Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'எமக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படா விட்டால் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுப்போம்:-

Featured Replies

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-

Jaff%20hos%204th_CI.jpg

'எமக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படா விட்டால் சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய நிலை ஏற்படும்' என தொண்டர்கள் கண்ணீருடன் குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரிவித்தனர்:-

யாழ்.போதனா வைத்தியசாலையில் தொண்டர்களாக பணிபுரிந்தவர்கள் தமக்கு நிரந்தர நியமனம் வழங்க கோரி கடந்த வெள்ளிக்கிழமை முதல் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நான்காவது நாளாகவும் யாழ்.போதனா வைத்தியசாலை புதிய கட்டடத்தொகுதிக்கு முன்பாக இன்றைய தினமும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொண்டர்கள் கருத்து தெரிவிக்கையில்

Jaff%20hos%204th1.jpg

'நாம் நிரந்தர நியமனம் வழங்க கோரி கடந்த நான்கு நாட்களாக மழை வெயிலுக்கு மத்தியில் எமது போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றோம்.

வைத்தியசாலை நிர்வாகம் சுகாதார அமைச்சுக்கு எமது கோரிக்கை பற்றி தெரியபடுத்திய போது சுகாதார அமைச்சு கூறியது இது தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் கலந்துரையாடுமாறு அதன் பிரகாரம் எம்மில் சிலரும் வைத்திய சாலை நிர்வாகமும் ஈ.பி.டி.பி. அலுவலகத்திற்கு சென்றிருந்த போது அங்கு அமைச்சர் இல்லை.

அமைச்சரின் பிரதிநிதி என ஒருவர் எமது கோரிக்கைளை கேட்டார்.அதன் பின்னர்  இது தொடர்பாக நான் அமைச்சருக்கு தெரியப்படுத்துகின்றேன். அமைச்சர் நடவடிக்கை எடுப்பார் அதற்கு இரண்டு கிழமை அவகாசம் வேண்டும் அதுவரை நீங்கள் போய் சேவையை தொடருங்கள் என கூறினார்.

நாம் அவற்றை ஏற்றுகொள்ளவில்லை தொடர்ந்து எமது போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றோம் ஏனெனில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு வெளி நபர்கள் நேர்முக தேர்வுக்கு அழைக்கபட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் எமக்கு நிரந்தர நியமனம் வழங்க கோரியும்  நாம் போராட்டத்தை முன்னெடுத்தோம்.

அப்போது அங்கு வந்த கமல் தோழர் (வடமாகாண சபை எதிர்கட்சி தலைவர்) உங்கள் கோரிக்கை தொடர்பாக அமைச்சருக்கு தெரியப்படுத்தி உள்ளேன். அவர் அது தொடர்பாக அமைச்சரவையில் கதைத்து தீர்வினை பெற்று தருவார். அதுவரைக்கும் உங்கள் சேவையை தொடருங்கள் என வாக்குறுதி தந்தார்.

அவரின் வாக்குறுதியை நம்பி நாம் அன்றைய தினம் எமது போராட்டத்தை கைவிட்டு எமது சேவைக்கு திரும்பினோம்.ஆனால் இன்று மூன்று மாதங்கள் கடந்த நிலையிலும் எமக்கான தீர்வு கிடைக்க பெறவில்லை இன்னமும் இரண்டு கிழமை அவகாசம் கேட்கப்படுகின்றது.

அன்றைய நேர்முக தேர்வுக்கு தோற்றியவர்களில் தெரிவானவர்களின் பெயர் விபரம் தற்போது வெளியாகும் நிலையில் உள்ளதாகவும் அவர்களுக்கான நியமனங்கள் அடுத்த ஆண்டு முதல் கிழமைகளில் வழங்கப்பட உள்ளதாகவும் நாம் அறிந்து கொண்டோம்.

எனவே அவற்றினை உடனடியாக நிறுத்தி எமக்கு நிரந்தர நியமனம் வழங்க வேண்டும் என கோரியே நாம் தொடர் போராட்டத்தை நடாத்தி வருகின்றோம். எமது இந்த போராட்டத்திற்கு செவி சாய்க்காது விட்டால் சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுப்போம்' எனகுளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரிவித்தனர்.

யாழ் போதனா வைத்தியசாலை தொண்டர்களின் போராட்டத்தால் கடும் பணிசுமைக்கு உள்ளாகியுள்ள சிற்றூழியர்கள் தமக்கு விடுமுறை தராது தொடர்ந்து பணியில் அமர்த்தினால் நாமும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவது தவிர்க்க முடியாதது ஆகிவிடும் என தெரிவித்துள்ளனர்.

தொண்டர்கள் தொடர்ந்து நான்கு நாட்கள் பணியில் ஈடுபடாததினால் சிற்றூழியர்கள் கடும் பணிசுமைக்கு உள்ளாகியுள்ளனர்.

 
தொண்டர்கள் தொடர்ந்து நான்கு நாட்கள் பணியில் ஈடுபடாததினால் சிற்றூழியர்கள் கடும் பணிசுமைக்கு உள்ளாகியுள்ளனர். நோயாளிகளை விடுதிகளுக்கு, எக்ஸ்ரே , மற்றும் சத்திர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு செல்வது உட்பட தொண்டர்கள் செய்து வந்த பல பணிகளை தற்போது சிற்றூழியர்களே செய்கின்றனர் 
 
யாழ் போதனா வைத்தியசாலைக்கு சிற்றூழியர்களாக 600 பேர் தேவைப்படும் நிலையில் தற்போது 210 சிற்றூழியர்களே பணியில் உள்ளனர். இதுவரை காலமும் எம்முடன் தொண்டர்களும் இணைத்து பணியில் ஈடுபட்டதனால் எமது பணிகளை முன்னெடுத்தோம்.
 
தற்போது தொண்டர்களின் போராட்டத்தினால் நிலைமை மோசமாகியுள்ளது சத்திர சிகிச்சை பிரிவு அவசர சிக்கிசை பிரிவுகளின் நிலைமை மிக மோசமாக உள்ளது.
 
இதனால் நாம் கடும் பணிசுமைக்கு முகம் கொடுக்கின்றோம் இது இவ்வாறே தொடருமாயின் நாமும் போராட்டத்தில் ஈடுபடவேண்டிய நிலை ஏற்படும் என தெரிவித்தனர்.
 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.