Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யேர்மனிய பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு இடம்பெறுகின்ற கையொப்ப வேட்டை

Featured Replies

யேர்மனிய பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு இடம்பெறுகின்ற கையொப்ப வேட்டை

அன்பான தமிழ் உறவுகளே!

நீண்டகாலமாக சிங்கள பேரினவாதம் தமிழீழ மக்கள் மீது திட்டமிட்ட வகையில் பாரிய இனவழிப்பை நடாத்தி வருகின்றது. சிங்கள பேரினவாதம் நடாத்திய இனவழிப்பின் உச்சக்கட்டமே பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற பெயரில் வைகாசி 2009ம் ஆண்டு நடாத்தப்பட்ட தமிழினவழிப்பாகும்.

தமிழினவழிப்பை தடுத்து நிறுத்தாமல் மௌனம் காத்த சர்வதேச சமுதாயத்தினரே இன்று எமக்கு நீதியை பெற்று தரவேண்டியது காலத்தின் கட்டாயமாகும். ஆகையால் இந்த வருடம் யேர்மனிய பாராளுமன்ற தேர்தல் 22.09.2013 ஆரம்பமாகவுள்ளதை முன்னிட்டு ’Deine Stimme gegen Völkermord' என்ற பெயரில் கையொப்ப வேட்டையை தமிழ் இளையோர்கள் ஆரம்பித்துள்ளார்கள். இவ் தலைப்பின் கருத்திற்கு அமைய நீங்கள் உங்களுடைய குரலை இனவழிப்பிற்கு எதிராக எழுப்ப வேண்டும்.

உங்களுடைய கையொப்பத்தை பயன்படுத்தி எதிர் வருங்காலங்களில் தமிழீழ மக்கள் மீது இனவழிப்பு நடைபெறாமல் இருக்கவும் இலங்கையில் இடம்பெற்றது இனவழிப்பு என்பதை யேர்மன் கட்சிகள் உத்தியபூர்வமாக அறிவிக்க வேண்டுமென அழுத்தங்களை கொடுக்கவுள்ளோம்.

புலம்பெயர் நாடுகளில் எமது உறவுகள் படும் சிரமங்களை கருதி இணையத்தளமூடாகவும் நீங்கள் உங்கள் வாக்குகளை பதிவு செய்வதற்காக நாம் ஒர் இணையத்தளத்தை (Online Petition) உருவாக்கியுள்ளோம். எமது செயற்பாடு வெற்றியளிக்க அனைத்து தமிழ் உறவுகளினதும் ஆதரவை வேண்டி நிற்கின்றோம்.

 

Online Petition: http://www.change.org/de/Petitionen/deine-stimme-gegen-v%C3%B6lkermord-an-den-eelamtamilen

 

மேலதிகதொடர்புகளிற்கு:

Mail: stimmegegenvoelkermord@yahoo.de

 

facebook: https://www.facebook.com/DeineStimmeGegenVoelkermord

 

296268_463610013724628_1469343100_n.jpg

 

 

(facebook)

Edited by துளசி

கையொப்பமிட்டுள்ளேன் .

 

  • தொடங்கியவர்

இந்த வருடம் யேர்மனிய பாராளுமன்ற தேர்தல் 22.09.2013 ஆரம்பமாகவுள்ளது. இப்பாராளுமன்ற தேர்தலில் வேட்பாளர்களையும் மற்றும் கட்சி உறுப்பினர்களையும் சந்தித்து தமிழீழத்தில் நடைபெற்ற தமிழினவழிப்வை விழிப்பாக்கவுள்ளோம். யேர்மன் குடியுரிமை உள்ளவர்கள் அவர்களது அவாவை சனநாயக முறையில் கூறுவதற்கு உரிமையுண்டு. நாம் எமது சனநாயக உரிமையை சிறந்த வழியல் பயன்படுத்த வேண்டும்.

 

"இனவழிப்பை எதிர்த்து உங்கள் குரல்" இந்த சொல்லின் கருத்திற்கு அமைவாக நாம் முன்னெடுக்கும் வேலைத்திட்டம் இதுவரைகாலமாக ஈழத்தமிழர்களிற்கெதிரான இனவழிப்பை எதிர்வரும் காலத்தில் தடுத்து நிறுத்துவதற்காக. இனவழிப்பை தடுப்பதற்காக நாம் அனைவரும் இணைந்து குரல் எழுப்ப வேண்டும். நாம் தயாரித்துள்ள மனுவில் நீங்கள் உங்களுடைய கையொப்பத்தை வைப்பதன் மூலம் யேர்மன் நாடாளுமன்ற தேர்தல் காலத்தில் அரசியல்வாதிகளுக்கு அழுத்தத்தை கொடுக்கமுடியும். அரசியல்வாதிகள் தமிழினவழிப்பிற்கு எதிராக குரல் கொடுக்க வைப்பதற்கு செயற்பட வேண்டும்.

 

எங்களுடைய இலக்கு: இலங்கையில் 60 ஆண்டுகளாக திட்டமிட்ட வகையில் இனவழிப்பு நடாத்தப்படுகின்றது. எங்களுடைய வாக்கை எதிர்பார்க்கின்ற அரசியல்வாதிகள் தமிழினவழிப்பிற்கு எதிராக ஆதரவை தந்து அதனை அங்கிகரித்து தமிழினவிப்பை உத்தியபூர்வமாக வெளிப்படுத்த வேண்டும்.

 

(facebook: TYO)

 

சில நொடிகள் உங்கள் நேரத்தை ஒதுக்கி இனவழிப்பிற்கு எதிராக உங்கள் குரலை எழுப்புங்கள்!

 

எதற்காக?
உங்களுடைய கையொப்பத்தை பயன்படுத்தி எதிர் வருங்காலங்களில் தமிழீழ மக்கள் மீது இனவழிப்பு நடைபெறாமல் இருக்கவும் இலங்கையில் இடம்பெற்றது இனவழிப்பு என்பதை யேர்மன் கட்சிகள் உத்தியபூர்வமாக அறிவிக்க வேண்டுமென அழுத்தங்களை கொடுக்கவுள்ளோம். எமது செயற்பாடு வெற்றியளிக்க அனைத்து உறவுகளினதும் ஆதரவை வேண்டி நிற்கின்றோம்.

எமது கோரிக்கை:
இலங்கையில் தமிழர்களிற்கு எதிராக இடம்பெற்றது இனவழிப்பு என்பதை யேர்மன் கட்சிகள் உத்தியபூர்வமாக அறிவிக்க வேண்டும்.

 

(facebook: https://www.facebook.com/DeineStimmeGegenVoelkermord?ref=stream&hc_location=stream)

 

 

 

 

Edited by துளசி

  • தொடங்கியவர்

கையொப்பமிட்டுள்ளேன் .

 

இது ஜேர்மனில் வாழ்பவர்களுக்கானது என நினைக்கிறேன். மேலே எடிட் பண்ணி விபரங்கள் இணைத்துள்ளேன். நாமும் வைக்கலாமோ தெரியவில்லை. :unsure:

 

 

Edited by துளசி

இது ஜேர்மனில் வாழ்பவர்களுக்கானது என நினைக்கிறேன். மேலே எடிட் பண்ணி விபரங்கள் இணைத்துள்ளேன். நாமும் வைக்கலாமோ தெரியவில்லை. :unsure:

நான் கையொப்பமிட்டு ஏற்றுக்கொண்டுவிட்டது ..........யேர்மன் பாசையில் உள்ளது .....................எதற்கும் தமிழ்சிறி அண்ணாவைப்போல யேர்மனியில் வாழும் உறவுகளிடம்தான் கேட்கணும்  :D 

  • தொடங்கியவர்

நான் கையொப்பமிட்டு ஏற்றுக்கொண்டுவிட்டது ..........யேர்மன் பாசையில் உள்ளது .....................எதற்கும் தமிழ்சிறி அண்ணாவைப்போல யேர்மனியில் வாழும் உறவுகளிடம்தான் கேட்கணும்  :D 

 

இது கையொப்ப வேட்டை என்பதால் அனைவரும் கையொப்பமிடுவோம். நன்றி கையொப்பமிட்டமைக்கு. :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.