Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கணவனிடமிருந்து நட்டஈடு கேட்டு இலங்கை பெண் சென்னை நீதிமன்றத்தில் வழக்கு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

images417.jpg

இலங்கை பெண் ஒருவர் சென்னையில் வாழும் தனது கணவனிடமிருந்து  20 இலட்சம் ரூபா நட்டஈடு கோரி சென்னை மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

 

இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்த நீதிபதிகள் பெண்ணின் கணவனான காஜா மொகைதீன் என்பவரை நீதிமன்றுக்கு அழைத்து இந்த வழக்கை இணக்க சபைக்கு அனுப்பியுள்ளார்கள்.

 

இந்த பெண் 2002 ஆம் ஆண்டில் மருத்துவ மாதாக சவூதியில் வேலை செய்துக்கொண்டிருந்தபோது சாரதியாக பணியாற்றிய காஜா மொகைதீனை காதலித்துள்ளார்.

 

இருவருக்கும்  அம்பாறையில் வைத்து திருமணம் நடைபெற்றுள்ளது.

 

இவர்களுடைய மகளுக்கு மூன்றரை வயதாக இருந்தபோது காஜா மொகைதீன் சொல்லாமல் கொள்ளாமல் சென்னைக்கு போய்விட்டார்.

 

இந்நிலையில் காஜா மொகைதீனை தேடி றிஸ்மியா சென்னைக்கு சென்றுள்ளார். அவரை தேடிப்பிடிப்பதற்கு இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன.

 

அங்கு சென்றபோதுதான் காஜா மொகைதீன் திருமணமானவர் என்றும் அவர் இரண்டு பிள்ளைகளுக்கு தந்தை என்பதனையும் றிஸ்மியா அறிந்துக்கொண்டார்.

 

இந்நிலையில் தன்னுடன் வாழ்க்கை நடத்துமாறு றிஸ்மியா கேட்டுக்கொண்டுள்ளார். சென்னையில் தனிக்குடித்தனம் நடத்துவதாயின் பணம் தேவையென்று கூறி காஜா மொகைதீன் றிஸ்மியாவை வற்புறுத்தி  சவூதிக்கு மீண்டும் அனுப்பிவைத்துள்ளார்.

 

சவூதியிலிருந்து 2008 ஆம் ஆண்டு சென்னைக்கு திரும்பிய றிஸ்மியா, காஜா மொகைதீனை தன்னுடன் வருமாறு அழைத்து நெருக்கடி கொடுத்துள்ளார்.

 

நெருக்கடி தாங்க முடியாத காஜா மொகைதீன் வைத்தியசாலைக்கு சென்றுவருவோம் எனக்கூறி றிஸ்மியாவை ஏமாற்றி அழைத்துசென்று ஊரப்பாக்கத்திலுள்ள மனநோயாளி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.

 

அந்த வைத்தியசாலையில் றிஸ்மியா 20 மாதங்களாக தடுத்துவைக்கப்பட்டிருந்தார். அவருக்கு வைத்தியசாலையில் வைத்து கடுமையான மருந்துகள் கொடுக்கப்பட்டதுடன் தரக்குறைவான உணவும் வழங்கப்பட்டுள்ளது.

 

20 மாதங்களுக்கு பின்னர் வைத்தியசாலை நிர்வாகம் ஆவணமொன்றில் தன்னிடம் கையெழுத்து வாங்கிக்கொண்டு விடுவித்துவிட்டதாக றிஸ்மியா தெரிவித்துள்ளார்.

 

சவூதியில் ஏழு வருடங்களாக பணம் முழுவதையும் காஜா மொகைதீனிடம் கொடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

 

தான், பல நிறுவனங்கள் மற்றும் முஸ்லிம் அமைப்புகளிடம் உதவி கோரியிருந்தேன் உதவி கிடைக்காத நிலையிலேயே 20 இலட்சம் ரூபா நட்டஈடு கேட்டு வழக்கு தாக்கல் செய்ததாக றிஸ்மியா கூறியுள்ளார்.

 

http://tamil24news.com/news/?p=63834

இப்படியான அவலங்கள் பெண்களுக்கு நடந்திருக்கின்றது சிலது வெளியில் தெரியுது பலது ஊடகங்களில் வராமல் ஊமையாக உறங்குகிறது :(

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.