Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சென்னை அருகே ரூ.1000 கோடியில் புதிய குடி நீர் திட்டம்: ஜெயலலிதா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை: சென்னை மாநகரின் குடிநீர் தேவையை நிறைவு செய்யும் வகையில், நெம்மேலியில் 1000 கோடி ரூபாய் மதிப்பில் கூடுதலாக நாளொன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் ஒன்று அமைக்கப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

தமிழக சட்டசபையில் இன்று பேரவை விதி 110-ன் கீழ் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்து பேசிய முதலமைச்சர் ஜெயலலிதா,"பெருகி வரும் மக்கள் தொகைக்கேற்ப சென்னை மாநகரின் குடிநீர் தேவையை நிறைவு செய்யும் வகையில், நெம்மேலியில் தற்போது நிறுவப்பட்டுள்ள கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்திற்கு அருகில் காலியாக உள்ள 10.50 ஏக்கர் நிலத்தில் 1000 கோடி ரூபாய் மதிப்பில் கூடுதலாக நாளொன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் ஒன்று அமைக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தத் திட்டம் நிறைவேற்றப்படுவதன் மூலம், விரிவாக்கப்பட்ட சென்னை மாநகரின் தென்பகுதியில் அமைந்துள்ள ஆலந்தூர், பெருங்குடி, கொட்டிவாக்கம், புழுதிவாக்கம், பள்ளிக்கரணை, மடிப்பாக்கம், சோழிங்கநல்லூர், காரப்பாக்கம், நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம், செம்மஞ்சேரி, உத்தண்டி மற்றும் ஒக்கியம்- துரைப்பாக்கம் ஆகிய பகுதிகளில் குடியிருக்கும் சுமார் 6.46 லட்சம் மக்கள் பயனடைவர்.

 

 

மேலும், சென்னைக்கு அருகில் உள்ள பட்டிபுலம் பகுதியில் எதிர்காலத்தில் 400 மில்லியன் லிட்டர் வரை விரிவாக்கம் செய்யக் கூடிய வகையில், 200 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல்நீரை நன்னீராக்கும் நிலையம் ஒன்றினை 4 ஆண்டுகளுக்குள் அமைத்திட எனது தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன்

தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளின் உள்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பொருட்டு தொடங்கப்பட்ட சென்னை பெருநகர வளர்ச்சி திட்டத்தின் மூலம் 192 கோடியே 2 லட்சம் ரூபாய் 2012-2013 ஆம் ஆண்டு ஒதுக்கீடு செய்யப்பட்டு 9 பகுதிகளில் குடிநீர் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தத் திட்டத்தின் கீழ் நடப்பு ஆண்டில் 303 கோடியே 78 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், இடையான் சாவடி, சடையான் குப்பம், கடப்பாக்கம், மணலி, சூரப்பட்டு, கதிர்வேடு, புத்தகரம், புழல், பள்ளிக்கரணை, கொட்டிவாக்கம், சின்ன சேக்காடு, முகலிவாக்கம், பெருங்குடி மற்றும் பாலவாக்கம் ஆகிய 14 பகுதிகளில் வசிக்கும் மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் வண்ணம், குடிநீர்த்

திட்டங்கள் செயல்படுத்தப்படும். இதன் மூலம் 3.47 லட்சம் மக்கள் தங்கள் வீடுகளிலேயே குழாய் மூலம் குடிநீர் பெற்று பயனடைவர்.

சென்னை பெருநகர வளர்ச்சித் திட்டத்தின் கீழ், சென்னை நகருடன் இணைக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளான சூரப்பட்டு, கதிர்வேடு, நொளம்பூர் மற்றும் முகலிவாக்கம் ஆகிய 4 பகுதிகளில் 121 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கழிவு நீரகற்றும் கட்டமைப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படும். இதன் மூலம் இப் பகுதிகளில் வசிக்கும் 80,000 மக்கள் பயன் அடைவர்.

சென்னை நகர மையப் பகுதிகளில் உள்ளது போன்ற நவீன மின் விளக்குகள் ஒரே சீராக மாநகராட்சியின் விரிவாக்கப்பட்ட பகுதிகளிலும் பொருத்தப்பட வேண்டும் என்ற நோக்கத்துடனும், மின்சாரத்தை சேமிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடனும் 1,10,000 எண்ணிக்கையில் மின்சாரத்தை சேமிக்கும் வகையிலான தெரு விளக்குகள் 300

கோடி ரூபாய் மதிப்பீட்டில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் பொருத்தப்படும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை மாநகருக்கு நிகராக புதிதாக இணைக்கப்பட்டுள்ள விரிவாக்கப் பகுதிகளிலும் மழைநீர் வடிகால்வாய்கள், தெரு விளக்குகள், நடை பாதைகள், தெரு கலன்கள் மற்றும் சேவைத் துறையினருக்கான அமைப்புகள் அதாவது னுரஉவள ஆகியவற்றைக் கொண்ட ஒருங்கிணைந்த சாலைகளை அமைக்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில், சென்னைப் பெருநகர் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 2011–12 ஆம் நிதி ஆண்டில் 175.36 கிலோ மீட்டர் நீளமுள்ள 360 எண்ணிக்கையிலான சாலைகளில் 333 கோடியே 27 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 2012–13 ஆம் நிதி ஆண்டில் 122 கிலோ மீட்டர் நீளமுள்ள 513 எண்ணிக்கையிலான உட்புறச் சாலைகளில் 253 கோடியே 76 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக 2013-14 ஆம் ஆண்டில் சென்னை பெருநகர வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சியின் விரிவாக்கப் பகுதிகளில் 225 கிலோ மீட்டர் நீளமுள்ள 900 சாலைகளில் ஒருங்கிணைந்த சாலைகள் 290 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும் எனத் தெரிவித்துக் கொள்கிறேன்.எனது தலைமையிலான அரசின் மேற்காணும் நடவடிக்கைகள் மூலம் சென்னை விரைவில் எழில்மிகு சென்னையாக உருவெடுக்கும் என்பதைத் தெரிவித்துக் கொண்டு அமைகிறேன்" என்றார்.

 

 

http://news.vikatan.com/article.php?module=news&aid=13862

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.