Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழக மாணவர்களுக்கு தம் தார்மீக ஆதரவை நல்கும் யாழ் மாணவர்கள்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1687_470983422954709_1908954175_n.jpg
 
அன்பிற்குரிய தமிழக உறவுகளே,

பாண்டிய மன்னன் சிவபெருமானுக்கு அடித்த அடி உலகிலுள்ள எல்லா உயிர்களின் முதுகிலும் வீழந்ததைப் போல சிங்களவன் எங்களுக்கு அடித்த அடி உங்கள் முதுகிலும் எத்தகைய காயங்களையும் வலிகளையும் ஏற்படுத்தியிருக்கிறது என்பதை நாங்கள் இப்போதுதான் உணர்ந்துகொள்கிறோம். உங்கள் போராட்டங்களைப் பார்த்தே புரிந்துகொள்கிறோம்.

சிறிலங்காவின் சனத்தொகை தமிழ் மக்களையும் சேர்த்து வெறும் இரண்டு கோடி பத்து லட்சம். ஆனால் தமிழக மாணவர்களின் எண்ணிக்கையோ சிறிலங்காவின் ஒட்டுமொத்த சனத்தொகையை விட சில மடங்கு அதிகம்.

எனவே தமிழகத்திலுள்ள ஒட்டுமொத்த மாணவர்களும் சிறிலங்காவிற்கு எதிராக கிளர்ந்தெழுந்துவிட்டனர் என்பதை நினைக்கும் போது சிங்களத்திற்கு சித்தம் கலங்குகிறது. செங்களத்தில் தமிழர் சேனையுடன் தனித்து நின்று முட்டி மோத முடியாமல் புறமுதுகிட்டு ஓடிய சிங்களச் சேனைகள் உலகின் சில வல்லாதிக்க சக்திகளுடன் கைகோர்த்து தமிழரின் போராட்டத்தை அழித்ததுடன் லட்சக்கணக்கான தமிழ் மக்களையும் கொன்றுகுவித்தது.

ஈழத் தமிழ் மக்களை நாங்கள் அடித்தால் யார் கேட்பார்கள் என்ற அசட்டுத் துணிவோடுதான் சிங்களம் எங்களை அழித்தது, ஆனால், ஈழத் தமிழர்கள் எங்கள் தொப்புள்கொடி உறவுகள் என்பதை நிரூபித்து எங்களுக்காக நீங்கள் சிங்களவர்களிடம் மட்டுமல்ல உங்களவர்களிடமே (இந்திய மத்திய அரசு) நீதி கேட்டு நிற்கிறீர்கள். உண்மையில் உங்களை நினைக்க எங்கள் தேகம் சிலிர்க்கிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சிங்களவன் எங்களை எங்கள் பல்கலைக்கழகத்திற்கு முன்னால் போட்டு உருட்டி உருட்டி உதைத்தான். அதற்கு நாம் நீதி கேட்டதற்காக எங்களை தடுப்பு முகாமுக்கு கொண்டு சென்றார்கள். இனிமேல் எந்தவொரு போராட்டமும் செய்யக்கூடாது என்று நாங்கள் அச்சுறுத்தப்பட்டிருக்கிறோம். நாங்கள் நொந்துபோயிருக்கிறோம்.

ஆனால், எமக்கு நீங்கள் ஆறுதல் தந்திருக்கிறீர்கள். தமிழர்களின் தன்மானத்தை நீங்கள் காப்பாற்றுகிறீர்கள். உங்களுக்கு நாம் நன்றி சொல்கின்றோம். எமது தேசம் மலரும்போது நீங்களும் அதில் பங்குதாரர்களாக இருப்பீர்கள். எங்கள் தேசத்தில் உங்கள் பெயர்கள் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டிருக்கும்.

எமது இரத்தத்துடன் இரத்தமாக, சதையுடன் சதையாக நீங்கள் கலந்திருக்கிறீர்கள். நாங்களும் நீங்களும் இரத்த உறவுகள் என்பதால்தான் எங்களுக்கு சிங்களவன் அடிக்கின்ற போது உங்களுக்கும் வலிக்கிறது. உங்கள் வலிகளும் எங்கள் வலிகளும் தீர்க்கப்படவேண்டும். அதற்கான உங்கள் போராட்டங்களுக்கு நாங்கள் என்றும் உறுதுணையாக இருப்போம்.

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் என்றாலே சிங்கள இராணுவம் அஞ்சி நடுங்கிய காலம் ஒன்றிருந்தது. ஆனால் அதே இராணுவம் இன்று எங்களை அடக்கியாள முற்படுகின்றது. நாங்கள் எதற்கும் அஞ்சமாட்டோம் என்பதை நாங்கள் வெளிப்படுத்துவோம். நீங்களும் எமக்கு உறுதுணையாக இருங்கள். நாங்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்போம். உங்கள் போராட்டம் எங்கள் போராட்டம். இந்தப் போராட்டம் நிச்சயம் வெற்றிபெறும்.

இலட்சிய வீரர்கள் வீழ்வதுமில்லை
ஈழத்தில் மாணவர் மாழ்வதுமில்லை
தமிழர்க்கு விடிவொன்று கிடைக்கின்ற வரைக்கும்
தமிழக மாணவர் ஓய்வதும் இல்லை.


யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள்.
யாழ்ப்பாணம்.

 



நன்றி: முகநூல்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.