Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்மக்களை நெருக்கடிக்குள் தள்ளும் நடவடிக்கைகள்

Featured Replies

தமிழ்மக்களை நெருக்கடிக்குள் தள்ளும் தேசப்பற்றாளர்களின் நடவடிக்கைகள்

-வேலவன்-

சிறிலங்காவின் இராணுவப் புலனாய்வுப்பிரிவு செயலிழந்து விட்டதாகவும், அவர்களுக்கான பாதுகாப்பையே அவர்களால் நிலை நாட்ட முடியாதுள்ளதாகவும், தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது. இப்பொழுது அது மக்களை புலனாய்வாளர்களாகச் செயற்படுமாறு கேட்டிருக்கின்றது.

சிங்களப் பெயரில் தமிழர் ஒருவர் சிறிலங்கா காவல்துறையில் இருந்து வந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர் தொடர்பான அறிக்கையை மகிந்த ராஜபக்ச காவல்துறை மா அதிபரிடம் கேட்டிருக்கின்றார்.

அமைச்சர்கள், படையினர் உட்பட உயர் நிலையிலுள்ள புலிகளுக்கு உதவும் 48 சிங்களர்களுடைய விபரங்கள் ஜாதிக ஹெல உறுமயவுக்குக் கிடைத்துள்ளது.

சிங்களவர் மத்தியிலே புலிகளுக்கு உளவாளிகள் உள்ளனர்.

இவ்வாறான பரபரப்புத் தகவல்களைத் தென்பகுதி ஊடகங்கள் அண்மைக்காலமாக வெளியிட்டு வருகின்றன. இவ்வாறான தகவல்களை காவல்துறையினரும் படையினரும் வெளியிட்டு வருவது ஒரு புறமிருக்க இதனை மறுப்பது போன்ற தகவல்களும், வெளியிடப்படவேண்டிய தேவையும், அவர்களுக்கு இல்லாமலில்லை.

அண்மையில் சிறிலங்காவின் காவல்துறை மா அதிபர் கருத்துக் கூறுகையில், மூன்று தலைமுறைகள் குறித்த விசாரணையின் பின்னரே காவல்துறையில் எவரும் இணைத்துக் கொள்ளப்படுவதால் அவ்வாறு எவரும் காவல்துறைக்குள் ஊடுருவி விட முடியாது எனத் தெரிவித்தார்.

இதேவேளை மணலாற்றில் இராணுவத்தினர் ஒருவர் புலிகளுக்குக் கைத்தொலைபேசி மூலம் தகவல் வழங்கினார் எனக் கைது செய்யப்பட்டதாகத் தகவல் வந்தபோது அவ்வாறு எதுவும் நடைபெறவில்லை என இராணுவப் பேச்சாளர் அதை மறுத்திருந்தார். அது மட்டுமல்லாது நாட்டுக்காகப் போராடும் படையினரை உள ரீதியாகப் பலவீனப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாமென ஊடகங்களையும், அவர் கேட்டுக்கொண்டார்.

ஆனால் பின்னர் அவர்களே அவ்வாறாக ஒரு சிலர் செயற்படக் கூடும் எனவும் தெரிவித்திருந்தனர்.

இராணுவத் தலைமையக வளாகத்தினுள் வைத்து இராணுவத் தளபதி சரத்பொன்சேகா மீது நடத்தப்பட்ட தாக்குதலானது இராணுவத் தலைமையகத்துக்குள் கடமையாற்றுபவர்கள் மீதே சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதனைத் தென்பகுதி ஊடகங்கள் பலவும் பரபரப்பாக்கின.

இதன் தொடர்ச்சியாக இன்று சிறிலங்காவின் படைத்துறைக்குள் ஒருவரை ஒருவர் சந்தேகக் கண்கொண்டு பார்க்கும் நிலை ஏற்பட்டிருக்கின்றது.

சிறிலங்கா காவல்துறையில் கடமையாற்றும் ஒரு சில தமிழதிகாரிகள் மீது சந்தேகம் ஏற்படுவது ஒருபுறமிருக்க சில சிங்கள அதிகாரிகள் கூட விலை போயிருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டிருக்கின்றது.

இதேவேளை எவ்வாறு தான் பாதுகாப்பு நடவடிக்கைகள் என்ற பெயரில் பல்வேறு கெடுபிடிகளை மேற்கொண்டாலும், அதனையும் மீறி நடைபெறும் சம்பவங்கள் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் போன்ற அமைப்புகளுக்கு விசனத்தையே ஏற்படுத்துகின்றன.

இராணுவத் தளபதி மீதான தாக்குதலுக்குப் பின் மூன்றாம் நிலை அதிகாரியான மேஜர் ஜெனரல் பரமி குலதுங்க கொல்லப்பட்டமையானது அவர்களுக்கு அதிர்ச்சியளிப்பதாகவுள்ளது.

இதன் காரணமாக அரசாங்கம் மேலும் மேலும் சோதனைச் சாவடிகளை அமைத்த போதும் இன்னமும் அரசாங்கத்தின் மீதோ படையினர் மீதோ நம்பிக்கைகொள்ளும் நிலையில் அவர்கள் இல்லை. இதற்கு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவது ஒருகாரணமாயினும் ஊடகங்கள் படைத்தரப்பின் மீது சந்தேகம் தெரிவித்து வெளியிடும் தகவல்களும் இதற்குக் காரணமாக அமைவதை மறுக்க முடியாது. இவற்றால் ஏற்பட்டுள்ள விரக்தி நிலையில் தமிழ் மக்களுக்குக் குறிப்பாக சிறிலங்காவின் தலைநகரிலும், ஏனைய பகுதிகளிலும் வாழும் தமிழ் மக்களுக்கு நெருக்கடிகள் "புதிய புலனாய்வாளர்களால்" ஏற்படப் போவதற்கான அறிகுறிகளே தென்படுகின்றன.

ஏற்கனவே தமிழ் மக்கள் படையினரால் சந்திக்கும் நெருக்கடிகளுக்கு மேலாகத் தேசப்பற்றுள்ள தேசிய முன்னணி செயற்படுத்தத் திட்டமிட்டிருக்கும் "மக்கள் புலனாவுத் தேடுதல்" மேலும் பெரும் நெருக்கடிகளையே ஏற்படுத்தவுள்ளது.

இது தொடர்பாக முச்சக்கர வண்டிச் சாரதிகளைத் தயார்ப்படுத்தும் கருத்தரங்கில் கலந்துகொண்ட இராணுவ அதிகாரிகள் இருவர் சில ஆலோசனைகளை முன்வைத்திருக்கின்றனர்.

- உங்கள் சங்கத்துடன் இணைந்திருக்கும் முச்சக்கர வண்டிச் சாரதிகளே பயங்கரவாதிகளுக்கும் பாதாள உலகக் குழுக்களுக்கும் ஒத்துழைப்பு வழங்குபவர்களாக இருக்கலாம்.

- மூன்று பேருக்கு மேலதிகமாக முச்சக்கர வண்டியில் ஏறிவிட்டு இடையில் இறங்கும் நபர்.

- முக்கிய இடங்கள் குறித்துக் குறிப்பெடுப்போர், விசாரிப்போர்.

- கட்டணம் தொடர்பாக விசாரிக்காது ஏறுவோர்.

- முக்கியஸ்தர்களின் விலாசங்களை விசாரிப்போர்.

- கைத்தொலைபேசியில் சந்தேகத்துக்கிடமாக உரையாடுவோர்.

இவ்வாறு அவர் ஒரு பட்டியலை வழங்கியுள்ளதுடன் இவ்வாறானவர்கள் மீது சந்தேகமேற்பட்டால் இராணுவத்திற்குத் தகவல் வழங்கலாம். அல்லது இராணுவ, காவல்துறைக் காவலரண்களில் ஒப்படைக்கலாம் எனத் தெரிவித்திருக்கின்றனர். அதேவேளை இவ்வாறான கருத்தரங்குகள் பிரதேச ரீதியாகப் பல்வேறுபட்ட தரப்பினருக்கும் நடத்தத் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் திட்டமிட்டிருகின்றது.

ஏற்கனவே முச்சக்கரவண்டிச் சாரதிகளால் தமிழர்கள் அனுபவித்த நெருக்கடிகள் - அதாவது சந்தேகம் என்ற பெயரில் படையினரிடம் தமிழ் மக்களை மாட்டிவிட்ட சம்பவங்கள் குறித்த தகவல்கள் வெளிவந்திருக்கின்றன.

இப்போது உத்தியோகப்பூர்வமாக இவ்வாறானவர்களுக்கு வழங்கும் அதிகாரங்கள் தமிழ் மக்களை நெருக்கடிக்குள் தள்ளவும், அவர்களிடமிருந்து பணம் பறிக்கவுமே உதவும்.

அண்மையில் சிறிலங்காக் காவல்துறை அதிகாரி ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில், குற்றச் செயல்கள் குறித்துப் பொதுமக்களிடமிருந்து கிடைக்கும் தகவல்களில் 55 வீதத்திற்கும் அதிகமானவை தவறானவை எனத்தெரிவித்தார். இவற்றில் பெரும்பாலானவை தனிப்பட்ட விரோதம், பழிவாங்கலுக்காகவே தெரிவிக்கப்பட்டவையாகும்.

இது இந்த "மக்கள் புலனாய்வாளர்கள்" குறித்த ஓர் எச்சரிக்கையை வெளிப்படுத்துகின்றது. அதாவது இவ்வளவு காலமும் சிங்களக்காவல்துறை மற்றும் இராணுவப் புலனாய்வாளர்களிடம் சிக்கிப்பட்ட துன்பத்திலும் பார்க்க மோசமான நெருக்கடியை இந்த "மக்கள் புலனாய்வாளர்" களிடம் தமிழ்மக்கள் சந்திக்க நேரிடலாம். ஆனால் இவ்வாறான செயற்பாடானது சிறிலங்கா ஆட்சியாளர்கள் சந்தித்த தோல்வியை வெளிப்படுத்துவது மட்டுமல்லாது சந்திக்கவிருக்கும் பெருந்தோல்வியையுமே காட்டி நிற்கிறது.

நன்றி: ஈழநாதம் 20.07.06

- தமிழ்நாதம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.