Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சதுரங்க ஆட்டத்தில் "தமிழீழம்" - 8 வது இறுதிகட்டுரை

Featured Replies

போர் நடக்கும் பொழுது எந்த நாட்டின் வெற்றிக்கும், உளவுப்பிரிவு மிக முக்கியமானது. எதிரி நாட்டை சீர்குலைப்பது. அதன் மூலம் தன்னுடைய நாட்டின் நலனை பாதுகாப்பது, போரில் தனது நாட்டை வெற்றி பெற வைப்பது இவை தான் உளவுப்பிரிவின் முக்கிய வேலையாக இருந்து வருகிறது. இந்தியாவிற்கும், பாக்கிஸ்தானுக்கும் இடையே பங்களாதேஷ் உருவாவதற்காக நடந்த போர் கூட உளவுப்படையின் பங்களிப்பிற்கு முக்கிய உதாரணமாக உள்ளது. கிழக்கு பாக்கிஸ்தானில் உள்ள வங்காளிகள் மேற்கு பாக்கிஸ்தானால் நிராகரிக்கப்பட்டு இருந்தனர். "முக்தி பாகினி" என்று சொல்லப்படும் பாங்களாதேஷ் போராளி குழுக்களுக்கு ரா இந்தியாவில் பயிற்சி அளித்தது. இந்த போராளி அமைப்பு பாக்கிஸ்தானுக்கு எதிராக செயல்பட தொடங்கியது. 1971ல் இந்திய -பாக்கிஸ்தான் போரின் வெற்றி இந்திய இராணுவத்திற்கு கிடைத்த வெற்றி என்பதை விட ராவின் செயல்பாடுகளுக்கு கிடைத்த வெற்றி என்று சொல்லலாம். இந்தியா வெற்றி பெற தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து முடித்த பிறகு இந்திய இராணுவத்தை கிழக்கு பாக்கிஸ்தானில் நுழைத்து ரா இந்தியாவை வெற்றி பெற வைத்தது (உளவு நிறுவனங்கள் பற்றிய என்னுடைய முந்தையப் பதிவு )

இதே போன்ற ஒரு நிலை தான் இன்று இலங்கையிலும் நடந்து கொண்டிருக்கிறது. இதில் முதல் சுற்றில் வெற்றி பெற்றிருப்பது, புலிகள் அல்ல. சிறீலங்கா உளவுப்படை தான் வெற்றி பெற்றிருக்கிறது.

கருணா - புலிகளுக்கு இன்று முக்கிய தலைவலியாக இருக்கக் கூடிய பெயர். இந்த சமாதான காலக்கட்ட துவக்கத்தில் பிரபாகரனின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் தமிழ்ச்செல்வன், பாலசிங்கத்துடன் மேடையில் இருந்தவர்களில் கருணாவும் ஒருவர். புலிகள் இயக்கத்தின் மிக முக்கியமான தலைவராக இருந்த கருணாவை அவர் சமாதானப் பேச்சுவார்த்தை குழுவில் இருந்த பொழுது தான் சிறீலங்கா உளவுப்பிரிவினர் தங்கள் பக்கம் இழுத்து விட்டனர். கருணா விவகாரம் புலிகளுக்கு மிகப் பெரிய சறுக்கல். என்றாலும் புலிகள் தங்களை அந்த இழப்பில் இருந்து சரி செய்து கொண்டனர். அவர்களுடைய பலவீனங்களை சரி செய்து கொள்ளும் ஒரு வாய்ப்பாகவும் கருணா பிரச்சனை அமைந்து விட்டது. மாத்தையா தொடங்கி கருணா வரை பலக் காலங்களாக புலிகளை பிளவு படுத்தும் முயற்சியை சிறீலங்கா உளவுப்படை (இந்திய உளவுப்படை ஆதரவுடன்) தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இதில் கருணா மூலமாக வெற்றி கிடைத்தாலும் அவர்கள் எதிர்பார்த்த வெற்றியை பெற முடியவில்லை. கடந்த காலங்களில் சிறீலங்கா இராணுவத்தின் கூலிப்படையாகிப் போன பல போராளி இயக்கங்களின் நிலை தான் இன்று கருணாவிற்கும் ஏற்பட்டு இருக்கிறது.

இதைத் தவிர புலிகள் இயக்கத்தில் சிறீலங்கா உளவுப்படையினர் ஊடுறுவி இருக்கிறார்களா என்பது தெரியவில்லை. இந்த வாய்ப்பினை அவ்வளவு எளிதாக நிராகரித்து விட முடியாது. புலிகளின் பகுதியில் சிறீலங்கா இராணுவத்தின் உளவாளிகள் இருக்கிறார்கள் என்பதும், புலிகளின் எதிர்ப்பாளர்கள் சிலர் சிறீலங்கா இராணுவத்தின் உளவாளிகளாக இருப்பதும் கடந்த காலங்களில் நிகழ்ந்திருக்கிறது.

சிறீலங்கா இராணுவத்தில் புலிகளின் உளவாளிகள் இருக்கிறார்கள் என்பது சில நிகழ்வுகளில் உறுதிச் செய்யப்பட்டிருக்கிறது. புலிகள் கொழுப்பில் நடத்திய தாக்குதல்களிலேயே மிக உக்கிரமான தாக்குதால் கட்டுநாயக்கா விமானப் படை தளம் - பண்டாரநாயக விமான நிலையம் மீதான தாக்குதல் தான். இந்த தாக்குதலால் பல மில்லியன் டாலர் இழப்பை சிறீலங்கா விமானப் படையும், விமானப் போக்குவரத்து நிறுவனமும் எதிர்கொண்டது. இந்த தாக்குதல் அதிபாதுகாப்பு மிக்க பகுதியில் மிகத் துல்லியமாக நடத்தப்பட்டமைக்கு காரணம் புலிகளின் உளவுப்படை தான். இந்த தாக்குதலை பல மாதங்கள் திட்டமிட்டு நடத்தினர். புலிகளின் உளவுப்படையைச் சேர்ந்த சிலரை விமான நிலையத்தை ஒட்டியப் பகுதிகளில் பல மாதங்களுக்கு முன்பே குடி அமர்த்தினர். பின்னர் இந்த விமான நிலையத்தின் வரைபடத்தை சில இராணுவ அதிகாரிகளிடம் இருந்து பெற்றனர். அந்த வரைபடத்தின் மாதிரி வடிவத்தைக் கொண்டு பல மாதங்கள் தற்கொலைப்படையினர் பயிற்சி எடுத்தனர். அவர்கள் திட்டமிட்டதை அப்படியே செயல்படுத்தினர். இவ்வாறு பல மாதங்கள் திட்டமிட்டு பொறுமையாக நடத்தப்படும் புலிகளின் தாக்குதல் தான் துல்லியமாக அமைந்து விடுகிறது.

புலிகளுக்கு தகவல் கொடுக்க கூடிய உளவாளிகள் அரசின் பாதுகாப்பு மிக்க இராணுவ நிலையங்களிலும் இருக்கிறார்கள் என்பது தான் இங்கு கவனிக்கப்பட வேண்டிய விடயம். இவர்கள் சிங்களவர்கள் தான். இவர்கள் உளவாளிகளாக மாற வேண்டிய அவசியம் என்ன ? "பணம்" என்பதை தவிர வேறு என்ன இருக்க முடியும். இந்த பலவீனம் அனைத்து பிரிவினருக்குமே உரியது தான். அதனை பயன்படுத்திக் கொள்வதில் தான் ஒரு உளவு நிறுவனத்தின் திறமை உள்ளது. இதற்கு பல உளவு நிறுவனங்களை உதாரணமாக சொல்ல முடியும்.

இந்தியாவின் ரா, பாக்கிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. போன்றவை இந்தியா, பாக்கிஸ்தான் முழுவதும் இந்தியர்களையும், பாக்கிஸ்தானியர்களையும் அவர்கள் நாட்டிற்கு எதிராகவே திருப்பி உள்ளது. இவ்வாறு மாற்றுவதில் இருக்கும் ஒரு வசதி, யார் உளவாளிகள் என்பதை அவ்வளவு எளிதாக கண்டுபிடித்து விட முடியாது. இராணுவத்தினரில் ஒருவராய், இராணுவ நிலையங்களில் சுற்றி இருக்கக் கூடியப் பகுதிகளில் பல வருடங்கள் வசித்து வரும் ஒருவர் உளவாளியாக மாறுவதை இராணுவத்தால் அவ்வளவு எளிதாக கண்டுபிடிக்க முடியாது. இவ்வாறான உத்தியை தான் விமான நிலைய தாக்குதல், லஷ்மண் கதிர்காமர் மீதான தாக்குதலில் புலிகள் பயன்படுத்தினர். லஷ்மண் கதிர்காமரின் வீட்டிற்கு அருகில் இருக்கக் கூடிய ஒரு வீட்டில் இருந்து நடத்தப்பட்ட ஸ்னைப்பர் தாக்குதலை பல மாதங்கள் திட்டமிட்டு பொறுமையாக தக்க சமயத்திற்காக காத்திருந்து புலிகள் நடத்தி உள்ளனர். லஷ்மண் கதிர்காமர் இலங்கையில் ஜனாதிபதிக்கு அடுத்த நிலையில் அதிகப் பாதுகாப்பினை பெற்று இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பலமான பாதுகாப்புகளை உடைத்து தாக்குதலை நடத்தியிருக்கும் புலிகள், புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு எத்தகைய பாதுகாப்பினை வழங்குகின்றனர் என்பதை அவரது பத்திரிக்கையாளர் சந்திப்பில் காண முடிந்தது. அது பற்றி அப்பொழுது கட்டுரை எழுதிய "ஹிந்து", அந்த பாதுகாப்பு உலகின் மிகச் சிறந்த உளவுநிறுவனங்களை விட மிகச் சிறப்பாக இருந்ததாக எழுதியிருந்தது. இந்த பாதுகாப்பினை வர்ணித்த ஒரு வெளிநாட்டு செய்தியாளர், "காற்று கூட புலிகளின் பாதுகாப்பு வளையத்தைக் கடந்து தான் பிரபாகரனை நெருங்க முடியும்" என்பதாக கூறினார். இங்கு கவனிக்க வேண்டியது, புலிகளின் உளவுப்படை பிற நாட்டு உளவுப்படையினருடன் ஒப்பிடத்தகுந்த அளவிற்கு வளர்ச்சி பெற்று இருக்கிறது என்பதைத் தான்.

இந்த வளர்ச்சி தான் எதிர்வரும் போரில் புலிகளுக்கு முக்கிய பங்களிப்பாக இருக்கப் போகிறது. இலங்கையில் போர் மறைமுகமாக நடந்து கொண்டிருந்தாலும் ஒரு முழு போர் தொடங்கும் நாள் வெகுதூரத்தில் இல்லை என்பது தான் உண்மை. நேரடியான போருக்கு செல்வது இரு தரப்பிற்குமே சவால் நிறைந்தது தான். சிறீலங்கா அரசுக்கு புலிகளின் கணிக்க முடியாத பலம் குறித்தும், போர் தொடங்கினால் வளர்ந்து வரும் அதன் பொருளாதாரம் சீரழிந்து விடும் என்ற அச்சம் உள்ளது. புலிகள் முழுமையான போர் நோக்கி செல்வதற்கு முன்பு தங்களை பல வழிகளில் தயார் படுத்திக் கொள்ள நினைக்கிறார்களோ என்று தோன்றுகிறது. அதில் முக்கியமானது இராணுவ பலத்தை முடக்குவது.

அதன் தொடர்ச்சியாகத் தான் சிறீலங்கா இராணுவத்தின் இரு உயரதிகாரிகள் குறிவைக்கப்பட்டு தாக்கப்பட்டனர். சிறீலங்கா அரசு இதனை எதிர்கொள்வதில் இருக்கும் பிரச்சனை என்னவென்றால் புலிகள் அடுத்த ஆறு மாதத்திற்குப் பிறகோ, ஒரு வருடத்திற்குப் பிறகோ நடக்கப் போகும் தாக்குதலுக்கு இப்பொழுதே தங்களை பல நிலைகளில் தயார் படுத்திக் கொள்கின்றனர். தாங்கள் குறிவைக்கும் இடம் அதன் பாதுகாப்பு என அனைத்தையும் பல மாதங்கள் மிகப் பொறுமையாக கண்காணிக்கின்றனர். தங்களுடைய இலக்கை சரியாக்கிக் கொண்டு தாக்குதல் நடத்தும் பொழுது கொழும்புவில் அவர்கள் பல மாதங்களை கழித்து இருப்பார்கள். அவர்களுக்கு உதவி செய்து கொண்டிருக்கும் உளவாளிகளில் சிலர் சிங்களவர்களாக கூட இருப்பார்கள். ஆனால் சிங்களவர்களுக்கு இந்த திட்டங்கள் குறித்து தெரியாது. புலிகளுக்கு தான் உதவி செய்கிறோம் என்று கூட பலருக்கு தெரிந்திருக்கும் வாய்ப்பில்லை. ஆனாலும் அவர்களின் உதவியை பயன்படுத்திக் கொள்ளும் புலிகள், தகுந்த நேரத்தில் தங்களின் இலக்கினை தாக்குகின்றனர்.

முக்கியமான இலக்காக இராணுவ, பொருளாதார மையங்கள் இருக்க கூடும். யானையிறவுப் போரில் கூட இராணுவ வீரர்களுக்கு இருந்த தொடர்புகளை முதலில் துண்டித்தப் பின்பு தான் படிப்படியாக தாக்குதல்களை அதிகரித்து, அந்த முகாமை கைப்பற்றினார். அடுத்து நடக்கப் போகும் தாக்குதல்களில் இம் முறை பெரிய அளவில் கடைப்பிடிக்கப்படலாம். கட்டுநாயக்கா விமானப் படை தளம் போன்ற பிற முக்கிய இராணுவ மையங்கள் இலக்காக இருக்கலாம். இதன் மூலம் இராணுவ தளவாடங்களை அழித்து விட்டு பிறகு தாக்குதல்களை தொடுப்பது புலிகளின் உத்தியாக இருக்கக் கூடும்.

இது எல்லாவற்றையும் விட புலிகளின் எண்ணிக்கை ஒரு பரந்து பட்ட தமிழீழத்தை தக்க வைக்க கூடிய அளவில் இருக்கிறதா என்பதும் கேள்விக்குரியே. இதனால் தான் புலிகளின் பகுதியை பாதுகாக்க மக்கள் படைகளை புலிகள் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். மக்கள் படைகள் மூலம் கொரில்லா வகை தாக்குதல் தொடுப்பது, புலிகளின் இராணுவப் பிரிவை கொண்டு நேரடியான பெரிய தாக்குதல்களை தொடுப்பது போன்றவை புலிகளின் உத்திகளாக இருக்க கூடும்.

புலிகள் தங்களை பெரிய அளவில் அடுத்து வரும் போருக்காக தயார்படுத்திக் கொண்டிருக்கின்றனர். சிறீலங்கா அரசும் தன்னுடைய ஆயுத பலத்தை பெரிய அளவில் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இது வரை நடந்த போர்களைக் காட்டிலும் இந்தப் போர் உக்கிரமாக இருக்கும் என்பது அங்கு நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகளைப் பார்க்கும் பொழுது தெரிகிறது.

இலங்கையில் எந்த நிமிடமும் போர் துவங்கலாம் என்று இருக்கின்ற நிலையில், இந்தப் போரில் எவ்வளவு உயிர்கள் பலியாகும் என்பதை நினைக்கும் பொழுது அச்சமாக இருக்கிறது.

ஈழ தமிழர்கள் தங்கள் உரிமைகளைப் பெற்று, தமிழீழம் அமைதியாக இருக்க வேண்டும் என்பதே என்னைப் போன்ற பல தமிழர்களின் எண்ணங்களாக உள்ளது. இந்தப் பிரச்சனையின் நேரடி தாக்கத்தை உணராமல், நான் எழுதிய இந்தப் பதிவு எந்தளவுக்கு உண்மையான யதார்த்த நிலையை பிரதிபலித்து இருக்கும் என்று தெரியவில்லை.

ஆனால் அங்கு வாழ்ந்து, இந்தப் பிரச்சனைகளை அனுபவித்த பத்திரிக்கையாளர் சிவநாயகம் அவர்களின் "SRILANKA: WITNESS TO HISTORY" என்ற புத்தகத்தில் இருந்து சில வரிகளுடன் இந்த தொடரை முடித்துக் கொள்கிறேன்.

*************

In a country (ceylon) that earned its independence after 450 years of western colonial rule "without a shot being fired", the one dominating factor today is THE GUN

*************

1956ல் தமிழர்களுக்கு எதிராக நடந்த இனக்கலவரத்தில் தனக்கு ஏற்பட்ட அனுபவம் குறித்து சிவநாயகம் பின்வருமாறு கூறுகிறார்

A gang of thugs stormed into my compartment making threatening noises against all Tamils, and there I was, the only Tamil around, an obvious sitting target. They came for me. The ruffian in front barged in, swept my glasses off my face, and began dragging me... Except my black coated neighbour who was trying to reason out with my attackers not to harm me (who was immediately silenced with a blow on his face) the others merely watched, the women with sullen disapproval, but all of them fearing to come to my defence. The intention of ruffians was very clear. they had a brilliant thought in their heads, to push me out of the moving train!.....

Looking back at my train experience that morning, it dawned on me, at the 25th year of my life that bitter truth...I was a Tamil

http://thamizhsasi.blogspot.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.