Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்காவில் முஸ்லிம்களும் சிங்கள-பௌத்த தேசியவாதிகளும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்காவில் முஸ்லிம்களும் சிங்கள-பௌத்த தேசியவாதிகளும்
[ ஞாயிற்றுக்கிழமை, 15 செப்ரெம்பர் 2013, 12:40 GMT ] [ நித்தியபாரதி ]


"இது சிங்கள-பௌத்த நாடு. நாங்கள் பௌத்த கோட்பாடுகள், கலாசாரம், நம்பிக்கைகள் மற்றும் வாழ்வு முறைமை போன்றவற்றைப் பாதுகாப்பதற்காக செயற்பட வேண்டும்" என சிங்கள ராவயவைச் சேர்ந்த செயற்பாட்டாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு The Diplomat Magazine என்னும் இணைய ஊடகத்தில் Sudha Ramachandran* எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி.

சிறிலங்காவைச் சேர்ந்த சிங்கள-பௌத்த தேசியவாதிகள், சிறுபான்மையினருக்கு எதிரான தமது யுத்தத்தின் புதிய வடிவம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர். சிறிலங்காத் தீவின் சிறுபான்மை மக்களான தமிழ் மக்கள் மீது பல பத்தாண்டுகளாக தமது யுத்தத்தை மேற்கொண்டு வந்த சிங்கள-பௌத்த தேசியவாதிகள் தற்போது பிறிதொரு சிறுபான்மையினரான முஸ்லீம்கள் மீது யுத்தத்தை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளனர்.

2011லிருந்து சிறிலங்காவில் உள்ள பள்ளிவாசல்கள், முஸ்லீம்களுக்குச் சொந்தமான வர்த்தக நிலையங்கள் மீது பௌத்த பிக்குகளின் தலைமையில் சிங்களக் காடையர்களால் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. கடந்த ஆண்டு ஏப்ரலில், சிறிலங்காவின் வர்த்தகத் தலைநகரான கொழும்பிலிருந்து வடக்காக 150 கிலோமீற்றர் தொலைவிலுள்ள தம்புள்ள பள்ளிவாசல் மீது சிங்களக் காடையர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

இவ்வாண்டின் ஆரம்பத்தில், சிங்கள-பௌத்த குழுவான பௌத்த சக்தியின் இராணுவம் எனக் கூறப்படும் பொது பல சேன, ஹலால் தரப்படுத்தப்பட்ட உணவு முறைமை நிறுத்தப்பட வேண்டும் எனக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது. ஒரு மாதத்தின் முன்னர், கொழும்பிலுள்ள புதிய பள்ளிவாசல் ஒன்றை மூடுமாறு சிங்களக் காடையர் குழுவொன்று முஸ்லீம் மக்கள் மீது வன்முறையை மேற்கொண்டது.

முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறைகள் அண்மைய மாதங்களில் தொடர்ச்சியாக நடைபெறுவதுடன், பயங்கரமானவையாகவும் காணப்படுதாக கொழும்பிலுள்ள முஸ்லீம் வர்த்தகர் ஒருவர் தெரிவித்துள்ளார். இவ்வாண்டில் மாத்திரம் முஸ்லீம்களைக் குறிவைத்து 160 தாக்குதல்கள் வரை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

சிறிலங்காவின் மொத்த சனத்தொகையான 20 மில்லியன் மக்களில் 70 சதவீதத்தினர் பௌத்தர்கள். இவர்கள் அனைவரும் சிங்களவர்கள். இந்துக்கள், முஸ்லீம்கள் மற்றும் கிறீஸ்தவர்கள் போன்றவர்கள் சிறிலங்காவில் வாழும் பிரதான சிறுபான்மை மதத்தவர்களாவர். இந்துக்கள் அனைவரும் தமிழர்களாக உள்ள அதேவேளையில், முஸ்லீம்கள் மற்றும் கிறீஸ்தவர்கள் சிங்களம் அல்லது தமிழ் மொழியைப் பேசுகின்றனர். இது அவர்கள் வாழும் இடத்தைப் பொறுத்து அமைகிறது.

சிறிலங்காவானது பௌத்த நாடாக இல்லாத போதிலும், 1978ல் உருவாக்கப்பட்ட இதன் அரசியல் யாப்பில், அனைத்துக் குடிமக்களும் சுதந்திரமாக தமக்கு விரும்பிய மதத்தைப் பின்பற்றலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ள அதேவேளையில், இந்த அரசியல் யாப்பில் பெரும்பாலான இடங்களில் பௌத்த மதத்திற்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. 'புத்த சாசனத்தைப் பாதுகாக்க வேண்டியது இந்த நாட்டின் கடமையாகும்' என இந்த அரசியல் யாப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் சிறிலங்காவை ஆண்ட அரசாங்கங்கள் தாம் பௌத்தத்தின் பாதுகாவலர்கள் எனப் பிரகடனப்படுத்தினர். பௌத்தத்தின் முக்கிய கோட்பாடான சமாதானத்தை நாட்டில் நிலைநிறுத்துவதற்குப் பதிலாக சிறிலங்கா ஆட்சியாளர்கள் புத்த பிக்குகளுக்கு புத்த சிலைகள் மற்றும் விகாரைகள் போன்றவற்றைப் புதிதாகக் கட்டி அவற்றைப் பரிசாக வழங்கினர்.

இதேவேளையில், பௌத்த பிக்குகளின் தலைமையில் நாட்டில் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகள் தொடர்பில் ஆட்சியாளர்கள் பாராமுகமாகச் செயற்பட்டனர். இவ்வாறான வன்முறைகள் எதனையும் இவர்கள் கண்டுகொள்ளாது மறைமுகமாக இவற்றுக்கு ஆதரவு வழங்கினர். எடுத்துக்காட்டாக, கடந்த மாதம் கொழும்பில் ஏற்பட்ட வன்முறையின் போது எந்தவொரு புத்த பிக்கும் கைதுசெய்யப்படவில்லை. கடந்த ஆண்டில் தம்புள்ள பள்ளிவாசல் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு அது அழிவடைந்த போதிலும், எவரும் கைதுசெய்யப்படவில்லை. பதிலாக, பள்ளிவாசல்களை வேறிடங்களுக்கு மாற்றவேண்டும் என காடையர்கள் கோரிக்கை விடுத்த போது சிறிலங்கா அரசாங்கம் இக்கட்டளைக்கு பணிந்து செயற்பட்டது.

"முஸ்லீம்களுக்கு எதிரான சில வன்முறைகளில் முஸ்லீம்களின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஹலால் சான்றுபடுத்தப்பட்ட உணவுகள் நிறுத்தப்பட வேண்டும் என்கின்ற கோரிக்கையானது பொருளாதாரத்துடன் தொடர்புபட்டது" என பெயர் குறிப்பிட விரும்பாத முஸ்லீம் வர்த்தகர் குறிப்பிட்டுள்ளார்.

இறைச்சிக்கான ஹலால் சான்றுபடுத்தலுக்கான கட்டணத்தை சிறிலங்காவின் இஸ்லாமிய கல்விமான்களின் பிரதான அமைப்பான All Ceylon Jamiyyathul Ulema - ACJU அறவிடுகிறது. இதற்கு சிங்கள வர்த்தகர்கள் மற்றும் நுகர்வோரும் கட்டணத்தை வழங்க வேண்டியுள்ளது.

"முஸ்லீம்கள் மட்டுமே இறைச்சிக்கான ஹலால் சான்றுபடுத்தலைப் பெற்றுக் கொள்ள வேண்டும். முஸ்லீம்களால்லாதவர்களுக்கு இந்தச் சான்று தேவைப்படாத போதிலும் இவர்களும் இதற்கான கட்டணத்தைச் செலுத்தவேண்டியுள்ளனர்" என பொது பல சேனவின் நிறைவேற்று இயக்குனரான டிலந்த விதனேஜ் தெரிவித்துள்ளார்.

முஸ்லீம்களுக்குச் சொந்தமான இறைச்சி விற்பனை நிலையங்கள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. "பௌத்தர்களின் சமய நம்பிக்கைக்கு எதிராக முஸ்லீம்கள் செயற்படுகின்றனர். இதனை சிங்களவர்கள் சவால்கொள்ள வேண்டும்" என முஸ்லீம்களின் இறைச்சி விற்பனை நிலையங்களின் மீதான தாக்குதலை, கால்நடைகள் மத நோக்கங்களுக்காக பலியிடப்படுவதை அரசியல் யாப்பில் தடுக்கப்பட வேண்டும் எனக் கோரும் சிங்கள-பௌத்த நிறுவனமான 'சிங்கள ராவய' வைச் சேர்ந்த செயற்பாட்டாளர் ஒருவர் நியாயப்படுத்தியுள்ளார்.

"இது சிங்கள-பௌத்த நாடு. நாங்கள் பௌத்த கோட்பாடுகள், கலாசாரம், நம்பிக்கைகள் மற்றும் வாழ்வு முறைமை போன்றவற்றைப் பாதுகாப்பதற்காக செயற்பட வேண்டும்" என சிங்கள ராவயவைச் சேர்ந்த செயற்பாட்டாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

'பெரும்பான்மையினரின் கலாசாரத்தை மதிக்குமாறு மட்டுமே நாங்கள் முஸ்லீம்களைக் கோருகிறோம்' என விதனேஜ் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காத் தீவானது சிங்கள-பௌத்தர்களின் தேசம் என்பதை வாதிடுவதற்கும் நியாயப்படுத்துவதற்கும் சிங்கள-பௌத்த கடும்போக்காளர்கள் மகாவம்சம் என்கின்ற ஆவணத்தை முன்வைக்கின்றனர். இந்த மகாவம்சமானது கி.பி ஆறாம் நூற்றாண்டில் பௌத்த பிக்குவான மகாநாம என்பவரால் எழுதப்பட்டது. இது பின்னர் 16 தொடக்கம் 18ம் நூற்றாண்டுகளில் திருத்தி எழுதப்பட்டது. மகாவம்சமானது ஒரு கட்டுக்கதையாகவே காணப்படுகிறது.

சிங்கள பௌத்தர்களைப் பொறுத்தளவில் மகாவம்சத்தின் படி இதில் சிங்களதீப – சிங்களவர்களின் தேசம்- மற்றும் தம்பதீப – பௌத்த மதத்திற்குரியது- போன்ற கோட்பாடுகள் குறிப்பிடப்பட்டுள்ளதால் சிறிலங்காத் தீவானது தமக்கு மட்டுமே சொந்தமானது என நம்புகின்றனர்.

மகாவம்சத்தில் இரண்டு முக்கிய கட்டுக் கதைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதாவது இதில் சிங்கள இனத்தின் நிறுவுனரான இளவரசர் விஜய மற்றும் கி.மு 2ம் நூற்றாண்டில் இடம்பெற்ற துட்டுகாமினி-எல்லாளன் யுத்தம் ஆகிய இரு சம்பவங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இவ்விரண்டும் பௌத்த சிங்கள கருத்தியலை சான்றுபடுத்துவதாக பௌத்தர்கள் நம்புகின்றனர்.

மகாவம்சத்தின் படி, இளவரசர் விஜய என்பவர் சிங்கத்திற்கும் மனித உயிரினத்தைச் சேர்ந்த இளவரசி ஒருவருக்கும் பிறந்த சிங்கபாபு என்பவரின் மகனாவார். சிறிலங்காவுக்கு விஜயாவும் 700 பேரும் வருகை தந்ததாகவும், இதனைத் தொடர்ந்து பௌத்தமானது சிறிலங்காவில் தோன்றியதாகவும் மகாவம்சத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. விஜய சிறிலங்காவில் காலடி எடுத்த வைத்த போது புத்தர் மோட்ச நிலைக்குச் சென்றதாகவும் இதனை பௌத்தத்திற்கும் சிங்கள இனத்திற்கும் இடையிலான தொடர்பு என மகாவம்சம் குறிப்பிட்டுள்ளது.

சிங்கள அரசரான துட்டகைமுனுவுக்கும் தமிழ் அரசரான எல்லாளனுக்கும் இடையில் இடம்பெற்ற யுத்தத்தில் எல்லாள மன்னன் தோற்கடிக்கப்பட்டதாகவும் மகாவம்சத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்மூலம் சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையிலான யுத்தமானது பல நூற்றாண்டுகள் பழமையானது என்பதை மகாவம்சம் சுட்டிக்காட்டுகிறது.

இவ்வாறான நிலையில் பல பத்தாண்டுகளாக சிறிலங்காவில் வாழும் சிறுபான்மைத் தமிழ் மக்கள் மீது சிங்களவர்கள் யுத்தம் நடாத்தினர். 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் சிறிலங்காவில் வர்த்தகம் மற்றும் வியாபாரத்தில் செல்வாக்குச் செலுத்தும் முஸ்லீம்கள் மீது பௌத்த கடும்போக்காளர்கள் தமது வன்முறைகளைக் கட்டவிழ்த்து விடத் தொடங்கினர்.

"நாங்கள் முஸ்லீம்களின் தீவிரவாதம் தொடர்பாக கவனம்செலுத்துகிறோம்" என பொது பல சேன ஏன் முஸ்லீம்கள் மீதான தாக்குதலை மேற்கொள்கின்றனர் என்பதை இதன் நிறைவேற்று இயக்குனர் விதனேஜ் நியாயப்படுத்துகிறார். சிறிலங்கா அரசாங்கத்தின் ஆதரவுடனேயே பௌத்த காடையர்கள் முஸ்லீம்களின் மீதான வன்முறைகளைக் கட்டவிழ்த்து விடுகின்றனர். பொது பல சேனவானது சிறிலங்காவின் அதிபர் மகிந்த ராஜபக்சவின் சகோதரரும் பாதுகாப்புச் செயலருமான கோத்தபாயவின் ஆதரவுடன் செயற்படுவதாக குற்றம் சுமத்தப்படுகிறது.

"சிறிலங்கா அரசாங்கமானது தீவிரவாத பௌத்த அமைப்புக்களுடன் இணைந்து நாட்டில் பௌத்தவாதத்தைக் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கையில் ஈடுபடுகிறது" என முஸ்லீம் வர்த்தகர் குறிப்பிட்டார். பள்ளிவாசல்கள், தேவாலயங்கள், இந்து ஆலயங்கள் உள்ள நிலங்கள் உட்பட பெரும்பாலான நிலங்களை 'பௌத்த பிரதேசங்கள்' என சிறிலங்கா அரசாங்கத்தின் தொல்பொருளியல் திணைக்களம் ஆவணப்படுத்தியுள்ள போதிலும், பௌத்தர்களுக்குச் சொந்தமற்ற நிலங்களை பௌத்த காடையர்கள் தமது நிலங்கள் எனக் கூறி அவற்றை கையகப்படுத்தும் முயற்சிகளில் இறங்கியுள்ளனர். இதனால் இவர்கள் வன்முறைகளை கட்டவிழ்த்து விடுகின்றனர். சிறிலங்காத் தீவில் கிறீஸ்தவர்கள், இந்துக்கள் போன்றோர் வணங்கும் இடங்களைக் குறிவைத்து பௌத்த காடையர்களை வன்முறைகளை மேற்கொள்கின்றனர்.

இவ்வாறான வன்முறைகள் ஊடகங்களில் முதன்மைப்படுத்தப்படுகின்ற அதேவேளையில் நாட்டில் மதங்கள் அனைத்தையும் மதித்து ஒற்றுமையுடன் செயற்படுவதற்கான சில முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. நாட்டில் ஏற்பட்டுள்ள மதத் தீவிரவாதத்தை எதிர்த்து மெழுகுதிரி ஏற்றி அமைதியான பேரணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

*Dr. Sudha Ramachandran is an independent journalist/researcher based in Bangalore, India. She writes on South Asian political and security issues.


http://www.puthinappalakai.com/view.php?20130915109052

  • கருத்துக்கள உறவுகள்
வரலாற்றுச்சுவடுகள்: இலங்கை தமிழர் வரலாறு 
 
 
வட இந்தியாவில் இருந்து இலங்கைக்குச் சென்ற விஜயன் என்ற இளவரசன்தான், முதல் சிங்கள அரசை நிறுவியவன் என்று, சிங்களரின் வரலாற்று நூலான மகாவம்சம் கூறுகிறது.
 
இந்தியாவின் இதிகாசங்களான "ராமாயணம்'', "மகாபாரதம்'' போன்றது பாலி மொழியில் எழுதப்பட்ட "மகாவம்சம்'' என்ற நூல். இதை தங்களின் வேத புத்தகம் போல சிங்களர்கள் மதிக்கிறார்கள்.
 
இதை தங்கள் "வரலாறு'' என்று சிங்களர்கள் கூறினாலும், நம்ப முடியாத கட்டுக் கதைகளும் இதில் உண்டு.
 
விஜயன்
 
இலங்கையில் சிங்கள வம்சத்தை தோற்றுவித்தவன் - இலங்கையின் முதல் சிங்கள மன்னன் விஜயன் என்று மகாவம்சம் கூறுகிறது.
 
விஜயன் பற்றி மகாவம்சத்தில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது:-
 
"வட இந்தியாவில் உள்ள வங்காளம், ஒரிசா ஆகிய பகுதிகள் ஒரு காலத்தில் லாலாதேசம் என்று அழைக்கப்பட்டது. இந்த ராஜ்ஜியத்தை ஆண்ட மன்னன் பெயர் சிங்கபாகு. இவர் சிங்கத்துக்கும் ஒரு ராஜகுமாரிக்கும் பிறந்தவர்!
 
பிற்காலத்தில் இவருக்கு உண்மை தெரிகிறது. ஒரு குகையில் இருந்த சிங்கத்தை (தன் தந்தையை) கண்டுபிடித்து தலையை வெட்டி துண்டிக்கிறார்.
 
சிங்கபாகு, சிகாசிவாலி என்ற பெண்ணை மணந்து அவளை பட்டத்து ராணி ஆக்குகிறார். இவர்களுக்கு 16 முறை இரட்டைக் குழந்தைகள் பிறக்கின்றன! (அதாவது 32 குழந்தைகள்)
 
இந்தக் குழந்தைகளில் மூத்தவன் விஜயன். அவனை பட்டத்து இளவரசனாக சிங்கபாகு நியமிக்கிறார்.
 
மக்கள் புகார்
 
விஜயன் மிகவும் கொடூரமானவன். அவன் செய்த அட்டூழியங்கள் பற்றி, மன்னனிடம் மக்கள் முறையிடுகிறார்கள். மகனைத் திருத்த முயற்சிக்கிறார், சிங்கபாகு. ஆனால் விஜயன் திருந்தவில்லை. நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு, மக்களைத் துன்புறுத்துகிறான்.
 
அவன் அட்டூழியங்கள் எல்லை மீறிப்போனதால், மன்னனிடம் மக்கள் மீண்டும் முறையிடுகிறார்கள். "விஜயனுக்கு மரண தண்டனை விதியுங்கள்'' என்று வற்புறுத்துகிறார்கள்.
 
இதன் காரணமாக, விஜயனையும், அவன் நண்பர்கள் 700 பேர்களையும் நாடு கடத்துகிறார், மன்னர். இவர்களை மூன்று கப்பல்களில் ஏற்றி, "எங்காவது போய் பிழைத்துக் கொள்ளுங்கள். இனியாவது திருந்தி வாழுங்கள்'' என்று புத்திமதி கூறி அனுப்பி வைக்கிறார். மூன்று கப்பல்களும் இலங்கையை அடைகின்றன.
 
அடைக்கலம் கொடுத்த அழகி  
 
விஜயன் கப்பலை விட்டு இறங்கி, இலங்கைத் தீவில் காலடி வைக்கிறான். இது கி.மு. 543-ல் நடந்தது.
 
விஜயன் இறங்கிய இடம் அழகிய இயற்கைக் காட்சிகள் கொண்டது. அங்கு ஒரு மரத்தடியில் குவேனி என்ற பெண் அமர்ந்திருக்கிறாள். இவள் ராட்சச குலத்தைச் சேர்ந்தவள்.
 
(குவேனி என்ற சொல், கவினி என்ற தமிழ்ச் சொல்லின் திரிபு ஆகும். கவினி என்றால் "பேரழகு படைத்தவள்'' என்று பொருள்.
 
இலங்கையை ஆண்ட ராவணன் ராட்சதன் என்று கூறப்பட்டதுபோல, குவேனியையும் ராட்சத குலம் என்று வர்ணிக்கிறது, "மகாவம்சம்'')
 
குவேனியை விஜயன் சந்தித்து அடைக்கலம் கோருகிறான். அவள் அடைக்கலம் அளிக்கிறாள்.
 
இருவருக்கும் காதல் ஏற்பட்டு, திருமணம் செய்து கொள்கிறார்கள். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் பிறக்கிறார்கள்.
 
பாண்டிய இளவரசி
 
விஜயனுடன் இலங்கை சென்ற அவனுடைய 700 நண்பர்களும் பல நகரங்களையும், கிராமங்களையும் உருவாக்குகிறார்கள். அந்தப் பகுதிகளை உள்ளடக்கிய ராஜ்ஜியத்துக்கு மன்னனாகும்படி, விஜயனை கேட்டுக் கொள்கிறார்கள்.
 
ஆனால், விஜயன் மறுத்து விடுகிறான். "ராஜ குடும்பத்தைச் சேர்ந்த ஒரு இளவரசியை நான் மணந்தால்தான், சிம்மாசனம் ஏறமுடியும்'' என்று கூறுகிறான்.
 
இதன் காரணமாக, விஜயனின் நண்பர்கள் மதுரைக்கு செல்கிறார்கள். மதுரை மன்னனுக்கு முத்துக்கள், தங்க ஆபரணங்கள் முதலியவற்றை பரிசாக வழங்கி, தங்கள் மன்னனான விஜயனுக்கு இளவரசியை மணமுடித்து வைக்குமாறு கேட்டுக்கொள்கிறார்கள்.
 
இதற்கு பாண்டிய மன்னன் சம்மதிக்கிறார். பாண்டிய இளவரசியுடன், விஜயனின் 700 நண்பர்களுக்கும் 700 பெண்களை தேர்வு செய்து, இலங்கைக்கு அனுப்பி வைக்கிறார்.
 
குவேனியின் கதி
 
பாண்டிய இளவரசி தன்னை மணப்பதற்கு இசைந்து இலங்கைக்கு வந்து விட்டதை அறிந்து விஜயன் மிகவும் மகிழ்ச்சி அடைகிறான்.
 
குவேனியை அழைத்து, "நான் பாண்டிய ராஜகுமாரியை மணக்கப்போகிறேன். என்னுடைய இரண்டு குழந்தைகளையும் என்னிடம் ஒப்படைத்துவிட்டு, இங்கிருந்து போய்விடு'' என்று கூறுகிறான்.
 
இதனால் வேதனை அடைந்த குவேனி, குழந்தைகளை அழைத்துக்கொண்டு "லங்காபுரா'' என்ற இடத்துக்கு போய்விடுகிறாள். இவர்களுடைய வம்சாவளியினர், இலங்கையின் பழங்குடியினராக உள்ள வேட்டுவர்கள்.
 
திருமணம்
 
பாண்டிய ராஜகுமாரியை மணந்து கொண்ட விஜயன், அவளுடன் வந்த 700 பெண்களுக்கும் அமைச்சர்களாக உள்ள தன் நண்பர்களை அவரவர் தகுதிக்கு ஏற்ப மணம் முடித்து வைக்கிறான்.
 
முன்பு கொடியவனாகவும், முரடனாகவும் இருந்த விஜயன் நல்லவனாக திருந்தி, 38 ஆண்டு காலம் தர்மம் தவறாமல் இலங்கையை ஆண்டான். அவனது சந்ததிகளே சிங்களர்கள்.''
 
இவ்வாறு மகாவம்சம் கூறுகிறது.
 
தபால் தலை
 
1956-ல் "விஜயனின் வருகை'' என்ற தலைப்புடன் சிறப்பு தபால் தலை ஒன்றை இலங்கை அரசு வெளியிட்டது. குவேனி ஒரு மரத்தடியில் அமர்ந்திருப்பது போலவும், கப்பலில் வந்த விஜயன் அவளிடம் அடைக்கலம் கோருவது போலவும் இந்த தபால் தலை அமைந்திருந்தது.
 
தபால் தலையை பார்த்த சிங்கள தலைவர்கள், அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். "விஜயன் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வந்தவன் என்ற கருத்து ஏற்கத் தக்கது அல்ல. தவிரவும், விஜயன் வந்தபோதே இங்கு குவேனி என்ற தமிழ்ப்பெண் இருந்திருக்கிறாள் என்று கூறினால், இலங்கையின் பூர்வகுடிகள் தமிழர்கள் என்பதை நாமே ஒப்புக்கொண்டது போலாகிவிடும். எனவே, இந்த தபால் தலையை வாபஸ் பெறவேண்டும்'' என்று கூறினார்கள்.
 
இதன் காரணமாக, இந்த தபால் தலையை இலங்கை அரசு வாபஸ் பெற்றுக்கொண்டது. ஆனால், அதற்குள் இந்த தபால் தலை உலகம் முழுவதும் பரவி விட்டது.
 
-நன்றி தமிழ்இஸ்லாம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.