Jump to content

வாயேஜர் என்கிற டீன் ஏஜர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வாயேஜர் என்கிற டீன் ஏஜர்

ராமன் ராஜா

 

 

ஒரு வருஷத்துப் பழசான செய்தி ஒன்றுதான் இன்றைக்கு விஞ்ஞான உலகத்தில் சுடச் சுட நியூஸ்!

சென்ற ஆகஸ்ட் மாதத்தின் கடைசி வாரத்தில் வாயேஜர் என்ற நாசா விண்கலம் சூரிய மண்டலத்தை விட்டு வெளியேறிவிட்டது. (டெக்னிக்கலாகச் சரியாகச் சொல்ல வேண்டுமென்றால், ஹீலியோபாஸ் என்ற விண்வெளி எல்லைக் கல்லைத் தொட்டுவிட்டது). மனிதன் செய்த பொருள் ஒன்று சூரிய குடும்பத்துக்கு வெளியே காலடி எடுத்து வைப்பது இதுவே முதல் முறை.

போன வருடம் நடந்த விஷயத்தை ஏன் இப்போது மெல்லச் சொல்லுகிறார்கள் ? இப்போதுதான் டேட்டா கிடைத்திருக்கிறது !

1977-ல் ஏவிவிடப்பட்ட விண்கலம் வாயேஜர். சின்னப் பையன்கள் பிறந்து கூட இருக்க மாட்டீர்கள். கே.ஆர்.விஜயாதான் அப்போது ஹாட் ஹீரோயின் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

மரைனர் விண்கல வரிசையில் 11-வதாக வந்திருக்க வேண்டியவர் வாயேஜர். ஆனால் வருடக் கடைசியில் அரசாங்க இலாகாக்களுக்கே உரிய பட்ஜெட் வெட்டு விழுந்துவிட்டது. மரைனர் திட்டத்தை மாறு கால், மாறு கை வாங்கி வாயேஜர்-1 என்று பெயர் வைத்து, ‘குறைந்த செலவில் வியாழனைப் படம் பிடித்து அனுப்பு’ என்று ஏவிவிட்டார்கள்.

 

Record_is_attached_to_Voyager_1-1024x813

 

உண்மையில் இரண்டு வாயேஜர்கள் புறப்பட்டன. வாயேஜர்-2 என்ற தங்கச்சி விண்கலம் வேறொரு திசையில் போய்க்கொண்டு இருக்கிறது. சற்று லேட்டாகக் கிளம்பினாலும் வாயேஜர்-1 சுறுசுறுப்பாக ஓடி முந்திவிட்டது. 79-ல் வியாழனையும் அதற்கு அடுத்த வருடம் சனியையும் விஸ்தாரமாகப் படம் பிடித்து அனுப்பியது. இந்த இரண்டு கிரகங்களையும் அவற்றின் துணைக் கோள்களையும் முதல் முறையாக இத்தனை கிட்டத்தில் பார்க்கக் கிடைத்தது.

வாயேஜர் புறப்பட்ட வேளை, ஆச்சரியமான வேளை.  குரு, சனி, யுரேனஸ், நெப்ட்யூன் எல்லாம் சரியாக அதனதன் இடத்தில் வந்து நிற்கப் போகும் அரிதான கடக லக்னம், அமிர்த யோகம். ஒரு கிரகத்தின் அருகில் போய் போட்டோ எடுத்து  முடித்த பிறகு, அதன் புவி ஈர்ப்பு விசையே வாயேஜரை இழுத்துக் கவண் கல் போல் சுழற்றி அடுத்த கிரகத்தை நோக்கி உந்தித் தள்ளிவிடும். 175 வருடங்களுக்கு ஒரு முறைதான் இந்த மாதிரி கிரகச் சேர்க்கை அமையும்.

வாயேஜர் அதிக பட்சம் ஐந்து வருடம் உயிரோடு இருக்கும் என்று எதிர்பார்த்துத்தான் அனுப்பினார்கள். ஆனால்  அரை-விஞ்ஞானி கார்ல் சேகன் ‘இது ஒரு வேளை செத்த சவமாக மிதந்து வெகு தூரம் போனாலும் போகுமே..’ என்று அப்போதே யோசித்தார்.  முடிவில்லாத விண்வெளியில் வாயேஜர் ஒரு காலக் குமிழி. நமக்குப் பிறகும் பல காலம் இருக்கப் போகிறது. என்றாவது, எங்காவது தலையில் ஆண்டென்னா வைத்த புத்திசாலி இனம் ஒன்றின் கையில் கிடைக்கலாம்; அல்லது நம் எதிர்கால சந்ததிகளே கண்டெடுக்கலாம். அவர்களுக்காகத் தங்கத்தில் செய்த கிராமஃபோன் தகட்டில் பாட்டு, பேச்சு, படம் போன்றவைகளைப் பதிவு செய்து அனுப்பி இருக்கிறார்கள். (எல்லாம் தியாகராஜ பாகவதர் பாட்டாக இருக்காதோ ?)

நாம் அறிந்த மனித இனம் படைத்த பொருள்களில் இப்போதைக்கு வாயேஜர் மட்டும்தான், வேறொரு அறிவாளி இனத்தின் கையில் கிடைக்க வாய்ப்பாவது இருக்கும் முதல் பொருள். நாம் நமக்கே குழி தோண்டிக் கொள்ளும் வேகத்தைப் பார்த்தால், வாயேஜர்தான் அத்தகைய ஒரே பொருளாக இருந்தாலும் ஆச்சரியமில்லை.

 

Voyager_probe.jpg

70-களில் என்ன எலெக்ட்ரானிக்ஸ் இருந்திருக்கப் போகிறது ? பாட்டையா காலத்துத் தொழில் நுட்பம்தான். அதன் கம்ப்யூட்டரில் இருக்கும் நினைவகம் வெறும் 68 கிலோ பைட் ! இன்றைய எலெக்ட்ரானிக் பொம்மைகளுக்கும் கைக் கடிகாரங்களுக்கும் இதைவிட அதிகம் ஞாபக சக்தி உண்டு. இந்த அற்ப கம்ப்யூட்டரை வைத்துக்கொண்டே வாயேஜர் சூரிய மண்டலத்தின் கருப்பையைத் துளைத்துக்கொண்டு வெளியேறி இருக்கிறது.

ஹீலியோ ஸ்பியர் என்பது சூரியனை ஆதாரமாகக் கொண்ட ஒரு மகா சப்பை உருண்டை. இதற்குள்தான் எல்லாக் கோள்களும் நாமும் நம் நாயும் வசிக்கிறோம். இந்தப் பந்துக்கு வெளியே சூரியனின் ராஜ்ஜியம் செல்லாது. அதன் கதிர் வீச்சு வலுவிழந்து காந்தப் புலம் திசை திரும்புவதாகக் கருதப்படுகிறது. அதுதான் நம் பஞ்சாயத்து எல்லை.

இந்த எல்லைக்கு வெளியே என்னதான் இருக்கிறது ? வெறும் சூனியமா ? இல்லை. ப்ளாஸ்மா என்ற மின்சாரத் துகள் மேகம் இருக்கிறது; எப்போதோ வெடித்துச் சிதறிய நட்சத்திர மத்தாப்பிலிருந்து சிந்திய பொறிகள் அவை. காந்தப் புலமும் உண்டு. இந்த ப்ளாஸ்மாவை அளந்து பார்த்தால் வாயேஜர் இருப்பது சூரிய மண்டலத்துக்கு உள்ளேயா வெளியேயா என்பது தெரிந்துவிடும். வாயேஜரிடமும் ப்ளாஸ்மாவை அளவிடும் கருவி உண்டு. ஆனால் எந்த காண்ட்ராக்டரிடம் சல்லிசாக வாங்கினார்களோ, அது பல வருடம் முன்பே வேலை செய்வதை நிறுத்திவிட்டது.

இந்த இடத்தில் எதிர்பாராமல் சூரிய பகவான் உதவிக்கு வந்தார்: பலமாகக் காறித் துப்பினார்.

2012 மார்ச் மாதத்தில் சூரியனின் வெளிப் புறத்திலிருந்து ஒரு மாபெரும் கொரோனா பிழம்பு கிளம்பி உலகங்களைத் தாண்டி வெகுதூரம் வீசியது. இந்த ஆண்டின் வசந்த காலத்தில் வாயேஜர் வரை சென்று சேர்ந்துவிட்டது. மின் காந்த சக்தியும் எலெக்ட்ரானும் ப்ரோட்டானுமாக சுனாமி மாதிரி அடித்து வாயேஜரைப் போர்த்தி மூடியபோது, அதைச் சுற்றி இருந்த ப்ளாஸ்மாவில் சலசலப்பு ஏற்பட்டது. இந்த நடனத்தைக் கப்பென்று பிடித்து அளந்து வைத்துக்கொண்டது வாயேஜர்.

அடுத்த பல மாதங்களுக்கு டேட்டா சயன்ஸ் என்கிற தகவல் விஞ்ஞானம் சுறுசுறுப்பாக வேலை செய்து வாயேஜரின் தகவல் வெள்ளத்தை அலசியது.

கடைசியாக, வாயேஜர் சூரிய குடும்பத்துக்கு வெளியே போய்விட்டது என்பதை உறுதி செய்தது நாசா. நட்சத்திரக் கூட்டங்களுக்கு இடையே இருக்கும் புறம்போக்கு நிலம் அது. வால் நட்சத்திரங்கள் மட்டுமே அங்கே மேய முடியும்.

‘வாயேஜர் போயிருக்கிற இடம், நமக்கு முற்றிலும் புதிய பேட்டை. அங்கே என்னவெல்லாம் ஆச்சரியம் காத்திருக்கிறதோ’ என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

 

missionImage_top.jpg

 

கவனிக்கவும் – வாயேஜர் ஒன்றும் ஊர்ந்து செல்லும் பேருந்து அல்ல. நாள் ஒன்றுக்குப் பதினாறு லட்சம் கிலோ மீட்டரை விழுங்கி முன்னேறும் விஷ்ஷ்……..!  இப்போது நம்மிடம் இருந்து 1900 கோடி கிலோ மீட்டர் போய்விட்டது. அங்கிருந்து ரேடியோவில் பேசினால் வந்து சேருவதற்கு 17 மணி நேரம் ஆகிறது. வாயேஜர் ரகத் தொலைவுகளில், தகவல் தொடர்பில் ஒரு மிகப் பெரிய சிக்கல் இருக்கிறது: இன்வர்ஸ் ஸ்கொயர் விதி என்பார்கள். தூரம் இரண்டு மடங்காக அதிகரித்தால், வந்து சேரும் ரேடியோ அலையின் சக்தி, நாலில் ஒரு பங்காகக் குறைந்துவிடும். பத்து மடங்கு தொலைவு போகும்போது 99 சதவிகிதம் காணாமல் போய், மிச்சம் இருப்பதை சுரண்டித்தான் தின்ன வேண்டும். வாயேஜர் ஒரு 25 வாட் பல்பை ஏற்றி அணைத்தால் அதை பூமியில் இருந்து கவனித்துத் தகவலாக மாற்றிக்கொள்வது போன்ற வித்தை இது.

வாயேஜரில் இனி செலுத்தும் சக்தியை அதிகரிக்க முடியாது. அதுவே பாவம், இப்பவோ அப்பவோ என்று இருக்கிறது. பூமியில்தான் ஏதாவது டெக்னாலஜி நடனம் ஆட வேண்டும். ஆரம்பத்தில் கொஞ்ச காலத்துக்கு டிஷ் ஆண்டெனாவை இன்னும் இன்னும் பெரிதாக்கி சமாளித்தார்கள். இப்போது அதெல்லாம் போதாமல் போய், ஊர் ஊராக இருக்கும் ரேடியோ டெலஸ்கோப்புகளை வாயேஜரின் பக்கம் திருப்பியிருக்கிறார்கள். எல்லாரும் ஒரே நேரத்தில் ஒத்துழைத்து அவர்களின் ஒருமித்த கருத்தைத்தான் செய்தியாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.

வாயேஜர் 600 கோடி கிலோ மீட்டர் தூரம் போன பிறகு சூரியக் குடும்பம் முழுவதையும் நிற்க வைத்துப் புன்னகை புரியச் சொல்லி ஒரு குரூப் ஃபோட்டோ எடுத்தது. புகழ் பெற்ற இந்தப் படத்தில் பூமி எங்கே என்று தேடினால்,  ஒரு பழுப்புத் தீற்றலின் நடுவே வெளிர் நீலத்தில் ஒரே ஒரு புள்ளிதான் பூமி ! என் மானிட்டரில் ஒட்டியிருக்கும் தூசியோ என்று துடைக்க முயன்றேன். அவ்வளவுதான் நாம். இதற்குள்ளா இவ்வளவு ஆட்டம் போடுகிறோம் ?

36 வயசுப் பெண்ணாக இருந்தாலும் ஒரு காஸ்மிக் அளவுகோலில் பார்த்தால் வாயேஜர் ஒரு டீன் ஏஜர்தான். அதன் ஒண்ணு விட்ட சகோதரிகளான பயனியர் விண்கலங்களும் ஏறக்குறைய இதே சமயத்தில்தான் புறப்பட்டன. ஆனால் அவை பாட்டரி தீர்ந்து போய் எப்போதோ மண்டையைப் போட்டாயிற்று. வாயேஜரின் இளமை ரகசியம் அதன் ப்ளூட்டோனிய அணு சக்தி !

 

pioneer-spacecraft-trajectories.jpg

 

ப்ளூட்டோனியம் தனக்குத் தானே சிதைவடையும்போது ஏற்படும் வெப்பத்தை மின்சாரமாக மாற்றுகிறார்கள். அதிகம் இல்லை; ஒரு சின்ன வாக்குவம் க்ளீனரை இயக்கும் அளவுக்குத்தான் சக்தி வைத்திருந்தார்கள். ப்ளூட்டோனியம் பழசாக ஆக அதன் வீரியமும் குறைந்துகொண்டே வரும். இப்போது பாதிதான் மீதி இருக்கிறது. இனி முக்கியமானவற்றை மட்டும் வைத்துக்கொண்டு மற்ற கருவிகளை ஒவ்வொன்றாக அணைக்க வேண்டியிருக்கும். 2025-ம் வருடம் வரை வாயேஜர், எந்திரன் ரஜினி மாதிரி தன் கை கால்களை எல்லாம் மெல்லக் கழற்றிக்  கொண்டே வந்து, கடைசியில் ஒரு நாள் மொட்டென்று சாய்ந்துவிடும். அதன் பிறகு விண்வெளியில் மௌன ஓடமாக மிதந்துகொண்டே இருக்கும்.

இன்னும் நாற்பதாயிரம் வருடத்துக்குப் பிறகு ‘ஒட்டகச் சிவிங்கி’ என்ற நட்சத்திரக் கூட்டத்துக்குக் கிட்டத்தில் போகும்போது அதில் உள்ள AC +79 3888 என்ற சூரியனை அணுகும். (ஒரே குடும்பத்தில் ஏகப்பட்ட சூரியன்கள் இருந்தால், இப்படி கார் நம்பர் ப்ளேட் மாதிரிதான் பெயர் வைக்க முடியும்).

அப்போது என்ன நடக்கிறது என்பதை சொல்வனத்தின் 1,000,092-வது இதழில் படியுங்கள்.

- See more at: http://solvanam.com/?p=28953#sthash.NhwH4fq1.dpuf

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இன்றைய உலகில், மதத்தை வைத்து பிழைப்பவர்களும் அதை விற்று பிழைப்பவர்களுமுண்டு. மதத்தின் புனிதம், மனித நேயம் எல்லாம் மரணித்து வெகுகாலமாகிவிட்டது. இந்து தமிழர் கட்சி தலைவர், ராம ரவிக்குமார் கிறிஸ்தவர்களை சாடியிருக்கிறார். ஒன்று இவர்களின் லாப நோக்கு அல்லது நிர்வாக திறன் இன்மையே காரணம் என்பதை ஒத்துக்கொள்ள தயாரில்லை. அங்கே முழங்கினால் இங்கே சச்சியர் வீட்டில் அடை மழைபெய்யும். கிறிஸ்தவர்களை வாங்கு வாங்கென்று வாங்குவார். ஆனால் தமிழக அரசு, இது ஒரு ஊர்ஜிதமற்ற குற்றச்சாட்டு என்றும் இவர்கள் கூறும் நிலையத்தில் கோவில் பிரசாதம் (லட்டு) செய்ய பொருட்கள் கொள்வனவு செய்வதில்லையென்றும் ஆதாரத்துடன் வெளியிட்டிருக்கிறது. 
    • அம்பாறையில் தேர்தல் நிலவரம்! அம்பாறை  மாவட்டத்தின்  திகாமடுல்ல  தேர்தல் தொகுதியில்  30 வீதம் வாக்குப்பதிவுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான சிந்தக அபேவிக்ரம தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” அம்பாறை மாவட்டத்தில் 5,55,432 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். சம்மாந்துறை, பொத்துவில், அம்பாறை, கல்முனை ஆகிய தேர்தல் தொகுதிகளில் வாக்காளர்கள் வாக்களிப்பதற்கான 528 வாக்களிப்பு நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. அம்பாறை மாவட்டத்தின் திகாமடுல்ல தேர்தல் தொகுதியில் 4 ஆசனங்களுக்காக 39 வேட்பாளர்கள் அரசியல் கட்சிகளாகவும் பல சுயேட்சைகளாகவும் களமிறங்கி உள்ளனர். இத்தேர்தலில் கல்முனை தேர்தல் தொகுதியில் 82,830 பேரும் சம்மாந்துறை தேர்தல் தொகுதியில் 99727 பேரும் பொத்துவில் தேர்தல் தொகுதியில் 1,84,653 பேரும் அம்பாறை தேர்தல் தொகுதியில் 188222 பேரும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். அம்பாறை மாவட்டத்தில் 184 அம்பாறை வாக்களிப்பு நிலையங்கள், 93 சம்மாந்துறை வாக்களிப்பு நிலையங்கள், 74 கல்முனை வாக்களிப்பு நிலையங்கள் மற்றும் 177 பொத்துவில் வாக்களிப்பு நிலையங்கள் உட்பட 528 வாக்களிப்பு நிலையங்கள் நிறுவப்படவுள்ளன. அத்துடன் சுதந்திரமானதாகவும் நடுநிலையாகவும் தேர்தலை நடத்துவதற்கான சகல நடவடிக்கையும் தேர்தல் திணைக்களம் முன்னெடுத்துள்ளது” இவ்வாறு மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான சிந்தக அபேவிக்ரம தெரிவித்துள்ளார். இதே வேளை தமிழ் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தனது வாக்கினை விவேகானந்தா மகா வித்தியாலயத்தில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையத்தில் செலுத்தியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1400420
    • யாழில் தேர்தல் நிலவரம்! யாழ்ப்பாணத்தில் இன்று  மக்கள் ஆர்வமாக வாக்களித்து வரும் நிலையில்,நண்பகல் 12 மணி வரையிலான காலப்பகுதியில் 35 வீதமான வாக்களிப்பு இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் மாலை 04 மணி வரையில் வாக்களிக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1400414
    • பின்னாலை... ரணில்,  காஸ் சிலிண்டருடன் சத்தமே  இல்லாமல்  போறார். . 😂 
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.