Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்ப் படைகளின் இயல்பு பாரிய ஆபத்து வரும்போது சிலிர்த்து எழ

Featured Replies

தமிழ்ப் படைகளின் இயல்பு பாரிய ஆபத்து வரும்போது சிலிர்த்து எழும்: இராணுவப் பேச்சாளர் இளந்திரையன்

தமிழ்ப் படைகளின் இயல்பு பாரிய ஆபத்து வரும்போது சிலிர்த்து எழும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இளந்திரையன் தெரிவித்துள்ளார்.

தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை (09.07.06) ஒளிபரப்பாகிய நிலவரம் நிகழ்ச்சியில் பங்கேற்ற இளந்திரையன் தெரிவித்த கருத்துகளின் எழுத்து வடிவம்:

சிறிலங்கா அரசாங்கத்தின் ஆக்கிரமிப்பு இயந்திரங்களில் ஒன்றுதான் அரச படைகள். அந்த அரச படைகள் தங்களுக்கான நிகழ்ச்சி நிரலைக் கொண்டுள்ளன. அதாவது தீர்வுத் திட்டமானது சிங்களவருக்குச் சாதகமாக அமைய வேண்டும் என்பதில் தங்களின் பங்களிப்பு குறித்து தெளிவாக இருக்கின்றனர் படையினர்.

20060711020.jpg

இராணுவப் பேச்சாளர் இளந்திரையன்

ஒப்பந்தங்களோ அல்லது வெளிநாடுகளுக்கு சிறிலங்கா அரசாங்கம் கொடுக்கின்ற வாக்குறுதிகளோ இந்த அரச படைகளின் நிகழ்ச்சி நிரலைப் பாதித்ததாக தெரியவில்லை என்பதையே நாம் காண்கிறோம்.

பாதுகாப்புக்கு வந்த படைகள் என்று சொல்லிக் கொண்ட படையினர் தங்களுக்கான பாதுகாப்பு வலயங்களை உருவாக்கி மக்களை இடம்பெயர வைத்துள்ளமையும் படுகொலைகளும் அச்சுறுத்தல்களும் தொடர்கின்றன. இந்தச் சூழ்நிலையை அதிகரிக்கவே படையினர் விரும்புகின்றனர். ஆகவே ஒப்பந்தங்களும் பேச்சுவார்த்தைகளும் சிறிலங்கா அரசாங்கத்தின் ஆக்கிரமிப்பு இயந்திரத்தில் எதுவித மாற்றத்தையும் உருவாக்கவில்லை.

ஒரு படையானது தனது இலக்குகளை அடைவதற்கு பல உத்திகளையும் பல உள்ளோட்டமான வேலைத் திட்டங்களையும் கையாளக் கூடியது.

பாரிய படை நடவடிக்கைகளைச் செய்வதற்கு அந்தப் படையினரிடம் ஒரு உயர்மட்ட ஒழுக்க நியமம், உயர்மட்ட மன உறுதி நியமம் எல்லாம் தேவைப்படும். எமது தேசியத் தலைவர் அவர்கள் வடிவமைத்திருக்கிற படைத்துறை நிருவாக முறைமையானது அண்மைக்கால உலகில் வேறு எங்கும் ஒப்பிடமுடியாத அளவு உயர்ந்த அளவு படைத்துறை ஒழுக்க நியமங்களைக் கொண்டது என்பதை பெருமையோடு சொல்லிக் கொள்கிறோம்.

அந்த ஒழுக்க நியமங்களின் மூலமாக பெறப்படுகிற படை மனஉறுதியை ஒப்பிடுகையில் சிறிலங்காப் படையினர் கீழேதான் உள்ளனர். தன்னுடைய தாயகம் என்று உணரப்படாத இடத்திலே நின்று போராடுகின்ற போது மன விரக்தி அடைவதும் படுகொலைகள்- பாலியல் வல்லுறவுகள் போன்ற கொடூரமான செயல்களைச் செய்வதுமாக உள்ளனர்.

படைத்துறையினரது புலனாய்வுப் பிரிவினர் மற்றும் மேலதிகார மட்டத்திலே தமிழர்களை ஒடுக்குவதற்கும் தமிழர்களின் மனங்களிலே பீதியை ஏற்படுத்தவும் தமிழர்களின் தாயக வேட்கையை தணிய வைப்பதற்கான அச்சுறுத்தல்களையும் செய்வதற்காக ஒருபகுதியினர் வேலைகளைச் செய்து கொண்டு வருகின்றனர்.

அரச இராணுவ இயந்திரம் வெளிப்படையாக செய்கின்ற படுகொலைகள் அளவுக்கு படுகொலைகளின் பின்னால் தங்களது இலக்கை அடைவதற்கு செய்யப்படுகின்ற நகர்வுகள் வெளியே பேசப்படுவதில்லை.

உதாரணமாக உயர் பாதுகாப்பு வலயம் என்று சொல்லப்படுகின்ற இடங்களிலே வாழ்ந்து வந்த வீட்டை இழந்துவிட்டு வேறு இடங்களிலே வாழ்கின்ற குழந்தைகளுக்கு மன ரீதியாக ஏற்படுகின்ற சோர்வுகள், வாழ்க்கையில் ஏற்படுகின்ற இழப்புகள் அதாவது தங்களது கல்வி- தொழில்- பொருளாதாரம் அனைத்தும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படுகின்றமை என உள்ளது.

சிறிலங்கா அரசாங்க படைகள் செய்கின்ற படுகொலைகளில் ஒரு கோரம் உள்ளது. அதனூடே ஒரு பயங்கரமான தகவலை தமிழ் மக்களுக்குச் சொல்கின்றனர். ஒரு சிறு குழந்தையை வெட்டிக் கொன்றுவிட்டு தூக்கிலிடுவது என்பது வெறும் இன அழிப்புக்கான படுகொலை மட்டுமே அல்ல. வீட்டைச் சுற்றி வளைத்தல், பெண்களை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்குதல், குடும்பத்தோடு கொலை செய்தல்- சுட்டுக் கொல்லுதல் என அல்லைப்பிட்டியிலும் மானிப்பாயிலும் நடந்தது.

போதையிலே மாலை நேரத்திலே ஒன்று கூடும் படையினர் எங்கே போய் இந்த அட்டகாசத்தைச் செய்வது என்று திட்டமிட்டுக் கொள்வதாக செய்திகள் வந்துள்ளன. இந்தக் கோரச் சம்பவங்களின் மூலமாக மக்களிடத்திலே பீதியை ஏற்படுத்துவது- எங்களுக்கு அடிபணிந்து போங்கள் அல்லது ஒடுக்குவோம் என்ற செய்தியைத் தெரிவிக்கின்றன படைகள்.

குழந்தையை கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டுவது போல்தான் சம்பவ இடங்களிலே சிறிலங்கா காவல்துறையினர் சென்று விசாரணை நடத்துவது. தமிழ் மக்களுக்கு எதிரான அவர்களின் நிகழ்ச்சி நிரலின் ஒருபகுதிதான் இது. பேசாலையில் ஒரு கொலையைச் செய்துவிட்டு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

சிறிலங்காவில் எத்தனை விசாரணைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று சிறிலங்கா அரச தலைவருக்கே தெரியாத அளவுக்கு விசாரணைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. படுகொலைகள் அனைத்தையும் மூடி மறைப்பதற்குத்தான் இந்த விசாரணைக் குழுக்கள். கொல்கின்னர் அரச படையினர். அவர்களை விசாரிப்பவர்கள் அதே சிறிலங்கா காவல்துறையினர். விசாரணைக்கு வருகின்றவர்களும் ஆக்கிரமிப்பு அரசாங்கத்தின் அங்கத்தினர்.

படுகொலைக்கான விசாரணைகளை செய்த விசாரணைக் குழு எந்த ஒரு இராணுவத்தினனுக்காவது தண்டனையைக் கொடுத்த வரலாறு சிறிலங்காவிலே உண்டா? இந்த விடயங்களில் மக்கள் தெளிவாக இருக்கின்றனர்.

சிறிலங்கா இராணுவத்தினரது சீருடைக்கு என்று மக்கள் ஒரு "பெறுமானத்தை" வைத்திருக்கின்றனர். அந்தச் சீருடைக்குரிய "தகமையுடன்" தான் மக்கள் அதனை பார்க்கின்றனர். ஏனெனில் அந்தச் சீருடை என்ன செய்தது? செய்கிறது? என்பது அந்த மக்களுக்கு நன்றாகத் தெரியும்.

படைத்துறையைப் பொறுத்த வரையில் ஆயுதங்களுக்கும் உத்திகளுக்கும் பெறுமானம் ஒன்றுதான். அவற்றை வைத்திருப்பதன் மூலம் அல்ல. அவற்றை சரியான ரீதியாக பயபடுத்துவன் மூலமே படைத்துறை ரீதியான பேறுகளைப் பெற முடியும்.

வியட்நாமில் அமெரிக்கா பயன்படுத்திய உத்தியான ஆழ ஊடுருவித் தாக்கும் உத்தியைப் போன்ற உத்திகள் பயன்படுத்தப்படுகின்றனதான். ஆனால் இலங்கைச் சூழ்நிலை வித்தியாசமானது.

அரசாங்கமானது எங்களுடன் வெளிநாட்டு மத்தியஸ்துடன் ஒரு ஒப்பந்தத்தைச் செய்யும் நிலையில் ஆழ ஊடுருவும் அணியினரது தாக்குதலைப் பயன்படுத்த வேண்டியதாக அவர்களுக்கு நிலைமை உள்ளது. சிறிலங்கா படையினரது மன உறுதியற்ற நிலையை காட்டுகிறது. ஒரு படைத்துறை தளபதி தனக்கு பாதுகாப்பில்லை என்று அரசாங்கத்திடம் கேட்டிருக்கிறார். இத்தகைய வேடிக்கை இலங்கைத் தீவில் மட்டுமே நடக்கக் கூடியது.

ஆழ ஊடுருவும் படையினர் செய்த சாதனைதான் என்ன? எங்கள் இலக்குகள் சிலவற்றின் மீதுதான் தாக்குதல் நடத்தியிருக்கின்றனர். மன்னாரிலும் மதியாமடுவிலும் பொதுமக்களை கொன்றுள்ளனர். தங்களை அடையாளம் கண்டு கொள்ளும் மக்களை கொல்கின்றனர். இந்தத் தாக்குதலினால் என்ன விளைவு நடந்தது? மக்களே பயிற்சி பெற்று மக்களே அந்த ஆழ ஊடுருவும் அணியினரைத் தாக்கி அவர்களது உடல்களை இராணுவத்திடம் ஒப்படைத்துள்ளனர். இதுதான் நடந்துள்ளது. சத்திரசிகிச்சை நிபுணர் ஒருவர் கசாப்பு கடையில் போய் வேலை பார்த்து அங்கும் பிழை விட்டதாகத்தான் இருக்கிறது.

சாரத்தை மடித்துக் கொண்டு இரவுகளில் குழிகளைத் தோண்டி கண்ணிவெடிகளை வைத்து விட்டு ஆக்கிரமிப்பு இராணுவம் வரும்போது வெடிக்க வைத்துவிட்டு அந்தப் புகை கலைவதற்கு முன்பாக காட்டுக்குள் தளத்தில் போய் நிற்போம். அது ஒரு காலம்.

பிறகு சிறு, சிறு தாக்குதல்களை நடத்தி கொக்காவில், பூநகரி கூட்டுப்படைத் தலைமையகம், முல்லைத்தீவு இராணுவத்தளம் என்று நீண்டு ஆனையிறவுத் தொடர்வலயத்தை தாக்கி வளர்ச்சியடைந்திருக்கிறோம்.

எப்பவுமே தமிழ்ப் படைகளின் இயல்பு பாரிய ஆபத்து வரும்போதுதான் சிலிர்த்து எழும். ஆழ ஊடுருவும் அணி இன்று தாக்குதல் நடத்தும்போது ஆயிரக்கணக்கில் மக்கள் ஆயுதங்களுடன் நிற்கிறார்கள். தமிழீழம் முழுவதும் மக்கள் பயிற்சி பெற்றுள்ளனர். இனி 4 ஆவது ஈழப் போர் வெடிக்கும் நிலையில் அதுவே நடக்கும் என்றார் இளந்திரையன்.

புதினம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.