Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத்தமிழருக்கு ஆதரவாக எழுச்சி பெற்ற மாணவர் போராட்டங்களால் மூடப்பட்ட கல்லூரிகள் நாளை திறப்பு:-

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
ஈழத்தமிழருக்கு ஆதரவாக எழுச்சி பெற்ற மாணவர் போராட்டங்களால் மூடப்பட்ட கல்லூரிகள் நாளை திறப்பு:-
24 மார்ச் 2013
"கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டாலும் போராட்ட வடிவங்களில் மாற்றம்"
 
இலங்கையில், தமிழர்கள் படு கொலை செய்யப்பட்டதைக் கண்டிக்காத மத்திய அரசு மற்றும் அரசியல் கட்சிகளை எதிர்த்து, தமிழகத்தில், கல்லூரி மாணவர்கள், தொடர் போராட்டத்தில், ஈடுபட்டுவருகின்றனர். 
 
இந்த நிலையில் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க, அனைத்து கல்லூரிகளுக்கும், மாநில அரசு விடுமுறைறையை அறிவித்தது. 
 
துற்போது நிலைமை சீராகி உள்ளதை அடுத்து, நாளை, கல்லூரிகள் திறக்கப்படும் என, உயர் கல்வித் துறை அறிவித்துள்ளது. எனினும் பொறியியல் கல்லூரிகள் திறக்க்படுவதற்கான திகதி குறித்து, பின்னர் அறிவிக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
கல்லூரிகள் திறக்கப்படும் நிலையில், தேர்வு திகதிகளும், விரைவில் அறிவிக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்த நிலையில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக போராடும் தமிழ்நாட்டு கல்லூரி மாணவர்கள் அடுத்த கட்டமாக இந்திய அரசுக்கான வரிகொடா இயக்கம் நடத்தப்போவதாக தமிழீழ விடுதலைக்கான மாணவர்கள் கூட்டமைப்பைப்பு அறிவித்துள்ளது.
 
கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டாலும் தமது போராட்ட வடிவங்களில் மாற்றம் ஏற்படும் எனத் தெரிவித்துள்ள அந்த அமைப்பு போராடும் தமிழக மாணவர்களின் கோரிக்கையை கண்டுகொள்ளாமல் புறக்கணித்த இந்திய மத்திய அரசிற்கு தமிழ்நாட்டில் இருந்து செல்லும் வரியை தடுப்பதே தங்களின் அடுத்த கட்ட போராட்டம் எனவும்  அதற்காக மாநிலம் தழுவிய அளவில் பிரச்சார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
 
இதற்கு அப்பால், ஐக்கியநாடுகள் மனித உரிமைப் பேரவையில்; இலங்கை மீதான சர்வதேச விசாரணை அவசியம் என்ற தமிழக மாணவர்களின் கோரிக்கையை கண்டுகொள்ளாத அமெரிக்காவின் பொருட்களை புறக்கணிக்கும் போராட்டத்தையும் முன்னெடுக்க உள்ளதாகவும் தமிழீழ விடுதலைக்கான மாணவர்கள் கூட்டமைப்பைப்பு கூறியுள்ளது.

2222.jpgஐ.நா.சபையில்

அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக

திருத்தங்களை செய்யவேண்டும் என்று வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தீவிர

போராட்டங்கள் நடைபெற்று வந்தன.

ஈழத் தமிழர்களுக்காக தமிழநாடு

முழுவதும் கல்லூரி மாணவர்கள் சாலை மறியல், உண்ணாவிரதம், முற்றுகை,

கொடும்பாவி எரிப்பு என பல வகைகளில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த

2 வாரங்களுக்கு முன்னர் தொடங்கிய இந்த போராட்டம் மிகவும் தீவிரமாகி

பொதுமக்களின் ஆதரவையும் பெற்றது. அவர்களும் ஆங்காங்கே போராட்டங்களில்

ஈடுபட்டனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் ஐ.நா.மன்றத்தில் கொண்டு

வரப்பட்ட இலங்கைக்கு எதிரான தீர்மானம் வெற்றி பெற்றது. இருப்பினும் இதனால்

ஈழத்தமிழர்களுக்கு குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு எந்த பயனும் ஏற்பட்டு

விடப்போவதில்லை என்றும், மறைமுகமாக இலங்கைக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாகவே

தீர்மானத்தில் வாசகங்கள் இடம் பெற்றுள்ளன என்றும், அனைத்து தரப்பினரும்

குற்றம்சாட்டி வருகிறார்கள்.

இதற்கிடையே கடந்த 2 நாட்களாக

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான போராட்ட குரல்கள் கொஞ்சம் குறைய தொடங்கியுள்ளன.

இதனால் நாளை (25-ந்தேதி) தமிழகம் முழுவதும் கலைக் கல்லூரிகள் திறக்கப்பட

உள்ளதாக தகவல்கள் வெளியானது.

என்ஜினீயரிங் கல்லூரிகளை திறக்கும்

தேதி மட்டும் நாளை முடிவு செய்யப்பட உள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால் இதனை

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் (பொறுப்பு) காளிராஜ் மறுத்துள்ளார்.

இதுபற்றி

அவர் கூறும்போது, எந்த கல்லூரிகளும் நாளை திறக்கப்படாது. இதுபற்றி பின்னர்

பேசி முடிவு செய்யப்படும் என்றார். மாணவர்கள் இதுநாள் வரை நடத்திய

போராட்டங்களின் போது மத்திய- மாநில அரசுகளின் பிரதிநிதிகள் தங்களை

சந்தித்து பேசவேண்டும் என்றும், அப்போது ஈழத் தமிழர்களின் நலனுக்கு தேவையான

அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாக உறுதி அளிக்க வேண்டும் என்றும்

வலியுறுத்தி வந்தனர்.

ஆனால் இதுதொடர்பாக யாரும் மாணவர்களுடன்

எந்தவிதமான பேச்சு வார்த்தையும் நடத்தவில்லை. எனவே கல்லூரி மாணவர்கள்

தங்களது போராட்டத்தை தொடர முடிவு செய்துள்ளனர். இதனால் கல்லூரிகளை உடனடியாக

திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழீழ

விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தினேஷ் கூறும்போது,

அடுத்தக் கட்டமாக மாணவர்களை திரட்டி எந்த மாதிரியான போராட்டங்களை நடத்துவது

என்பது பற்றி அறிவிப்போம். மற்ற மாவட்டங்களிலும் மாணவர்களை தொடர்பு கொண்டு

போராட்டம் நடத்துவது பற்றி ஆலோசித்து வருகிறோம் என்றார்.

இதேபோல

போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் திவ்யா கூறுகையில், மாணவர்களின் போராட்டம்

இன்னும் முடிவுக்கு வரவில்லை. வருகிற 27-ந் தேதி அன்று தமிழகம் முழுவதும்

மத்திய அரசு அலுவலகங்களுக்கு பூட்டு போட்டு போராட்டம் நடத்த உள்ளோம்

என்றார். இதுபோன்ற காரணங்களால் கலைக்கல்லூரிகள் மற்றும் என்ஜினீயரிங்

கல்லூரிகளை உடனடியாக திறக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக கல்வி துறை உயர்

அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=13550:start-sud&catid=36:tamilnadu&Itemid=102

Edited by chinnavan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.