Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கோவையில் மீண்டும் திரும்பும் 1998 குண்டுவெடிப்பு. உளவுத்துறையின் எச்சரிக்கையால் பதட்டம்.

Featured Replies

பிரிவு: அரசியல்

B_Id_377244_bangalore-blast.jpgகோவையில் திரும்புகிறது 1998’.  கடந்த வாரத்தில் உளவுத் துறை அளித்த ஒற்றை வரி அலெர்ட் இது.

கோவை மாநகரில் 1998-ல் நிகழ்ந்த மதக்கலவரத்தையும் தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தையும் அவ்வளவு எளிதாக யாரும் மறந்துவிட முடியாது. அந்த வடுக்கள் இன்னும் மறையாத நிலையில், உளவுத் துறையின் இந்த எச்சரிக்கை மக்களை அதிரவைத்துள்ளது.  

எச்சரிக்கை செய்யும் அளவுக்கு அப்படி என்னதான் நடந்தது?

கோவை போத்தனூரில் ஒரு திருமண நிகழ்ச்சி. அதற்கு முந்தைய நாள் இரவு மண்டபத்தில் சிலர் சீட்டு விளையாடியபோது பிரச்னை வெடித்தது. முஸ்லிம்கள் சிலரும் அதில் இருந்ததுதான் விவகாரமானது. மறுநாள் 7-ம் தேதி காலை திருமண மண்டபத்துக்குள் நுழைந்த சிலர், அங்கு இருந்தவர்களை சரமாரியாகத் தாக்கி, மண்டபத்தில் இருந்த பொருட்களையும் சேதப்படுத்திவிட்டுச் சென்றனர். இதுதொடர்பாக, 13 முஸ்லிம்கள் கைதுசெய்யப்பட்டனர்.

அடுத்தநாள், குனியமுத்தூரில் ஆதி வீரமாகாளியம்மன் கோயில் சிலை மர்ம நபர்களால் உடைக்கப்பட்டது. சிலை உடைக்கப்பட்டதைக் கண்டித்து,  இந்து அமைப்புகளைச் சேர்ந்த 250-க்கு மேற்பட்டோர் பாலக்காடு ரோட்டில் சாலை மறியல் நடத்தினர். சிலையை உடைத்தவர்களைக் கைதுசெய்யக் கோரி குனியமுத்தூர், கோவைப்புதூர், சுந்தராபுரம், மாச்சம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள், 12-ம் தேதி கடையடைப்புப் போராட்டம் நடத்தினர். அதேநாளில், மனிதநேய மக்கள் கட்சியினர் இருவர் மர்ம நபர்களால் தாக்கப்பட்டனர்.

இந்த சம்பவத்துக்கு மறுநாள், இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட, உச்சகட்ட பரபரப்பை அடைந்தது கோவை மாநகரம். ''13-ம் தேதி வீட்டில் மனைவி, குழந்தைகளுடன் படுத்திருந்தேன். அதிகாலை 4 மணிக்கு மர்ம நபர்கள் சிலர், வீட்டின் படுக்கை அறை நோக்கி பெட்ரோல் குண்டு வீசினர். வீட்டுக்குள் விழுவதற்கு முன்னரே அது வெடித்துச் சிதறியதால், பெரும் பாதிப்பில் இருந்து தப்பினோம். என்னைக் கொலை செய்ய பலமுறை முயற்சிகள் நடந்துள்ளன. இதற்கெல்லாம் நாங்கள் பயப்பட மாட்டோம்'' என்கிறார் அர்ஜுன் சம்பத். அவர் போலீஸில் புகார் கொடுக்க விசாரணை தீவிரமானது.

இது தொடர்பாக அவ்வப்போது எச்சரித்துவந்த உளவுத் துறை, பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தை அடுத்து அழுத்தமாகவே எச்சரித்தது. ''கடந்த 1997-ல் தியாகி குமரன் காய்கறி மார்க்கெட்டில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட பண வசூல் மோதலும் அதைத்தொடர்ந்து நடந்த காவலர் செல்வராஜ் கொலையும்தான் கலவரங்களுக்குக் காரணமாக அமைந்தது. 1998, பிப்ரவரி 14-ம் தேதி நடந்த தொடர் குண்டுவெடிப்பில் 58 பேர் பலியாகினர். இப்போது நிகழ்ந்துவரும் நிகழ்வுகள், அப்போதைய ஆபத்தான சங்கிலி தொடர் நிகழ்வுகளைப் போலவே இருக்கின்றன'' என அச்சப்படுகின்றனர் உளவுத் துறை அதிகாரிகள்.

மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவர் அகமது கபீர் மற்றும் மாவட்டச் செயலாளர் சாதிக் அலி ஆகியோரிடம் பேசினோம். ''இந்தப் பிரச்னையை திருமண மண்டபக் கலவரத்தில் தொடங்கியதுபோல் சித்திரிக்கின்றனர். ஆனால், உண்மையில் இது கடந்த ஆறு மாதங்களாகத் திட்டமிட்டு நடத்தப்பட்ட விஷயமாகவே இருக்கிறது. இந்து மக்கள் கட்சி சார்பில், 'வருமுன் காப்போம். இந்துக்களே உஷார்’ எனும் புத்தகம் வெளியிடப்பட்டது. இந்தப் புத்தகமே கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டதுதான். பொதுக்கூட்டங்களில் மதக்கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் பேசுகின்றனர். சிலை உடைப்பு, பெட்ரோல் குண்டு வீச்சு எதிலும் முஸ்லிம்களுக்கு தொடர்பு இல்லை.

1999-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலை கருத்தில்கொண்டே, கோவையில் திட்டமிட்டு கலவரம் ஏற்படுத்தப்பட்டது. இப்போதும் 2014-ம் ஆண்டு நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலைக் கருத்தில்கொண்டு மீண்டும் இதுபோன்ற சூழலை ஏற்படுத்துகின்றனர்'' என்றார்.

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனிடம் பேசினோம். ''கோவையில் கடந்த ஒரு வாரமாகப் பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்தச் சம்பவங்களுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அர்ஜுன் சம்பத் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது பற்றி விசாரணை நடக்கிறது. கோவையில் அமைதி திரும்ப ஒத்துழைக்கும்படி இரு தரப்பினரையும் கேட்டுக்கொண்டுள்ளோம். மத மோதல்களை உருவாக்கும் நோக்கில் செயல்படுவோர் மீது நடவடிக்கையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது'' என்றார்.

காவல் துறை எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=14092:kovai-1998&catid=12:politics&Itemid=105

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.