Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செங்கல்பட்டு பூந்தமல்லி சிறப்பு முகாம்களை இழுத்து மூடக்கோரி 06.05.2013 போராட்டம்.

Featured Replies

554972_10200931465472415_805830376_n.jpg

 

(முகநூல்)

  • தொடங்கியவர்

சிறப்பு முகாமின் தோற்றமும் மாற்றமும்.

 

482741_352429078211922_245103903_n.jpg


வணக்கம் தோழர்களே நாம் வாழும் சம காலத்தில் நம் கைக்கெட்டும் தூரத்தில் வாழும் நம் தொப்புள் கோடி உறவுகள் சந்திக்கும் துயரங்களை சிறு துளியாவது இந்த சமுதாயத்திற்கு எடுத்து சொல்லும் நோக்குடனேயே இந்த கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது.

 

இந்தியாவில் பங்களாதேஷ், பாகிஸ்தான், மியான்மர், ஈழம் போன்ற பல்வேறு நாடுகளை சேர்ந்த அகதிகள் வாழ்ந்து வருகின்றனர். ஆனால் வேறு எந்த மாநிலங்களிலும் இல்லாத சிறப்புமுகாம்கள் தமிழகத்தில் மட்டும் இயங்குவது ஏன்? இப்படி தமிழகத்தில் இயங்கும் சிறப்புமுகாங்களில் ஈழ அகதிகள் மட்டும் அடைக்கப்படுவது ஏன்? வேறு எந்த நாட்டை சேர்ந்த அகதிகளும் இந்தியாவில் குற்றசெயல்களில் ஈடுபடுவதில்லையா, ஈழ அகதிகள் மட்டும் தான் குற்றங்களில் ஈடுபடுகின்றார்களா. அப்படியே இவர்கள் குற்றசெயல்களில் ஈடுபட்டாலும் மற்ற நாட்டு அகதிகள் நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டு தண்டனை அளிக்கப்படுவது போல் ஏன் ஈழ அகதிகளுக்கு நீதி வழங்கப்படுவது இல்லை.

 

தொடக்கத்தில் விடுதலைபுலிகளை கைது செய்து அடைக்க தொடங்கப்பட்ட இந்த முகாம்கள் காலப்போக்கில் புலிகள் யாரும் கிடைக்காததால் விடுதலைபுலிகள் சந்தேக நபர்கள் என்று குற்றம்சாட்டி ஈழத்திலிருந்து தனியாக வரும் அப்பாவிகளை அடைத்து வைக்க பயன்பட்டது 2009 ஆம் ஆண்டு ஈழப்போர் உக்கிரமாக நடந்துக்கொண்டிருந்த வேளையில் ஈழத்திற்கு மருத்துவப்பொருட்கள், ரத்தப்பொட்டலங்கள் கடத்தினார்கள் என்று குற்றம் சுமத்தி பலரை கைது செய்து இந்த முகாமில் அடைத்து சித்திரவதை செய்து வந்தனர்.

 

2009 நான்காம் கட்ட ஈழப்போரின் முடிவுக்கு பின் புலிகள் என்றோ, பொருட்கள் கடத்தினார்கள் என்றோ யாரையும் கைது செய்ய முடியாததால் இப்பொழுது இந்தியாவை விட்டு வெளியேற முயலும் ஈழ அகதிகளை அடைப்பதற்காக இந்த முகாம்கள் மாற்றமடைந்திருக்கின்றன. காரணம் இந்த முகாமை பொறுத்தவரை ஏதோ ஒரு காரணத்தை காட்டி திறந்தே வைத்திருக்க அரசு முயல்கிறது. இப்படி இந்த முகாம்கள் இயங்கும் நிலையில் இருந்தால் தான் புலிகள் மீதான தடையை இந்தியாவில் தொடர்ந்து நீட்டிக்க முடியும். எனவே இந்த முகாம் இயங்குவதற்காக அநியாயமாக ஈழ அகதிகளை விடுதலைபுலிகள் என்று பொய் குற்றம் சுமத்தி கைது செய்துவந்த காவல்துறை இப்பொழுது வேறு காரணங்கள் கிடைக்காததால் இந்தியாவை விட்டு ஆஸ்திரேலியா செல்ல முயலும் அப்பாவிகளை கைது செய்து முகாமில் அடைக்கும் அவலங்கள் இங்கு தொடர்ந்து நிகழ்ந்தவண்ணம் இருக்கிறது.

இவர்கள் என்ன சுகபோக வாழ்விர்க்காகவா ஆஸ்திரேலியா செல்ல முயல்கின்றனர். இல்லை சமீபத்தில் இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியா செல்ல முயன்று கேரளா கடற்படையால் 151 ஈழத்தமிழர்கள் கைது செய்யப்பட்டனர். அதிகப்படியாக 40 பேர் வரை பயணம் செய்யத்தகுதியான படகில் 151 பேர் நின்றுக்கொண்டு பயணம் செய்ய முயன்றுள்ளனர். கேரளா கடற்படை இவர்களை கைது செய்திருக்காவிட்டால் நிச்சயம் இந்த படகு எங்காவது கவிழ்ந்திருக்கும். ஆனால் இப்படி காப்பற்றப்பட்டவர்களோ மீண்டும் இந்தியாவிற்கு திரும்புவதற்கு பதில் நடுக்கடலிலேயே மூழ்கி இறந்திருக்கலாம் என்று சொல்லும் அளவிற்கு தமிழகத்தில் பராமரிக்கப்படும் அகதிகள் முகாமின் நிலை இருக்கிறது.

 

ஒரு குடும்பத்தில் எத்தனை பேர் இருந்தாலும் அவர்களுக்கென்று ஒதுக்கப்படும் 10 X 10 அளவுள்ள அறையிலேயே இருக்கவேண்டும். முகாமில் இருப்பவர்கள் நினைத்த நேரம் முகாமிற்கு வரவோ போகவோ முடியாது இப்படியான கட்டுப்பாடுகளால் இவர்களால் எந்த தொழிலுக்கும் போக முடிவதில்லை அதிகப்படியாக இவர்களால் கூலி வேலைக்கே செல்ல முடிகிறது. இந்தியாவிற்கு வந்து எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இவர்களுக்கு இந்திய குடியுரிமை கிடைக்காது உயிரை பணயம் வைத்து இப்படி ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு சென்றால் அதிகப்படியாக 2-3 ஆண்டுகளில் குடியுரிமை கிடைத்துவிடும் என்ற காரணத்திற்காகவே இவர்கள் இங்கிருந்து வெளியேற முயல்கின்றனர்.

இப்படியான கொடுமைகளிலிருந்து தப்பிப்பிழைக்க ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு செல்பவர்களை சிறப்பு முகாம் இயங்க வேண்டும் என்ற அற்பத்தனமான காரணத்திற்க்காக கைது செய்து சிறப்பு முகாமில் அடைத்துவரும் இந்திய அரசு நாளை ஒருவேளை இந்தியாவில் ஈழ அகதிகளே இல்லை என்ற நிலை வந்தால் இதே முகாம் இயங்க வேண்டும் என்ற காரணத்திற்க்காக. அனுவுலைக்கு எதிராக போராடிவரும் அப்பாவி மக்களையோ, ஈழத்திற்காக போராடிவரும் தமிழுனர்வாலர்கலையோ கைது செய்து சிறப்பு முகாமில் அடைக்காது என்று என்ன நிச்சயம். எனவே தோழர்களே நாம் விழிப்புடன் செயல்பட்டு சிறப்புமுகாம்கள் மூடும் வரை தொடர்ச்சியாக போராட வேண்டும். தமிழீழத்தின் பயணத்தில் பெரும் தடைக்கல்லாக இருக்கும் சிறப்பு முகாம்கள் மூடப்பட்டால் நமக்கு நாடு கிடைப்பது முன்பைவிட விரைவில் சாத்தியமாகும் என்பது நிச்சயம்.

தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்

 

(முகநூல்)

Edited by துளசி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.