Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போராட்டத்தில் தனிமனிதர்களால் மேற்கொள்ளப்பட்ட அருஞ்செயல்கள்..

Featured Replies

போராட்ட வரலாற்றில் தனி மனிதர்களால் மேற்கொள்ளப்பட்ட அருஞ்செயல்கள் எண்ணிலடங்காதவை: யோகரட்ணம் யோகி

தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் தனி மனிதர்களால் மேற்கொள்ளப்பட்ட அருஞ்செயல்கள் எண்ணிலடங்காதவை- பல வெளியே தெரியாதவை என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினரும், வரலாற்றுத்துறைப் பொறுப்பாளருமான யோகரட்ணம் யோகி தெரிவித்துள்ளார்.

கரும்புலிகள் நாளையொட்டி விடுதலைப் புலிகளின் உத்தியோகப்பூர்வ வானொலியான புலிகளின் குரலில் அவர் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம்:

இன்று கரும்புலிகளை நினைவு கூறும் நாள். அவர்களது தேசப் பக்தியும் வீர உணர்வும் எமது மக்களின் மனதில் ஆழமாக ஊடுருவியுள்ளது என்பதை வெளிப்படுத்தும் நாள்.

தேசியத் தலைவர் அவர்கள் குறிப்பிட்டது போல்,

இக்கட்டான சூழலில் எழுந்த தடைகளைத் தகர்த்து விடுதலைப் போரை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியவர்களின் நாள். எந்தத் தடையும் எம்மால் தாண்டக்கூடியதே என்பதை உலகுக்கு உணர்த்திய நாள்.

கரும்புலி வீரர்களின் அதிஉயர் தற்கொடையையும் வீரத்தையும் அவர்களின் ஆச்சரியமூட்டும் ஆன்ம பலத்தையும் நிறைவேற்றும் நாள். அவர்களின் குறி இலக்கை நிறைவேற்றாது ஓயோம் என எல்லோரும் உறுதி எடுக்கும் நாள்.

1987 ஜூலை 5 ஆம் நாள் முதலாவது கரும்புலித் தாக்குதல் நடைபெற்றது. இன்று வரை 273 கரும்புலிகள் வீரச்சாவை சந்தித்துள்ளனர்.

உலகின் போராட்ட வரலாற்றில் பல நாடுகள் தற்கொடையாளர்களை பயன்படுத்தி இருக்கின்றன. இருந்தபோதும் ஒப்பீட்டு அளவில் கரும்புலிகளின் தாக்குதல் தாக்கமிக்கது. மிகத் துல்லியமானது. வியக்கத்தக்கது. அவர்களின் தாக்குதல் ஏற்படுத்திய மாற்றங்கள் அளப்பரியது.

இதனால் பல உலக நாடுகள் கரும்புலிகளைக் கண்டு அஞ்சுகின்றன. கரும்புலிகளின் எடுத்துக்காட்டுகள் ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டங்களுக்கு வழிகாட்டியாய் அமைந்துவிடும் என்று பதறுகின்றன.

பொதுவில் தாம் கண்டு அஞ்சுபவற்றை- தம்மால் இலகுவில் அடக்கவே முடியாதவற்றை கொச்சைப்படுத்தி- இழிவுபடுத்தி- உலக மக்களின் மூளையை சலவை செய்து- அவ்வாறானவற்றிற்கு எதிரான கருத்துகளை அவர்கள் மனதில் விதைப்பதையே பல நாடுகள் செய்து வருகின்றன.

அவர்களின் நாடகத்துள் நடிகர்களாகி- அவர்கள் கூறும் பிழையான தகவல்களையே உயர் விழும்பியங்களாக ஏற்றுப் பேசும் மூடர்கள் உலகில் ஏராளம். ஏராளம்.

போர் என்பது வன்முறையே. அதில் மென்முறை என்பது எதுவுமே இல்லை.

கிரேக்கத் தத்துவஞானி அரிஸ்டோட்டில், மனிதனை அரசியல் மிருகம் என்றார்.

ரஷ்ய போரியல் கோட்பாட்டாளர் கோஸ்மிச், மனிதனை போரிடும் மிருகம் என்பார்.

ஆனால் தற்கால போரியல் ஆய்வாளரான கீகன், மனிதனை சிந்தித்து வேட்டையாடும் பண்பாட்டு ஒரு மிருகம் என்பார்.

மனிதம் குறித்து பேசும் நாடுகளின் உயர் விழுமிய வளர்ச்சியின் போது கொல்லப்பட்டோரின் வரலாறு முழுமையாக எழுதவில்லை.

வல்லரசுகளாக மாறிய பின்னர் தமது நிலைகளைத் தக்க வைக்க அவர்களின் கொலைகள் முழுமையாகக் கூறப்படவில்லை.

அவை பேசும் உயர் விழும்பியங்களே சிக்கல் வரும்போது கடைபிடிக்கப்படுவதில்லை. இதுவே உலக நியதி.

குண்டு செய்யப்பட்டதே மனிதனை வெடிக்க வைக்கத்தானே. அதாவது அழிக்கத்தானே. ஆனால் மனிதன் மட்டும் குண்டாய் வெடித்தால் நியாயமில்லை. ஏன் இந்த அலறல்?

தேசியத் தலைவர் குறிப்பிட்டது போல், இந்த மனித மனோபலத்தை உலகின் எந்த ஆயுதங்களாலும் எந்த தொழில்நுட்பத்தாலும் தடுக்க முடியாது. எந்த அரசு இயந்திரத்தாலும் அடக்க முடியாது.

அதனால்தான் நியாயமில்லை என்ற கூச்சல்கள்.

பிரெஞ்ச் படைகளால் கைது செய்யப்பட்ட நைஜீரிய புரட்சிப் படைகளின் தலைவர்களில் ஒருவரான பென் எம் கிண்டியிடம் தேசப்பற்று மிகுந்தவர்கள் போல் இருந்த பிரெஞ்சுப் பத்திரிகையாளர் ஒருவர், பெண்களின் கைப்பைகளிலும் கூடைகளிலும் வெடிபொருட்களை வைத்து பல சாதாரண மக்களைக் கொல்வது கோழைத்தனம் இல்லையா என்று கேட்டார். அதற்கு அவர் பதிலளிக்கையில், நேபாம் குண்டுகளை சிற்றூர்கள் மீது வீசி சாதாரணப் பொதுமக்களை கொல்வது கோழைத்தனமாகாத் தெரியவில்லையா எனக் கேட்டார். நீங்கள் குண்டு வீசும் பணியை எங்களிடம் தந்தால் உங்கள் பணி சுலபமாகிவிடும் என்றும் நீங்கள் உங்கள் குண்டு வீச்சுகளைத் தாருங்கள்-உங்களிடம் எங்களது கைப்பைகளையும் கூடைகளையும் தருகிறோம் என்றார்.

இந்த எடுத்துக்காட்டு கரும்புலிகளுக்குப் பொருந்தாது என்ற போதும் கூச்சலிடும் உலக நாடுகளின் பொய்முகத்தை கிழித்துக் காட்ட கூறினோம்.

போரியலில் இறுக்கமான முனை மீது ஒருமுகப்பட்ட படைத்திறனைப் பயன்படுத்தி வெற்றி காண வேண்டும் என்பது ஒரு பால பாடம். இதற்கு மிகுந்த பட்டறிவு துணிவு தீர்க்கமான பார்வை வேண்டும்.

தலைவர் குறிப்பிட்டது போல், குறைந்த இழப்போடு- பெரும்படையின் தீர்க்காமான முனைகளை-இலக்குகளை அடையாளம் கண்டு அவற்றைத் தாக்கி அழிப்பதற்காக இரவு-பகல் பாராது உழைத்து உயரிய மனோபலத்தோடு அவற்றைத் தாக்கி அழித்து எம் போராட்டத்தில் பல வெற்றிகளை ஈட்டித் தந்தவர்கள் கரும்புலிகளே.

இவர்களுக்கு சளைக்காதவர்களாக வேவுப்புலிகளும் பணிபுரிந்துள்ளனர் என்பதை இங்கே சுட்டிக்காட்டுதல் இன்றியமையாததாகும். வேவை மேற்கொள்ளும் புலிகளுக்கு கரும்புலிகளைப் போல் சாவின் சரியான நேரம் தெரியாது. ஆனால் அவர்களைப் பொறுத்தவரை எந்த வினாடியும் சாவுக்குரியதே. இவர்களின் அருஞ்செயல்கள் எமது போராட்டத்தை பெரிய அளவுக்கு முன்னெடுத்துச் செல்ல உதவியிருக்கின்றன.

சில வேளைகளில் உணவின்றி, நீரின்றி சாதாரண உடல் உபாதைகளை அடக்கி பாம்புகள்-பூச்சிகள் என பல இடர்களை எதிர்கொண்டு இரவைப் பகலாக்கி அவர்கள் பெறும் தகவல்கள் பெறுமதியானவை. கரும்புலிகளின் வெளிவராத அருஞ்செயல்களைப் போல் இவர்களின் அருஞ்செயல்களும் இரகசியம் பேணல் என்ற கட்டுக்கோப்பில் மூடி வைக்கப்பட்டுள்ளது.

அதற்குரிய காரணம் ஆழமானது. அதைப் புரிந்து கொள்ள தமிழீழ வரலாற்றை மீள்பார்வை செய்து கொள்வது மிகவும் அவசியமானது.

இலங்கையானது சிங்கள பௌத்தர்களுக்கே உரியது என்பது சிங்கள பௌத்தர்களின் முடிவு. நாடு, மொழி, மதம் எல்லாம் சிங்களவருக்கானது. அதன் உச்ச வடிவமே 1972,1978 அரசியல் யாப்புகளாகும்.

தமிழர்களைப் பொறுத்தவரை சிங்கள தேசத்தோடு பேசிப் பயனில்லை- மோதினாலே பயன் என்று கருதி அதனால் எழுந்த ஆயுதப் போராட்டம் ஏறத்தாழ 30 ஆண்டுகாலமாக தொடருகிறது.

ஆயுதமேந்திய பின்னரே தமிழர்கள் பலவற்றைச் சாதித்தனர். ஒரு மதவெறி பிடித்த சிங்களத்தை அடக்க ஒரே ஒரு வழி படைக்கலன் ஏந்திப் போராடுவதுதான் என்பது தமிழர்கள் எல்லோருக்கும் தெரிந்தது. மிகச் சிறிய தேசிய இனமானது பெரியதொரு இனத்துக்கு எதிராக- அதற்கு ஆதரவு தரும் உலக நாடுகளுக்கு எதிராக வெல்ல வேண்டுமாயின் படைக்கலன்களுக்கு அப்பால் தேசப்பற்றிலும் கட்டுடை உணர்வினிலும் சிறந்து விளங்க வேண்டும் என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மையே.

ஒரு தனிமனித முயற்சியால் தன் உடன் வாழும் வீரர்களின் உயிரை- தமிழீழ மக்களினது உயிரை தமிழீழத்தின் தளையை உடைக்கலாம் என்ற தன்னலமற்ற பொதுநலம்தான் தற்கொடையாளர்களை- வேவுவீரர்களை அவர்களைப் போல் பல வீரர்களை உருவாக்குகின்றது.

தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் தனி மனிதர்களால் மேற்கொள்ளப்பட்ட அருஞ்செயல்கள் எண்ணிலடங்காதவை. பல வெளியே தெரியாதவை. கரும்புலிகள் அவர்கள் தங்களது பயிற்சியை எப்படி மேற்கொள்கிறார்கள் என்பது வெளிஉலகுக்குத் தெரியாது. அப்போது அவர்கள் வாழும் வாழ்க்கை, அவர்களின் எண்ணங்கள் என்பவை குறித்து அறிய வரும்போது அவர்களுல் இருக்கும் மனிதம் குறித்து அறியும்போது உலகம் உறைந்து போகும்.

தமிழர்களின் நவீன வரலாற்றில் இது வீரர்களின் காலம்- சாதிக்கும் காலம்- தொன்மைமிகு தமிழினத்தின் பெருமையை உலகு அறியும் காலம்.

இந்த வகையான காலத்திலே முன்னிலையில் விளங்குவோர் கரும்புலிகளும் வேவுப்புலிகளும் என்பதை மறுத்துவிட முடியாது.

கரும்புலிகளின் அருஞ்செயல்கள் குறித்த தகவல்கள் வெளிவரவில்லை. தமிழீழம் விடுதலை பெறும்போதே அவை வெளிவரும். அப்போது கரும்புலிகள் குறித்து இப்போது நாம் அறிந்தவை, கடலில் மிதக்கும் பனிப்பாறையில் வெளியே தெரியும் சிறு பகுதி என்பதை நாம் அறிவோம்.

கரும்புலிகளைப் போற்றுவோம்! அவர்களின் குறி இலக்காம் தமிழீழம் விடுதலை பெற ஒன்றிணைந்து போராடுவோம்! வெற்றி நமதே! என்றார்.

- புதினம்

உரையினைத் தரவிறக்கம் செய்து கேட்க

http://www.yarl.com/downloads/download.php...yogi_040706.mp3

நேரடியாகக் கேட்க http://www.tamilnaatham.com/audio/2006/jul...gi20060705.smil

நன்றி மோகன் அண்ணா இணைப்புக்கு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.