Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழக மீனவர்கள் மீதான வன்முறை தொடர்கதையா? – இரா.தமிழ்க்கனல்

Featured Replies

நாம் விரும்பாவிட்டாலும் தனிமனித வாழ்க்கையில் சில விசயங்கள் எப்படியோ நடந்துவிடுகின்றன. அரசியல், பொது விவகாரங்களிலும்கூட பல நேரங்களில் இது போல நேர்வது உண்டு. இந்திய தமிழ் மீனவர்களை கடல்நடுவில் வைத்து தாக்குவது, சுட்டுக்கொல்வது என இலங்கை அரச கடற்படையினர் நடத்தும் வன்செயல்கள் அண்மைக்காலமாக மீண்டும் அளவுகடந்து வருகிறது.

குறிப்பாக, ஐநா மனித உரிமை ஆணையத்தில் இலங்கை அரசுக்கு எதிராக இந்திய அரசு தீர்மானம் கொண்டுவர வலியுறுத்தி, தமிழகத்தில் ஒரே நேரத்தில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதன் பிறகு, ஒன்றன்பின் ஒன்றாக தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதல்களும் கைதுகளும் அரங்கேறிவருகின்றன.

 
கடந்த மார்ச் 3ம் தேதியன்று தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் 16 பேர் கைதுசெய்யப்பட்டனர்.  6ம் தேதியன்று நாகை மற்றும் காரைக்கால் மீனவர்கள் 14 பேர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில், காரைக்காலைச் சேர்ந்த செண்பகம் படுகாயம் அடைந்தார். மார்ச் 13ம் தேதியன்று, ராமேசுவரம் பகுதி மீனவர்கள் 53 பேர் இலங்கை கடற்படையால் கைதுசெய்யப்பட்டு மன்னாரில் சிறைவைக்கப்பட்டனர். 19ம் தேதியன்று 3 படகுகளில் சென்ற புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 8 பேர் இரும்புத்தடிகளால் கடுமையாகத் தாக்கப்பட்டனர்.  அடுத்த நாளன்று, நாகை மாவட்டம் நம்பியார் நகர் மீனவர்களை கொடுவாள்களால் இலங்கை கடற்படையினர் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில், 4 மீனவர்களுக்கு கைகளில் கடுமையான வெட்டுக் காயங்கள் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த மாதம் 6ம் தேதியன்று 30 ராமேசுவரம் மீனவர்கள் இலங்கைப் படையால் கைதுசெய்யப்பட்டு, ஏப்.18வரை சிறைவைக்கப்பட்டுள்ளனர்.
 
 
கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் தமிழக மீனவர்கள் பிரச்னை தொடர்பாக, இந்தியப் பிரதமர் மன்மோகனுக்கு முதலமைச்சர்  ஜெயலலிதா 5 முறை கடிதம் அனுப்பியுள்ளார். அதற்கு பலன் கிடைத்தது என சொல்லிக்கொள்ளலாம் என்றால், தூத்துக்குடி மீனவர்களை மட்டும் 10 நாள் வைத்திருந்துவிட்டு வழக்கு பதியாமல் திருப்பி அனுப்பினார்கள். மற்றபடி, தமிழ்நாட்டின் காப்பாற்றக் கோரும் கோரிக்கைகளை வழக்கம்போல டெல்லி கிடப்பில் போட்டதுதான் மிச்சம். இதற்கும். ஏப். 7ம் தேதியிட்ட கடிதத்தில், ஜெயலலிதா சற்று கடுமையாகவே, தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்களை இந்தியாவின் மீதான வலிந்த தாக்குதலாக எடுத்துக்கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டு இருந்தார்! ஆனாலும் என்ன?!
 
 
இலங்கைக்கு எதிரான தமிழ்நாட்டு மாணவர்களின் போராட்டம், வெகு காலத்துக்குப் பிறகு, தமிழகத்தின் ஒரு பொது நிகழ்வாக மாறியதும், இத்தாக்குதல்களுக்கு ஒரு காரணமாகவேணும் இருக்கக்கூடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இன்னொன்று, தமிழகத்துக்கு வந்த சிங்கள பக்தர்கள், சிங்கள எம்.பி., பவுத்த பிக்குகள் மீதான தாக்குதல், தாக்குதல் முயற்சிகளும் காரணம் என்றும் சொல்லப்படுகிறது. இந்தத் தாக்குதலை தமிழீழத்தில் உள்ள தமிழர்கள் ஏற்கிறார்களா, தமிழகத் தமிழர்களின் பெரும் ஆதரவு இதற்கு இருக்கிறதா? என்பன போன்ற கேள்விகள் தொக்கி நிற்பது ஒருபுறம்…ஆனால், மனித உரிமை ஆணையத்தில் இலங்கை அரசுக்கு எதிராக அமைந்துவிட்ட மார்ச் மாதத்தைப் போலவே, ஏப்ரலிலும் நிலைமை மாறிவிடவில்லை. தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலும் கைதுகளும் தொடருகின்றன. பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள இந்தப் பிரச்னையில், முக்கியமில்லாத ஒருவர் என்றாலும் முக்கியமாக கவனிக்கப்படுபவர் ஒருவர், போகிறபோக்கில் ஒரு விசயத்தை தூவிவிட்டுச் சென்றுள்ளார். இதை, ஈழத் தமிழர்கள், தமிழக மீனவர்கள் மீது அக்கறையுள்ள யாரும் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது.
 
 
90களில் தனித்தமிழ் அறிஞர் பெருஞ்சித்திரனார் ஒரு பாடலில், ’’ தமிழகத்தில் எது செய்தாலும் புலிகளே செய்தார் எனும் பேரெத்தன் வாழ்ப்பாடி எனும் ஊர் பேர் கெடுக்க வந்த ராமமூர்த்தி’’ என முன்னாள் மத்திய அமைச்சரைப் பற்றிக் குறிப்பிடுவார். அதைப்போல, கூடங்குளம் விவகாரத்தில் கோமாளித்தனமாக இருந்தாலும் மக்களுக்கு எதிராக கூசாமல் பேசக்கூடியவர், என கடுமையாக விமர்சிக்கப்படுபவர், இந்தியப் பிரதமர் அலுவலக விவகார அமைச்சர் நாராயணசாமி. கடந்த 10ம் தேதியன்று சென்னை விமானநிலையத்தில் பேட்டியளித்த அவர், ’இலங்கைத் தமிழ் மீனவர்கள் புகார் அளிப்பதால்தான், இலங்கை கடற்படை தமிழக, புதுவை மீனவர்களை சுடுகிறது’ என்று கூறினார். இதற்கு, திமுகவின் புதுச்சேரி மாநிலப் பிரிவின் சார்பில் மட்டும் உடனடியாக கண்டனம் தெரிவிக்கப்பட்டது. தமிழகத்தில் மனிதநேய மக்கள் கட்சி உள்பட சில தரப்புகள் மட்டுமே, தமிழக-தமிழீழ தமிழர்களிடையே பிரிவினையை உண்டாக்குவதாக எதிர்ப்பு தெரிவித்தன. தமிழீழத்துக்காக புதிதாகத் தீவிரக் குரல் கொடுக்கும் திமுக, அதிமுக போன்ற முக்கிய கட்சிகள் மட்டுமல்ல, தொடர் ஈழ ஆதரவு அமைப்புகளின் தலைமைகளும் இதில் கனத்த அமைதி காக்கின்றன. இந்த அமைதி இனியும் தொடருவது சரிதானா? என்பது பெரும் பொருள்பொதிந்த கேள்வியாக எழுந்து நிற்கிறது!
 
 
ஏனென்றால், இதுவரைக்கும் இலங்கை அரசுத் தரப்பினரால் மட்டுமே சொல்லப்பட்டு வந்த ‘நியாயப்படுத்தும் காரணத்தை’ இந்திய அரசும் சொல்லத் தொடங்கி இருக்கிறது. தமிழர்களுக்கு நாராயணசாமி எப்படிப்பட்டவர் என்றாலும் உலகத்தைப் பொறுத்தவரை அவர் இந்திய அரசின் பிரதமர் அலுவலக விவகார அமைச்சர் என்பதை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது.
 
 
தமிழக மீனவர்கள் மட்டும் அல்ல, எல்லைதாண்டி மீன்பிடிக்கும் எந்த அப்பாவியையும் தாக்குவது, அதுவும் ஜனநாயக நாட்டின் அரசுப் படை தாக்குவதை, முற்றாக ஏற்றுக்கொள்ள முடியாது. அத்தகையை தாக்குதலுக்குக் காரணமானவர்கள் மீது பன்னாட்டு சட்டப்படி நீதியான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். இந்தக் கோரிக்கையில் வலுவாக நிற்கும், தமிழக ஈழ ஆதரவுக் கட்சிகள், அமைப்புகள், தமிழக மீனவர்கள் உண்மையிலேயே எல்லை தாண்டுகிறார்களா என்பதைப் பற்றி பகிரங்கமாகப் பேசுவதில்லை. இதே சமயத்தில், முப்பது ஆண்டு காலம் போரால் பாதிக்கப்பட்ட தமிழீழ கரையோர மக்களின் ஒரு தலைமுறையே, தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து, இப்போதுதான் ஏதோ கொஞ்சம் கடலுக்குள் போகத் தொடங்கியிருக்கிறது. அவர்களில் பெரும்பாலானவர்கள் ஏறத்தாழ ஒரு தலைமுறைக்கு முந்தைய மீன்பிடியையே செய்கையில், தமிழக, கேரள மீனவர்களோ நவீனப் படகுகளுடன் சர்வசாதாரணமாக ஈழத்தின் கடல்பிரதேசத்தில் ஊடுருவி வந்துவிடுகிறார்கள்.
 
 
அரசியல் அமைப்புகள் இதில் (கள்ள) அமைதி காத்தாலும், நேர்மையான தமிழக மீனவர்கள் தரப்பு, ஈழத்துக் கரைவரைக்கும் போவதை மறுக்கவில்லை. ‘எங்களுக்கு அங்கேதான் பாடு கிடைக்குது, நாங்க வேற என்ன செய்ய?’ எனக் கேட்கிறார்கள், அப்பாவித்தனமாக.
 
 
தமிழீழ மீனவர்களும் தமிழக மீனவர்கள் ஈழப்பகுதியில் மீன்பிடிப்பதை முற்றிலும் எதிர்க்கவில்லை. இழுவைப் படகுகள் மூலம் தமிழக மீனவர்கள் தரையோடு தரையாக அள்ளுவதைப் போல, அந்தப் பகுதியில் உள்ள மீன்வளம் மொத்தத்தையும் அழிப்பதுதான் பிரச்னை என்கிறார்கள். கடற்புலிகளின் கட்டுப்பாட்டில் வட இலங்கை கடற்பகுதி இருந்தவரையில், இந்த பிரச்னை பெரிதாக எழவில்லை. இன்று நிலைமை முற்றிலும் மாறியுள்ள நிலையில், தமிழீழ மீனவர்களுக்கு வாழ்வாதாரப் பிரச்னையைக் கையில் எடுத்துள்ளது, இலங்கை அரசுத் தரப்பு.
 
 
தனியான இந்தப் பிரச்னையைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டு, எந்த தமிழக அரசியல் அமைப்பும் இனி மீனவர் தாக்கப்படுவதை மட்டும் கண்டிப்பது பொருளற்றதாக ஒன்றாகவே இருக்கும்.  அதேபோல, தமிழ்நாட்டின் தார்மீக ஆதரவைப் பெறவேண்டும் என நினைக்கும் நேர்மையான தமிழீழ அரசியல் அமைப்புகளும் தமிழக அமைப்புகளுடன் பகிரங்கமாக இந்தப் பிரச்னையைப் பற்றி கருத்துப் பரிமாறுவது காலத்தின் கட்டாயம். இதில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போன்ற அமைப்புகளுக்கு கூடுதல் பொறுப்புடைமை இருக்கிறது.
 
 
 
பிரச்னையை சரிசெய்ய முன்வராமல், தமிழகத்தின் ஆதரவை இழந்துவிடுவோம் என ஈழத்து தலைவர்கள் நினைப்பார்களேயானால், விரைவில் அப்படியொரு அவல யதார்த்தத்தைக் காண்பார்கள்! அடுத்தடுத்த தலைமுறைகளும் அவர்களை மன்னிக்காது!
 
தமிழ்லீடருக்காக இரா.தமிழ்க்கனல்

 

http://tamilleader.com/?p=10430

Edited by கலையழகன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.