Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை விடயத்தில் தெற்காசியாவின் பிராந்திய சக்தி என்னும் தகுதி நிலையை இழந்து வருகிறதா இந்தியா? - யதீந்திரா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை விடயத்தில் தெற்காசியாவின் பிராந்திய சக்தி என்னும் தகுதி நிலையை இழந்து வருகிறதா இந்தியா? - யதீந்திரா
 

9dc264f9-6353-443a-9d9b-bcc124a43fb01.jp
 

13வது திருத்தச் சட்டத்தை நீக்குவது அல்லது அதன் பெறுமதியை வலுவிழக்கச் செய்வது தொடர்பான முஸ்தீபுகள் தீவிரமடைந்திருக்கின்ற சூழலில், தமிழ் தேசியக் கூட்டமைப்பை இந்தியா அழைத்திருக்கின்றது. யூலை மாதத்தின் ஆரம்பப்பகுதியில், இந்தியா செல்வதற்கான திட்டமொன்று, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் ஏலவே இருந்தது. எனினும் தற்போது புதுடில்லி கூட்டமைப்பை அவசரமாக அழைத்துள்ளதாகவே செய்திகள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் 13வது திருத்தச் சட்டத்தை நீக்குவது தொடர்பான விடயங்கள் தொடர்பில், இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்சித், இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் பீரிசிடம் எதிர்ப்பு தெரிவித்திருந்ததாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன. ஆனால் அதன் பின்னரும் கூட, கொழும்பு நிலைமைகளில் பெரியளவில் முன்னேற்றங்கள் காணப்படவில்லை. இத்தகையதொரு பின்னணியிலேயே கூட்டமைப்பின் இந்திய விஜயம் இடம்பெறுகின்றது.

சில தினங்களுக்கு முன்னர், இந்தியா தொடர்பில் கருத்துத் தெரிவித்திருந்த சுரேஸ் பிரேமச்சந்திரன், இந்தியா புலிகளின் காலத்தில் கடைப்பிடித்த கொள்கையை தற்போதும் பின்பற்றிவருவதாகக் குறிப்பிட்டிருந்தார். இந்தியா ஈழத் தமிழர்களின் உரிமைகளை கருத்தில் கொண்டு செயலாற்றவில்லை என்னும் அபிப்பிராயம் தமிழ் மக்களின் நலனை முன்னிறுத்தி சிந்திக்கும் பலரிடமும் உண்டு.

இந்த இடத்தில் சில விடயங்களை அவதானிக்க வேண்டியிருக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரையில், முதல் அர்த்தத்தில் அதற்கு இந்தியாவின் நலனே முக்கியமானது. இந்தியாவின் நலன் என்னும் புள்ளியுடன் இணைந்த ஒன்றாகவே ஏனைய விடயங்கள் நோக்கப்படும். எந்தவொரு நாட்டினதும் வெளிவிவகாரக் கொள்கை என்பது, குறித்த நாட்டின் நலனையே அச்சாணியாகக் கொண்டு சுழலும். அந்த சுழற்சியில் தடங்கல்கள் ஏற்படும்போதே ஏனைய தரப்பினரது நலன்களை, குறித்த பலம்பொருந்திய சக்திகள் ஒரு தடைநீக்க கருவியாக்கிக்கொள்ள முயற்சிக்கும். இந்த சூத்திரத்தை, 90களுக்கு முற்பட்ட இந்தியாவின் சுழற்சியுடன் ஒப்பிட்டு நோக்குவோமாயின் நாம் சில விடயங்களை தெளிவாக புரிந்து கொள்ள முடியும். அன்று இந்தியா தனது நலன் என்னும் அச்சாணியில் சுழன்றுகொண்டிருந்தபோது, அந்த சுழற்சியில் ஜே.ஆர்.ஜெயவர்த்தன தலைமையிலான இலங்கை ஒரு தடைக்கல்லாக முட்டியது. அந்த தடைக்கல்லை அகற்றவேண்டிய தேவை இந்தியாவிற்கு ஏற்பட்டது.

இந்தப் பின்புலத்தில்தான் ஈழத் தமிழர் பிரச்சனை ஒரு பிராந்திய பிரச்சனையாக மாறியது. ஜே.ஆர் அரசாங்கத்தின் கழுத்தை நெரிக்கும் வகையிலேயே, இந்தியா, ஈழ தமிழர்களின் உரிமைகளை முன்னிறுத்தி இயங்கிய ஆயுத அமைப்புகளின் இராணுவ ஆற்றலை விஸ்தரிக்க உதவியது. உண்மையில் அன்றைய இந்தியாவின் நடவடிக்கைகள் இந்தியாவின் பிராந்திய முக்கியத்துவத்தை இலங்கைக்கு உணர்த்தும் வகையிலேயே அமைந்திருந்தன. ஏனெனில் ஜே.ஆர். தலைமையிலான கொழும்பின் ஆளும் பிரிவினர் இந்தியாவின் முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிட்டிருந்தனர். அவ்வாறு குறைத்து மதிப்பிடுவதற்கு காரணமாக இருந்தது அன்றைய இலங்கையின் அமெரிக்க சார்புநிலையாகும். அமெரிக்கா தங்களுடன் இருப்பதால், இந்தியா தங்களுக்கு எதிராக எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கத் துணியாதென்றே ஜே.ஆர் அரசாங்கம் கருதியிருந்தது. ஆனால் அந்த நம்பிக்கையை இந்தியாவின் பின்னைய நடவடிக்கைகள் பொய்ப்பித்தது. இறுதியில் வேறு வழியின்றியே, ஜே.ஆர். அரசாங்கம் இந்திய-இலங்கை ஒப்பந்தத்திற்கு இணங்கியது. இது வரலாறு.

ஆனால் பின்னர் விடுதலைப்புலிகள்- பிரேமதாச அரசாங்க கூட்டின் விழைவாக, இந்தியா இலங்கை விடயத்தில் ஒரு கொள்கைசார் தோல்வியை எதிர்கொள்ள நேர்ந்தது. இந்த இடத்தில் ஒரு விடயத்தை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டியவர்களாக இருக்கின்றோம். இந்தியாவின் பிராந்திய முக்கியத்துவத்தை கேள்விக்குள்ளாக்க முற்பட்ட ஜே.ஆர். அரசாங்கத்தை தன்வழிக்கு கொண்டுவருவதற்கான ஓர் உபாயமாகவே ஈழத் தமிழர் நலன் இந்தியாவின் பிராந்திய நலனுடன் இணைக்கப்பட்டது. ஆனால் விடுதலைப்புலிகள்-பிரேமதாச கூட்டால், இந்தியாவின் பிராந்திய நலனுடன் இணைக்கப்பட்ட ஈழத் தமிழர் நலனை விடுதலைப்புலிகள் அதிலிருந்து வெளியில் எடுத்தனர். இந்தச் சந்தர்ப்பத்தில் தமிழர் அரசியல் பிராந்திய ஒத்துழைப்பை முழமையாக இழந்து போகிறது.

இதன் மூலம் ஈழத்தமிழர் நலன் என்பது இந்திய நலனுக்கு உட்பட்ட ஒன்று என்னும் நிலைமை மாறுகிறது. அதுவரைக்கும் ஈழத் தமிழர் சார்ந்து குரல்கொடுப்பதற்கான தார்மீக பொறுப்புள்ள ஒரே நாடு தானே என்னும் இந்திய அணுகுமுறை கேள்விக்குள்ளாகியது. இது, குறிப்பாக காங்கிரஸ் இந்தியாவிற்கு விரல்களை சுட்டுக் கொண்ட அனுபவத்தையே கொடுத்தது.

 

விடுதலைப்புலிகளின் அணுகுமுறையால் ஒரு தலை கீழ் நிலைமை ஏற்பட்டது. அதுவரைக்கும் ஈழத் தமிழர் நலனை முன்னிறுத்தி கொழும்பை இறுக்கிப் பிடிக்க முற்பட்ட இந்தியா, விடுதலைப்புலிகளை இறுக்குவதற்கு அல்லது பலவீனப்படுத்துவதற்கு, கொழும்பை தழுவிக்கொள்ளும் நிலைக்கு மாறியது. 90களுக்கு பின்னர், இத்தகைய கொழும்பை தழுவிக்கொள்ளும் ஒரு கொள்கையையே இந்தியா கடைப்பிடித்து வருகின்றது.

இதற்கு முக்கிய காரணமாக இருந்தது, தமிழர் தரப்பின் அரசியலானது இந்தியாவால் நெருங்க முடியாதவொரு அமைப்பின் கட்டுப்பாட்டில் இருந்தமையாகும். ஆனால் விடுதலைப்புலிகளின் அழிவைத் தொடர்ந்து, இந்தியா தொடர்ந்தும் கொழும்பை தழுவிக் கொள்ளும் கொள்கையை கடைப்பிடிக்கக்கூடிய ஏதுநிலை காணப்படுகிறதா என்னும் கேள்வி மேலெழுந்திருக்கிறது. இந்த இடத்தில்தான் மீண்டும் ஈழத் தமிழர் பிரச்சனை, ஒரு தடைநீக்க கருவியாக மாறுமா என்னும் கேள்வியும் எழுகிறது.

இத்தகையதொரு சூழலில்தான், 13வது திருத்தச் சட்டத்தை முற்றாக அல்லது அதனை ஒரு எலும்புக்கூடாக்கும் முயற்சியில் தெற்கின் சிங்கள கடுப்போக்குவாதிகள் களமிறங்கியிருக்கின்றனர். அடிப்படையில் 13வது திருத்தச் சட்டம் எதிர்க்கப்படுவதே, அது இந்தியாவின் பலப்பிரயோகத்தில் திணிக்கப்பட்ட ஒரு விடயம் என்பதால்தான். எனவே 13வது திருத்தச் சட்டத்தின் மீதான எதிர்ப்பு என்பதே, இந்தியாவின் மீதான தெற்கின் எதிப்புத்தான். இத்தகைய நிலைமைகளை இந்தியா எவ்வாறு நோக்குகின்றது? அடுத்த ஆண்டில் தேர்தல் ஒன்றை எதிர்கொண்டிருக்கின்ற சூழலில், ஈழத் தமிழர் பிரச்சனை இந்திய அரசியலில் ஒரு முக்கிய பேசுபொருளாக மாறக் கூடும். இதன் விழைவே, பி.ஜே.பி ஈழத் தமிழர் பிரச்சனை குறித்து அதிக கரிசனை எடுத்துக் கொள்கிறது.

இந்தியாவின் மென்போக்கு - கடும்போக்கு என்பதெல்லாம் அதன் நலன்சார் கொள்கை முன்னெடுப்பில்தான் தங்கியிருக்கிறது. இந்தியாவின் சமீபகால அணுகுமுறை சற்று இறங்கிச் செல்வது போன்று தோற்றமளிப்பதால், இலங்கை தொடர்பான விடயத்தில் இந்தியா தனது பிராந்திய முக்கியத்துவத்தை இழந்துவருதாக கருத முடியுமா? அன்று ஜே.ஆர் தலைமையில் அணிதிரண்டிருந்த கொழும்பின் ஆளும் பிரிவினர், அமெரிக்க சார்புநிலையை காட்டியது போன்று, இன்றைய கொழும்பின் ஆளும் பிரிவினர் சீன சார்பை வெளிப்படுத்தி வருகின்றனர். 1987இல் இந்திய இலங்கை ஒப்பந்தம் நிகழ்ந்தபோது, சீனா, அமெரிக்க சார்புநிலையில் இருந்தது. இந்தியா, சோவியத் சார்புநிலையில் இருந்தது. அன்றைய சூழலில், இலங்கையின் மீதான இந்திய நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தும் வகையில் சீனா மற்றும் அமெரிக்கா செயலாற்றக்கூடிய சூழல் இருந்தது. ஆனால் அப்படியான எந்தவொரு தலையீட்டையும் அமெரிக்காவோ அல்லது சீனாவோ மேற்கொள்ளவில்லை.

இன்றைய இந்தியா, அமெரிக்காவின் மிக முக்கிய மூலோபாய பங்காளியாக இருக்கிறது. அன்று முற்றிலும் சாதகமான சூழல் நிலவியபோது கூட, இந்தியாவை தடுத்து நிறுத்த முற்படாத சீனா, இன்றைய இந்தியாவின் இலங்கை தொடர்பான நகர்வுகளில் தலையீடு செய்ய முற்படுமா? இலங்கையை முன்னிறுத்தி, இந்தியாவின் பிராந்திய முக்கியத்துவத்தில் நேரடியாக தலையீடு செய்ய முயலுமா? இலங்கை தொடர்பான விடயத்தில் நேற்று மட்டுமல்ல இன்றும் இந்தியாவின் முக்கியத்துவம் குறைந்துவிடவில்லை. ஆயினும் இந்தியாவின் இன்றைய சுழற்சியில், இன்றைய இலங்கை எவ்வாறு தடைக்கல்லாக அமையும் என்பதை பொறுத்தே இந்தியாவின் முகம் வெளிப்படும்.

http://www.ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=10&contentid=9dc264f9-6353-443a-9d9b-bcc124a43fb0

  • கருத்துக்கள உறவுகள்
இன்றைய இந்தியா, அமெரிக்காவின் மிக முக்கிய மூலோபாய பங்காளியாக இருக்கிறது. அன்று முற்றிலும் சாதகமான சூழல் நிலவியபோது கூட, இந்தியாவை தடுத்து நிறுத்த முற்படாத சீனா, இன்றைய இந்தியாவின் இலங்கை தொடர்பான நகர்வுகளில் தலையீடு செய்ய முற்படுமா? இலங்கையை முன்னிறுத்தி, இந்தியாவின் பிராந்திய முக்கியத்துவத்தில் நேரடியாக தலையீடு செய்ய முயலுமா? இலங்கை தொடர்பான விடயத்தில் நேற்று மட்டுமல்ல இன்றும் இந்தியாவின் முக்கியத்துவம் குறைந்துவிடவில்லை. ஆயினும் இந்தியாவின் இன்றைய சுழற்சியில், இன்றைய இலங்கை எவ்வாறு தடைக்கல்லாக அமையும் என்பதை பொறுத்தே இந்தியாவின் முகம் வெளிப்படும்.

 

பெரீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈய இந்தியா...... :o  

 

அதுக்கொரு முகம்! :icon_mrgreen:

 

துண்டு, துண்டாக உடையும் காலம் வெகு விரைவில் வரட்டும்!

 

அதுவே அயல் நாடுகளுக்கு, விமோசனமாக அமையும்!

 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் பிரச்சனையை அறிவுபூர்வமாகச் சிந்திக்காது தனது பிராந்திய நலன்களில், பழிவாங்கும்குணத்துடன் கையாணடதன் தோல்விநிலையே தற்போது இந்தியாவுக்கு இருக்கும் தர்மசங்கடமான சூழல். இதிலிருந்து இந்தியா வெளிவரமுடியாது. இன்னமும் இந்தியாவுக்குப் பாதகமான சூழலை சீனாவும் அதனோடு இணைந்த சிங்களமும் உருவாக்குவதில் முண்ணணியாகவே இருக்கும். இந்தியா குட்டையைக் குழப்புகிறேன்பேர்வழி என இன்னுமொரு போராளிக்குழுவை உருவாக முனையும். ஆனால் கூத்தமைப்பு அவிஞ்சுபோய் இருப்பதுபோல் இனிமேலும் தமிழர்தரப்பு  இந்தியாவிடம் அவியும் என்பது சந்தேகமே. இந்தியா இப்போது கையாலாத ஒரு நாடு அவ்வளவே. மேற்படி இந்தியா துண்டுதுண்டாக உடைய இன்னமும் காலமெடுத்தாலும் அது நடந்தேதீரும்.

 

Edited by Elugnajiru

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.