கப்பட்டிருந்தன. ஆங்காங்கே சிகரெட்டை வைத்துத் தீய்த்திருந்தார்கள். தலையில் ஆணியடித்திருந்தார்கள். அழகான அம்முகம் சிதைந்திருந்தது. ஐந்தாறு பற்கள் உடைபட்டிருந்தன. முடியைக் கூடக் கொத்தாகப் பிடுங்கி இழுத்திருக்கிறார்கள். "த்ரிமாவிதன" இறுதிவரை அனுபவித்திருக்கக்கூடிய சொல்லொணா வேதனைக்குத் நெரித்திருந்த அவனது புருவங்களே மௌனச் சாட்சியாயிருந்தன.

அன்று பகலில் மாணவர்களுக்குத் தொலைபேசியில் யாரோ தகவல் சொன்னார்கள். த்ரிமாவிதனவும் அவனது நண்பர்களும் கொல்லப்பட்டு விட்டனர். உடல்கள் கொழும்பிலிருந்து பல மணி நேரத் தொலைவிலுள்ள ஏதோ ஓர் இடத்தில் வயல்வெளியில் வீசப்பட்டிருக்கின்றன என்றது அச்செய்தி.

அம்மூன்று உடல்களைத் தேடிச் சென்று கண்டெடுத்த நால்வரும் பின்னாளில் அதேகூலிப்படையின் கரங்களில் மரணமடையவிருந்தனர். அப்படி என்னதான் செய்தார் பத்மசிறி அப்படி ஒரு கொடுமையான முடிவை அடைய ?

இரத்தினபுரி வைரச் சுரங்கங்களுக்குப் பெயர் போனது. அங்கே ஒரு தனியார் கல்லூரி செல்வந்தர் வீட்டுப் பிள்ளைகளுக்குத் தாராளமாக மருத்துவப் பட்டம் வழங்கிக் கொண்டிருந்தது. அதைக் கண்டித்து பத்மசிறியும் அவரது நண்பர்களும் சுவரொட்டிகள் ஒட்டினர். துண்டுப் பிரசுரங்களை வழங்கினர். அப்பகுதி மக்களைச் சந்தித்துத் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர். அது தான் அவர்கள் செய்த மிகப் பெரிய பாவம்.

உண்மையில் அரச மருத்துவக் கல்லூரிகளில் படித்துப் பட்டம் பெற்றால்தான் சமூக அங்கீகாரம். அக்கல்லூரிகளில் இடம் மதிப்பெண்கள் அடிப்படையில்தான். திறமையான ஏழைக்குடும்ப மாணவர்களும் நுழைய முடியும். அப்படி நுழைந்தவர்தான் பத்மசிறி. அவரது தந்தை கீழ்மட்ட அரசு அதிகாரி. எப்பொதும் போதையில் ஆழந்திருப்பவர். ஆனால் அவருடைய மகன் நன்றாகப் படித்து கொழும்பு மருத்துவப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து விட்டான். உடல் கண்டெடுக்கப்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு துப்பாக்கி முனையில் அவர் கடத்தப்பட்டதைப் பலர் பார்த்திருக்கின்றனர். மக்கள் கொதித்தெழுந்தனர். பத்மசிறியின் இறுதிச் சடங்கில் ஆயிரக்கணக்கில் கலந்து கொண்டனர். பல ஆர்ப்பாட்டங்களுக்குப் பிறகு இரத்தினபுரி அரசியல்வாதி ஒருவரின் மகன் கைது செய்யப்பட்டான். அவனது கார்தான் "பத்மசிறியைக்" கடத்தப் பயன்பட்டிருந்தது. அனால் என்ன, வழக்கின் முடிவில் அரசியல்வாதியின் மகன் விடுதலையாகி விட்டான்.

ஆனால் எல்லாமே இரங்கையின் இரத்தக் கறை படிந்த வரலாற்றில் மறக்கப்பட்டு விட்டது. கொலைகளையும், பயங்கரவாதத்தையும் அரசே பின்னின்று இயக்கியது. அவற்றால் பலர் படுகொலை செய்யப்படுவது 1956இலிருந்தே அத்தீவில் வழக்கமாயிருந்தது.

பத்மசிறியின் உடலைக் கொழும்பு மருத்துவக் கல்லூரியில் 1988 ஒக்ரோபர் இரவு பரிசோதனை செய்து, ஈமக்கிரியைக்குப் பிறகு அஸ்தியை அவரது ஊருக்கு எடுத்துச் சென்று, குடும்பத்தினருக்கு ஆறுதல் சொன்னவர்களில் சிலர் இன்று இலங்கையின் புகழ்பெற்ற மருத்துவர்களாகவும், அரசு அதிகாரிகளாகவும் இருக்கிறார்கள். வேறு சிலர் நாட்டை விட்டே ஓடி விட்டனர். ஆனால் "பத்மசிறி" கொலை வழக்கில் முதல் குற்றவாளி இன்று ராஜபக்ச அரசில் அமைச்சர். அடாவடி, ரவுடித்தனம், படுகொலைகள் இதற்கெல்லாம் பெயரெடுத்த பலரும் மகிந்த அரசில் அமைச்சர்களாயிருக்கின்றனர்.

( "The cage" நூலில் கோர்டன் வைஸ், மொழிபெயர்ப்பு-கானகன் )

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.