Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை ஜனாதிபதிக்கான அதிகாரம் பறிப்பு உலக மகா அரசியல் நாடகம் இலங்கையில்- சரவணை மைந்தன்

Featured Replies

இலங்கையில் இருக்கும் மாகாணசபைகளை தேவைப்படும் பட்சத்தில் இணைப்பதற்கு இலங்கை ஜனாதிபதிக்கு இருக்கும் அதிகாரத்தை ரத்துச் செய்வதென இலங்கை அரசின் அமைச்சரவை முடிவு செய்திருக்கிறது.
 

Eelam+(1).jpg

இலங்கை அரசின் மிகப்பெரிய ஒரு அரசியல் நாடகத்தை தற்பொழுது அரங்கேற்றியுள்ளது அதாவது மாகாணங்களை இணைக்கும் அதிகாரம் ஸ்ரீலங்காவின் அரசின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதன் ஜனாதிபதிக்கு இருந்தது அதை தற்பொழுது இலங்கையின் அமைச்சரவை அங்கீகாரத்துடன் நீக்கியுள்ளது இலங்கை அரசு இது செய்வதற்கு என்ன காரணம்?மிகப்பெரிய அரசியல் தந்திரத்தை இலங்கை ஜனாதிபதியும் அவரின் பரிவாரங்களும் நிகழ்த்தியுள்ளன. 13 வது அரசிய திருத்தம் இலங்கையில் உள்ள சிறுபான்மை இனங்களுக்கு ஒரு சிறு துளி அரசியல் உருமையை வழங்கிறது .இந்த 13வது அரசியல் திருத்த சட்டம் இலங்கை மற்றும் இந்திய நாடுகளால் உருவாக்கப்பட்டு தமிழ் மக்களின் வடக்கு கிழக்கு இணைத்த மாகாணங்களாக ஆக்கி அதற்கு சில குறிப்பிடத்தக்க அதிகாரங்கள் இல்லாவிடிலும் மிகவும் குறைந்த ஒரு அதிகாரத்தை வழங்கியுள்ளது. ஆனால் இந்த திருத்த சட்டத்தை தமிழ் மக்களும் விடுதலைப்புலிகளும் ஏற்கனவே நிகரித்து இருந்தார்கள் ஆனால் EPRLF மட்டும் இதை ஏற்று வடக்கு கிழக்கு மாகாணத்தை கைப்பற்றி வரதராஜ பெருமாள் முதலமைச்சராக வந்தார் ஆனால் இந்த அதிகாரமற்ற மாகாணசபையை முதலமைச்சராக இருந்த அவர் எதுவும் பலனில்லை தமிழீழமே தீர்வு என்று அறிவித்து விட்டு இந்தியாவுக்கு தப்பி ஓடிவிட்டார். இப்படியான வரலாற்றை கொண்ட இந்த 13வது அரசியல் சட்டம் தற்பொழுது மீண்டும் இலங்கை மற்றும் இந்தியா அரசுகளால் கையில் எடுக்கப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கு மாகாணம் தற்பொழுது இரண்டாக்கப்பட்டு கிழக்கு மாகாணம்,வடக்கு மாகாணம் என பிரிக்கபட்டுள்ளது கிழக்கு மாகாணத்துக்கு தேர்தல் நடைபெற்றுள்ளது அடுத்து பலகாலமாக தேர்தலை சந்திக்காத வடக்குக்கு தேர்தல் நடத்தும் இலங்கை அரசின் நாடகம் அரங்கேற்றம் நடைபெறம் இத்தருணத்தில் மாகாணங்களுக்கான ஆதிகாரன்களை குறைத்து தேர்தலை வைக்குமாறு இனவாத குழுக்கள் வேண்டுகோளுக்கு இணங்க அதற்க்கான அதிகாரங்களை குறைக்கும் செயற்பாடுகளை இலங்கை அரசு தற்பொழுது அரங்கேற்றியுள்ளது. இதில் ஒரு பெரும் நாடகமாம் இலங்கை ஜனாதிபதிக்கு இருந்த மாகாணங்களை இணைக்கும் அதிகாரத்தை அவரிடம் இருந்து எடுத்துள்ளது இது ஒரு பெரும் அரசியல் நாடகம் அதாவது தனியொரு நபரிடம் மாகாணங்களை இணைக்கும் அதிகாரம் இருக்குமாயின் அவர் எதையும் சொல்லி தப்பிக்க முடியாது உலக நாடுகள் 13வது அரசியல் சட்டத்தை ஆதாவது மிகவும் குறைந்த அதிகாரத்தை உடைய தீர்வை வழங்குங்கள் என்று மகிந்தவுக்கு கூறினால் மகிந்த சொல்லுவார் என்னிடம் அதிகாரம் இல்லை அமைச்சரவையை கூட்டி அல்லது பராளுமன்றத்தி கூட்டித்தான் அவர்களுடைய சம்மதம் பெறவேண்டும் என்று ஒரு பந்தை எறிவார் பின் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கவில்லை நான் என்ன செய்ய என்று உலகநாடுகளிடம் தப்பித்து கொள்வார். இதுதான் இலங்கை அரச இயந்திரத்தின் நாடக அரசியல். இதிலிருந்து உலக நாடுகளுக்கு ஒரு தகவல் தெரிந்திருக்கும் உலக நாடுகளே புரிந்து கொள்ளுங்கள் இதுதான் தமிழர்களின் குரல் சிங்களம் சிறிய ஒரு அதிகாரத்தை கூட பகிர்ந்து கொள்ளாது தமிழர்களுக்கு தனி ஈழமே தீர்வாகும் என்பதை புரிந்து கொள்ளுங்கள

சரவணை மைந்தன்

தொடர்புடைய செய்தி 
 

20101119eMahindaRajapaksa02.jpg

இலங்கை அரசியலமைப்பின் மாகாணசபை முறைமை உள்ளடக்கிய 13வது திருத்தச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய ஏனைய திருத்தங்கள் குறித்து ஆராய நாடாளுமன்ற தெரிவுக்குழு ஒன்ற அமைப்பது என்றும் அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மாகாணசபைகளுக்கான காணி, பொலிஸ் அதிகாரங்கள் போன்ற சர்ச்சைக்குரிய விடயங்களையும் இந்த நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஆராயும்.
இந்த நாடாளுமன்ற தெரிவுக்குழுவை அமைப்பதற்கான கோரிக்கையை எதிர்வரும் செவ்வாய்கிழமை, ஜூன் 18ஆம் திகதி இலங்கை நாடாளுமன்ற சபாநாயகரிடம் அரசாங்கம் முன்வைக்கும்.
இலங்கை அரசின் அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாரந்தரச் செய்தியாளர் சந்திப்பின் போது இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அமைச்சரவையின் பேச்சாளர் அமைச்சர் கெகலிய ரம்புக்வெல அவர்கள் இதனை அறிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் வரக்கூடிய ஜனாதிபதிகள் கூட தமிழர்களின் தாயகமாக கொள்ளப்படும் வடக்கு, கிழக்கு மாகாணங்களை மீண்டும் இணைப்பதற்கான வாய்ப்புக்களை அமைச்சரவையின் இந்த தீர்மானம் இல்லாமல் செய்வதாக ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

 

http://www.vivasaayi.com/2013/06/blog-post_17.html

Edited by vivasaayi

  • கருத்துக்கள உறவுகள்

இதை நேற்று ஒரு செய்தியில் வாசித்தபோது பலே இராஜ தந்திரம் (அல்லது ஏமாற்றுவேலை) என்று தோன்றியது.. அந்தக்காலம் தொட்டு சிங்களவன் ஹிந்தியனுக்கு பாடம் சொல்லித் தருகிறான்.. இவர்கள் மண்டையில் ஏறியதாகத் தெரியவில்லை.. :rolleyes:

இது ஒரு பார்வையில் மகிந்தா வெளிநாடுகளுக்கு கையை விரிக்க உதவுவதற்காக என்று சொல்லப்படிருக்கு. இன்னொரு திசையில் அரசு கூட்டமைப்பின் சங்கல்பங்களின் வலிமையை சோதிக்கவாகவும் இருக்கும்.

கூட்டமைப்பு 13ம் திருத்தத்தை திருந்தினால் தேர்தலை பகிஸ்கரிப்போம் என்று சவால் விடுத்திருந்தது. இந்த நிலையில் வைத்து தேர்தலை பகீஸ்கரிப்பது உசிதமான நடவடிக்கை இல்லை. எனவே  கூட்டமைப்பு அவசரமாக பகிஸ்கரிப்போம் என்று கூறப்போவதில்லை. தேர்தல் திகதி கூட அறிக்கவில்லை. இப்போது கூட்டமைப்பு பகிஸ்கரித்தால் அதையே தான் தேர்தலை முன்னெடுக்காமைக்கும் காரணமாகும். 

 

தேவனந்தா அண்மையில் கூட்டமைப்பு தெரிவு குழுவுவை பகிஸ்கரிக்க கூடாது, போக வேண்டும் என்றவர்.  இன்று, தான் மந்திரி சபைக் கூட்டத்திற்கு போகாமல் பகிஸ்கரித்துவிட்டார்.  உண்மையில் கூட்டமைப்பு தெரிவு குழுவுக்கு போக வேண்டிய காரணங்களிலும் பார்க்க இவர் மந்த்திரி சபை கூட்டத்திற்கு போயிருந்திருக்க வேண்டிய காரணங்கள்தான் அதிகம். இந்த மந்திரிசபையில் ஒரு தெரிவுக்குழு அமைக்கவும் முடிவு எடுக்கபட்டது. அதில் யார் இருப்பர்கள் என்பது பற்றி தெரியாது. ஆனால் அதில் தேவானந்தா தெரியப்பட்டால் போவாரா? அந்த தெரிவுக்குழு தேவானந்த்தா போகாத சபை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. அவர் எந்த காரணத்துக்காக போகாமல் விட்டாரோ, அது போலவே, இன்னும் பார தூரமான திருத்தங்கள் தான் அங்கு ஆராயப்படப் போகிறது. அதில் கூட்டமைப்பு தெரியப்பட்டால், அவர்கள் போகமல்விட இடமுண்டு. அப்போது தேவானந்தா என்ன சொல்லப்போகிறார். கூட்டமைப்பை போக சொல்லபோகிறாரா அல்லது போக வேண்டான் எம்று தடுப்பாரா?

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.