Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அவுச்திரெலியா நாட்டுப்பற்றாளர் கலாநிதி மகேஸ்வரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த கலாநிதி மகேஸ்வரனுக்கு "நாட்டுப்பற்றாளர்" விருது வழங்கி கெளரவம்

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த வைத்திய கலாநிதி மகேஸ்வரனுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் "நாட்டுப்பற்றாளர்" விருது வழங்கி கெளரவித்துள்ளனர்.

அவுஸ்திரேலியா மெல்பேர்ண் நகரில் கடந்த சனிக்கிழமை (08.07.06) நாட்டுப்பற்றாளர் கலாநிதி மகேஸ்வரன் காலமானார்.

தனது 78 ஆவது வயதில் காலமான "நாட்டுப்பற்றாளர்" கலாநிதி மகேஸ்வரனுடைய புகழுடல் மெல்பேர்ண் நகரில் இன்று செவ்வாய்க்கிழமை வைக்கப்பட்டிருந்தது.

அவரது புகழுடலுக்கு மரியாதை செலுத்துவதற்காக நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு வந்து இறுதி வணக்கம் செலுத்தினர். நாளை புதன்கிழமை அவரது புகழுடல் தீயுடன் சங்கமிக்கவிருக்கின்றது.

நாட்டுப்பற்றாளர் விருது வழங்கி கெளரவித்து விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழீழத் தேசம் தனது உயர்விற்குத் தோள்கொடுத்து நின்ற உயர்ந்த மனிதர் ஒருவரை இன்று இழந்து நிற்கின்றது. அவுஸ்திரேலிய நாட்டில் வாழ்ந்தாலும் தனது தாய்நாட்டின் மீது அளப்பரிய காதல் கொண்டு வாழ்ந்து வந்த வைத்திய கலாநிதி அவர்கள் 08.07.06 அன்று சாவைத் தழுவிக்கொண்ட செய்தியானது எம்மைத் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

வைத்திய கலாநிதி மகேஸ்வரன் அவர்கள் அவுஸ்திரேலிய நாட்டில் மிக நீண்ட காலமாக வாழ்ந்து வந்தவர். துறைசார் கல்வியில் தேர்ச்சி பெற்று அந்நாட்டின் மருத்துவத்துறைக்கு காத்திரமான பங்காற்றி வந்தவர். பெரும் புகழும் வசதியான வாழ்வும் அவருக்கு அங்கு வாய்த்திருந்த போதும் தனது தாய்நாட்டின் அவலநிலை கண்டு அவர் வேதனையுற்றிருந்தார்.

சிங்கள ஆக்கிரமிப்பாளர்களால் தமிழீழ தேசத்தில் விதிக்கப்பட்டிருந்த வாழ்வியல் தடைகள் பற்றி அவர் அறிந்திருந்தார். குறிப்பாக மருத்துவத் தடைகளால் எமது மக்கள் வதைக்கப்படும் செய்திகள் அவரை எட்டியிருந்தன. மருத்துவர்களின் பற்றாக்குறையால் எமது மக்கள் படும் அவலங்களையும், அந்நிலையிலிருந்து மக்களைக் காப்பதற்காக எமது தேசத்தின் தலைமை முழு மூச்சுடன் போராடிக் கொண்டிருப்பதையும் அவர் அறிந்திருந்தார். இவையெல்லாம் தனது தாய்நாட்டிற்குத் தன்னாலியன்ற மருத்துவத்துறை சார் பங்களிப்பை ஆற்ற வேண்டும் என்ற உணர்வை அவருள் ஏற்படுத்தி இருந்தன.

வயது முதிர்ந்து நோய் வாய்ப்பட்டிருந்த போதும் தாயகம் வந்தார். யாழ். பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திற்குத் தன்னால் இயன்ற பங்களிப்புக்களை நல்கினார். அது போன்றே தென்தமிழீழத்திலும் இவ்வாறானதொரு பீடம் சிறப்புடன் செயற்பட்டுத் தேசத்தின் தேவைகளை நிறைவு செய்யப் பங்காற்ற வேண்டும் என அவாவி நின்றார். அதற்காக கிழக்குப் பல்கலைக்கழக சமூகத்துடன் இணைந்து செயற்பட்டுத் தனது நிபுணத்துவ ஆலோசனையும் இன்ன பிற உதவிகளையும் வழங்கினார். தொடர்ச்சியாக இவற்றில் பங்கெடுத்துத் தாயக மருத்துவத்துறை வளர்ச்சிக்குத் துணை நிற்பது என்ற முடிவோடு இறுதிவரை அவர் இருந்தார்.

தாயகத்தில் குறிப்பாக எமது விடுதலை இயக்கம் கொண்டிருந்த மருத்துவத்துறை சார் கட்டமைப்புக்கள் மருத்துவக் கலாநிதி மகேஸ்வரன் அவர்களைப் பிரமிக்க வைத்தன. சிறிலங்காப் பேரினவாத அரசு வெறிகொண்டு தமிழ் மக்களை அழிக்க மேற்கொண்டு வரும் கொடூரங்களிலிருந்து மக்களைக் காப்பதற்கு விடுதலைப் புலிகள் அமைப்பின் போராளி மருத்துவர்கள் மக்களது வீடுகள் வரை சென்று மருத்துவப் பணிபுரிந்து வரும் நிலை அவரது உள்ளத்தைத் தொட்டது. அதனால் இக்கட்டமைப்புக்களை மேலும் வளர்த்தெடுக்கும் எமது தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது முயற்சிகளுக்கு முழுமையாகத் துணை கொடுப்பதற்கு முன்வந்தார். அதுவே தனது வாழ்வில் உன்னதமான மனத்திருப்தியைத் தரும் என அவர் கருதிச் செயற்பட்டதை நாம் நன்கு அறிந்திருந்தோம்.

இவ்வாறு தாயகத்தில் இருந்து செயற்பட முனைந்த போதும் வைத்திய கலாநிதி மகேஸ்வரன் அவர்களுக்கு அவர் ஏற்கனவே கொண்டிருந்த நோயும் வயது முதிர்ந்த நிலையும் இடையூறுகளை ஏற்படுத்தின. அதனால் அவர் இங்கிருந்து செல்ல வேண்டி ஏற்பட்டது. உடல்நிலை ஒத்துழைக்காத போதும் உள்ளத்தால் ஒன்றிணைந்து அவுஸ்திரேலிய நாட்டிலிருந்தே தனது பங்களிப்புக்களை அவர் தொடர்ந்தும் செய்து வந்தார். இந்நிலையில் அவரது வாழ்க்கைப் பயணம் நிறைவு பெற்றுவிட்டது.

வைத்திய கலாநிதி மகேஸ்வரன் அவர்களது இழப்பானது எமது தாய் நாட்டிற்கு ஏற்பட்ட ஒரு இழப்பாகும். உயிரோடு இருந்திருந்தால் இன்னும், இன்னும் எமது தேசத்திற்காக உழைத்திருக்கக்கூடிய அவரது இழப்பால் எமது தேசம் துயர்கொள்கின்றது. அவரை இழந்த துயத்தில் மூழ்கியிருக்கும் விடுதலைப் பற்றுக்கொண்ட அவரது குடும்பத்தினரின் துயரில் எமது தேசமும் தேசியத் தலைமையும் பங்கு கொள்கின்றது. வைத்திய கலாநிதி மகேஸ்வரன் அவர்களுக்கு அவரது தாய்நாட்டிற்கான உழைப்பிற்கு மதிப்பளித்து "நாட்டுப்பற்றாளர்" என்ற கௌரவத்தைத் தமிழீழத் தேசத்தின் சார்பாகத் தேசியத் தலைவர் அவர்கள் வழங்கிக் கொள்கின்றார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.eelampage.com/?cn=27461

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாட்டுப்பற்றாளர் கலாநிதி மகேஸ்வரனின் புகழுடல் தீயுடன் சங்கமமானது

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த "நாட்டுப்பற்றாளர்" பேராசிரியர், வைத்திய கலாநிதி மகேஸ்வரனின் இறுதி நிகழ்வுகள் இன்று புதன்கிழமை நடைபெற்றன.

கலாநிதி மகேஸ்வரனுடைய புகழுடல் மெல்பேர்ண் நகரில் நேற்று வைக்கப்பட்டிருந்தது.

அவரது புகழுடலுக்கு மரியாதை செலுத்துவதற்காக நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு வந்து இறுதி வணக்கம் செலுத்தினர்.

இன்று காலை 11 மணிக்கு அவரது புகழுடல் தீயுடன் சங்கமித்தது.

இன்றைய இறுதி நிகழ்வில் மருத்துவத்துறையில் அன்னார் புரிந்த சாதனைகள் பற்றி அவருடன் இறுதிக்காலத்தில் பணியாற்றிய பேராசிரியர் ஒருவர் உரை நிகழ்த்தினார்.

அவர் இசைத்துறைக்கு ஆற்றிய பங்களிப்பு பற்றி இந்திய கலைக்கல்லூரியைச் சேர்ந்த ரவிச்சந்திரா அவரது திறமையைப் பாராட்டிப் பேசினார்.

http://www.eelampage.com/?cn=27492

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.