Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அகழ்வராய்ச்சி என்ற போர்வையில் வாவெட்டி, கொடிதூக்கி மலைகள் உடைத்தழிப்பு; ரவிகரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்க வாவெட்டி, கொடிதூக்கி மலைகளும் ஆகியவற்றின் சுற்றுப்புற பிரதேசங்களிலுள்ள சிறு மலைகளும் உடைக்கப்பட்டு வளங்கள் சூறையாடப்படுகின்றன. இதனால் அப்பகுதியின் இயற்கைச் சமநிலை மோசமாகப் பாதிக்கப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் தெரிவித்துள்ளார்.

அப்பகுதி கிராம அபிவிருத்திச் சங்க பிரதிநிதிகள், விவசாய அமைப்புப் பிரதிநிதிகள், மற்றும் பொது மக்களின் தகவலையடுத்து நேற்று அப்பகுதிக்குச் சென்ற ரவிகரனுக்கு முதலில் அங்கு நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. எனினும் சிறிது நேர வாக்குவாதத்தின் பின்னர் உள்ளே சென்ற அவர் குறிப்பிட்ட சம்பவங்களை நேரில் கண்டு ஆராய்ந்தார்.

Untitled-2_0.jpg

அங்குள்ள மலைகளின் பாறைகள் உடைக்கப்பட்டு மிக வேகமாக வளங்கள் அகற்றப்பட்டிருப்பதை உறுதிப்படுத்தினார். அவற்றுள் இரு வேறு இடங்களில் , அனுமதிக்கப்பட்டதை விட மிக ஆழத்திற்கு மோசமாக நில வளம் சுரண்டப்படுவதையும் அவர் உறுதிப்படுத்தினார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

வாவெட்டி, கொடிதூக்கி மலைகள் உடைக்கப்பட்டு அகழ்வாராய்ச்சி என்னும் பெயரில் அகற்றப்படுகின்றன. இவ்வாறான நில அகழ்வால் அருகிலுள்ள தமிழ் மக்களின் வீடுகள் மற்றும் கிணறுகளில் வெடிப்புக்கள் ஏற்படுகிறது.இதனால் அப்பகுதியில் மக்களின் இருப்பு உறுதிப்படுத்தப்படமுடியாத சூழ்நிலை நிலவுகிறன. சில நிறுவனங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டு, ஒப்பந்தக் காலம் முடிவடையும் போது, திரும்பவும் அனுமதிகள் புதிப்பிக்கப்பட்டு, தாராளமாக இந்த மண்ணின் வளங்கள் அள்ளப்படுகின்றன. எங்கள் வளங்கள் பறிபோவதை நேரில் கண்ட நான் அதிர்ச்சியுற்றேன்.

கல்குவாரியைப் பொறுத்தவரை, நிலமட்டத்திற்கு கீழாக 8 மீற்றர் (சுமார் 25 அடி )வரையே அகழ அனுமதி இருக்கும் நிலையில், அங்கே ஓரிடத்தில் நிலமட்டத்திற்கு கீழாக சுமார் 100 அடிக்கும் மேல் அகழ்வு இடம்பெறுகிறது. இன்னோரிடத்தில் சுமார் 75 அடிக்கும்மேல் அகழப்படுகின்றது. இப்படி சட்டவிரோதமான முறையில் அகழ்வு இடம்பெறுவதால் வரலாற்றுச் சிறப்பு மிக்க, இப்பிரதேசத்தின் இயற்கைச் சமநிலை பாதிக்கப்படுகிறது.

நீண்டகாலமாக நடந்து வரும் இந்த நில அகழ்வை, கண்காணிக்க வேண்டிய அதிகாரிகள் இதனால் கண்டுகொள்ளாதது ஏன்--? மண் வளத்தைச் சுரண்டி, இயற்கையை அழிக்கும் இந்நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.இது குறித்து உரியவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக அப்பகுதி மக்களிடம் உறுதியளித்தேன் என்றார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.வேதநாயகனிடம் தொடர்புகொண்டு கேட்டபோது, வள ஆய்வுகள், ஆராய்ச்சியாளர்களுக்கான அனுமதியினை கனியவளத் துறை வழங்குகின்றது. இவ்வாறான அகழ்வுகளின் போது நிலங்களை அகழ்ந்த பின்னர் அதனை மீள் நிரப்பு-ச் செய்ய வேண்டும். இந்த நிபந்தனையுடனேயே அவர்களுக்கு அனுமதி வழங்கப்படுகின்றது. அகழ்வின் பின்னர் மீள்நிரப்புச் செய்யாத நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடியும். அவ்வாறு நடந்தால் அது தொடர்பாக எம்மால் முறைப்பாடு செய்யமுடியும் என்றார்.

 

http://www.virakesari.lk/?q=node/359554

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.