Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிவகங்கையில் இருந்து அலறியடித்து புதுச்சேரிக்கு ஓடும் ப.சிதம்பரம்.

Featured Replies

இலங்கைப் பிரச்னையில் காங்கிரஸ் கூட்டணியிலிருந்து தி.மு.க. விலகியது யாருக்கு நஷ்டமோ தெரியாது. ஆனால், மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்குப் பெருத்த‌ நஷ்டம். கூட்டணியில் இருந்து தி.மு.க. விலகியதால், சிதம்பரம் தீராத சோகத்தில் இருக்கிறார்’ - சிவகங்கை காங்கிரஸ் வட்டாரத்தில் இதுதான் ஹாட் டாப்பிக்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய சிவகங்கை காங்கிரஸ்காரர்கள், ''மத்திய அரசில் முக்கிய இடத்தில் இருந்தும் ஈழப்‌ பிரச்னையில் ப.சிதம்பரம் உருப்படியான எந்த‌ நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்ற கோபம் தொகுதி மக்களிடம் இருக்கிறது. அந்தக் கோபம்தான் கடந்த முறை அவரைத் தட்டுத்தடுமாறி ஜெயிக்கவைத்தது. அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சிதம்பரம், தி.மு.க. அணியில் நின்றாலாவது திக்குத் திணறிக் கரை ஏற வாய்ப்பு இருக்கிறது. கூட்டணி முறிந்து விட்டதால், அவர் இப்போது திரிசங்கு நிலையில் தவிக்கிறார். 'வாரிசுகளுக்கு ஸீட் இல்லை, ஒரே தொகுதியில் இரண்டு முறை தோற்றவர்களுக்கு ஸீட் இல்லை’ என்று திட்டவட்டமாக அறிவித்திருக்கிறார் ராகுல். இதனால், தனக்குப் பதிலாக தனது மகனை நிறுத்தவும் அவருக்கு வழியில்லை. காங்கிரஸ் மூன்றாவது அணி அமைத்து சிதம்பரமே சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டால், ஜெயிப்பது கஷ்டம்.


அதனால், தனது உதவியாளரும் காரைக்குடி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ-வுமான சுந்தரத்தை வேட்பாளராக நிறுத்தும் யோசனையில் அவர் இருப்பதாகச் சொல்கிறார்கள். ராஜ்யசபா வழியாக நாடாளுமன்றத்துக்குப் போய்விடலாம் என்பது சிதம்பரத்தின் கணக்கு. அத்துடன் புதுச்சேரி தொகுதி மீதும் சிதம்பரத்துக்கு ஒரு கண் இருக்கிறது. ஈழ ஆதரவாளர்களால் இந்த முறையும் தனது வெற்றிக்குச் சவால் வரலாம் என்று கணக்குப் போட்ட சிதம்பரம், காங்கிரஸுக்கு செல்வாக்கான புதுச்சேரி தொகுதி பக்கம் அடிக்கடி தலைகாட்ட ஆரம்பித்திருக்கிறார். அங்கே வைத்திலிங்கம், தேனி ஜெயக்குமார், கண்ணன் உள்ளிட்டவர்களிடம் பேசி சரிக்கட்டிவிட்டதாகவும் சொல்கிறார்கள். எஞ்சி இருப்பவர் நாராயணசாமி மட்டும்தான். சிவகங்கை தொகுதியில் பத்து லட்சம் வாக்காளர்களைச் சமாளிக்க வேண்டி இருக்கும். புதுச்சேரியில் நாலரை லட்சம் வாக்காளர்களை சமாளித்தாலே போதும்; எளிதில் வென்றுவிடலாம். இதை எல்லாம் கணக்குப் போட்டுப் பார்த்துத்தான், அந்தப் பக்கமும் போக்குவரத்தில் இருக்கிறார் சிதம்பரம்'' என்கிறார்கள்.

இதற்கிடையே சிவகங்கை தொகுதியில் சிதம்பரம் தேர்தல் வேலைகளையும் முடுக்கிவிட்டிருக்கிறார். நான்கு கிராமங்களுக்கு ஒன்று வீதம் 100 இடங்களில் தலா 15 லட்ச ரூபாய் செலவில் தனது சொந்தப் பணத்தில் ச‌முதாயக் கூடங்களை கட்டிக்கொடுத்து வருகிறார். தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாகவே தொகுதி முழுக்க கரன்சியை இறக்கிவிட்டு, வாக்காளர்களை இழுத்துப் பிடிக்கவேண்டும் என்பது சிதம்பரத்தின் திட்டமாம். இன்னொரு பக்கம், தொகுதியில் மொத்தம் உள்ள 1,550 பூத்களில் ஐந்து பூத்களுக்கு ஒரு பொறுப்பாளர் நியமிக்கப்பட்டு அவர்களுக்கு தலா 2,000 ரூபாய் பட்டுவாடா செய்யப்பட்டு இருக்கிறதாம்.

அதேசமயம், சிவகங்கை தொகுதியில் சிதம்பரம் போட்டியிட  மாட்டார் என்று தகவல் பரவியதை அடுத்து சுதர்சன நாச்சியப்பனின் மகன் ஜெயசிம்ம நாச்சியப்பன், சிவகங்கை தொகுதியைப் பல்ஸ் பிடித்துப் பார்க்கிறார். காங்கிரஸ் மனித உரிமைப் பிரிவுக்கு மாநிலத் துணைத் தலைவராக இருக்கும் ஜெயசிம்மா, கடந்த இரண்டு வாரங்களாகத் தொகுதிக்குள் இறங்கி, மனித உரிமைப் பிரிவு உறுப்பினர்கள் 3,000 பேருக்கு அடையாள அட்டைகளை வழங்கி கணக்கை ஆரம்பித்திருக்கிறார். சோனியாவின் உதவியாளரான ஜார்ஜின் உறவுக்காரப் பெண்ணை ஜெயசிம்மா காதலித்து திருமணம் செய்திருக்கிறார் என்பதால், சிதம்பரம் இல்லாத பட்சத்தில் ஜார்ஜ் மனதுவைத்தால், ஜெயசிம்மாவுக்கு சிவகங்கை தொகுதியில் வாய்ப்பு அளிக்கப்படலாம் என்கிறார்கள்.

'உடைந்துபோன‌ கை... முறிந்துபோன கை... ஊழல் ஜெயலலிதாவின் முந்தானைக்குள் ஒளிந்துவரும் கை!’ - 1996 தேர்தலில் இப்படிப் பிரசாரம் செய்த சிதம்பரம், இப்போது, 'மத்திய அரசின் நிதியை ஊழலற்ற வகையில் வீணாக்காமல் திட்டங்களுக்குச் செலவு செய்து வருகிறது தமிழக அரசு’ என்று  ஜெயலலிதாவுக்கு நற்சான்றிதழ் அளித்திருக்கிறார். ஒருவேளை, காங்கிரஸ் - அ.தி.மு.க. கூட்டணி அமைந்தால்... என்ற முன்யோசனையில் அவர் இப்படிப் பேச‌லாம். ஆனால், அப்படியே கூட்டணி அமைந்தாலும்... சிதம்பரத்துக்குச் சிவகங்கையை கொடுப்பாராக்கும் ஜெயலலிதா?

http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=13953:sithamparam-pthusery&catid=12:politics&Itemid=105

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.