Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபல நடிகை ஜியா கான் தூக்குபோட்டு தற்கொலை

Featured Replies

செவ்வாய், 4 ஜூன் 2013

 

இந்தியில் நிஷாப்த், கஜினி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்த பிரபல பாலிவுட் நடிகை ஜியாகான், அவரது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

மும்பை ஜூகூ பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த இவர் நேற்று இரவு 11.45 மணியளவில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது தாயார் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
அங்கு விரைந்த காவல்துறையினர் படுக்கையறையில் தூக்கில் தொங்கிக் கொண்டு இருந்த உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலைக்கான காரணம் குறித்தும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

 

ஜியாகான் பிரிட்டனை சேர்ந்தவர் பாலிவுட்டில் பிரபல திரைப்படங்கள் மற்றும் பல முன்னனி ஹீரோக்களுடன் நடித்து தனி இடம் பிடித்தார் என்பது குறிப்பிடதக்கது.

ஜியாகானின் இறப்பிற்கு அமிதாப் பச்சன், அமிர்கான், அக்ஷேய் குமார் உள்ளிட்ட பலர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.

 

http://tamil.webdunia.com/newsworld/news/national/1306/04/1130604013_2.htm

 

  • தொடங்கியவர்

நடிகை ஜியா கானின் 'திக் திக்' கடைசி நிமிடங்கள்

5th June 2013

 

1370409887.jpeg

 

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய 'கஜினி' இந்திப் பதிப்பு, அமிதாப் பச்சன் நடித்த 'நிஷாப்த்', 'ஹவுஸ் புல்' போன்ற இந்தி படங்களில் நடித்து பிரபலமானவர், நடிகை ஜியா கான்.

25 வயதான இவர் நபிசா கான் என்ற பெயரிலும் சில படங்களில் தோன்றியுள்ளார்.

இந்நிலையில், மும்பை ஜுஹு பகுதியில் உள்ள தனது வீட்டில் நேற்று இரவு ஜியா கான் துப்பாட்டாவால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது கழுத்தில் ஏற்பட்டுள்ள தழும்புகளை வைத்து, அவர் தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, ஜியா கான் கடைசியாக நடிகர் ஆதித்யா பஞ்சோலியின் மகன் சுராஜ் பஞ்சோலியுடன் தொடர்பு கொண்டு பேசியது தெரியவந்துள்ளது.

எனவே, அவரிடம் கண்டிப்பாக விசாரணை நடத்துவோம் என்று துணை கமிஷனர் விஷ்வாஸ் நாக்ரே பாட்டீல் தெரிவித்தார். மேலும் ஜியா கானுடன் தொடர்பில் இருந்த அனைவரையும் விசாரணைக்கு அழைக்க உள்ளதாகவும் அவர் கூறினார்.

ஜியா கான் சாவு பற்றி அவரது வீட்டின் பாதுகாவலர் கூறுகையில், ''என்ன நடந்தது என்று எனக்கு தெரியாது. ஆனால், ஆம்புலன்ஸ் மற்றும் போலீசார் வந்தபோதுதான் அவர் இறந்தது தெரியவந்தது'' என்றார்.

ஜியா கான் மரணம் இந்தி திரையுலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதுபற்றி பற்றி கேள்விப்பட்ட நடிகர் அமிதாப் பச்சன் டுவிட்டர் தளத்தில் தனது துக்கத்தை பதிவு செய்திருந்தார். அதில், ''ஜியா கான் இறந்துவிட்டாரா? என்ன நடந்தது? இது சரியான தகவல்தானா? என்னால் நம்ப முடியவில்லை'' என்று அமிதாப் குறிப்பிட்டிருந்ததார்.

நடிகர் ஆதித்யா பஞ்சோலி மற்றும் அவரது மகன் சூரஜ் பஞ்சோலி ஆகியோரிடம் மும்பை போலீசார் நேற்று நடத்திய விசாரணையில் சில புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்கொலை முடிவை எடுப்பதற்கு முன்னர் ஜியா கான் விரக்தி நிலையில் இருந்ததாக விசாரணையில் தெரியவந்தது. அவரது வாழ்வின் இறுதி நிமிடங்களில் மிகுந்த மன உளைச்சலுக்கு அவர் உள்ளாகியிருந்தார் என்பதற்கான போதுமான ஆதாரங்கள் உள்ளதாக போலீசார் கூறுகின்றனர்.

இதுதொடர்பாக போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது :-

கடந்த ஓராண்டு காலமாக சூரஜ்-ஜுடன் ஜியா கான் நெருக்கமாக இருந்துள்ளார். புதிய தோழியுடன் தனக்கு ஏற்பட்ட நெருக்கம் தந்த மயக்கத்தில் ஜியா கானை சூரஜ் சில நாட்களாக புறக்கணித்து வந்துள்ளார்.

அதுமட்டுமின்றி, சமீப காலமாக புதிய பட வாய்ப்புகள் ஏதும் கிடைக்காததால் ஜியா கான் விரக்தியடைந்து இருந்ததாகவும் கூறப்படுகிறது.

கடந்த 1ம் தேதி புதிய தமிழ் படம் ஒன்றில் நடிப்பதற்கான நேர்காணலுக்கு ஜியா கான் ஐதராபாத் சென்றபோது உடல் எடை அதிகமாக இருந்ததால் வாய்ப்பு கைநழுவிப் போனது.

அன்று மாலை 7 மணியளவில் மும்பை திரும்பிய அவர் இரவு 9 மணியளவில் காந்திராம் சாலையில் உள்ள சூரஜ் வீட்டிற்கு சென்று அன்றிரவை அவருடன் கழித்தார்.

மறுநாள் (ஜூன் - 2) பகல் முழுவதும் அவருடன் இருந்துவிட்டு, இரவு 9 மணியளவில் ஜுஹு பகுதியில் உள்ள 5 நட்சத்திர ஓட்டலில் சூரஜ்ஜுடன் சாப்பிட்டார். சூரஜ் தனது காரில் ஜியா கானை அவரது வீட்டில் இறக்கிவிட்டு சென்றார்.

மறுநாள் (ஜூன் - 3) சூரஜ்ஜுடன் 10 முறைக்கு மேல் செல்போனில் பேசி, ஏகப்பட்ட மெசேஜ்களையும் ஜியா கான் அனுப்பியுள்ளார்.

மாலை 7 மணிக்கு மீண்டும் போன் செய்து தனக்கு 3 புதிய படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக சூரஜ்ஜிடம் கூறிகிறார். இரவு 9 மணியளவில் புதிய படவாய்ப்புக்கு வாழ்த்து தெரிவித்த சூரஜ், தனது உதவியாளரிடம் பூச்செண்டு கொடுத்தனுப்புகிறார்.

அதன்பிறகு, ஜியா கானின் செல்போன் அழைப்புகளை சூரஜ் நிராகரித்துள்ளார்.

9.15 மணிக்கு சூரஜ் தந்தனுப்பிய பூச்செண்டை வீட்டு காவலாளியிடம் தந்து அதை வெளியே வீசும்படி ஜியா கான் கூறுகிறார்.

9.30 மணிக்கு சூரஜ்ஜின் வீட்டிற்கு சென்று அவரை சந்திக்க முயற்சிக்கிறார். அவரது தந்தையான ஆதித்யா பஞ்சோலியிடம் சூரஜ் மிக மும்முரமாக பேசிக்கொண்டிருப்பதாக உதவியாளர் கூறுகிறார்.

10 மணியளவில் வீடு திரும்பிய ஜியா கான், 10.53க்கு மீண்டும் சூரஜ்ஜிற்கு போன் செய்து 2 நிமிடங்கள் அவருடன் பேசுகிறார்.

இதே நிலை நீடித்தால் நான் லண்டனுக்கு போய் விடுவேன் என்று இரவு 11.07க்கு சூரஜ்ஜிற்கு மெசேஜ் அனுப்புகிறார்.

11.07-லிருந்து 11.22 வரை தனக்கு போன் செய்யும்படி சூரஜ் அனுப்பிய 3 மெசேஜ்களுக்கு ஜியா கான் பதில் ஏதும் அளிக்கவில்லை.

வெளியே சென்றிருந்த ஜியா கானின் தாயார் ரபியா கான் 11.23-க்கு வீட்டுக்குள் நுழைகிறார். படுக்கையறையில் உள்ள மின் விசிறியில் ஜியா கான் பிணமாக தொங்கும் காட்சியைக் கண்டு பதறியபடி போலீசாருக்கு தகவல் அளிக்கிறார்.

போலீசார் நேற்று நடத்திய விசாரணையில் ஜியா கானின் தற்கொலை மரணம் காதல் தோல்வியால்தான் ஏற்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சூரஜ்ஜிடம் அடுத்தக்கட்ட விசாரணை நடைபெறும் போது மேலும் பல தகவல்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம் என போலீசார் தெரிவித்தனர்.

 

http://www.newsalai.com/details/Last-minutes-of-deceased-Jiayah-khan.html

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.