Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கதறும் மதுரை மாவட்ட கிராம மக்கள்!!!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"சுமங்கலி திட்டம்'னு சொல்லிட்டு, எங்க கிராமத்து வயசுப் பொண்ணுகளை புரோக்கர்கள், வெளி மாவட்டங்களில் உள்ள பஞ்சு மில்லுக்கு வேலைக்குக் கூட்டிட்டுப் போறாங்க. ஏழ்மையின் காரணமாகப் பெற்றோரும் பொண்ணுகளை வெளியூருக்கு அனுப்புறாங்க. மூணு வருசம் அங்க அடைப்பட்டுக் கிடக்கிற பிள்ளைங்க, கடைசியில் சீக்காகித்தான் திரும்புதுக. இந்த மோசடியான திட்டம் பற்றி, உங்க பத்திரிகையில வெளியிட்டு, அதைத் தடுத்து நிறுத்துங்க..." எனப் பதற்றத்துடன் சொன்னார்கள், நம்மைத் தொடர்பு கொண்ட நபர்கள். அவர்கள் தந்த தகவல்களை உள்வாங்கிக் கொண்டு களமிறங்கி விசாரித்தபோது, நமக்கு பகீர் என்றிருந்தது. காரணம், அத்தனையும் அக்மார்க் நிஜம்.

இப்படி வேலைக்கு அனுப்பப்பட்ட ஆறு சிறுமிகளைச் சமீபத்தில் மீட்டு வந்திருக்கிறது 'லிட்டில்ஸ்' என்னும் அமைப்பு. இதன் இயக்குனர் பர்வதவர்த்தினியைச் சந்தித்தோம். கல்லூரி ஆசிரியையாகப் பணியாற்றியவர். இப்போது இதுபோன்ற சமூக சேவையில் ஈடுபட்டிருக்கிறார். அவர் நம்மிடம்...

"மதுரை மாவட்டத்தின் கிராமப்புறங்களிலுள்ள ஏழைச் சிறுமிகளை மில் வேலைக்குக் கூட்டிட்டுப் போகும் அபாயகரமான போக்கு, சமீபகாலமாக அதிகரிச்சிருக்குது. 'உங்க பொண்ணு மூன்றாண்டுகள் பஞ்சு மில்லில் வேலை பார்த்தால், மூன்றாம் ஆண்டு முடிவில் உங்களுக்கு முப்பதாயிரம் கிடைக்கும். அதை வைச்சுத் திருமணம் செய்து கொடுக்கலாம்' என புரோக்கர்கள் சிலர் போடும் வாய்ப்பந்தலில், பெற்றோர்கள் மயங்கிவிடுகிறார்கள். இந்த மோசடிக்கு அவங்க வச்ச கவர்ச்சியான பெயர்கள்தான் 'மாங்கல்யத் திட்டம், சுமங்கலி திட்டம்' என்பதெல்லாம். ஒரு பெண்ணை மில்லில் கொண்டு போய்ச் சேர்த்தால், அவங்களுக்கு (புரோக்கருக்கு) ஐந்நூறு ரூபாய் கமிஷன் கிடைக்கிறதாம்.

கோயம்புத்தூர், உடுமலை, திருப்பூர், தாராபுரம், பழநி போன்ற பகுதிகளில் உள்ள பஞ்சுமில்களுக்குத்தான் இதுபோன்ற பொம்பளைப் பிள்ளைகளை புரோக்கர்கள் அனுப்புறாங்க. 'வெளியூருக்கு ஒரு பிள்ளை மட்டும் ஏன் தனியாப் போகணும்? ஒரு பெண்பிள்ளைக்கு இன்னொரு பெண்பிள்ளை துணையாக இருக்கட்டுமே'ன்னு ஒரே கிராமத்திலிருந்து பத்து இருபதுன்னு கொத்துக் கொத்தா வேலைக்கு அனுப்புறாங்க. ஆர்வமிகுதியால் 13, 14 வயசுப் பெண்களையும் சேர்த்து அனுப்புறாங்க. மில்லில் அதுங்க சின்னப்பிள்ளைகளாகத் தெரியக்கூடாது என்பதற்காக பாவாடை, தாவணி கட்டச் சொல்லிடறாங்க. இதனால் புரோக்கர்கள் கூட்டிட்டுப் போற பெண்கள், மூன்றாண்டுகள் பஞ்சு மில்லிலேயே தங்கணும். வெளியே போகமுடியாது. ஏறக்குறைய சிறை வாழ்க்கைதான்.

குறிப்பாக, தலித் கிராமங்களைக் குறிவைத்துத்தான் இந்த புரோக்கர்கள் செயல்படறாங்க. ஒரு முறை ஒரு கிராமத்திலிருந்து இப்படிச் சிறுமிகளைக் கூட்டிச்சென்றால், அடுத்து அந்தப் பகுதிக்கே அவர்கள் வருவதில்லை.

மில்லில் இவங்களுக்குக் கடினமான வேலை கொடுக்குறாங்க. ஒரு நாள் சம்பளமாக இருபத்தைந்து ரூபாய் தர்றாங்க. அதில் பதினைந்து ரூபாய் சாப்பாட்டிற்கும் தங்குவதற்கும் பிடிச்சுக்கிறாங்களாம். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை நான்கு ரூபாய் சம்பள உயர்வு கொடுக்கிறாங்க. ஒரு வருஷத்தில் ஐந்து நாட்கள் லீவு எடுத்துக்கிடலாம். பொங்கல், தீபாவளிக்குக் கொடுத்தாலும்கூட அவங்க வீட்டுக்கு வர முடியாது. மில்லில் தான் தங்கிக்கணும். ஏன்னா, தீபாவளி, பொங்கலுக்கு வீட்டுக்கு வந்தால் திரும்ப வரமாட்டாங்க என மில் நிர்வாகம் நினைக்கிறது.

மில்களில் அடிப்படை வசதியோ, தரமான சாப்பாடோ அவர்களுக்குக் கிடைப்பதில்லை என்பதோடு, பாலியல் ரீதியான தொந்தரவும் இருக்கிறது. இதுபோன்ற மில்லில் வேலை பார்த்த சிலர், ஏதோ காரணத்துக்காக தற்கொலை செய்துகொண்ட சம்பவங்களும் நடந்திருக்கிறது. இரண்டு வருஷத்துக்கு முன்னாடி அய்யங்கோட்டை பகுதியில் ஆறு பேர் அடுத்தடுத்து தற்கொலை செய்துக்கிட்டாங்க. கேட்டால், 'முனி அடிச்சிடுச்சு'ன்னு சொல்லி சமாளிச்சாங்க. இப்பவும் மில்லுக்கு வேலைக்குப் போயிட்டு வந்த பிள்ளைங்ககிட்ட, 'அங்க என்னதான் நடக்கிறது?'ன்னு கேட்டால், அழறாங்களே தவிர, எதுவும் சொல்றதில்லை.

மூன்றாண்டுகள் முழுசா வேலை செய்தால்தான், அவர்கள் பேசிய முப்பதாயிரம் ரூபாய் பணத்தைக் கொடுக்கிறார்கள். இதைக் கொடுக்காமல் இருப்பதற்காக, கடைசி மூன்று மாதங்கள் கடினமான வேலை கொடுத்து, இந்தப் பெண்களே வேலையை விட்டு வெளியேறுகிற மாதிரி செய்துவிடுகிறார்கள். எவ்வளவு குரூரம் பாருங்க?

எப்படியோ, மூன்று வருடங்களை முடிச்சுட்டு வர்ற பெண் பிள்ளைகள் பலரும், நோயால் அவதிப்படறாங்க. அதிக ரத்தப்போக்கு, கர்ப்பப்பை பிரச்னை, ஆஸ்துமா போன்ற நோய்களின் தாக்குதலுக்கு உள்ளாயிடறாங்க. தேனி பகுதியிலிருந்து மில் வேலைக்குப் போயிட்டு வந்த இதுபோன்ற பெண்களில், ஐம்பது பேருக்கு ஹெச்.ஐ.வி. பாசிட்டிவ் இருப்பதாகச் சொல்றாங்க. இது ரொம்பவே அதிர்ச்சியாக இருக்கிறது" எனச் சொல்லி நமக்கு ஷாக் கொடுத்தார் பர்வதவர்த்தினி.

மில்களில் வேலைக்கு அனுப்பும் சிறுமிகளை மீட்பது தொடர்பாக, கடந்த சில ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார் யூரேஸ் (கிராமப்புற சமூக கல்வி நிறுவனம்) அமைப்புத் தலைவர் மேரி ஜெர்மானஸ்லெட். அவரைச் சந்தித்தோம்.

"புரோக்கர்களோட குறியே வயதான பெற்றோர்கள் உள்ள குடும்பங்களும், வறுமையால் அவதிப்பட்டிருக்கும் குடும்பங்களும்தான். அந்தக் குடும்பங்களில் உள்ள வயசுக்கு வந்த பெண்களை, மில்லுக்குக் கூட்டிட்டுப் போயிடறாங்க. அங்க என்ன நடக்கிறதுன்னு அந்தச் சிறு பெண்களும் வெளியே சொல்றதில்லை.

அந்தப் பிள்ளைங்க மூணு வருஷம் கோடவுன்போல ஒரே இடத்தில் தங்க வைக்கப்படுகிறார்கள். காய்ச்சல் வந்தால்கூட அதே இடம்தானாம். ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போறதெல்லாம் இல்லை. அப்படியே போனாலும் அரசு ஆஸ்பத்திரியில்தான் சிகிச்சை கொடுக்கிறாங்க. அவங்களுக்கான சாப்பாட்டுச் செலவை, அவங்க சம்பாதிக்கிறதுலேயே எடுத்துக்கறாங்க. ஆனாலும் சாப்பாடு ஒழுங்காகப் போடுவதில்லை. உணவில் உப்பு குறைவாகத்தான் போடுவாங்களாம். 'அப்பத்தான் நிறையச் சாப்பிடாமல் குறைவாகச் சாப்பிட்டு, ஒழுங்காக வேலை செய்யமுடியும்' என்பார்களாம்.

பெற்றோர்கள் மாதம் ஒரு முறை போய் பிள்ளைகளைப் பார்த்துட்டு வரமுடியும். அப்ப, அதுக ஒரு மாசம் சம்பாதித்துக் கொடுக்கற இருநூறு முந்நூறை வாங்கிட்டு வர்றாங்க. அந்த மில் காம்பவுண்டு சுவருக்குள் பிள்ளைக வாழ்க்கையைத் தொலைச்சிட்டு இருப்பதைப் பற்றி, பல பெற்றோர்களுக்குக் கவலை இல்லை.

'மூணு வருஷம் வேலை' என்ற பேரத்தில் கூட்டிட்டுப் போனாலும்கூட, லீவ் எடுத்தது உடம்புக்கு முடியாமப் படுத்துக்கிடந்தது எல்லாம் சேர்த்து, கூடுதலாக ஆறு மாசம் வேலை வாங்கிடறாங்க. அதற்குப் பணம் கொடுப்பதில்லை. 'போயிட்டு வாங்க. பிறகு கூப்பிட்டு அனுப்புறோம்'னு சொல்றாங்க. பணம் கேட்டு இரண்டு நாள், மூணுநாளுன்னு மில்கேட்டில் பழியாக்கிடந்தும் பணம் வாங்காமல் வந்த பிள்ளைகளெல்லாம் இருக்கு.

மில்லில் வேலைக்குப் போற பெண்ணுக இறந்து போறது சாதாரணமான விஷயமாகிவிட்டது. மில்லில் வேலை பார்க்கிறப்ப ஷாக் அடிச்சு செத்துப்போனதாக, மதுரை மாவட்டம் கிண்ணிமங்கலத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணைத் தூக்கிட்டு வந்து வீட்டில் போட்டாங்க. அந்த மில் நிர்வாகம், பெற்றோருக்கு பத்தாயிரம் கொடுத்து பிரச்னை எழாம முடித்துவிட்டது. அதுபோல, ஒரு பிள்ளையோட பிணம் தண்டவாளத்தில் கிடந்தது. கேட்டபோது, 'அது மில்லில் இருந்து தப்பிப்போக முயற்சித்தபோது ரயிலில் அடிபட்டிருக்கும்'னு சொன்னாங்க.

இந்தப் பிரச்னையையெல்லாம் கடந்த அரசின் பார்வைக்குக் கொண்டு போனோம். மகளிர் ஆணையத்திற்குக் கொண்டு சென்றோம். எந்தப் பலனும் கிடைக்கவில்லை. சமீபகாலமாகக் கிராமங்களில் அதிகரித்துள்ள இந்தப் போக்கிற்கு அரசுதான் முற்றுப்புள்ளி வைக்கணும்!" என்றார் மேரி.

ஏற்கெனவே, மில்களில் இதுபோல வேலைக்குச் சென்று மூன்றாண்டுகள் முடித்தபிறகும் பணம் கிடைக்காத பெண்களுக்காகப் போராடி வரும் கிராமப் பெண்கள் உரிமைப் பாதுகாப்பு நலச் சங்க ஆலோசகர் நெப்போலியனைச் சந்தித்தோம்.

"சில மில்கள் மூன்றாண்டுகள் ஆன பிறகும்கூட பணத்தைக் கொடுப்பதில்லை. அந்த வகையில் ஐந்து மில்கள், அங்கு வேலை பார்த்த பெண்களுக்குக் கொடுக்கவேண்டிய தொகை சுமார் மூன்றே முக்கால் கோடி ரூபாயை, இன்னும் வழங்காமல் இழுத்தடிக்கிறார்கள். இதை நம்பி நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் பல நின்றிருக்கின்றன. தற்கொலைகள் கூட நிகழ்ந்திருக்கின்றன.

மில் நிர்வாகம் பேசிய பணத்தை வழங்கக் கோரி போராட்டம் நடத்தினோம். டில்லியில் தொழிலாளர் நலத்துறை அமைச்சரைப் பார்த்தோம். தமிழகத்தில் கடந்த ஆட்சியில் இருந்த சபாநாயகர் உள்ளிட்ட பலரைச் சந்தித்தோம். தட்டவேண்டிய இடத்திலெல்லாம் தட்டியும் பயனில்லை. அதனால் ஐகோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தோம். பேசியபடியான பணத்தை வழங்குமாறு ஐகோர்ட் சில மாதங்களுக்கு முன்னர் தீர்ப்புக் கூறியது. ஆனால் மில் நிர்வாகமோ, 'நாங்கள் நொடிப்பு நிலையை எட்டிவிட்டோம்' எனப் பதிலளித்துவிட்டு, அலட்சியமாக இருந்துவிட்டது. மில்களில் வேலை பார்த்த பெண்கள் சுமார் அறுநூற்றைம்பது பேர், தங்களுக்குப் பணம் வழங்கவேண்டியிருக்கிறது என, எங்களிடம் மனு கொடுத்திருக்கிறார்கள். இவர்கள் தேனி, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், திருநெல்வேலி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். அவர்களை வைத்து ஒருங்கிணைந்த கூட்டத்தையும் நடத்திவிட்டேன்.

மூன்றாண்டுகள் வேலை பார்த்து பணம் கிடைக்காமல் எங்களிடம் வந்தவர்களில், நானூற்று எண்பத்திரண்டு பேரிடம், நாங்கள் நடத்திய சர்வேயில் பல அதிர்ச்சித் தகவல்கள் கிடைத்தன. அதாவது, எழுபத்தைந்து சதவிகிதப் பெண்கள், இந்தப் பணம் கிடைக்காததால் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார்கள் என்பது தெரியவந்தது. அறுபது சதவிகிதப் பெண்கள் மாதவிலக்குப் பிரச்னையால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.