Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பதில் இராணுவத்தளபதி மீதான குற்றச்சாட்டுக்கள் அர்த்தமற்று ...

Featured Replies

பதில் இராணுவத்தளபதி மீதான குற்றச்சாட்டுக்கள்

அர்த்தமற்று போய்விடும் வாய்ப்பு

-வேலவன்-

சிறிலங்காவின் இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகாவின் மீதான தாக்குதலுக்குப்பின் சிரேஷ்ட மேஜர் ஜெனரல் ஒருவர் தனக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணை அறிக்கையை மறைக்கத் தீவிர முயற்சி மேற்கொண்டதாகத் தகவல் ஒன்று வெளியாகியது. இதனை ஏரிக்கரை வாரப் பத்திரிகையாகிய சண்டே ஒப்சேவர் சரத் பொன்சேகா மீதான குண்டுத் தாக்குதல் நடைபெற்றுச் சுமார் ஒரு மாதத்தில் வெளியிட்டது.

அப்பத்திரிகையால் இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்ட இராணுவ அதிகாரி வேறு யாருமல்ல. இராணுவத் தலைமைப்பீடத்தில் இரண்டாம் இடத்தில் இருப்பவரும் தற்போது பதில் இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டிருப்பவருமான நந்தா மல்லவராச்சியே ஆவார்.

இக்குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட வேளையில் மூன்றாம் நிலையில் மேஜர் ஜெனரல் பரமி குலதுங்க உயிரோடு இருந்தார். அது மட்டுமல்ல இராணுவத்தளபதி சரத் பொன்சேகா உடல்நிலை தேறிச் சில தினங்களிலேயே கடமையைப் பொறுப்பேற்பார் என்ற நம்பிக்கை இருந்தது.

மேஜர் ஜெனரல் நந்தா மல்லவராச்சி மீது அவர் 2002 இல் இந்திய தேசிய பாதுகாப்புக் கல்லூயில் கற்கை நெறி ஒன்றைப் பின்பற்றிக் கொண்டிருந்தபோது அவர் புரிந்த குற்றம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டிருந்து.

அதாவது அவரது மனைவி தனியார் பாதுகாப்பு நிறுவனம் ஒன்றை நடத்திவந்தார். தனது சொந்தப்பாதுகாப்புக்கென இராணுவத்தலைமையகத்தால் வழங்கப்பட்ட இராணுவச் சிப்பாய்களை இந்த நிறுவனத்திலே பணியில் ஈடுபடுத்தியிருந்தார் என்பதே குற்றச்சாட்டாகும்.

நீண்ட நாட்களாகவே இவர் இந்தச் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்த போதிலும் இவர் இந்தியாவில் கற்கைநெறி ஒன்றைப் பின்பற்றிக்கொண்டிருந்த வேளை இவரின் பாதுகாப்பிற்கென வழங்கப்பட்டிருந்த இராணுவச் சிப்பாய் ஜெயவிக்கிரம என்பவர் காணாமல் போனபோதே இது குறித்த பிரச்சினைகள் எழுந்தன.

அவரது பாதுகாப்பு, வழித்துணைக்கென இராணுவத் தலைமையகத்தால் வழங்கப்பட்டிருந்த 12 இராணுவத்தினரை இவர் கற்கை நெறிக்காக இந்தியா சென்ற வேளையில் இராணுவத் தலைமையகத்திடம் ஒப்படைத்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யாமல் தனது மனைவி நடத்திய தனியார் பாதுகாப்பு நிறுவனத்தில் பணியாற்றப் பணித்துள்ளார்.

இவ்வாறான வேளையில் ஜெயவிக்கிரம என்ற குறிப்பிட்ட இராணுவச் சிப்பாய் 25 ஓகஸ்ட் 2002 இல் காணாமல் போயுள்ளார். இது குறித்து அறிந்து கொண்டபோதிலும் சிப்பாய் காணாமல் போன விடயம் குறித்து இராணுவத் தலைமையகத்துக்கு அவர் மறைத்துவிட்டார்.

ஆனால் காணாமல்போன ஜெயவிக்கிரமவின் தந்தையார் இதனை அறிந்துகொண்டு தனது மகனைக் கண்டுபிடித்துத் தருமாறு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இது தொடர்பான விசாரணைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கையில

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.