Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மரியான் படம் பார்த்தேன்.

Featured Replies

ஏறத்தாள ஐந்து வருடங்களின் பின்னர் ஒரு தமிழ்ப்படத்தினைத் திரையரங்கு சென்று பார்த்தேன். ஜோ.டீ.குரூஸ் மீதும், தனுஸ் மீதும், ஏ.ஆர்.றகுமான் மீதும் இருந்த நம்பிக்கையில் தான் இந்த முடிவினை எடுத்திருந்தேன். 
 
படத்தில் நடித்தவர்கள் அத்தனைபேரும் நன்றாக நடித்திருந்தார்கள்--ஆபிரிக்க நடிகர்கள் உள்ளடங்கலாக. காட்சியமைப்பு பல இடங்களிpல் இரசிக்கும் படி இருந்தது. கதை காத்திரமான கருவுடையதாக இருந்தது. அப்போ படம் பிடித்ததா?
 
திரையரங்கில், நான் அவதானித்தவரை, ஒன்றல்ல இரண்டல்ல ஆறு இடங்களில் நடிகர்கள் உயிரைப் பிழிந்து ஒரு நெகிழ்ச்சியினை பார்வையாளர்களிடம் பெறுவதற்காக நிகழ்த்திய காட்சிகளில், பார்வையாளர்களிடம் இருந்து சத்தமாக 'க்ளுக்' என்ற சிரிப்பொலி எழுந்தது. முதற்தடவை இது நடந்தபோது, எனக்குக் குழப்மாக இருந்தது. அதாவது, எனது கண்கள் காட்டப்படும் காட்சி நெகிழ்ச்சி வேண்டி நடிக்கப்படுகிறது என்பதைக் கூறின. காதுகள் பார்வையாளரின் சிரிப்பொலியினைக் கேட்டன. மூளை இந்தச்சூழலிற்கு என்ன எதிர்வினை என்று வினவியது. அடுத்த கணம், அக்காட்சி எனக்குள் என்ன உணர்வினை ஏற்படுத்துகிறது என்று தேடினேன். எதுவுமில்லை, வெறுமையாகக் கிடந்தது. நான் குறிப்பிடும் இந்த ஆறு காட்சிகளும் எந்த நெகிழ்வையும் எனக்குள் உருவாக்கவில்லை. வெறுமை மட்டுமே கிடந்தது. பலரிற்கு, அது ஒரு படி மேற்சென்று சிரிப்பாய் வந்தது. அப்போது திடீரென ஒன்று ஞாபகம் வந்தது, நகைச்சுவை என்பதன் வரைவிலக்கணமே முரணில் தான் பிறக்கிறது. அந்தவகையில் சீரியஸ் காட்சி பிசுபிசுத்தபோது பார்வையாளர் சிரித்தது சரி தான்.
 
குறிப்பாக ஒரு காட்சி. பயங்கரமான ஆயுததாரிகளின் பிடியில் இருந்து கதாநாயகன் தப்பிக்க முயல்கிறார். சுவரேறிக்குதித்துக் குட்டிச்சுவர் ஒன்றன் பின்னால் ஒளித்திருந்து, மெல்லத் தனது தலையினை உயர்த்தி, கண்கள் வரை வெளித்தெரியப் பயத்துடன் காவலாளிகளை நொடிப்பொழுது நோட்டம் விடுகிறார். பின் தலையினைக் கீழிறக்கிப், பின் மறுபடியும் கண்கள் வரை தலையினை உயர்த்தி நோட்டம் விடுகிறார். இந்தக்காட்சியில் இயக்குனர் பார்வையாளரில் எதிர்பார்ப்பது ஒரு நுனிக்கதிரை அனுபவத்தை, பரபரப்பை, பயத்தை, ஆனால் பார்வையாளர்கள், குழந்கைளிறிகுப் பெரியவர்கள் விளையாட்டுக் காட்டும் 'பிக்கபூ(peekaboo)' விதமாகக் கதாநாயகன் ஒளித்து விளையாடுகிறார் என்பதுபோல் கெக்கட்டம் கொட்டிச் சிரித்தார்கள். ஆனால் பார்வையாளர்களைக் குற்றம் சொல்ல முடியவில்லை.
 
எனது அபிப்பிராயத்தில், இந்தப் படத்தின் ஒலியினை முழதாக மூடிவிட்டுப் படம் பார்த்தால், படம் இருப்பதைவிடச் சிறப்பாக இருக்கும் என்று தோன்றுகிறது. அதுபோல் பின்னணி இசையினை (பி.ஜி.எம்) தனியாகக் காட்சிகளில் இருந்து பிரித்து ஒலியாக மடடும் கேட்டால் அந்த இசையும் இரசிக்கும் படி இருக்கும் என்றே தோன்றுகின்றது. ஆனால் இரண்டும் சேர்ந்தபோது சகிக்கமுடியவில்லை. இந்தப் படத்தின் மாபெரும் வன்முறையாளன், இசையமைப்பாளர் றகுமான் என்பதே எனது அபிப்பிராயம். வில்லன்கள் செய்த ஓரிரு கொலைகளோடு ஒப்பிடுகையில் றகுமான் கொலைசெய்த காட்சிகள் ஏராளம். காட்சிகளின் ஆன்மா, நடிகர்கள் உயிரைக் கொடுத்து நடித்திருந்தும், ஒளிப்பதிவாளர் கோணம்பார்த்துப் படம்பண்ணியிருந்தும், இசையால் கொலைசெய்யப்பட்டது. என்னைப் பொறுத்தவரை இந்தப் படத்தின் ஏமாற்றத்தில் 70 வீதம் றகுமானால் நடந்தது.
 
றகுமானின் பேட்டிகள் பார்க்க எனக்கு றொப்பப் பிடிக்கும். அழகாக அமைதியாகப் பேசுவார். அப்படியொரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார், ஹிந்தியில் தான் இசையமைக்கும்போது, ஹிந்தி ரசிகர்களின் கலாச்சாரப்பின்னணி சார்ந்து தான் அதிக சிரத்தை எடுத்து அந்தப் பின்னணிக்கு மதிப்புக் கொடுத்து இசையமைப்பேன் என்று. அதைக் கேட்டபோது எனக்கு றகுமானில் மேலும் மதிப்புக் கூடியது, ஆனால் இந்தப் படத்தில், அந்தச் சிரத்தையினை கிஞ்சித்தும் றகுமானிடம் காணமுடியவில்லை. (ஒருவேளை தமிழன் என்றால் ஹோம்வேர்க் பண்ணாது இசையமைக்கலாம் என்றும் கேணையர்கள் என்றும் றகுமான் நினைக்கிறாரோ என்னமோ!)கதையும் நடிகர்களும் என்ன செய்கிறார்கள் என்பது பற்றி எந்த அக்கறையும் இன்றி, வெள்ளைக்காரன் ரசிக்கவேண்டும் என்பதற்காக இசையமைத்துள்ளார் றகுமான். இதனால் படம் கொலைசெய்யப்படுகிறது. சீரியஸ் காட்சிகள் வடிவேலு காமடியாகி பார்வையாளர்கள் சிரித்துக்கொண்டிருந்தார்கள். ஓரிரு காட்சிகளில் இசை நன்றாக ஒத்துப்போனது தான், ஆனால் அதுகூட காட்சி இசைக்கு ஏதுவாக அமைந்ததால் நிகழ்ந்ததே அன்றி இசை காட்சிக்காகப் பிறக்கவில்லை. என்னைப் பொறுத்தவரை, இந்தப் படத்திற்கு இசையமைப்பதற்கு யாரேனும் ஒரு றெயில் பாடகனைப் பிடித்திருந்தால், அல்லது கானாப்பாடகனைப் பிடித்திருந்தால் கூட படம் பல படி உயர்ந்திருக்கும். றகுமான் படத்தின் மாபெரும் தோல்வி. ஓன்றைக் குறிப்பிடவேண்டும், படத்திற்குத் தான் தோல்வியே அன்றி, றகுமானிற்கு அல்ல, ஏனெனில் இசையினைப் படத்தின் காட்சிகளில் இருந்து பிரித்துக் கேட்டால் நிச்சயம் நன்றாகவே இருக்கும். 
 
 
படத்தின் ஏமாற்றதில் 70 வீதத்தை றகுமானில் போட்டுவிட்டு, மிகுதியில் 10 வீதம் அனுபவமற்ற இயக்குனரில் போடலாம். கனதியான ஒரு கதைநிலத்தை எடுத்து, அதை எங்கே உழுவது எங்கு நீர்ப்பாய்ச்சுவது என்று தெரியாது, எல்லாத்தையும் எடுத்து, எடுத்தவற்றைக் கோர்க்கத்தெரியாது சொதப்பியிருந்தாhர். ஏதோ சீரியல் பார்க்கும் நான்கு சாதா மனிதர்கள் சுஹாசினி மணிரத்தினத்தினத்துடன் சேர்ந்து திரைக்கதையினைத் திட்டமிட்டதுபோன்ற ஒரு உணர்வு தோன்றியது. தனுஷ; பார்வதி உட்பட அனைத்து நடிகர்களும் மிகச்சிறப்பாக நடித்தும், படம் பர்த்து முடித்தபோது வெறுமையே மிஞ்சியது—ஓரிரு காட்சிகள் தவிர. சுடப்பட்ட மீனவர் காட்சி, மற்றும் பாலையில் உழன்று கனன்று போராடி குற்றுயிரும் குலையுயிருமாய் கடலைப் பார்க்கையில் தனுஷஷ; பேசும் 'ஆத்தா' என்ற ஒற்றைச் சொல் முதலவற்றை உதாரணமாகக் குறிப்பிடலாம்.
 
ஜோ.டீ.குரூஸ் உடைய நாவல்கள் (ஆழிசூழ் உலகு மற்றும் கொற்கை) நான் இன்னமும் வாசிக்கவில்லை. அவரது எழுத்துக்கள் எதையும் இதுவரை வாசிக்கவில்லை. ஆனால் அவர் சார்ந்து பலர் வியந்து பேசியதை வாசித்தேன். அவரது பேட்டி ஒன்று பார்த்தேன். என்னையறியாது அவரில் எதிர்பார்;ப்பு அதிகமானது. நெய்தல் நில மக்களின் பேச்சு வெளிப்படையாய்த் திறமாய் வசனங்களில் வருமென்றெதிர்பார்த்துப் போனேன். ஆப்படியெதுவும் என்னால் உணரமுடியவில்லை. ஏமாற்றம். யாராவது இவரது நாவல்கள் வாசித்திருப்பின் அவை பற்றிய உங்கள் அபிப்பிராயத்தை அறியத்தாருங்கள்.
 
இறுதியாக, இப்போது இந்தப் படம் பற்றி மற்றையவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று அறிவதற்காக விமர்சனங்களைத் தேடினேன். ஓன்று தான் கிடைத்தது. அது படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது என்று சொல்லியது. எனவே எனக்குப் படம் பிடித்ததா இல்லையா என்பது எனது பிரச்சினை மட்டும்தான். படம் எடுது;தவர்களும் பணம்போட்டவர்களும் தொடர்ந்தும் இப்படியே படம் எடுக்கத் தான் முனைவர்ர்கள் என்பது புரிகிறது.
 
ஆனால், எனக்கு மிகப்பிடித்த இயக்குனரான வெற்றிமாறனின் கருத்தும் மேற்படி விமர்சனத்தில் இருந்தது. வெற்றிமாறன் கூறுகிறார் மரியான் படத்தைப் பொறுத்தவரை ஏ.ஆர்.றகுமான் தான் hero என்று. இதை வஞ்சப்புகழ்ச்சி என்று எடுத்துக்கொள்வதா அல்லது உண்மையில் வெள்ளையர் மோகம் இந்தியாவில் வெற்றிமாறன் போன்றவர்களையும் தின்றுவிட்டதா என்பது உண்மையில் எனக்குப் புரியவில்லை.

Edited by Innumoruvan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.