Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜ,நாவில் அரசியல் விபசாரம் செய்யும் திருமதி ரதிக்கா குமாரசுவா

Featured Replies

சிறிலங்காவின் சர்வதேச பாதுகாப்பு பொறி ஐ.நாவே தமிழர் மனித உரிமைகள் அமைப்பு தெரிவிப்பு.

தமிழிழ மக்களின் சுயநிர்ணய உரிமை போராட்டத்தை ஆராய்வோமானால், இது ஓர் ஆயுதப் போராட்டமாக வெளி உலகுக்கு இலகுவாக தெரிகிறது. அங்கு வெளிப்படையாக தெளிவாக உணராத உண்மையென்னவெனில், தமிழிழ மக்கள் 35 வருடகாலமாக சாத்வீக போராட்டம் பயங்கரவாதத்தினால் நசுக்கப்பட்டு தோல்வி கண்ட நிலையிலேயே, தமிழிழ மக்கள் தற்போதைய ஆயுதப் போராட்டம் ஆரம்பித்தார்களென்பது.

“இலங்கை தீவில் வாழம் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட சிறிலங்காவின் அரச பயங்கரவாதத்தின் நாசகார வேலைகளை, 1983ம் ஆண்டு யூலை மாதம் சர்வதேச சமூதாயம் வெளிப்படையாக கண்டும், சிறிலங்கா அரசு மீது ஒழுங்கான அழுத்தத்தை கொடுக்க தவறி விட்டது. அவ்வேளையில் சிறிலங்கா அரச பயங்கர வாதத்தை எதிர்த்து சர்வதேச சமூதாயம் குரல் எழுப்பியிருந்தால் இன்று இலங்கை தீவின் சரித்திரமே முற்று முழதாக மாறியிருக்கும்.

“சிறிலங்கா அரசு தமது நேரத்தில் பெரும் பகுதியை, தமிழிழ விடுதலை புலிகளை சர்வதேச மட்டத்தில் தடை செய்ய முயற்சிப்பதிலும், போர் ஒன்றை நடத்துவதற்கான நவீன ஆயுதங்களை கொள்வனவு செய்வதிலுமே செலவழித்து வருகின்றனர். ஆனால், இனப்பிரச்சனைக்கு பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண்பதற்கு ஒரு நிமிடம் கூட செலவு செய்யவில்லை.

'ஐக்கிய நாடுகள் சபையில், நூற்று தொண்ணுற்றியொரு அங்கத்துவ நாடுகள் உள்ளன. இவ்வேளையிலே, முப்பது நாடுகள் தமிழிழ விடுதலை புலிகளை ஓரம் கட்டியுள்ளதாக மார்பு தட்டுபவர்கள், மற்றைய நூற்று அறுபத்தியொரு நாடுகளும் தமிழிழ விடுதலை புலிகளை ஏற்கிறார்கள் என்பதை ஏற்க கடைமைப்பட்டுள்ளார்கள்.

'இதனால் தான் சிறிலங்கா அரசு “சர்வதேச பாதுகாப்பு பொறி” ஆரம்பமாக்கியுள்ளது. தற்போதைய அபாயம் என்னவெனில், சிறிலங்காவின், “சர்வதேச பாதுகாப்பு பொறியின்” முக்கிய தளமாக ஐக்கிய நாடுகள் சபை அமைகிறது. காரணங்கள் பல. ஐக்கிய நாடுகள் சபையில் தாம் திட்டமிட்டது போல் யாவற்றையும் சாதிப்பதற்கு, சிறிலங்கா அரசின் கைப்பபொம்மைகளான சில முக்கிய புள்ளிகள் ஐ. நா. வில் சில முக்கிய பதவிகளை கைப்பற்றுவதற்கு சிறிலங்கா அரசு ஊக்குவித்து வருகின்றது.

சிறிலங்கா அரசினால் தேர்ந்தெடுக்கப்பட்ட சில முக்கிய புள்ளிகள் பின்வருமாறு. திரு ஜெயந்தா தனபலா, திருமதி ரதிக்கா குமாரசுவாமி, பொலீஸ் மா அதிபர் சந்திரா பெர்ணான்டொ, திரு டிவின்டா சுபசிங்கா, திரு பாலித்த கோகண, செல்வி டிபிக்கா உடுகமா மற்றும் பலர். இதில் திரு ஜெயந்தா தனபலா ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம்; பதவிக்கு போட்டி போடுகிறார். இவர் சிறிலங்காவின் ராஜதந்திரியாக கடமையாற்றிய காலங்களில், தமிழிழ மக்கள் மீதான சிறிலங்கா அரச படைகளின் வன்முறைகளை, உலக நிறுவனங்களுக்கு, விசேடமாக ஜெனிவா, நியூயோர்க்கில் நன்றாக நியாயப்படுத்தி வந்தவர்.

ஐக்கிய நாடுகள் சபையின் செயற்பாட்டில், “பெண்கள் மீதான வன்முறைகளுக்கு” 1994ம் ஆண்டு முதல் 2003ம் ஆண்டு வரை பதவி வகித்தவரே திருமதி ரதிக்கா குமாரசுவாமி. இவர் கடந்த ஏப்ரல் மாதம், ஐக்கிய நாடுகள் சபையின் செயற்பாட்டில் “சிறுபிள்ளைகளை இராணுவாத்தில்” அமர்ந்தும் பிரிவுக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளார்.

திருமதி குமாரசுவாமி ஐ. நா. வில் “பெண்கள் மீதான வன்முறைகளுக்கு” பொறுப்பாக இருந்த காலப்பகுதியில், வடக்கு கிழக்கில் 4300 தமிழ் பெண்கள் சிறிலங்கா பாதுகாப்பு படையினரினால் பாலியல் வன்முறைக்காக்கப்பட்டு கொல்லப்பட்டார்கள். இவற்றில் எந்தனை தமிழ் பெண்கள் மீதான வன்முறைகளை, திருமதி குமாரசுவாமி, ஐ. நா. வின் நடவடிக்கை எடுத்து கொண்டார் என்ற விபரத்தை, திருமதி குமாரசுவாமியினால் கூற முடியுமா என தமிழர் மனித உரிமைகள் மையம் தனது அறிக்கiயில் கேட்டுள்ளது.

இதே வேளை, ஐ. நா வில் தனது கடமைக்கும் செயற்பாட்டிற்கு மேலாக, தமிழிழ விடுதலை புலிகளை சில கொலைகள் சம்பந்தமாக குறை கூற திருமதி குமாரசுவாமி ஐ. நா. வில் தவறியதில்லை.

திருமதி குமாரசுவாமி ஐ. நா.வில் “பெண்கள் மீதான வன்முறைகளுக்கு” பொறுப்பாக இருந்நத வேளையிலே, சிறிலங்கா அரசினால் நடைமுறைப்படுத்தப்பட்ட பொருளாதார தடையினால், பெரும் தொகையான தமிழ் சீறார்கள் மிகவும் மோசமான முறையில் பாதிக்கப்பட்டுள்ளனர். திருமதி குமாரசுவாமி ஓர் தமிழ் தாயாக இருந்தும் கூட, இச் சீறார்கள் பற்றி ஒரு வார்த்தை கூட ஐ. நா.வுpல் எடுத்துரைத்தது கிடையாது.

முன்பு ஐ. நா. வில் “உடன்படிக்கை” பிரிவுக்கு பொறுப்பாக இருந்தவரே, திரு பாலித்த கோகண. இவர் ஐ. நா. அங்கத்துவ நாடுகளுடன் நல்ல உறவை கொண்டவர். தற்பொழுது சிறிலங்காவின் சமாதானச் செயலகத்துக்க பொறுப்பாகவுள்ளார். ஆகையால் இவர் மூலம் சிறிலங்கா அரசு, தனது பொய் பிரச்சாரங்களை மற்றைய நாடுகளை இலகுவாக எடுத்து செல்கிறது.

சுpறிலங்காவின் பொலீஸ் மா அதிபர் திரு சந்திரா பெர்ணன்டொவும், சிறிலங்காவினால் தயாரித்த, ஐ. நா. வுக்கான பதவிப் பட்டியலில் ஒருவராவர். பொலீஸ் மா அதிபர் பெர்ணன்டொ, ஐ. நா. மனிதர் உரிமை குழுவின் அங்கத்தவரில் ஒருவராவதற்கு முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது. மனித உரிமைக்கும் பொலீஸ் மா அதிபர் திரு சந்திரா பெர்ணன்டொவுக்கும் என்ன சம்பந்தமுள்ளதோ தெரியவில்லை! அப்பாவி மக்களின் மனிதர் உரிமைகளை மீறிய ஒருவர், ஐ. நா. மனித உரிமை குழவிற்கு தெரிவாவது, கசாப்பு கடைக்காரன் தேவாலயத்தில் பாதிரியார் வேடம் பூண்டு பிரார்தனை மேற்கொள்வதற்கு ஒப்பானது. இது பற்றி ஐ. நா. மனித உரிமைஆணையாளர் திருமதி லுயூஸ் ஆபார் கவனத்தில் கொள்ள வேண்டும்;.

இப்படியாக பலர் ஐ. நா.வின் முக்கிய பதவிகளை கைப்பற்றுவதன் மூலம், தமது “சர்வதேச பாதுகாப்பு பொறியை” ஐ. நா. விலும் விஸ்தரித்து, தமிழிழ மக்களின் நியாயமான சுயநிர்ணய போரட்டத்தை அழித்து ஒழிக்கலாமென சிறிலங்கா அரசின் தலைவர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.

இவை உலகுக்கு உணர்த்துவது என்னவெனில், 1948ம் ஆண்டு முதல் சிறிலங்கா பதின்மூன்று பிரதமர்களும், ஐந்து ஜனதிபதிகளையும் கண்டுள்ளது. ஆனல் இனப்பிரச்சனையில் இவர்களின் சிந்தனையில், 1948ம் ஆண்டுக்கும் இன்றுக்கும் இடையில், எந்தவித மாற்றமும் இல்லையென்பதையே தெளிவு படுத்துகிறது.

சிறீலங்காவின் 'இறையாமை" பற்றி தினமும் நினைவுபடுத்தும் சிங்களத் தலைவர்கள், “சர்வதேச பாதுகாப்பு பொறியை” விரும்புவதானால், இவர்கள் உபதேசிக்கும் 'இறையாமை" எங்கு சென்று விட்டது? ஆகையால் இனப் பிரச்சனையில் சிங்கள தலைவர்களின் கொள்கையை மிக சுருக்கமாக கூறுவதானால், எமக்கு மூக்கு போனாலும் பாறாவாயில்லை, எதிரிக்கு சகுனம் பிழைத்தால் போதும்" என்பதே. இதை சர்வதேச சமுதாயம் எப்பொழுது உணர்ந்து கொள்ளப் போகிறது?

http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=1&

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.