Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெள்ளைக் கொடியுடன் முகாமுக்குள் புகுவோம்; என்ன விலை கொடுத்தும் சொந்த மண் திரும்புவோம்; வலி.வடக்கு மக்கள் எச்சரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
வெள்ளைக் கொடியுடன் முகாமுக்குள் புகுவோம்; என்ன விலை கொடுத்தும் சொந்த மண் திரும்புவோம்; வலி.வடக்கு மக்கள் எச்சரிக்கை
 
"எங்களைச் சொந்த இடங்களுக்கு வெகு விரைவில் விட வேண்டும். இல்லையேல் நாங்கள் வெள்ளைக் கொடியுடன் எங்கள் மண்ணுக்குச் சென்றே தீருவோம். படையினர் சுட்டாலும் பரவாயில்லை.
 
விடுவார்கள் விடுவார்கள் என்று எதிர்பார்த்துக் களைத்துப் போனோம். எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை. நாங்கள் சொந்த மண்ணுக்குச் செல்வதற்காகச் சூடு வாங்கவும் தயாராக இருக்கிறோம்.'' 
 
இவ்வாறு 23 வருடங்களாக இடம்பெயர்ந்து இன்னமும் அகதிகள் என்ற பெயருடன் வாழ்ந்துவரும் வலி.வடக்குப் பகுதியின் மயிலிட்டி, பலாலி, காங்கேசன்துறை மக்கள் தெரிவித்தனர். 
 
வலி.வடக்குப் பிரதேச செயலாளர் பிரிவில் 24 கிராம சேவையாளர் பிரிவுகள் இன்னமும் விடுவிக்கப்படாமல் படையினரின் கட்டுப்பாட்டில் உயர்பாதுகாப்பு வலயமாகவே உள்ளன. 
இந்தப் பகுதிகளில் மீளக்குடியமர்வதற்காக 28 ஆயிரம் பேர் வரையில் பதிவுசெய்துவிட்டுக் காத்திருக்கின்றனர்.
 
இருப்பினும் உயர்பாதுகாப்பு வலயமாக அடங்கும் பகுதிகளில் உள்ள காணிகள் இராணுவத்தினருக்கே உரியவை என்று யாழ்.மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்கவும், படையினருக்குத் தேவையான காணிகள்  சுவீகரிக்கப்பட்டு அதற்கு நஷ்ட ஈடும் வழங்கப்படும் என்று காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் ஜானக பண்டார தென்னக்கோனும் தெரிவித்துள்ளனர்.
 
இந்த நிலையில் பலாலி, மயிலிட்டி, காங்கேசன்துறை கரையோரப் பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் இடம்பெயர்ந்து பருத்தித்துறையிலும் சுன்னாகம், மல்லாகம் பகுதிகளில் உள்ள நலன்புரி நிலையங்களிலும் தங்கியுள்ளனர். இடம்பெயர்ந்து தங்கியுள்ள இந்த மக்களை நேரடியாகச் சந்தித்த போதே அவர்கள் தமது உணர்வுகளைக் கொட்டித் தீர்த்தனர்.
 
இதன்போது அவர்கள் வெளியிட்ட உள்ளக் கிடக்கைகள் வருமாறு : 
 
"1990 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15 ஆம் திகதி எங்களது சொந்த மண்ணில் இருந்து போர் காரணமாக இடம்பெயர்ந்தோம். இன்று வரை வீடுகள் மாறி மாறி அகதியாகவே வாழ்ந்துகொண்டிருக்கின்றோம்.
 
23 வருடங்களாகியும் சொந்த இடத்துக்கு மீளத்திரும்ப முடியாமல் இருக்கும் நாங்கள் இந்தப் பகுதியில் நெருக்கடி நிலைமைக்குள் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். 
பருத்தித்துறை கரையோரக் கடல் பகுதியில் இடம்பெயர்ந்து தங்கியுள்ள எமக்குத் தொழில் செய்வதற்கு நிறையக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. இங்குள்ள மக்கள் தொழில் செய்ய இடவசதிகள் இல்லாத நிலையில் எங்களுக்கும் இடம்தருவதில் அவர்கள் சில கட்டுப்பாடுகள் விதிக்கின்றனர். 
 
அத்துடன் நாங்கள் தங்கியுள்ள வீடுகளில் இருந்தும் எங்களை எழுப்புகின்றனர். பருத்தித்துறை மக்கள் தமது பிள்ளைகளுக்குக் காணி, வீடு வழங்கவேண்டியிருப்பதால், இடம்பெயர்ந்து நாங்கள் தங்கியிருக்கின்ற வீடுகள், காணிகளை அவர்களுக்குக் கொடுக்கின்றனர். இதனால் நாங்கள் நடுத்தெருவுக்கு வரவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. 
 
நாங்கள் பொறுத்துப் பொறுத்துப் பார்த்தோம். "இந்தா விடுவம் விடுவம்' என்று சொல்லியே 23 வருடங்களை இழுத்தடித்துவிட்டனர். இனியும் நாங்கள் பொறுத்திருக்க முடியாது. யாரையும் நாங்கள் இனி நம்பப்போவதுமில்லை. எங்கள் மண்ணுக்குச் செல்லும் முடிவில் உறுதியாக இருக்கின்றோம். 
 
எங்களுக்கு இரண்டு வழிகள்தான் இருக்கிறன. ஒன்று நாங்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து எங்கள் மண் விடுவிக்கப்படும் வரை, மாவட்டச் செயலகத்தை முற்றுகையிட்டுத் தொடர்போராட்டம் நடத்துவது. இல்லாவிட்டால் நாங்கள், இடம்பெயர்ந்து வந்த பாதையால் மீளவும் எங்கள் சொந்த மண்ணுக்குக் கையில் வெள்ளைக்கொடி ஏந்திச் செல்வது. நாங்கள் மண்ணுக்குப் போவதை யாராலும் தடுக்க முடியாது. 
 
படையினர் சுட்டுக்கொன்றாலும் பரவாயில்லை. நாங்கள் எங்கள் சொந்த மண்ணுக்குச் சென்றே தீருவோம்  என்று அவர்கள் திடமாகக் கூறினர். உங்கள் காணிகளை சுவீகரித்துக்கொண்டு நட்டஈடு வழங்குவதாக அரசு தெரிவித்துள்ளதே என அந்த மக்களிடம் கேட்டபோது, 
 
"யாருக்குப் பணம் தேவை? 
 
எங்களைப் பணத்தைக் கொடுத்து வாங்கமுடியாது. 
 
எங்கள் சொந்த மண்ணை யாருக்கும் கொடுக்கமாட்டோம். 
 
நாங்கள் அந்தக் காசை கை நீட்டி வாங்கினால் தற்போது தங்கியுள்ள வீட்டிலிருந்து வீட்டு உரிமையாளர் கலைத்துவிடுவார். அதன் பின்னர் நாங்கள் அந்தக் காசை வைத்துக்கொண்டு என்ன செய்வது?
 
எங்களுக்குத் தேவையானதெல்லாம் எங்கள் சொந்த மண்ணுக்கு நாங்கள் செல்லவேண்டும் என்பதுதான்'' என்றனர்.
 
17 மார்ச் 2013, ஞாயிறு 8:25 மு.ப

தமிழக மாணவர்கள் கூட இந்த துணிவிற்கு காரணம். ஏழு கோடி மக்கள் ஓரணியில் நின்றால், நிற்கவேண்டும், இந்த மக்கள் வாழ்வார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.