Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெனீவாவில் இலங்கை விவகாரம்

Featured Replies

ஜெனீவாவிலுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற உரைகள் 2009 இன் 40 ஆயிரம் பொதுமக்கள், மரணம்,சிங்கள பௌத்த வெற்றி முழக்கம் மற்றும் பள்ளிவாசல்கள் மனிதஉரிமைகள்  பாதுகாவலர்கள் மீதான தாக்குதல்கள் உள்ளடங்கலாக எந்தவொரு பதிலும் இல்லாமல் ஒவ்வொருவரினதும் புரிந்துணர்வற்ற நோக்கங்களுடன் காணப்பட்டன என்று இன்னர் சிற்றி பிரஸ் விமர்சித்துள்ளது.

 

 

இது தொடர்பாக நியூயோர்க்கிலுள்ள ஐ.நா. தலைமையகத்தை தளமாகக் கொண்ட இன்னர்சிற்றி பிரஸின் நிருபர் மத்தியூ ரஸல் லீ வெள்ளிக்கிழமை தெரிவித்திருப்பதாவது;


 

நாடுகளின் மனித உரிமைகள் தொடர்பான காலக்கிரம மீளாய்வு நடவடிக்கைகளில் இலங்கை தொடர்பாக முன்வைக்கப்பட்டிருந்த 213 பரிந்துரைகளில் தனது நாடு 110 ஐ  ஏற்றுக்கொண்டிருந்ததாகவும் பின்னர் 113 ஐ ஏற்றிருப்பதாகவும் இலங்கை அமைச்சர் மகிந்த சமரசிங்க பெருமைப்பட்டார். ஆனால் அங்கு பதிலளிக்கும் கடப்பாடு என்ன மாதிரியாக இருக்கின்றது? மரணங்கள் பலவற்றுக்குப் பொறுப்பாக இருந்த இராணுவ உயர் அதிகாரிகள் இராஜதந்திரிகளாக ஐ.நா.வுக்கு  அனுப்பப்பட்டுள்ளனர்.

 

இலங்கை 210 பரிந்துரைகளை ஏற்றுக் கொண்டிருப்பதாக சூடான்  உரிமை கோரியது. இதனை கார்ட்டோமின் (சூடான் தலைநகர்) கணக்கு என்று குறிப்பிடமுடியும். ராஜபக்ஷவின் பதில் மனதைக் கவருவதாக இருப்பதாக பிலிப்பைன்ஸ் தெரிவித்தது.


அண்மையில் கொழும்பிலுள்ள ஐ.நா. அலுவலகத்துக்கு வவுனியாவிலிருந்து பயணம் மேற்கொள்ள முயற்சித்த காணாமற்போனோர் குடும்பத்தினர் தடுத்து நிறுத்தப்பட்டிருந்தனர்.

 

இது தொடர்பாக நியூயோர்க்கில் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனின் பேச்சாளரிடம் இன்னர் சிற்றி பிரஸ் கேட்டது; இதுஏற்றுக்கொள்ளக்கூடியதா என்று கேட்கப்பட்டபோது

ஐ.நா.விடமிருந்து தகவலைப்பெற இதர வழிகள் இருப்பதாக அவரால் கூறப்பட்டது.

 

 

இலங்கை பற்றிய வெள்ளையடிக்கப்பட்ட அறிக்கையை ஜப்பான் தூதுவரிடமிருந்து அண்மையில் பான் கீ மூன்  ஏற்றுக்கொண்டிருக்கிறார்.திரும்பத்திரும்ப கோரிக்கை விடுக்கப்பட்டபோதும் அந்த அறிக்கையின் பிரதியை வழங்குவது மறுக்கப்பட்டது.

வெள்ளைப்பூச்சுஅறிக்கையை பான் கீ மூன் புகழ்ந்திருந்தார். இலங்கை பற்றி கேட்கப்பட்டபோது அவர் அந்த அறிக்கையை பாராட்டியுள்ளார்.


அரச சார்பற்ற தொண்டர் நிறுவனங்கள் உரையாற்றின. அவற்றில் ஒன்று  மனிதஉரிமைகள் கண்காணிப்பகம். பான் கி மூனை மார்ச் 4 இல் அதன் இயக்குநர் கென்ரொத் சந்தித்திருந்தார். அச்சந்திப்பில் என்னவிடயங்கள் பேசப்பட்டன என்பதைக்கூட அவர் வெளிப்படுத்த மறுத்துவிட்டார்.

 

ஐ.நா. திரையரங்கில் இலங்கை பற்றி அதிகளவு காணப்படுகின்றன. அது தொடர்ச்சியானதாக காணப்படுகிறது. இவ்வாறு இன்னர் சிற்றி பிரஸ் குறிப்பிட்டுள்ளது.

 

http://www.thinakkural.com/index.php?option=com_content&view=article&id=3498:2013-03-17-17-03-48&catid=293:article&Itemid=542

  • தொடங்கியவர்

 இலங்கை பற்றிய வெள்ளையடிக்கப்பட்ட அறிக்கையை ஜப்பான் தூதுவரிடமிருந்து அண்மையில் பான் கீ மூன்  ஏற்றுக்கொண்டிருக்கிறார்.திரும்பத்திரும்ப கோரிக்கை விடுக்கப்பட்டபோதும் அந்த அறிக்கையின் பிரதியை வழங்குவது மறுக்கப்பட்டது.

 

வெள்ளைப்பூச்சுஅறிக்கையை பான் கீ மூன் புகழ்ந்திருந்தார். இலங்கை பற்றி கேட்கப்பட்டபோது அவர் அந்த அறிக்கையை பாராட்டியுள்ளார்.  

 

 

ஜப்பானை தனது ஜெயவர்த்தானா நற்செயலை மேற்கோள் காட்டி (மகிந்த கடந்தவாரம் நன்றி சொல்ல சென்றிருந்தார்) சிங்களம் ஏமாற்ற நாம் அனுமதித்துவிட்டோம்.

 

எமது தரப்பு பரப்புரை ஜப்பானை நோக்கியும் இருக்கவேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.