Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கேட்பாரின்றி அழிப்பு! - கந்தரதன்

Featured Replies

 

தமிழர் தாயகப் பகுதியில் இன்று சர்வதேசப் பிரதிநிதிகள் ஒருவர்பின் ஒருவராகச் சென்று தமிழ் மக்களை குசலம் விசாரிப்பதற்குக் குறைவில்லை. மக்களும் தமது உள்ளக்கிடக்கைகளையெல்லாம் அவர்களிடம் கொட்டித் தீர்க்கின்றனர். சர்வதேசப் பிரதிநிதிகளும் மக்களின் குறைகளை கேட்டுவிட்டு, சிறீலங்கா அரச பிரதிநிதிகளையும் சந்தித்து கைகுலுக்கவும் தவறவில்லை.

ஆனால், சிறீலங்காப் படையினரால் பல நெடுங்காலமாக அபகரித்துவைத்துள்ள மக்களின் வதிவிடங்களும் உடமைகளும் அழிவடைந்துள்ள நிலையில், இன்று முற்றாக அழிக்கப்படுகின்றன. யாழ்.மாவட்டம் வலி. வடக்கில் மக்களின் வீடுகளையும் உடமைகளையும் அடையாளம் தெரியாதவாறு, படையினர் அழித்துவருவதைக் கண்டித்து, பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் அண்மையில் போராட்டம் நடத்தப்பட்டமையும் - குறித்த போராட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் பலத்த கெடுபிடிகளைச் சந்தித்திருந்தமையும் - தெரிந்ததே.

Page%2008-3%20soorai.jpg

இந்நிலையில்  வலி.வடக்கில் உள்ள மக்களுடைய வீடுகளை இடிக்கும் நடவடிக்கையினை சிறிலங்காப் படையினர் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதாக யாழ்.தகவல்கள் தெரிவித்தன. கடந்த வாரம் காங்கேசன்துறை மேற்குப் பகுதிகளில் உள்ள மக்களுடைய வீடுகளை சிறீலங்கா இராணுவத்தினர் புல்டோசர் கொண்டு இடித்து அழித்துள்ளனர். ஜே/233 மாங்கொல்லை மற்றும் மாம்பிராய் போன்ற கிராமங்களில் இருந்த மக்களுடைய வீடுகளே இவ்வாறு இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன. மக்களுடைய வாழ்வுரிமைப் போராட்டங்களைப் பொருட்படுத்திக்கொள்ளாமலும் தடுத்து நிறுத்த எவருமின்றியும் இவ்வாறு சிறீலங்கா இராணுவத்தினால் மக்களுடைய வீடுகள் நாளுக்கு நாள் இடித்தழிக்கப்பட்டுக்கொண்டே செல்வதாகப் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, மக்களுக்குத் தேர்தல் வாக்குறுதியில் சினிமா பாணியில் பல வகையில் நம்பிக்கையை ஊட்டி வாக்குகளைப் பெற்று வடமாகாண முதலமைச்சரான விக்கினேஸ்வரன், இன்று எதையுமே நிறைவேற்ற முடியாதவராகவே உள்ளார். விக்கினேஸ்வரன், வலி. வடக்கிற்கு செல்வதற்கே படையினர் தடைவிதித்துள்ளனர். வட மாகாண முதலமைச்சரே படையினர் போடும் தாளத்திற்குத்தான் ஆடவேண்டும் என்ற நிலையே அங்கு உள்ளது.

இவ்விடயம் தொடர்பாக வட மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் கருத்து வெளியிடுகையில், அதிகாரத்தைப் பகிர்வதாக சர்வதேசத்திற்கு 13ஆவது திருத்தச்சட்டத்தை காண்பித்துவிட்டு அதனை நடைமுறைப் படுத்தாது விடுவதே அரசாங்கத்தின் நோக்கமாக இருக்கின்றது. வடக்கு மாகாணசபைக்கு மத்திய அரசாங்கம் போடும் முட்டுக்கட்டைகள் இதனையே காட்டுகின்றன எனத் தெரிவித்துள்ளார்.

வடக்கில் அதிபாதுகாப்பு வலயப் பகுதிகளுக்குள் அமைந்துள்ள ஆலயங்கள், வீடுகள் இடிக்கப்படுகின்றன. இதனைப் பார்வையிடச் சென்றபோது என்னை இராணுவத்தினர் திருப்பி அனுப்பிவிட்டனர். இந்த நிலை தொடர்ந்தால் இராணுவத்தினரின் தடையை மீறி நான் அப்பகுதிக்குச் செல்வேன் அப்போது இராணுவத்தினர் என்மீது துப்பாக்கிச்சூடு நடத்தினால் அந்த மண்ணில் விழுந்து உயிர்விடவும் நான் தயாராக உள்ளேன். அத்தகைய உயிரிழப்பைப் பாக்கியமாகவே கருதுவேன் என்றும் அவர் எடுத்துக்கூறியுள்ளார்.

அரசாங்கம் வடக்கையும் கிழக்கையும் பரிபாலித்துவிட்டு சிங்கள மேலாண்மையை உட்புகுத்தவே முயல்கின்றது. தமிழ் மக்களும் தமிழ் பிரதிநிதிகளும் இதனை உலகுக்கு எடுத்துச் சொல்ல முன்வரவேண்டும் எனவும் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ள மக்களின் காணிகளையும் உடைமைகளையும் சூறையாட சிங்கள அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.

சிறீலங்கா இனவெறி அரசாங்கம் தனது படைகளை ஏவிவிட்டு கொலைவெறித் தாக்குதல் நடத்தியதன் மூலம் வடக்கு, கிழக்கு மக்களை வெளிநாடுகளுக்கு துரத்தியடித்துள்ள நிலையில் இன்று அவர்களின் காணிகளையும் உடமைகளையும் அபகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

வெளிநாடுகளில் நிரந்தரமாக வசித்துவரும் வடமாகாணத்தை சேர்ந்தவர்களின் சொத்துக்கள் காணிகள் மற்றும் வீடுகள் அரசுடமையாக்கப்படவுள்ளதாக சிறீலங்கா அரசாங்கம் வெளிப்படையாகவே அறிவித்துள்ளது. தற்போது ஆரம்பிக்கப்பட்டிருக்கும் குடிசன மதிப்பீட்டில் வெளிநாட்டில் உள்ளவர்களின் வீடுகள் பற்றிய விபரங்கள் தெரியவரும் என்றும் அந்தத் தரவுகளின் அடிப்படையில் அவர்களின் காணிகள் அரச உடமையாக்கப்படும் என்றும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

1982ம் ஆண்டின் பின்னர் போர் காரணமாக ஏற்பட்ட சொத்து மற்றும் உயிர்ச் சேதங்கள் தொடர்பிலான கணக்கெடுப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளன. போர் காரணமாக முழுமையாக நாட்டை விட்டு வெளியேறி வாழ்ந்துவரும் வடக்கு மக்களின் சொத்துக்களும் இவ்வாறு அரசுடமையாக்கப்பட உள்ளன. முக்கியமாக விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களின் வீடுகள் என இனங்காணப்படும் வீடுகளை உடனடியாக அரசுடமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

வடக்கு, கிழக்கில் சிறீலங்கா அரசாங்கம் முன்னெடுத்த கடும் யுத்தம் காரணமாக வடக்கில் இருந்து சுமார் 10 இலட்சம் வரையான தமிழ் மக்கள் வெளியேறி வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் அவர்களின் காணிகளையும் வீடுகளையும் அரசுடமையாக்கி அவற்றை சிங்களவர்களுக்கு வழங்குவதற்கு சிறீலங்கா அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

புலம்பெயர்ந்த நாடுகளிலுள்ள தமிழ் மக்களால் தமது அரசாங்கத்திற்கு தொடர்ந்தும் அபகீர்த்தி ஏற்பட்டு வருவதாக மகிந்த ராஜபக்ச அறிவித்து வருகின்ற நிலையில், அண்மையில் கோத்தபாய ராஜபக்ச கருத்து வெளியிடும்போது புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் செயற்பாடுகளை அடக்குவதில் சிறீலங்கா, இராஜதந்திர ரீதியில் வெற்றிகளைக் கண்டுள்ளதாக அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், வடக்கு கிழக்கிலுள்ள புலம்பெயர் தமிழ் மக்களின் வீடுகள் காணிகள் அடங்கிய சொத்துக்களை அபகரிக்க முற்படும்போது வேறு வழியின்றி புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் சிறீலங்காவுக்குத் திரும்பவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும் என்று மகிந்தவும் கோத்தாவும் கணக்குப் போடுகின்றனர். இந்த கணக்கின் அடிப்படையிலேயே தற்போது அவர்களின் காணிகள் அரசுடைமையாக்கப்படவுள்ளதென்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

எனவே, வெளிநாடுகளில் பெருந்தொகையான சொத்துக்களையும் வீடு வாசல்களையும் வாங்கிக் குவித்துவிட்டு தொடர்ந்தும் சிறீலங்காவில் தங்கியிருந்து பணத்தைச் சுரண்டிக்கொண்டிருக்கின்ற மகிந்த குடும்பம் வெளிநாடுகளில் வாழ்கின்ற தமிழ் மக்களின் காணிகளை மட்டும் சுவீகரிக்க முற்படுவது எந்த வகையில் நியாயம் என்று யாழ்.குடாநாட்டிலுள்ள புலம்பெயர்ந்த தமிழர்களின் உறவினர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.

சிறீலங்கா அரசாங்கத்தின் இந்த மோசடி வேலைத்திட்டங்களை முறியடித்து தமது சொத்துக்களைப் பாதுகாப்பதற்கு புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் வேண்டுகோள் விடுக்க வேண்டியது அவசிய தேவையாக உள்ளது. குறிப்பாக, தங்கள் வீடுகளையும் சொத்துக்களையும் அரசுடைமையாக்க வேண்டாம் என்று சிறீலங்கா அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்குமாறு தாங்கள் வாழ்கின்ற நாடுகளின் அரசாங்கங்களிடம் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் கோரிக்கை விடுக்க வேண்டியது தற்போது மிக அவசியாக உள்ளது. வேண்டுமாயின் அந்தந்த நாடுகளில் வெகுஜனப் போராட்டங்களை முன்னெடுக்கவும் தமிழ் மக்கள் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் கேட்கப்பட்டுள்ளது. புலம்பெயர்வாழ் எம் தமிழ் உறவுகளே நாம் ஓய்ந்திருக்கும் ஒவ்வொரு நிமிடமும் சிறிலங்காவுக்கு சாதகமே.

நாம் சிந்திக்கும் நேரமல்ல இது செயற்படும் நேரம்!         

 

நன்றி: ஈழமுரசு

http://www.sankathi24.com/news/36626/64//d,fullart.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.