Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என்ன நடக்கிறது மதுரையில்? யாருடைய ஆட்சி நடக்கிறது?

Featured Replies

 

jaya-1.jpgபொட்டு சுரேஷ் கொலை வழக்கில் சிக்கிய ஏழு பேருக்கு ஜாமின் கிடைத்திருப்பது ஆளும் கட்சிக்கு அதிர்ச்சி. உட்கட்சி ஒழுங்கு நடவடிக்கையாக அழகிரி ஆதரவாளர்கள் நோட்டீஸ் வாங்கிப் பரிதவித்து நின்ற வேளையில்... ஸ்டாலின் ஆதரவாளர்கள் மீதான நடவடிக்கை ஒரே நாளில் வாபஸான விவகாரம் தி.மு.க-வில் பலத்த அதிருப்தியை விதைத்திருக்கிறது. மதுரையில் மையம்கொண்டு நடக்கும் அரசியல் மாநிலத்தையே சலசலப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது'' என்றும் சொன்ன கழுகார், முதலில் பொட்டு சுரேஷ் கொலை வழக்கைப் பற்றி ஆரம்பித்தார்.

''கடந்த புதன்கிழமை அன்று அட்டாக் பாண்டி ஆட்கள் சந்தோஷத்தில் திளைத்தனர். பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் சிக்கிய ஏழு பேருக்கு ஜாமின் கிடைக்கிறது என்றால் சும்மாவா? பொட்டு சுரேஷ் கொலையில் தொடர்புடைய 18 பேரில் இதுவரை 16 பேர் சிக்கி இருக்கிறார்கள். அட்டாக் பாண்டியும் பிரவீன்குமார் என்பவரும் தலைமறைவாக இருக்கின்றனர். இந்த 16 பேரில் 11 பேர் கோர்ட்டில் சரண் அடைந்தவர்கள். இதில் போலீஸார் தேடிக் கண்டுபிடித்து கைது செய்தவர்கள் ஐந்து பேர் மட்டுமே. அந்த ஐந்து  பேரும் பிரதானக் குற்றவாளிகளுக்குச் சிறுசிறு உதவி செய்தவர்கள். கொலை நடந்து இரண்டு மாதங்கள் ஆகியும் அட்டாக் பாண்டியும் பிரவீன்குமாரும் இதுவரையில் பிடிபடவில்லை. பிடிபட்ட 16 பேரில் சந்தானம், சபாரத்தினம், சேகர், கார்த்திக், லிங்கம், செந்தில், நாகமுருகன், விஜயபாண்டி, ஆரோக்கிய பிரபு உள்ளிட்ட 14 பேர் ஜாமின் கேட்டு மதுரை மாவட்ட முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். கடைசியாகச் சரணடைந்த வில்வதுரையும், காட்டுவாசி முருகனும் ஜாமின் கேட்கவில்லை.''

 

''அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தமிழ்செல்வம், 'இது ஏதோ சாதாரணக் கொலை கிடையாது. மதுரையில் நிகழ்ந்த மற்றொரு அரசியல் படுகொலை. அட்டாக் பாண்டி, ஆரோக்கியபிரபு, விஜயபாண்டி உள்ளிட்ட பிரதானக் குற்றவாளிகள் மீது ஏற்கெனவே வழக்குகள் உண்டு. தினகரன் எரிப்பு வழக்கிலும் சம்பந்தப்பட்டவர்களும் இருக்கிறார்கள். சிலர் மீது கொலை, கொள்ளை வழக்குகளும் உள்ளன. இவர்களின் நடவடிக்கைகள் மக்களைப் பயமுறுத்துவதுபோல் அமைந்திருக்கிறது. இவர்கள் வெளியே நடமாடுவதற்கு உகந்தவர்கள் அல்லர். இவர்கள் வெளியே வந்தால், சட்டம்- ஒழுங்குப் பிரச்னை ஏற்படும். மக்களும் பீதியடைவார்கள். இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியான அட்டாக் பாண்டி இன்னமும் பிடிபடவில்லை. எனவே, இவர்களுக்கு ஜாமின் கொடுக்கக் கூடாது’ என்று வாதிட்டார். அட்டாக் தரப்பில் இருந்து மதுரையின் புகழ்பெற்ற கிரிமினல் வழக்கறிஞர் கோபாலகிருஷ்ண லட்சுமண ராஜு, மணிகண்டன் ஆகியோர் ஆஜரானார்கள். 'பொட்டு சுரேஷ் சாதாரண ஆள் கிடையாது. பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர். அவர் மீது ஒரு கொலை வழக்கு உட்பட பல வழக்குகள் இருக்கின்றன. இதே போலீஸார் அவரைக் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர். தொழில் மோட்டிவ், அரசியல் மோட்டிவ் காரணமாக இந்தக் கொலை நடந்திருக்கலாம். இந்தக் கொலையை நேரில் பார்த்த சாட்சி யாரும் இல்லை. போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரணை என்ற பெயரில் வாங்கப்பட்ட வாக்குமூலத்தை எவிடென்ஸாக ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த வாக்குமூலமே செல்லாது. சந்தானம், சபாரத்தினம் உள்ளிட்ட ஏழு பேர் 65 நாட்களுக்கு மேலாக சிறையில் இருக்கிறார்கள். விஜயபாண்டி, ஆரோக்கிய பிரபு ஆகியோரும் 45 நாட்களுக்கு மேல் சிறையில் இருக்கிறார்கள். எனவே, அவர்களுக்கு ஜாமின் வழங்க வேண்டும்’ என்று வாதாடினர். நீதிபதி கோகுல்தாஸ் இதை விசாரித்தார். சந்தானம், சபாரத்தினம், சேகர், கார்த்திக், லிங்கம், செந்தில், நாகமுருகன் ஆகிய ஏழு பேருக்கும் நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டார். இந்தத் தகவல் கிடைத்ததும் ஆட்சி மேலிடம் கொந்தளித்துவிட்டதாம்!''

 

''இந்த விஷயத்தை சீரியஸாகப் பார்த்தாராம் முதல்வர். ஆட்சி சம்பந்தமான சட்ட விஷயங்களைக் கவனிக்கும் பிரமுகரிடம் பேசிய முதல்வர், 'மிக முக்கியமான வழக்கில் இப்படி ஜாமினில் ஆட்கள் வெளியில் வந்தால், சட்டம்- ஒழுங்கு எப்படி சரியாக இருக்கும்? என்ன நடக்கிறது மதுரையில்? யாருடைய ஆட்சி நடக்கிறது? போலீஸும் அரசு வழக்கறிஞர்களும் சரியாகத்தான் நடந்துகொண்டார்களா?’ என்று சீறினாராம் முதல்வர். இதே போன்ற தனது ஆதங்கத்தை போலீஸ் உயர் அதிகாரியிடமும் கொட்டினாராம். 'ஒரு கிரிமினல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுக் கைதானவர்கள் 90 நாட்கள் வரை சிறையில் இருக்க வேண்டும் என்று விதிமுறை உள்ளது. அதைமீறி எப்படி இவர்களால் வெளியில் வர முடிந்தது? அதுவும் ஏ1 என்ற இடத்தில் இருக்கும் அட்டாக் பாண்டி இன்னமும் கைது ஆகாத நிலையில், மற்றவர்களை எப்படி ஜாமினில் விட முடியும்? பொட்டு சுரேஷ் கொலை சம்பந்தமாக முக்கியமான தகவல்களை போலீஸுக்கு கொடுத்த அட்டாக் பாண்டியின் உறவினர் திருச்செல்வம், யார் யாரால் தனது உயிருக்கு ஆபத்து என்று போலீஸில் சொல்லி இருக்கிறாரோ... அவர்கள் ஜாமினில் வெளியில் வந்தால், விசாரணை எப்படி முழுமை அடையும்? யார் தைரியமாக சாட்சி சொல்ல வருவார்கள்? குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு முன், இவர்கள் வெளியில் வந்தால், யாருடைய சாட்சியை வைத்து வழக்கை உறுதிப்படுத்துவார்கள்?’ என்றெல்லாம் விஷயம் அறிந்தவர்கள் கேட்கிறார்கள். கோர்ட்டில் நடந்த விவாதம் 

 

முதல் ஜாமின் கிடைத்திருப்பது வரை சம்பந்தப்பட்ட அனைவர் குறித்தும் ரகசிய விசாரணை நடத்த மேலிடம் உத்தரவிட்டுள்ளதாம்!''

 

''கடந்த 9-ம் தேதி பிறப்பிக்கப்பட்ட ஜாமின் உத்தரவு சேலம் சிறைக்குக் கிடைப்பதற்குள், தெலுங்கு வருடப் பிறப்பு அரசு விடுமுறை வந்துவிட்டது. ஏழு பேரில் பலருக்கு சொந்த வீடு இல்லை. சொந்த வீடு உள்ள வேறு சிலரை ஜாமின்தாரர்களாகப் போடுவதிலும் தாமதம் ஏற்பட்டது. இதுபோன்ற காரணங்களால் இதுவரை அவர்கள் சிறையில் இருந்து விடுதலையாகவில்லை. அனேகமாக சனிக்கிழமை அல்லது திங்கட்கிழமைதான் அவர்கள் வெளியில் வர வாய்ப்பு உள்ளது. மேலிடத்தில் இருந்து கண்டிப்பான உத்தரவு வந்ததால், மதுரை போலீஸும் சட்டப் பிரமுகர்களும் உஷாரானார்கள். அவர்களின் ஜாமினைத் தடுப்பதற்கான முயற்சியில் போலீஸார் இறங்கினர். இதனால், அரசு விடுமுறை தினமான வியாழக்கிழமைகூட உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் அரசு வழக்கறிஞரைச் சந்தித்து போலீஸார் அவரச ஆலோசனை நடத்தினர். எனவே அந்த ஜாமினை எதிர்த்து மதுரை கிளையில் அப்பீல் செய்துவிடுவார்கள் போலீஸார். இதில் யார் யார் மெத்தனமாக இருந்தனர், அதற்கு உண்மையான காரணம் என்ன என்ற விசாரணை சூடுபிடிக்கும்போது பலரது தலை உருளலாம்!''

''இது பொட்டு சுரேஷின் குடும்பத்தினரிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. அவர்கள் முதல்வரைச் சந்தித்து முறையிடப்போவதாகவும் சொல்லப்படுகிறது. 'இதுநாள்வரை அழகிரிக்கு எதிராக ஒரு வார்த்தைகூட பேசாத அவர்கள், அப்படி ஏதாவது சொல்லிவிடுவார்களோ’ என்ற பயத்தில் தி.மு.க-வினரும் இருக்கிறார்கள்!''http://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=13990:madurai-one&catid=135:headnews&Itemid=101

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.