Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழக மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு கச்சதீவை இந்தியாவுடன் இணைப்பதே ஒரே தீர்வு - ஜெயலலிதா!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
jayalalitha-090213-seithy-150.jpg

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் மேற்கொண்டுவரும் தொடர் தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க கச்சதீவை இந்தியாவுடன் இணைப்பதே தீர்வாக இருக்கும் என தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். தமிழக மீனவர்களின் பிரச்சினை தொடர்பில் சட்டப் பேரவையில் இன்று செவ்வாய்க்கிழமை சிறப்பு கவனயீர்ப்புத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதன்போது உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், 'இந்தியாவின் ஒரு பகுதியாக கச்சதீவு இருந்தபோது இந்தப் பிரச்சினை எழவில்லை. தமிழக மீனவர்கள் கச்சதீவின் அருகில் மீன் பிடித்து தங்களது அன்றாட வாழ்க்கையை நடத்தி வந்தனர். 1974ஆம் ஆண்டு இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த கச்சதீவு இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டது. அப்போது, தமிழ்நாட்டின் முதல்வராக இருந்தவர் கருணாநிதி;. அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசாங்கத்துக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடையில் ஏற்பட்ட உடன்படிக்கையின்படி, இரு நாடுகளும் பரம்பரை பரம்பரையாக தங்கள் நாட்டிற்குச் சொந்தமான கடல் எல்லைகளில் எந்தெந்த உரிமைகளை அனுபவித்து வந்தனவோ அந்தந்த உரிமைகளைத் தொடர்ந்து அனுபவிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

  

ஆனால், இதையெல்லாம் இலங்கை அரசாங்கம் மதிப்பதாகத் தெரியவில்லை. மாறாக, தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதல்கள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. 1991ஆம் ஆண்டு நான் முதன் முறையாக முதல்வராக பொறுப்பேற்றவுடன், தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினரிடம் இருந்து காப்பாற்ற கச்சதீவினை மீட்பதைத் தவிர வேறு வழி இல்லை என்று முடிவெடுத்து, இதனை மீட்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு பிரதமரை நேரிலும் கடிதம் மூலமாகவும் வற்புறுத்தினேன். குறைந்தபட்சம் நிரந்தரமான குத்தகை என்ற முறையிலாவது, தமிழக மீனவர்கள் கச்சதீவிற்குச் சென்று மீன் பிடிக்கும் உரிமையையாவது பெற்றுத் தர வேண்டும் என்று பிரதமரை பலமுறை வற்புறுத்தி இருக்கிறேன். இருப்பினும், மத்திய அரசாங்கம் எந்தவிதமான நடவடிக்கையையும் எடுக்கவில்லை. 2006ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரை தமிழகத்தின் முதல்வராக இருந்தவர் கருணாநிதி. கருணாநிதி தயவில் தான் மத்திய அரசாங்கம் இருந்தது. தன் நலத்திற்காக பல அச்சுறுத்தல்களை மத்திய அரசாங்கத்துக்கு விடுத்த கருணாநிதி, தான் செய்த பாவத்திற்கு பரிகாரமாக கச்சதீவினை மீட்டுத் தருமாறு மத்திய அரசாங்கத்தை வலியுறுத்தி இருக்கலாம். ஆனால், அதைச் செய்யவில்லை.

 

ஆட்சிக்கு வந்தவுடன் கச்சதீவு பற்றிய எண்ணமே கருணாநிதிக்கு இல்லாமல் போய்விட்டது. ஆனால் 12.8.2012இல் நடைபெற்ற புத்துயிரூட்டபட்ட டெசோ மாநாட்டில் கச்சதீவை இந்தியா மீண்டும் தனது ஆளுகையின் கீழ் கொண்டு வருவதோடு;, தனுஷ்கோடி அல்லது மண்டபம் முகாமில் இந்திய கடற்படைத்தளம் ஒன்றை இந்திய அரசாங்கம் நிறுவ வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளார். ஆனாலும் 1974ஆம் ஆண்டு கச்சதீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டபோது, அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி அதைத் தடுக்க தவறிவிட்டார். மேற்கு வங்காளத்தில் உள்ள பெருபாரி பகுதியை 1960 இற்கு முன்பு கிழக்கு பாகிஸ்தானுக்கு (வங்கதேசம்) இந்திய அரசாங்கம் தாரைவார்க்க முயன்றபோது, அதனை எதிர்த்து அப்போதைய மேற்கு வங்க அரசாங்கம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்திய நாட்டுக்குச் சொந்தமான ஒரு பகுதியை அந்நிய நாட்டிற்குக் கொடுப்பது தொடர்பான உடன்பாட்டை, நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதலோடு இந்திய அரசமைப்பு சட்டத் திருத்தத்தின் மூலம் மட்டுமே நடைமுறைப்படுத்த முடியும் என 1960ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. மேற்கு வங்க அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையை 1974ஆம் ஆண்டு அன்றைய தமிழக முதல்வர் கருணாநிதி பின்பற்றி இருப்பாரேயானால், கச்சதீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டு இருக்காது.

 

ஆனால் அன்றைய தமிழ்நாட்டு முதல்வராக இருந்த கருணாநிதி அதைச் செய்ய தவறி விட்டார். கச்சதீவு தாரைவார்க்கப்பட்டதன் காரணமாக, தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதல் இன்றளவும் தொடர்கிறது. தமிழக மீனவர்களின் வலைகளை அறுத்தெறிவதையும்; அவர்களை ஆயுதங்களால் துன்புறுத்துவதையும்; இலங்கை கடற்படையினர் வாடிக்கையாகக் கொண்டு இருக்கிறார்கள். தமிழக மீனவர்களுடைய வாழ்வாதாரமே கேள்விக்குறியாகியுள்ளது. பரம்பரை பரம்பரையாக மீன்பிடித்து வரும் அப்பாவி தமிழக மீனவர்களை துன்புறுத்தும் நடவடிக்கைகளை நிறுத்திக்கொள்ள இலங்கை அரசாங்கத்துக்கு அறிவுரை கூற வேண்டும் என்று மத்திய அரசாங்கத்தை வற்புறுத்தி இருக்கிறேன். ஆனால், மத்திய அரசாங்கமோ தமிழக மீனவர்கள் என்றால் இந்திய நாட்டிற்கு அப்பாற்பட்டவர்கள் என்று நினைத்தோ என்னவோ, தொடர்ந்து மௌனம் சாதித்து வருகிறது. மத்திய அரசாங்கத்தின் கையாலாகாததனம் காரணமாக தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழக மீனவர்கள் மீதான இலங்கை அரசாங்கத்தின் தாக்குதல், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் நான்கு முறை நடைபெற்று இருக்கிறது. இது உண்மையிலேயே கவலை அளிக்கக் கூடியது.

 

தமிழக மீனவர்களின் பிரச்சினை நிரந்தரமாக தீர்க்கப்பட வேண்டும் எனில், கச்சதீவு மீண்டும் நமது நாட்டுடன் இணைக்கப்பட வேண்டும். கச்சதீவு பகுதியில் மீன்பிடிக்கும் உரிமை தமிழக மீனவர்களுக்கு கிடைத்திட வேண்டும். எனவே தான் நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதலோடு இந்திய அரசமைப்பு சட்டத் திருத்தத்தின் மூலம், உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கிணங்க, கச்சதீவு இலங்கைக்கு தாரைவார்க்கப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி இது குறித்த இந்திய - இலங்கை உடன்படிக்கை செல்லாது என தீர்ப்பளிக்க வேண்டும் என்று 2008ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் நான் வழக்கு தொடுத்துள்ளேன். இந்த வழக்கில் தமிழக அரசாங்கத்தின் வருவாய்த்துறையும் தன்னை இணைத்துக் கொண்டுள்ளது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும்போது, வலுவான வாதங்களை முன்வைத்து சட்ட ரீதியாக இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படும்' என்றார்.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=79035&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.