Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தளபதின்னா யாரு? விஜய் கூடத்தான் தளபதின்னு பேர் போட்டுக்கிறாரு. அழகிரி.

Featured Replies

 

alaku.jpg''மதுரை தி.மு.க-வுக்குள் நடக்கும் சம்பவங்கள் அனைத்தும் மர்ம நாவல் படிப்பதைப் போல விறுவிறுப்பாக இருக்கிறது. கடந்த 6-ம் தேதி கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட தலைமைச் செயற்குழு உறுப்பினரான வழக்கறிஞர் கோ.சந்திரசேகரன், பொதுக் குழு உறுப்பினர் எம்.ஏ.பழனிச்சாமி, கொட்டாம்பட்டி சந்தானம், ஆடுதுரை, எஸ்.சுரேந்தர், வரிச்சியூரைச் சேர்ந்த எஸ்.முருகன் ஆகியோர் மீதான நடவடிக்கை, கடந்த 10-ம் தேதி ரத்து செய்யப்பட்டுள்ளது. 'இவர்கள் அனைவரும் தங்கள் செயலுக்கு வருத்தம் தெரிவித்து மீண்டும் கழகப் பணியாற்ற அனுமதிக்குமாறு தலைவர் கலைஞர் அவர்களிடம் வைத்த கோரிக்கையை ஏற்று அவர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்துசெய்யப்பட்டு இன்று முதல் தொடர்ந்து கழகப் பணியாற்ற அனுமதிக்கப்பட்டுள்ளனர்’ என்று, அன்பழகன் அறிவித்துள்ளார். கழகக் கட்டுப்பாட்டை மீறியதாக நான்கு நாட்களுக்கு முன் நீக்கப்பட்டவர்கள், அதற்குள் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த ஒழுங்கு நடவடிக்கை ரத்து அறிவிப்பைப் பார்த்து அனலாகக் கொதிக்கிறார் அழகிரி!''

''இவர்கள் அனைவரும் மதுரை புறநகர் மாவட்டத்தில், புறநகர் மாவட்டச் செயலாளர் மூர்த்திக்குத் தகவல் சொல்லாமல், ஸ்டாலின் பிறந்த நாள் விழா கொண்டாடியவர்கள். 'மாவட்டச் செயலாளர் அனுமதி இல்லாமல் இவர்கள் எப்படிக் கூட்டம் நடத்தலாம்? அது தவறு அல்லவா?’ என்று அழகிரி ஆதரவாளர்கள் தலைமைக்குத் தகவல் சொன்னார்கள். 'தப்பாச்சே!’ என்று இவர்கள் மீது 6-ம் தேதி நடவடிக்கை எடுக்கப்பட்டு, கட்சியைவிட்டு நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இது, ஸ்டாலினுக்கு கொந்தளிப்பை ஏற்படுத்தியது. 'என்னுடைய பிறந்தநாளைக் கொண்டாடியவர்களை, என்னுடைய ஆதரவாளர்களை எப்படி நீக்கலாம்?’ என்று கொந்தளித்தவர், கருணாநிதியிடமும் அன்பழகனிடம் தனது கசப்பைக் காட்டினார். அதற்கென்ன, இன்னொரு பெட்டிச் செய்தியை முரசொலியில் போட்டு அவர்கள் அனைவரையும் கட்சிக்குள் சேர்த்துக்கொண்டனர். 'அவங்க ஆளுங்கன்னா உடனே சேர்த்துக்குவாங்களா? என்ன லட்சணத்துல கட்சி நடத்துறாங்க?’ என்று கமென்ட் அடித்தாராம் அழகிரி. இன்னொரு தி.மு.க. பிரமுகர் சொன்னது மகா ஜோக்!''

''அமைதிப்படை படத்தில் சத்யராஜ் சொல்வாராம். 'கட்சி நடத்துறதுக்கு ரெண்டு வார்த்தை போதும். ஒண்ணு... உஷ்ஷ§, இன்னொண்ணு... பிஸ்ஸு. வேண்டியவனா இருந்தா, உஷ்ஷ§னு சொல்லி உள்ளே வெச்சுக்கோ. வேண்டாதவன்னா, பிஸ்ஸுனு சொல்லி வெளியே தள்ளிக்கோ’ என்பாராம். 'அந்த மாதிரி ஆயிருப்பா கட்சி’ என்றாராம் முன்னாள் அமைச்சர் ஒருவர். இத்தகைய நடவடிக்கை ஒன்றில் அழகிரி ஆட்கள் சிக்கியிருக்கிறார்கள். ஆனால், அவர்கள் மீது யாரும் கரிசனம் காட்டாதது அந்த வட்டாரத்தைக் கொந்தளிக்கவைத்தது. சில நாட்களுக்கு முன் கோரிப்பாளையம் பகுதியில் ஸ்டாலின் பிறந்தநாள் கூட்டம் நடந்தது. அதில் கலந்துகொள்ளாத அழகிரி ஆதரவாளர்கள் 15 பேருக்கு, தி.மு.க. தலைமை நோட்டீஸ் அனுப்பியது. 'இவர்களையும் சஸ்பெண்ட் செய்ய வேண்டும்’ என்று ஸ்டாலின் கோரிக்கை வைத்தாராம். ஆனால் அதை கருணாநிதி ஏற்கவில்லை. 'அடுத்த தலைவர் ஸ்டாலின்னு நான் சொல்லியாச்சு. அதுக்காக அவர் சொல்றதுக்கு எல்லாம் என்னால தலையாட்ட முடியாது’ என்று கருணாநிதி கடுப்படித்தாராம். அதனால் இரண்டு நாட்கள் கருணாநிதியைச் சந்திப்பதை ஸ்டாலின் தவிர்த்ததாகவும் பேச்சு.''

''கனிமொழி மதுரைக்கு வந்த அன்று அழகிரியோடுதான் காரில் பயணம் செய்தார். அப்போது ஒரு நிருபர், 'உங்களை அஞ்சாநெஞ்சன்னு சொல்றாங்களே?’ என்று கேட்டார். 'அஞ்சாநெஞ்சன்னு போட்டா என்ன தப்பு? விஜய் கூட தன்னை தளபதின்னு போட்டுக்கிறார். இங்கயும்தான் தளபதின்னு போட்டுக்கிறாங்களே?’ என்று சொல்லிக்கொண்டே கார் கண்ணாடியை ஏற்றினார் அழகிரி. இது, ஸ்டாலின் வட்டாரத்தை கோபம்அடைய வைத்துள்ளது.''

''ராமநாதபுரத்தில் 13-ம் தேதி நடக்கும் இளைஞர் அணிப் பயிற்சிக் கூட்டத்தைத் தொடங்கிவைக்க ஸ்டாலின் வருகிறார். மதுரை விமான நிலையத்தில் அவருக்குப் பலத்த வரவேற்பு கொடுக்க வேண்டும் என்று ஸ்டாலின் ஆட்கள் திட்டமிட்டுள்ளனர். கனிமொழிக்குக் கொடுத்த வரவேற்பை மிஞ்சும் வகையில் இருக்கும். இதில் அழகிரி ஆட்கள் கலந்துகொள்வார்களா? இதில் கலந்துகொள்ளாதவர்களுக்கு வழக்கம்போல் நோட்டீஸ் போகுமா என்பதைப் பொறுத்து விவகாரங்கள் விபரீதங்கள் ஆகலாம். இத்தனை நாட்களாகத் தன்னை அழகிரி ஆளாகக் காட்டிக்கொண்டிருந்த எம்.பி-யான ரித்தீஷ், ஸ்டாலினின் ராமநாதபுரம் வருகைக்காக மாவட்டம் முழுக்க சுவர் விளம்பரம் செய்திருக்கிறார். இதன்மூலம், அவரும் நைஸாகக் கழன்றுகொண்டாரோ என்று பேசுகிறார்கள்'

http://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=13991:madurai-alagakiri-dmk&catid=12:politics&Itemid=105

 

-Junior Vikatan-

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.